பிறந்த நாள்

author
2
0 minutes, 1 second Read
This entry is part 6 of 9 in the series 10 ஜூலை 2022

 

 

ஆர் வத்ஸலா

 

இன்று என் பிறந்த நாள்

பழைய சம்பிரதாயத்தில் ஊறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும்

அப்பா

எனக்கும்

என் அண்ணனுக்கும்

முதல் பிறந்தநாளை

சம்பிரதாயப்படி

கொண்டாடவில்லையாம்

அம்மா சொன்னாள்

 

அந்த செலவில்

இரண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்கு

உதவலாம் என்றாராம்

 

எனக்கு அது சற்று குறைதான்

பிறகு ஏழு வயதில்

அம்மாவின் கணக்குப் படி

எனக்கு ‘ஏழு கழுதெ வயசு’ ஆகி விட்டதால்

பிறந்த நாள் கொண்டாட்டத்தை

கனவில் கூட காணவில்லை

 

பின் பயணத்தில்

சிலதை இழந்து

சிலதை பெற்று

 

தேர்வுகள் எழுதிய பிறகு

பாடங்கள் கற்று

 

அழுகையின் ஒரே பயன்

மன அழுக்கின் வெளியேற்றம் தான்

என்றும்

மற்றவரின் கருத்து

கருத்து மட்டுமே

என்றும்

எனது உள்பட கருத்துகளுக்கு

ஒரு போதும்

புனிதத்தன்மை கிடையாது

என்றும்

புரிந்தது

 

ஆயினும்

உண்மையான அன்பின் வெளிப்பாடாக

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பெற்று

பேரன் பேத்தி பாட

மகளின் அரவணைப்பில்

மருமகன் கையால் செய்த

‘கேக்’கை வெட்டுகையில்

புகைப்படத்திற்காக

மட்டும் வருவதில்லை

என் புன்னகை

 

அந்த ‘கேக்’கில் எனது துண்டின் அளவை தீர்மானித்தது

எனது குடும்ப மருத்துவர்

என்றாலும்

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]ஜன்னல்…
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    மதுவந்தி says:

    “தேர்வுகள் எழுதிய பிறகு, பாடங்கள் கற்று” நின்று ரசித்து, யோசிக்க வைக்கிற வரிகள் . பொதுவாக , பாடங்கள் கற்ற பிறகுதான் தேர்வு எழுத வேண்டியிருக்கும். ஆனால் , வாழ்க்கை கல்லூரியில் , தேர்வுகள் முடிந்த பின்பு , கற்றல் தொடர்கிறது .

Leave a Reply to மதுவந்தி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *