நானும் ஸஃபிய்யாவும்

1
0 minutes, 5 seconds Read
This entry is part 23 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தெரிந்தெடுத்த பூக்கள் கொய்து
வரிந்து கட்டிய செண்டாய்
என் –
வீட்டினர் மத்தியில்
கலி ஃபோர்னியக் கைக்குழந்தை ஸஃபிய்யா

அள்ளியணைக்க
கொள்ளையாசை!

அம்மாவின் கைகளினின்றும்
அட்சரம் விலகினாலும்
அழுதது ஸஃபிய்யா

அப்பனின் முகமும்
அலைபாயும் கண்களுமென…
எதையோ… யாரையோ…
தேடிய ஸஃபிய்யா

நிலா, பொம்மை,
பூக்கள், புத்தகம்,
பூனை, பல்லி
எல்லாம் புறக்கனித்து
எதையோ… யாரையோ…
தேடிய ஸஃபிய்யா

சட்டென உதித்தொரு யுக்தி.
கைகள் ஏந்தி…
கண்கள் பார்த்து…
சொன்னேன்…மந்திர வாக்கியமொன்று-
தாவி வந்தது ஸஃபிய்யா

அள்ளியணைத்து
முத்த’மழை’த்து
வென்ற களிப்பில்
தோளில் சாய்த்து
‘உலா’த்தினேன்.

என் யுக்தி பிடித்து
யாவரும் ஏந்தினர்!

மந்திர வாக்கியம்
பொய்யென அறியா
ஸஃபிய்யா
பின்னர்-
என்
தோள் நக்கித்
தூங்கிப் போனாள்

ஒன்றும் அறியா பிஞ்சுக்கே
இத்தனை ஏக்கம் யாருக்காகவோ…
எனில்…
எல்லாம் அறிந்த ‘அந்த’ யாருக்கோ
எத்தனை ஏக்கமோ?!

ஸஃபிய்யா தூக்கனுமா..
ஒரே ஒரு மந்திர வார்த்தை…
பாய்ந்து வரும் பிள்ளை…
அது:
“வா டாடிட்ட போலாம்!”
o o o
பேசப் படித்துவிட்ட
பெருங்குழந்தைகள்
வாய்திறந்து விடுகின்றீர்கள்,
எதிரே யாருமில்லாவிடினும்
காற்றிடமாவது தம் சோகத்தை.

புதிய வெயில்
புதிய காற்று
புதிய மண்
புதிய வீடு
புதிய ஆட்கள்
புதிய பூச்சி … ஆ
அதன் பெயர் கொசுவாம்.

ஒன்றும் புரியவில்லை
புரிந்ததைச்
சொல்ல முடியவில்லை

மாதியாக்கா – ஃபன்னி!
நாநா – பேட் கேர்ள்!

அட்ஜஸ்ட் செய்துக்கலாம்,
வேர் ஈஸ் மை டாடி?
– ஸஃபிய்யா

Sabeer – Jameel

Series Navigationகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -? (தொடர்ச்சி)காற்றும் நிலவும்
author

சபீர்

Similar Posts

Comments

  1. Avatar
    ஒ.நூருல் அமீன் says:

    பிஞ்சு மனதின் சோகத்தை வெளிப்படுத்திய விதம் நன்றாக உள்ளது. யாராவது சோகம் நல்லாயிருக்குன்னு சொல்வாங்களான்னு சந்தேகம் வருது. நன்றாக உள்ளது என்பதை அடித்து விடு….சோகம்….

Leave a Reply to ஒ.நூருல் அமீன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *