நெய்தல் – நீர்கொழும்பு வாழ்வும் வளமும்

author
0 minutes, 1 second Read
This entry is part 21 of 22 in the series 8 மார்ச் 2015

 

கடலும்  கடல் சார்ந்த நிலமும் நெய்தல் என சங்க இலக்கியங்களில்  சொல்லப்படுகின்றது. இலங்கையில் மேற்குக்கரையில்  இந்து சமுத்திரத்தை அணைத்தவாறு விளங்கும் கடற்கரை நகரம் நீர்கொழும்பு.

ஐதீகக்கதைகளும் வரலாற்றுச்சிறப்பும் மிக்க இந்நகரில் வாழ்ந்த மூத்தகுடியினர்  தமிழர்கள். அவர்களினால் 1954 இல் விஜயதசமியின்பொழுது  32 குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட பாடசாலையே   இன்று வடமேற்கில் கம்பஹா    மாவட்டத்தில் ஒரே ஒரு இந்து தமிழ் மத்திய கல்லூரியாக விளங்கும் விஜயரத்தினம்  இந்து மத்திய கல்லூரி.

இதன்  ஸ்தாபகர் எஸ்.கே. விஜயரத்தினம்    நீர்கொழும்பில் நகரபிதாவாக  (மேயர்) விருந்த தமிழராவார்.    தமிழ் மக்களின் பண்பாட்டுக்கோலங்களுடன், வரலாற்றுச்சுவடுகளுடன் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளையும் கவரும் இந்நகருக்கு அருகாமையிலேயே    சர்வதேச விமான நிலையம் கட்டுநாயக்காவில்    அமைந்துள்ளது.

கல்லூரி 1954 இல்    ஆரம்பப் பாடசாலை    தரத்திலிருந்தபொழுது முதல்    மாணவனாக இணைத்துக்கொள்ளப்பட்டவரும்  தற்பொழுது அவுஸ்திரேலியாவில்    வதியும் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான லெ. முருகபூபதி விஜயரத்தினம்    இந்து மத்திய கல்லூரியின் 60 வருட  நிறைவு வைரவிழாவை முன்னிட்டு  தொகுத்து வெளியிட்டுள்ள நெய்தல் நீர்கொழும்பு  வாழ்வும்    வளமும் நூல் நீர்கொழும்பில் அண்மையில்    சிறப்பாக வெளியிடப்பட்டது.

வெளிநாடுகளில் வதியும் கல்லூரியின் முன்னாள்  மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஆதரவுடன் வெளியாகியிருக்கும் நெய்தல் நூலில்,   சூரியகுமாரி ஸ்ரீதரன் (துபாய்), தேவா ஹெரால்ட் (ஜெர்மனி) , ஸ்ரீரஞ்சனி , நீர்கொழும்பு தருமலிங்கம், அசலாம்பிகை கல்யாணசுந்தரம் (கனடா), கனகலதா,    கவிஞர் காவ்யன் விக்னேஷ்வரன்  ( சிங்கப்பூர்),   ரவி பிரதீபன், செ. செல்வரத்தினம்     ( பிரான்ஸ்) ,   நூலகர் நடராஜா செல்வராஜா ( இங்கிலாந்து), முருகபூபதி,    இராஜரட்ணம் சிவநாதன்,   மாலதி முருகபூபதி (அவுஸ்திரேலியா)    கெங்காதேவி    ஸ்ரீமுருகன், முத்துலிங்கம் ஜெயகாந்தன்,    கலாநெஞ்சன் ஷாஜகான்,    நித்தியகலா கிருஷ்ணராம்,   திலகா தில்லைநாதன், பரிமளஜெயந்தி நவரத்தினம், ந. கணேசலிங்கம்,    ஆழ்வாப்பிள்ளை  கந்தசாமி, வீ. நடராஜா,  கல்லூரி அதிபர்    நா.புவனேஸ்வரா ராஜா  ( இலங்கை) முதலானோரின் படைப்புகள்    வெளியாகியுள்ளன.   அத்துடன் நீர்கொழும்பின் மூத்த எழுத்தாளர்    அமரர் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் பற்றிய நினைவுப்பதிவுக்கட்டுரையும் அவரது நினைவாக அவர் முன்னர் எழுதிய    சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.

கட்டுரை,  சிறுகதை, கவிதை, ஆய்வுகள் மற்றும் நீர்கொழும்பின் வரலாற்றுச்சுவடுகளை சித்திரிக்கும் படங்களும் பதிவுசெய்யப்பட்டிருக்கும்    நெய்தல் நூலின் முகப்பை  கல்லூரியின் பழைய    மாணவர் சுஜித் நிர்மல் காளிதாஸ் வடிவமைத்துள்ளார்.

கொழும்பு    குமரன் அச்சகம் பதிப்பித்துள்ள இந்நூலின் பிரதிகளுக்கு தொடர்புகொள்ளவும்.

லெ.முருகபூபதி

letchumananm@gmail.com 00 61 ( 0 ) 4166 25766

Series Navigationபேருந்து நிலையம்உதிராதபூக்கள் – அத்தியாயம் 5
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *