பிறவி மறதி

author
0 minutes, 1 second Read
This entry is part 13 of 26 in the series 22 பெப்ருவரி 2015

சேயோன் யாழ்வேந்தன்
நான் பாறையாக இருந்தபோது
இந்தப் பறவை
பலமுறை என்மீது
அமர்ந்திருக்கிறது
நான் மரமாக இருந்தபோது
என் கிளையொன்றில்
அது கூடுகட்டியிருந்தது
நான் நதியாக ஓடுகையில்
சிலசமயம்
சிறகை நனைத்து
சிலிர்த்திருக்கிறது
இப்போது என்னை
அடையாளமே தெரியாததுபோல்
பறந்துகொண்டிருக்கிறது
அப்பறவை
ஞாபக மறதி ஒரு நோய்
பிறவியை மறப்பது
பெரிதினும் பெரிய நோய்
-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)

Series Navigationஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2015பலி
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *