பாதுகாப்பான கூடங்குள அணுமின் உலைகள் இயங்க வேண்டும்-அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்

This entry is part 21 of 36 in the series 18 மார்ச் 2012




 



 

முன்னுரை :  அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக் கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.

உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செததால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

இப்போது (2012 மார்ச்) ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.  டார்வின் பிறந்து, இறந்த ஆண்டுகள். (1809-1882). இந்து மாக் கடலில் 1831-1835 ஆண்டுகளில் பயணம் செய்த டார்வின் கப்பல் கல்பாக்கம் அருகில் சென்றதாக அவரது கடல் வரைபடத்தில் இல்லை.  அது ஈழத் தீவுக்குத் தெற்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றது.  1757 இல் எரிமலை மூச்சு விட்ட புகைத்தடம் கூட அந்த தூரத்தில் தெரிந்திருக்க முடியாது.

 



////கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் (கீற்றில் வந்தது)  உதயகுமார் திங்கள், 12 செப்டம்பர் 2011 ///
 
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513


/////கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப் பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர் களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.

kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.

 

 

i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.

ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.

iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.

iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.

இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.////

 

என் பதில் :  அணுமின் உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் எண்ணிக்கை கூடிக் குறைந்து மாறுவது.  2001 இல் கூடங்குள அணுமின்னுலை கட்ட ஆரம்பித்துடன் இருந்த ஜனத்தொகை பத்தாண்டுக்குப் பிறகு அதிகமா யிருக்கும்.  கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் இயங்கி வரும் 12 பெரிய கனநீர் அணுமின் நிலையங்கள் (இந்திய கனநீர் அணுமின் உலைகளை ஒத்தவை). ஜனத்தொகை மிக்க டொரோண்டோ நகருக்கு (மில்லியன் 2011) அருகில் மின்சாரம் அனுப்பி வருகின்றன.  மனித நெருக்கம் புலப் பெயர்ச்சிக்கு  இடையூறாய் இருக்கும்.  கட்டி முடித்த அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்க முடியும். அவை யாவும் மனித நெருக்கத்தால் மூடப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது..
///அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? /////

 

என் பதில் :  யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை.  ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை.  கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.

 

/////உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரி மையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.///

 


என் பதில் :  உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன.  ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது.  அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை.  விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை.  என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் ?  அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.

 

////பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. /////

என் பதில் :  9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கத்தில் கூட ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்கள் எதுவும் பாதிக்கப் படவில்லை.  அத்தனை அணுமின் உலைகளும் நிலம் நடுங்கியதும் பாதுகாப்பாய் நிறுத்தமாயின.  நிறுத்தமான அணு உலையில் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுனாமியில் மூழ்கிப் போனதாலும், இரட்டை அல்லது முப்படி வெப்ப தணிப்பு ஏற்பாடுகள், (Shutdown Cooling Systems) ஓய்வுத் தணிப்பு அமைப்பு (Passive / Gravity Cooling Systems) இல்லாததாலும் எருக்கோல்கள் சில உருகிக் கதிரியக்கம் கசிந்தது.  கூடங்குளத்தில் அவ்விதப் பிரச்சனைகள் எழமாட்டா.

1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை..  அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன.  தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது.   கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.

 

////அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.////

 

 

என் பதில் :   அமெரிக்காவில் 9/11 மூர்க்கரின் வரலாற்று முக்கிய தாக்குதலில் ஓரிரு நாட்களில் 5000 பேர் ஜெட் விமான மோதலில் மாண்டனர்.  அதன் பிறகு உலகின் 430 மேற்பட்ட அனைத்து அணுமின் உலைகளும் இராணுவப் பாதுகாப்பில் இயங்கத் துவங்கின.  மூர்க்கர் அணு உலைகள் அருகில் வராமல் பாதுகாக்க வேண்டுமே தவிர பயந்து போய் அவற்றை மூடிவிடக் கூடாது.

 

////2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.////

 

என் பதில் :   போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர்.  பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார்.  அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின.  அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை.  இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை.  ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானல் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது.  அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.

 

 

////அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்.///

 

என் பதில் :   கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம்.  அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம்.  இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை.  மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை.  இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.

 

///அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.////

 

 

என் பதில் :    அணு உலை எருக்கோல்கள் வெப்பத் தணிப்பின்றிச் சிதைவடையும் வாய்ப்புக்கள் கூடங்குளத்தில் மிக மிக அபூர்வம்.  சிதைவடையா அணு உலையில் ஐயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் வெளியேறு வதில்லை.


////1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.///

 

என் பதில் :   கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ).  ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை.  கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.

 

 

//நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்தி ருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்////.

 

என் பதில் :  புகுஷிமா அணுமின் உலைகள் விபத்தால் ஜப்பானில் உள்ள சுமார் 50 அணுமின் நிலையங்கள் தற்காலிய மாக நிறுத்தம் அடைந்துள்ளன.  சில அணுமின் நிலையங்கள் செம்மைப் படுத்தப் படுகின்றன.  அவை மீண்டும் ஒரு சில மாதங்கள் இயங்க ஆரம்பிக்கும். மற்ற ஆசிய நாடுகளில் (சைனா, இந்தியா, தென் கொரியா) அணுமின் உலைகள் நிறுத்தப் பட வில்லை.  ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகளில் எந்த ஓர் அணுமின் உலையும் நிறுத்தம் அடைய வில்லை. ஹிரோஷிமா, நாகசாக்கியைச் சுத்தம் செய்து புதுபித்த ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செம்மைப் படுத்தி இயக்கும்.  அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
///நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.////

 

 

என் பதில் :  கூடங்குளத்தை வரவேற்றது கருணாநிதி திமுக. இப்போது எதிர்ப்பது ஜெயலலிதா திமுக.  மாநில அரசியல் கட்சிகள் மாறவதால் இம்மாதிரி ஏற்படும் ஆதரவு / எதிர்ப்பு முடிவுகள் நிரந்தரம் அல்ல.

///ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா ?////

21 ஆம் நூற்றாண்டில்  ஒரிஜினல் 1000 மெகா வாட் அணு உலை டிசைன்கள் செய்து விற்பனை செய்பவை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய அந்நிய நாடுகளே.  ஆசிய நாடுகள் சைனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் உட்பட அனைத்தும் இந்த நான்கு நாடுகளிடம்தான் பேரளவு மெகா வாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளைக் கடனுக்கோ, காசுக்கோ வாங்கி கடந்த 50 ஆண்டுகளாய்க் கட்டி நிறுவகம் செய்கின்றன.

 

++++++++++++++

தகவல்:
1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12. http://www.world-nuclear.org/info/inf53.html  (World Nuclear Association Report on Indian Nuclear Power)  (February 2012)

13. http://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/

14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 16, 2012

 

Series Navigation“நிலைத்தல்“சாதிகள் வேணுமடி பாப்பா
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

20 Comments

  1. Avatar
    ஜெயபாரதன் says:

    article_image

    BY S VENKAT NARAYAN Our Special Correspondent

    NEW DELHI, March 19, 2012 : Tamil Nadu Chief Minister Jayaram Jayalalithaa today gave her government’s go-ahead to the controversial Kudankulam Nuclear Power Plant (KNPP) being built with Russian technology in the state’s Tirunelveli district.

    In a statement issued in Chennai after a meeting of her cabinet, Ms Jayalalithaa said: “In accordance with (today’s) Cabinet decision, immediate steps will be taken (to facilitate commissioning) of the plant.”

    This brings to an end the uncertainty that threatened the nuclear plant since last September, when local people began protest hunger strikes against the plant on the grounds that it poses a danger to their lives.

    The chief minister also announced a five-billion Indian rupee special development package for the area where the nuclear plant is located.

    She also sought the cooperation of political parties and all concerned to immediately resume work at the plant, stalled following protests since September 2011, spearheaded by the People’s Movement Against Nuclear Energy (PMANE).

    In the meanwhile, for the first time in the past seven-and-a-half months, the police acted against the anti-KNPP protestors on Monday when the law-enforcers arrested nine anti-KKNPP protestors, including the two members of the anti-KNPP struggle committee.

    The state cabinet has decided to allocate INR five billion for locals to set up a cold storage for fish catch, construct houses, lay roads and repair mechanized fishing boats, Jayalalithaa said.

    The decision comes a day after completion of polling at Sankarankoil, which falls in the same district.

    Readers will recall that the project has had a chequered history. It was on November 20, 1988 that an Inter-Governmental Agreement on the project was signed by then Prime Minister Rajiv Gandhi and Soviet President Mikhail Gorbachev.

    The project remained in limbo for 10 years due to political and economic upheaval in Russia after the post-1991 Soviet breakup, and also due to objections of the United States on the grounds that the agreement does not meet the 1992 terms of the Nuclear Suppliers Group (NSG).

    A small port became operational in Kudankulam in January 2004. It was established to receive barges carrying over-sized light water reactor equipment from ships anchored at a distance of 1.5 kilometres. Until then, materials had to be brought in via road from the port of Tuticorin, risking damage during transportation.

    In 2008, negotiation on building four additional reactors at the site began. Though the capacity of these reactors has not been declared, it is expected that the capacity of each reactor will be 1000 MWe or 1 GWe. The new reactors will bring the total capacity of the power plant to 9200 MWe or 9.2 GWe.

    In June 2011, Sergei Ryzhov, the chief designer of the light water VVER nuclear reactors used at this Nuclear Power Plant, was killed in an airplane accident. The plane belonging to the Rus-Air airlines was flying from Moscow to the Karelian capital Petrozavodsk.

    Two 1 GWe reactors of the VVER-1000 model are being constructed by the state-owned Nuclear Power Corporation of India Limited (NPCIL) and Russia’s Atomstroyexport. When completed, they will become the largest nuclear power generation complex in India producing a cumulative 2 GWe of electric power.

    Both units are water-cooled, water-moderated power reactors. The first was scheduled to start operation in December 2009 and the second one was scheduled for March 2010. Before the locals began their agitation, the official projections put unit 1 into operation in December 2011, and unit 2 about a year thereafter. These will have to be rescheduled yet again.

    Four more reactors are set to be added to this plant under a memorandum of intent signed in 2008. A firm agreement on setting up two more reactors, has been postponed pending the ongoing talks on liability issues.

    Under an inter-government agreement signed in December 2008 Russia is to supply to India four third generation VVER-1200 reactors of 1170 MWe.

    ++++++++++

    Extracted from Web Sources
    S. Jayabarathan

  2. Avatar
    meyyarul says:

    அய்யா நீங்கள் யாரோ எவரோ… எனக்குத் தெரியாது… கூடங்குளம் அணு உலை ஏன் 6 ரிக்டர் அளவு வரைதான் தாங்கும்? கூடங்குளம் அருகேயுள்ள கடலில் இரண்டு வண்டல் குவியல்கள் (slumps)இருக்கே அதுபத்தி உங்களுக்குத் தெரியுமா? ஜப்பானில் 50 அணு உலைகள நிறுத்தி மீண்டும் புது மாதிரி இயக்குவாங்கண்ணு சொல்றீங்களே புகுஷிமா மக்கள் எங்கே புகுஷிமாங்கற நகரத்தில இனி எப்ப மனுஷன் வாழ்வான்னு சொல்ல முடியுமா? யுரேனியத்தை மண்ணிலிருந்தும் பிறகு செரிவூட்டும்போது பிறகு அதிலிருந்து வர்ற கழிவுகள்ளயும் எத்தனை சதவீதம் கதிர்வீச்சு இருக்குன்னு சொல்ல முடியுங்களா? அதவிட ஒரு அணு உலை அமையற இடத்தைச் சுத்தி இத்தன கி.மீட்டர்ல எவ்வளவு மக்கள் வசிக்கணும்னு இவங்களுக்கு தொழில்நுட்பமும் இன்ன பிறவும் வழங்குகிற உலக அணுசக்திக் கழகம் சொல்லிருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? அதைவிட இப்ப செலவழிச்சுருக்கிற பணத்தை வெச்சு எத்தன ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்த 20 வருஷத்துல வழங்கியிருக்க முடியும்னு தெரியுமா? இங்கிருக்கிற குண்டு பல்புகளை கட் பண்ணிட்டு சி.எப்.எல் பல்புகளை போட்டாலே நமக்கு 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் உங்களுக்குத் தெரியுமா? ஆறுவிரல் ஒன்னுதான் முளைக்குதுன்னு சொல்லியிருக்கிறாரா உதயகுமார் உங்களுக்கு… கல்பாக்கம் அணு உலைல வேலை செய்யறவங்களோட ஹெல்த் ரிப்போர்ட் எதையுமே சம்பந்தப்பட்டவங்க குடும்பத்திற்கு நிர்வாகம் கொடுக்கறதில்லேன்னு உங்களுக்குத் தெரியுமா? இதை எல்லாத்தையும் விட வெளிநாடுகள் செய்யறதை நாம தொழில்நுட்பம்னு தொங்கிக்கிட்டு இருக்கிறோமே? அவங்க பேண்டுபுட்டு பேப்பர்ல துடைக்கிறாங்க நாமளும் அப்படிச் செய்யலாமா அண்ணே?

  3. Avatar
    ஜெயபாரதன் says:

    உதயகுமாரும் அவரது சில சிறுபான்மை ஆதரவாளரும் அவர் விரும்பும் ஒரு சில காரணங்களால் அணு உலைகளை எதிர்ப்பது குடியரசு நாட்டில் அவருக்கு உரிமைதான்.

    அதேபோல் மத்திய அரசு தான் 1985 ஆண்டு திட்டமிட்டபடிப் பல காரணங்களால் கூடங்குளத்தில் கட்டிய அணுமின் நிலையங்களை நிறுத்தாது இயக்குவது அவரது குடியரசுக் குறிக்கோள், பெரும் பான்மையர் உரிமையும் கூட.

    1860 ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் தென்பகுதியில் அடிமைப் பட்ட கறுப்பரை விடுவிக்க ஆப்ரஹாம் லிங்கன் உள்நாட்டுப் போரைத் தவிர்க்க முடியாமல் தொடங்க வேண்டியதாயிற்று. அதற்கு இருபுறமும் 300,000 பேர் பலியாகி மாண்டனர்.

    சி. ஜெயபாரதன்.

  4. Avatar
    ஜெயபாரதன் says:

    சென்னை, மார்ச் 20, 2012 : “”கல்பாக்கத்துக்கு மிக அருகிலேயே கடலுக்கு அடியில் எரிமலை உள்ளது. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக்கூடும் என்பதால், அணு மின் நிலையத்துக்கு மிக அருகிலேயே சுனாமி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது” என்று அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கூட்டமைப்பு சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கல்பாக்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி கூறியது:

    கல்பாக்கம் அருகே கடலுக்கடியில் எரிமலை இருப்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. http://www.volcanolive.com என்ற இணைய தளம் இந்திய எரிமலைகள் என்ற பக்கத்தில் பெயரிடப்படாத எரிமலை என்ற தலைப்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

    சென்னைக்கு தென்கிழக்கே 156 கி.மீ. தொலைவிலும், புதுவைக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும் இந்த எரிமலை கடலுக்கு அடியில் உள்ளது. கடந்த 1757-ம் ஆண்டு இந்த எரிமலை வெடித்ததாக ஆவணங்களும் உள்ளன.

    இதுபோல்www.phen omena.org.uk, Global Volcanism Program உள்ளிட்ட இணைய தளங்களிலும், கடல் எரிமலை ஆய்வாளர் பி. ஹெடெர்வாரியின் ஆய்வு நூலிலும் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

    இந்த எரிமலை, மீண்டும் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு எரிமலை வெடிக்குமானால், கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு மிக அருகிலேயே சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இப்படிப்பட்டச் சூழலில், கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு எரிமலையால் ஏற்படும் அபாயம் குறித்து, சர்வதேச அணுசக்திக் கழகத்தின் ஆய்வு நூல் வெளிவந்து 8 மாதங்களுக்கு பிறகும்கூட, இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டுக் கழகம் எந்தவித ஆய்வையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை என்றார்.

    கல்பாக்கம் பரமன்கேரி மீனவர்கள் பெருமாள், சுதாகர் ஆகியோர் கூறியது: தானே புயல் பாதிப்புக்குப் பின் 20 நாள்கள் கழித்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றோம்.

    கரையிலிருந்து 20 கி.மீ. தொலைவில் எப்போதும் மீன் பிடிக்கும் பகுதியில் இறால் பிடிப்பதற்காக வலை விரித்துவிட்டுக் காத்திருந்தோம். அப்போது கடலுக்கடியிலிருந்து புயல் போல அனலுடன் புகை வந்தது. கடல் நீரும் வெப்பமானது. உடனடியாகக் கரைக்குத் திரும்பிவிட்டோம்.

    வெப்பமான கடல் நீர் பட்டு வலைகள் சிறு சிறு துண்டுகளாக அறுந்துபோயின. கடற்கரை மணலும் கருமை நிறமாக மாறியது. இதுகுறித்து கூவத்தூர் காவல்நிலையம் மற்றும் மீன்வள ஆராய்ச்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே, இதுகுறித்த ஆய்வை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்

  5. Avatar
    ஜெயபாரதன் says:

    கடலடியில் எரிமலை வெடித்துப் புகை கிளம்பினால் சுனாமி ஏற்படும் என்பது இதுவரை நிகழ்ந்த சம்பவமா வென்று தெரிய வில்லை. ரிக்டர் அளவைப் பொருத்துப் பூகம்பம் நேர்ந்தால் சுனாமி உண்டாகலாம். ஆனால் எரிமலை வேறு, பூகம்பம் வேறு. இரண்டும் ஒரே இடத்தில் உண்டாகுமா என்பதும் உறுதியாக அறிய முடியாது.

    எரிமலையால் கடலில் சுனாமி ஏற்படும் என்பதை விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது உறுதி செய்யப் படாமல் ஏற்றுக் கொள்ளப் பட்டால் சென்னை நகர மக்கள் முதலில் புலம்பெயர வேண்டும்.

    தமிழர் அஞ்ச வேண்டியது தூங்கும் எரிமலைக்கு. புகை எழும்பியதும் பாதுகாப்பாய் நிறுத்தப்படும் அணு உலைக்கு இல்லை.

    சி. ஜெயபாரதன்
    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    ஜெயபாரதன் says:

    Unnamed Volcano –
    John Seach john

    India

    11.75 N, 80.75 E
    Submarine volcano
    Unknown depth

    The volcano in located 156 km SE of Chennai, and 100 km east of Pondicherry. A submarine eruption was reported in 1757, but its existence has not been confirmed.

    1757 Eruption

    The eruption was reported from a passenger on board a passing ship.

    “Just before we sailed from Pondicherry, fires broke out on the surface of the sea three leagues from that place, with the utmost impetuosity, throwing up pumice stones, and other combustibles and forming an island of a league long…”

  7. Avatar
    ஜெயபாரதன் says:

    உதயகுமாரும் அவரது சில சிறுபான்மை ஆதரவாளரும் அவர் விரும்பும் ஒரு சில காரணங்களால் அணு உலைகளை எதிர்ப்பது குடியரசு நாட்டில் அவருக்கு உரிமைதான்.

    அதேபோல் மத்திய அரசு தான் 1985 ஆண்டு திட்டமிட்டபடிப் பல காரணங்களால் கூடங்குளத்தில் கட்டிய அணுமின் நிலையங்களை நிறுத்தாது இயக்குவது அவரது குடியரசுக் குறிக்கோள், பெரும்பான்மையர் உரிமையும் கூட.

    1860 ஆண்டுகளில் அமெரிக்க நாட்டில் தென்பகுதியில் அடிமைப் பட்ட கறுப்பரை விடுவிக்க ஆப்ரஹாம் லிங்கன் உள்நாட்டுப் போரைத் தவிர்க்க முடியாமல் தொடங்க வேண்டியதாயிற்று. அதற்கு இருபுறமும் 300,000 பேர் பலியாகி மாண்டனர்.

    சி. ஜெயபாரதன்

  8. Avatar
    ஜெயபாரதன் says:

    கலகக்கார நாரதர் ஞாநி தன் மூக்கைத்தான் அறுத்துக் கொண்டார். சென்னை நகர மாந்தர் இப்போது அஞச வேண்டியது தூங்கும் எரிமலைக்கு. இயங்கிப் பாதுகாப்பாய் நிற்கும் அணு உலைக்கு அல்ல.

    சி. ஜெயபாரதன்.

  9. Avatar
    paandiyan says:

    ஞாநி போன்ற எழுத்தார்களை திண்ணை முன்னர பார்த்ததுதான் . இளையராஜா பற்றி எழுதி தேவை இல்லாமல் சர்ச்சை உண்டுபண்ணி கிளம்பி ஓடியவர்தான் . ஒரு எழுத்தாளர் இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் கட்டுரை, அரசியல் கட்டுரை , சினிமா கட்டுரை, விஞ்சான கட்டுரை என்று எதை வேண்டுமானாலும் எழுதாலாம் ஓர நேரத்தில் பல பல பத்திரிகைகளில் — எல்லாம் தனக்கு தெரியும் என்பது போல . இது ஒன்றும் புதுமை இல்லை . அவர்களுக்கு படிபவர்கள் புத்திசாலி என்று பெரும்பாலான நேரம் மறந்து விடுகின்றது .

  10. Avatar
    Kavya says:

    The essay has an awash of many pictures like a newspaper report. I don’t know how to insert pictures in between paras.

    This movement against Kudankulam Project will fizzle out soon because it is not backed up by all Indian citizens unanimously except the usual fringe groups like HR. Only the coastal villages, among them too, only fishermen, who live close by the site, are agitating. All other parts of TN reeling under power-cuts, which is making their daily lives, miserable are for the Project to come through and they will have uninterrupted power supply soon.

    As Jayabaratan tellingly puts it, it is the majority interests against the minority interests and the majoritarian will should prevail and the pain and fears of ppl from a few villages should be ignored. Jeremy Bentham’s utilitarian fundamental axiom, “It is the greatest happiness of the greatest number that is the measure of right and wrong”.

  11. Avatar
    ஜெயபாரதன் says:

    நாட்டுக்கு ஏவுகணை வல்லமை தந்து முன்னேற்றிய தேசப் பற்று மிக்க ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக வரக் கூடாதென்று எதிர்த்த தமிழர் ஞாநி என்பதை எவ்ரும் மறக்கக் கூடாது.

    கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை !!!!

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      kovaisound says:

      Forget the question of tsunami, earthquake etc. The simple fact that this govt is not transparent in any issue and put it as national security is really a fearsome and to believe any govt agency to be truthful to people is a farfetched dream. there re few issues that we have not got any concrete answers.
      1. There is no truth that there re no accidents in any of the indian reactors. Do we have any impartial inquiry in any of the working conditions. The answer is no. Can we get all the details placed in public. The answer is no. all will be closed under the ‘security’ blanket.

      2. Whats the cost of closing the reactors after their life. This was never discussed and all we have taken for granted that there is nothing to worry. Read the article and we understand how much we know about it.
      http://www.nytimes.com/2012/03/21/science/earth/as-nuclear-reactors-age-funds-to-close-them-lag.html?_r=1&gwh=0706B8F453C8D81C8C7DF25B58E8A716&ref=science&pagewanted=all

      this article is a general news article but raises the important question of who is to answer here in india (or for that matter in any 3rd world country)

      3. The spent fuel issue – do we have safe method of disposal. NO. we have to believe the ‘scientists’. who re these scientists. Are they impartial. NO. Ask any ‘SCIENTIST’ here with our nuclear establishment, how many new reactors went into power generation in US after the 3-mile island incident (accident). Can Mr. Jayabharathan answer why US never allowed any new nuclear power generation complex come up after 3-mile island
      (acc)(Inc)ident. Are they technologically not well versed or technologically not so good than our nuclear establishment?

      5. After the accident, Japan had accepted that it will be years to get a robotic equipment ready to go clean up the crippled reactors. Do we know that. Are we capable of such feat – one to accept the accident and two technology to do such a thing.

      6. How many of the nuclear reactors generate to their fullest capacity?. Do we have a complete statistics before we believe our ‘Scientists and Engineers’ saying we can produce 6000 MW here. What is the energy generating statistics of all indian reactors run by the Nuclear Establishment?.

      7. JB has completely accepted what our NUCLAER ESTABLISHMENT says as true and want us to go with it. Can he answer why Germany and other European countries re not going for nuclear engery in the future. Why Germany is closing all its reactors in the coming years.

      8. Only in 3rd world like india, we re forced to take what the govt says its good. No question should be asked. if you protest, you re funded by foreign agents. Ask the govt where did they get the funding for the project – its RUSSIA – and one cannot question the govt making secret deals with foreign countries to get these and we have accept it as ‘patriotic’ act. Well I will take fund or support from any corner of the world to fight the deman imposed on us by the ‘govt’ or any establishment.

      9. There re recent news in NY TIMES, HINDU that show how foolish we have to take this technology. The west knew its not for them but to 3rd world like us who will buy – we dont know how much commission got paid to whom to get it done – on credit thinking its a true science and good for us.

      10. few weeks ago, in a news article in The Hindu, the nuclear scientist who workd under Edward Teller – the father of Hydrogen Bomb – had cleared stated that the nuclear energy is a one big wasteful venture. he was in india to deliver a lecture. He won the Nobel Peace price and head of the Max Plank nuclear research institute in Germany. How come our govt failed to stop him – though its well known he was anti-nuclear activist. The govt had stopped after issuing visa to speak at Greenpeace meeting on the first anniversary of the japan nuclear disaster as it came to know she is going to speak against the nuclear reactors.

      11. In an article, NY Times, reported on the protest rally organised to stop the renewing the licence for the Indian Point nuclear plant, please read

      http://www.nytimes.com/2012/03/07/nyregion/in-indian-point-nuclear-debate-japanese-voices-bear-witness.html

      the last but one para from the article

      About 15 years ago, a worker at Indian Point was hurt by a machine that pierced his boot. At a hospital, a decontamination pathway was established, and admissions were halted, Dr. Erik Larsen, an emergency doctor, recalled. “This is a relatively minor traumatized patient,” he said, “that took four hours, and we needed 60 people.”

      are we capable of facing such a disaster.

      12. Jayabarathan is basically a nuclear engineer and how can we expect a impartial reply on this. nuclear energy is his bread and butter and he is pro-nuclear. Like Srinivasan who was part of the team established by govt of TN to study he safety of the project. Btw, Srinivasan is pro nuclear and he clearly declared on the day of his appointment. How do we expect a impartial view from him. Selecting him itself showed that TN Govt (actually its Jayalalaitha) is all set to go with the project but waited for the election to be over.

      12. How does jayabarathan equate this protest of the people with Udayakumar with the final war in Eelam and put the blame of the genocide on LTTE absolving the SL Army from the killing of the tamils.

      13. Kalaam visited the project and next day there was 2 full page article supporting the project in The Hindu. It was well known fact that he just came to support the project not to study the truth. For him the project is already SAFE in his mind. He was sent by the govt to support as he was ‘sent’ to SL on a govt mission. We can talk about the patriotism of leaders like him to a great length and will find these guys re all one way or other support all govt projects. They re the face of the govt projected to be humane and scientific too. In reality, its their ego and stupid stand that scientific research is unbiased search for ‘TRUTH’.

  12. Avatar
    ஜெயபாரதன் says:

    கூடங்குளம் போராட்ட வீரர் உதயகுமார் நூற்றுக் கணக்கான அப்பாவி மீனவரைத் திரட்டி தனக்குப் பாதுகாப்பாய் ஒரு மனிதக் கவச அணியைப் பந்தலின் கீழ் முன்வைத்துத் தான் மறைந்து கொண்டிருக்கிறார்.

    அவர்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், தாயிடம் பால் குடிக்கும் பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்டிர்கள் அந்தக் குழுவில் காணப்படுவது நியாயமாகத் தெரிய வில்லை எனக்கு. வயிற்றுப் பிள்ளையும், கைப் பிள்ளையும், வயதுப் பிள்ளையும் காரணம் அறிந்து மறியல் செய்கின்றன என்று என்னால் நம்ப முடிய வில்லை. மீனவர் கூட்டம் காசு பணம் வாங்காமல் இப்படி இராப் பகலாய் மறியல் செய்வதையும் என்னால் நம்ப முடிய வில்லை.

    இத்தனை பேருக்கு எப்படி உணவும், நீரும், சுகாதார வசதியும், வாகன வசதியும் பிறரது டாலர் பண உதவி பேரளவில் வராமல் உதயகுமார் சாதிக்கிறார் என்பதும் நம்ப முடிய வில்லை.

    கடந்த ஈழப் போரில் இப்படித்தான் பல்லாயிரம் அப்பாவி ஈழத் தமிழரைக் கவச அணியாக ஈழப் புலிகள் வைத்துக் கொண்டு போராடினர். முடிவில் பேரளவில் கொல்லப் பட்டவர் யார் ? அந்த அப்பாவி மக்களே.

  13. Avatar
    ஜெயபாரதன் says:

    (புதிய சேர்க்கையோடு)

    கூடங்குளம் போராட்ட வீரர் உதயகுமார் நூற்றுக் கணக்கான அப்பாவி மீனவரைத் திரட்டி தனக்குப் பாதுகாப்பாய் ஒரு மனிதக் கவச அணியைப் பந்தலின் கீழ் அமர வைத்துத் தான் மறைந்து கொண்டிருக்கிறார்.

    அவர்களில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், தாயிடம் பால் குடிக்கும் பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்டிர்கள் கூட்டத்தில் காணப்படுவது மனித நேய மறியலாகத் தெரிய வில்லை எனக்கு. வயிற்றுப் பிள்ளையும், கைப் பிள்ளையும், வயதுப் பிள்ளையும் காரணம் அறிந்து மறியல் செய்கின்றன என்றும் என்னால் நம்ப முடிய வில்லை. மீனவர் கூட்டம் காசு பணம் வாங்காமல் இப்படி இராப் பகலாய் மறியல் செய்து வருவதையும் என்னால் நம்ப முடிய வில்லை.

    மீனவர் கூட்டத்தை ஒன்று சேர்த்து மறியலில் நுழைப்பது அணு உலை எதிர்ப்பல்ல ! அவர்கள் சேர்ந்துள்ள கிறித்துவ மதம்.

    இத்தனை பேருக்கு எப்படி உணவும், நீரும், சுகாதார மருத்துவ வசதியும், வாகன வசதியும் பிறரது டாலர் பண உதவி பேரளவில் வராமல் உதயகுமார் சாதிக்கிறார் என்பதும் நம்ப முடிய வில்லை.

    மகாத்மா காந்தி உண்ணாவிரதம் இருந்தபோது தனக்குக் கவச அணியாய் வயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை, வயசுப் பிள்ளை, வீட்டுப் பெண்களைக் கூட்டி வந்து கொட்டகையில் தூங்க வைக்க வில்லை.

    புதிய மகாத்மா உதயகுமாரின் அணு உலைப் பஜனைக்கு ஏன் பத்தாயிரம் மீனவப் பெண்டிர் மட்டும் தேவைப் படுகிறார் ? கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கூடாரத்தில் பிள்ளை பிறந்தால் ஆம்புலன்ஸ் வருமா வராதா என்று மிகவும் கவலை படுகிறார் கர்ண பரமாத்மா உதயகுமார் !

    கடந்த ஈழப் போரில் இப்படித்தான் பல்லாயிரக் கணக்கான அப்பாவி ஈழத் தமிழரைக் கவச அணியாக ஈழப் புலிகள் வைத்துக் கொண்டு போராடினர். முடிவில் பேரளவில் கொல்லப் பட்டவர் யார் ? அந்த அப்பாவித் தமிழ் மக்களே.

    சி. ஜெயபாரதன்.

  14. Avatar
    ஜெயபாரதன் says:

    கூடங்குளத்தில் என்ன் நிகழ்கிறது ? (மார்ச் 23, 2012)

    தினகரன்

    நெல்லை : கூடங்குளம் அணுமின் நிலைய பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன என அணுமின் நிலைய இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய 1, 2 அணு உலைகளுக்கான நிலைய இயக்குனர் சுந்தர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

    கூடங்குளத்தில் கடந்த 4 நாட்களாக பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளன. நாங்கள் மீண்டும் வேலைக்கு சென்றது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த 5 மாதங்களாக பராமரிப்பு பணிகளைகூட முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. தற்போது முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டு, அனைத்து பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியாவில் உள்ள பிற அணுமின் நிலையங்களில் இருந்தும் ஊழியர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

    கல்பாக்கம், கச்ராபாரா, கைகா போன்ற அணுமின் நிலையங்களில் இருந்து முதல்கட்டமாக 25 பேர் பணிக்கு வந்துள்ளனர். மேலும், பணிகளை விரைவுபடுத்த தேவையான எலக்ட்ரீசியன், பீட்டர், வெல்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் 150 பேர் நரோரா, ராஜஸ்தான், தாராபூர் போன்ற அணுமின் நிலையங்களில் இருந்தும் வருகின்றனர்.

    முன்பு 2 ஷிப்ட்களில் பணியாற்றி வந்த ஊழியர்கள் தற்போது 3 ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் கூட பணியாற்றுகின்றனர். விடுமுறை நாட்களிலும் பணியாற்ற உள்ளோம். ரஷ்ய விஞ்ஞானிகளை பொறுத்தவரை தற்போது எங்களிடம் 80 பேர் பணியாற்றுகின்றனர். மேலும் ரஷ்ய வல்லுநர்கள் வர உள்ளனர்.
    அணுமின் நிலைய பணிகளில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலை விரைவில் செயல்படுத்தப்படும். மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு சுந்தர் தெரிவித்தார்.

    கூடங்குளம் 3, 4 அணு உலைகளுக்கான திட்ட இயக்குனர் பானர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது: கூடங்குளம் 3, 4 அணுஉலைகளை பொறுத்தவரை முன்னேற்பாடு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அனுமதி 3, 4 உலைகளுக்கு 2009ம் ஆண்டும், 5, 6 உலைகளுக்கு 2010ம் ஆண்டும் கிடைத்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானபூர்வ அனுமதியும் 3, 4, 5, 6 உலைகளுக்கு பெறப்பட்டுள்ளது. 3, 4 அணு உலைகளுக்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து வருகிறோம். 15,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் கூடங்குளத்தில் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்’’ என்றார்.

    Inline image 1
    ‘போராட்டத்தை கைவிடுங்கள்’

    நிலைய இயக்குனர் சுந்தர் கூறுகையில், “இந்த அணுமின் நிலைய திட்டம் மக்களுக்காக, மக்கள் வரிப்பணத்தில் ஏற்படுத்தப்பட்டது. எல்லா மக்களும் இணைந்து பாதுகாப்பாக இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அணுமின் நிலையம் மூலம் மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்ய உள்ளோம். சுற்றுப்புற மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவது எங்களுக்கு மனவேதனையையும், மனஅழுத்தத்தையும் அளிக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பே மனஉளைச்சலை கொடுத்துள்ளது. பொதுமக்கள் விஞ்ஞானபூர்வமாக நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்த போராட்டத்தை கைவிட்டு எங்களுடன் தோளோடு தோள் நிற்க வேண்டும்’’ என்றார்.

  15. Avatar
    ஜெயபாரதன் says:

    செல்வன் ✆ holyape@gmail.com

    உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம் – எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவவும்,பெண்களுக்கு மோட்டார் வைண்டிங், கம்ப்யூட்டர் டிரெயினிங் கொடுக்கவும் ….
    Posted on மார்ச் 2, 2012 by vimarisanam – kavirimainthan

    http://vimarisanam.wordpress.com/2012/03/02/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/

    உதயகுமாருக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணம் –
    எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உதவவும்,பெண்களுக்கு
    மோட்டார் வைண்டிங், கம்ப்யூட்டர் டிரெயினிங்
    கொடுக்கவும் ….

    எனக்கு கிடைத்திருக்கும் சில தகவல்களை பொது நலன் கருதி கீழே வெளியிடுகிறேன்.

    இவற்றை அரசே வெளியிட்டிருக்கலாம். ஆனால்
    அவர்களுக்கு, கோவா மாநில தேர்தலும்,
    சிறுபான்மையினரின் ஓட்டுக்களும் அதைவிட
    முக்கியமாகத் தோன்றி இருக்கலாம்.அதிருஷ்டவசமாக
    எனக்கு அது போன்ற பிரச்சினைகள் இல்லை !
    இருந்தாலும் வக்கீல் நோட்டீஸ் பிரச்சினை இருக்கிறது !!

    திரு உதயகுமார் அவர்கள் பொறுப்பேற்று நடத்தும்
    தொண்டு நிறுவனம் – Peoples Education For
    Action & Community Empowerment
    உதயகுமார் நாகர்கோயில் ஏரியாவில் ஆக்டிவ்வாக
    இருந்தாலும், இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டு
    இருப்பதோ கீழ்க்கண்ட திண்டுக்கல் விலாசத்தில் –

    Peoples Education For Action &
    Community Empowerment

    Nr Police Colony, Trichy Road,
    Dindigul,Tn

    வெளிநாடுகளிலிருந்து பண உதவி பெறும் தொண்டு
    நிறுவனங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு,

    Form FC-3
    [under rule 4(a)] – என்கிற படிவத்தில்,
    ஒவ்வொரு வருடமும் சில விவரங்களைத் தெரிவிக்க
    வேண்டும்.

    அந்த படிவத்தில் காணப்படும்,
    31 st March, 2011 அன்று முடிவடையும்
    நிதிஆண்டிற்கான விவரங்கள் சில விவரங்கள் கீழே –

    எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பரப்புவதற்காகவும்,
    எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும்,
    இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
    உதவவும், பெண்களுக்கு – தையல், மோட்டார்
    வைண்டிங்/ரிப்பேர், மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றில்
    பயிற்சி அளிப்பதற்காகவும் இந்த தொண்டு நிறுவனம்
    வெளிநாடுகளிலிருந்து பெற்ற நன்கொடை விவரம் –

    KARL KUEBEL STIFTUNG FUER KIND
    UND FAMILE Darmstaedter, Str 100,64625
    Bensheim 1,GERMANY – 64625

    என்கிற ஜெர்மனிய நிறுவனத்திடமிருந்து –
    2,15,21,900.00 ரூபாய்.

    INDISKA MAGASINET AB Box 27317,S-102

    54,Stockolm,Sweden

    என்கிற ஸ்வீடிஷ் நிறுவனத்திடமிருந்து –
    41,91,222.00 ரூபாய்.

    கூடங்குளம் போராட்டத்திற்கும், இந்த
    நன்கொடைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று
    உதயகுமார் கேட்கலாம்.
    ஆமாம் – நான் கூட அதைத்தான் கேட்பேன் –
    அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

    ஆனால், இந்த விவரங்களை உதயகுமாரே
    வெளியிட்டிருந்தால், யாருக்கும் எந்தவித
    சந்தேகமும் ஏற்பட்டிருக்காது !!

    ———————————

    அடுத்த விவரம் தடைசெய்யப்பட்டுள்ள 4 தொண்டு
    நிறுவனங்கள் பற்றியது –

    மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் கீழ்க்கண்ட
    தொண்டு நிறுவனங்களை தடைசெய்திருக்கிறது.

    1)Tuticorin Multipurpose Social
    Service Society (TMSSS),

    2)Tuticorin Diocese Association(TDA),

    இந்த இரண்டு தொண்டு நிறுவனங்களும் தூத்துக்குடி
    பிஷப் யுவன் அம்புரோஸ் அவர்களால்
    பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

    3)People’s Education for Action and
    Community Empowerment run by
    PMANE convener Udayakumar

    4)Good Vision Charitable Trust run
    by PMANE political wing convener
    Mano Thangaraj.

    ——————————————–

    அடுத்த தகவல் -தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி
    மாவட்டங்களில் அமைந்துள்ள சில தொண்டு நிறுவனங்கள்
    2010-11-ல் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்தும்,
    ( சில நன்கொடைகள் இந்தியாவிலும்) பெற்றுள்ள
    நன்கொடைகளின் சில விவரங்கள் –

    Kings World Trust For Children (india)
    95, Chinnammalpuram, Dhalapathisamudram

    (P.O),,Tirunelveli Dt.,Tamil Nadu-627101

    ரூபாய்-1,54,64,697

    Nirman Centre
    14, Chitambana Nagar, Ist Street ,
    Tirunelveli Road,Tuticorin,
    Tamil Nadu-628008

    ரூபாய்-1,79,91,323

    Tirunelveli Social Service Society
    2a, St. Mark’s Street, Pb 108,
    Palayamkottai Tirunelveli,Tn-627002

    ரூபாய்-1,97,82,052

    Tuticorin Multipurpose Social
    Service Society
    Bishop’s House, Post Box No. 122,
    Tuticorin,Tamil Nadu-628001

    ரூபாய்-2,44,37,807

    South India Assemblies Of God
    Pb-9, Shencalab, , Tirunelveli,
    Tamil Nadu-

    ரூபாய்-2,55,27,464.

    Dohnavur Fellowship
    Dohnavur, Tirunelveli,
    Tamil Nadu-627102

    ரூபாய்-2,59,06,292

    The Congregation Of The Brothers
    Of The Sacred Heart Of Jesus
    9-h, High Ground Road,palayamkottai,
    Dist: Tirunelveli,Tamil Nadu-627002

    ரூபாய்-2,74,92,194.

    Tuticorin Diocesan Assocation
    , Tuticorin,-

    ரூபாய்-3,60,11,592

    Socio-economic And Educational
    Development Trust
    16, Sattanayakkan St,
    Tirunelveli,Tn-606601

    ரூபாய்-4,41,37,616

    Tirunelvelli Diocesan Trust
    Assocation
    No. 5 Punithavathtar Street,
    Palayamkottai,Tamil Nadu-627002

    ரூபாய்-2,31,44,407

    The Salvation Army India-South
    Eastern Territory
    North High Ground Rd Maharajnagar,
    Tirunelveli ,Tamil Nadu-627011

    ரூபாய்-8,45,68,057

    Peoples Education For Action &
    Community Empowerment,
    Nr Police Colony Trichy Road, Dindigul,Tn-

    ரூபாய்-2,64,05,409

    நம்பத்தகுந்தவை என்று நான் கருதும் ஆதாரங்களின்
    அடிப்படையில் தான் மேற்கண்ட விவரங்கள்
    வெளியிடப்பட்டுள்ளன. இருந்தாலும், இதில் எதாவது தவறான தகவல் இருந்தால் -சம்பந்தப் பட்டவர்கள் அவற்றைப் பற்றி எனக்கு தெரிவித்தால் – அவற்றை சரி செய்ய நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்.

    செல்வன்
    ++++++++++
    சி. ஜெயபாரதன்

  16. Avatar
    ஜெயபாரதன் says:

    கூடங்குளம்: அரசு- போராட்டக் குழு பேச்சுவார்த்தை- உண்ணாவிரதம் வாபஸ்!
    செவ்வாய்க்கிழமை, மார்ச் 27, 2012, 17:19 [IST]
    Save This Page
    Print This Page
    Comment on This Article
    A A A
    ராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடன் அரசு அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையி்ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்கள் திடீரென்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்த பின்னனி தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

    இதனால் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மற்றும் பொன் இசக்கியம்மாள், பிரேமா, தாமஸ், நேரூஜி, அஞ்சலி ஜெயராஜ் ஆகியோரின் உடல் நிலை மோசமாகியுள்ளது. இடிந்தகரையைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி பொன்இசக்கி மேடையிலேயே மயங்கினார். அவரை அருகில் உள்ள லூர்து அன்னை மருத்துவமனையில் சேர்த்தனர். ஏற்கனவே நேற்று முன்தினம் மயக்கம் அடைந்த அதே ஊரை சேர்ந்த ராஜு மனைவி மெல்ரட் என்பவருக்கு இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உண்ணாவிரத பந்தலில் உதயகுமார் பேசியதாவது, மத்திய மாநில அரசுகள் குழுக்கள் அமைத்தும் இதுவரை எங்களிடம் யாரும் பேசவில்லை. பொதுமக்களை எந்த குழுவும் சந்திக்கவில்லை. நாங்கள் மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். மாநில அரசின் பிரிதிநிதிகள் வந்தால் அவர்களுடன் பேசுவோம். அணு மின் நிலையத்திலிருந்து 30 கி்மீ சுற்றளவு எல்லைக்குள் இருப்பவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தல் வேண்டும்.

    நிலவியல், நீரியல், கடலியல் பிரச்சனைகளை ஆய்வு செய்வதற்கு அரசே ஒரு குழுவை அமைக்க வேண்டும். அணு உலை பாதிப்பால் ஏற்படும் காப்பீடு தொடர்பாக இந்தியா-ரஷ்யா இடையே ரகசிய ஒப்பந்தம் போட்டுளளனர். அதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிட வேண்டும். போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீது உள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.

    பேச்சுவார்த்தை வெற்றி:

    இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் கூடங்குளம் விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையை அரசு துவங்கியது. போராட்டக் குழுவினரின் கோரிக்கைகள் மற்றும் உறுதிமொழிகளுடன் பேச்சுவார்த்தை துவங்கியது.

    ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் துவங்கிய இந்தப் பேச்சுவார்த்தையில் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் பேராயர் யுவான் அம்புரோஸ், மதுரை பேராயர் பீட்டர் பெர்னாண்டோ, கிராம மக்கள் 10 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசின் சார்பில் நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி, அவரது மனைவியும் மாவட்ட துணை கலெக்டருமான ரோகிணி பிதாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டக் குழுவினர் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    அதன் விவரம் வருமாறு,

    1) கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும்.
    2) போராட்டக்குழு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
    3) அணு உலை விபத்து இழப்பீடு குறித்த இந்திய- ரஷ்ய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
    4) அணு உலையைச் சுற்றி 30 கி.மீ. பரப்பளவிற்குள் பேரிடர் மேலாண்மை பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
    5) அணு உலையிலிருந்து வெளியேறும் கழிவுகளை எந்த முறையில் அப்புறப்படுத்துவது என்பது குறித்து விளக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.

    ராதாபுரம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவு தொடரும். அதே சமயம் ராதாபுரத்தில் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் என்று கலெக்டர் செல்வராஜ் உறுதியளித்தார். மேலும் போராட்டக் குழுவினர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது சட்டப்பூர்வமாகத் தான் நடக்கும் என்றும், இது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும், மாவட்ட நிர்வாகத்தினர் பரிவுடன் பேசியதாகவும் போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

  17. Avatar
    ஜெயபாரதன் says:

    Times of India

    Kudankulam N-plant to go on stream soon
    TNN | Mar 27, 2012, 04.10AM IST

    HYDERABAD: Even as situation remains tense at the Kudankulam Nuclear Power Project (KKNPP) in Tamil Nadu, the chairman and managing director of Nuclear Power Corporation of India Limited (NPCIL) S K Jain on Monday firmly stated that generation of nuclear power at the controversial plant would begin soon.

    “As soon as we get permissions from the regulatory bodies, we will begin power generation. Work is going on a war-footing as round the clock operations are in full swing at the two plants at Kudankulam,” S K Jain said at a press conference at Nuclear Fuel Complex (NFC) here. He, however, said he would not be able to specify a time frame at this juncture as clearances would first have to be obtained from the regulatory bodies.

    In the aftermath of the Fukushima Daiichi nuclear disaster last year, Jain said a safety assessment was conducted at all the 20 nuclear power plants in the country. Though safety aspects of all the power plants has been taken care of, he said another Rs 150 crore was being spent at the suggestion of PM Manmohan Singh to scale up safety measures. ” There are enough safety margins but we are still upgrading them,” he said.

  18. Avatar
    Ravisankar says:

    Mr.JeyaBarathan,

    You did not answere to ‘kovaisound’ asked at ‘March 23, 2012 at 5:33 pm’. Rather to counter ‘Kovaisound’, tagging Udayakumar and fishermen are culprit. ‘KovaiSound’ questioned about how could one tell Nuclear Energy is cheaper way of producing electricity??

    Sir, Blind or unrational patriotism is another kind of fanatism. Lot of Indians are deceased like this. You are questioning about the agitation. How could Indiansachieved independence in 1947. All were poor Indian, where they got money to start agitate against British?

    If we ask about location of plant and fuel then it is nation security issue. I agree. But asking statistic information from independent body regarding cancer patient in near by kalpakam nuclear plant which allegedly caused cancer. This is not relate with nation security, right? This what Dr.Pugalenthi asking from day one. why govt is not allowing such things.??

Leave a Reply to Kavya Cancel reply

Your email address will not be published. Required fields are marked *