நிராகரிப்பு

This entry is part 19 of 32 in the series 15 டிசம்பர் 2013

உதாசீனப்படுத்துதல் என்பது
கொலையைவிட கொடூரமானது
விடை பெறுவதற்கு முன்பிருந்த
நான் எங்கே போயிற்று
ஆதாமின் சந்ததிகளே
நீங்கள் ஆறுதல்
கூறாதீர்கள்
இதயம் அழுவதை கண்கள்
காட்டிக்கொடுத்துவிடுகிறது
சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை
என்னுள் குருட்ஷேத்திரம்
நடப்பது
அருந்தப்படாத கோப்பையில் அன்பு
விளிம்பு வரை தெரிகிறது
அழுகை ஓர் ஆயுதம்
அதை நீ தெரிந்து வைத்திருக்கிறாய்
உள்ளம் எனும் வீடு
காலியாக இருக்கிறது
வாடகை தரவேண்டாம்
காரியம் சாதித்து கொள்வதிலேயே
கவனம் செலுத்த வேண்டாம்
நீ கண் பார்க்கும் போதெல்லாம்
நான் தோற்கிறேன்
பாலை நிலத்தில்
விதை தெளித்து
ஆவதென்ன
எனது புத்தகத்தின்
நடுப்பக்கத்தை நீதான்
நிரப்ப வேண்டும்
ஏட்டைப் படித்தவன் தான்
பாட்டைக் கெடுத்தான்.

Series Navigationஇலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சிவால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *