நெஞ்சுக்குள் எட்டிப் பார் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

This entry is part 19 of 22 in the series 1 ஏப்ரல் 2018

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

உள்ளத்தை மூடி விட்டு சற்று

ஓய்வெடு !

ஓடும் ஆற்றில் மிதந்து விடு !

மரிப்ப தில்லை அது ! மரிப்ப தில்லை அது !

சிந்தனை யாவும் சமர்ப்பணம்

செய்திடு

வெட்ட வெளிப் பாதத்தில் !

ஒளி வீசும் அது ! ஒளி வீசும் அது !

உள்ளத்திலே காண்பாய்

உலக வாழ்வின் மெய்ப் பொருளை !

உன்னுடன் பேசும் அது ! உன்னுடன் பேசும் அது !

அன்பு மயமே உலகம்,

அனைத்தும் அன்பில் தழைக்கும்.

அறிவே அது ! அறிவே அது !

அறியா மையும் ஆத்திரக் குணமும்

கடந்ததை எண்ணி, எண்ணிக்

கண்ணீர் விடும் !

நம்பிக்கை அது ! நம்பிக்கை அது !

ஆயின் கூர்ந்து நோக்கு உந்தன்

வண்ணக் கனவுகளை !

வாழ்வா அது ? வாழ்வா அது ?

இறுதிவரைச் சதுரங்க ஆட்டம் ஆடி விட்டு

பிறவிதனை முடித்து விடு !

ஆரம்பம் அது ! ஆரம்பம் அது !

++++++++++++++++++++++

Series Navigationபொன்மான் மாரீசன்மொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *