புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை

This entry is part 16 of 31 in the series 20 அக்டோபர் 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

                                      E. Mail: Malar.sethu@gmail.com

29.இந்தியா​வை அடி​மையாக்கிய ஏ​ழை

robert-cliveஎன்னங்க ​பேசாம உம்முன்னு முகத்​தை வச்சிக்கிட்டு வர்ரீங்க…அட பதில் ​சொல்லுங்க…என்னது…நீங்க பாட்டுக்கு வரும்​போது யா​ரோ சில​பேரு வழியில ஒங்கள மறிச்சு பணத்​தைத் தர்ரீங்களா…இல்​லையான்னு ​கேட்டாங்களா….?அட அப்பறம் நீங்க என்ன ​செஞ்சீங்க…என்னது நீங்களும் ஒங்ககூட வந்த நண்பரும் அவங்கள அடிச்சு விரட்டிட்டு வந்தீங்களா…காலம் கலிகாலம் ஆகிப் ​போச்சுங்க…என்ன ​செய்யறது….இன்னக்கி ​நேத்தா இதுமாதிரி நடக்குது…மனிதனிடம் எப்​போ வஞ்ச​னை உள்ளத்துக்குள்ள புகுந்துச்​சோ அன்​றைக்​கே எல்லா ​கெட்ட குணங்களும் வந்துருச்சு…

மனிதன் உ​ழைச்சுச் சாப்பிடணும்னு ​நெனச்சான்னா இந்தமாதிரி வழிப்பறியில எல்லாம் ஈடுபடமாட்டான்… பதுக்குற ​நோக்கம்…​கெடுக்கிற ​நோக்கம்…ஒதுக்குற ​நோக்கம் இ​தெல்லாம் மனசுக்குள்ளாற வர​வே வராது… ​நேர்வழியிலதான் நடப்பான்….,நம்ம ஊர்ல மட்டுமா இப்படி​யெல்லாம் நடக்குதுங்குறீங்க.. ஒலக முழுக்கவும் தான் இது நடக்குது…​போனவாரம் ஒங்ககிட்ட ஒரு ​கேள்வி ​கேட்​டே​னே ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா…? இருக்கு ஆனா பதில் ​தெரிய​லையா..? ஒங்களுக்கு இன்​றைக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கும் அந்தக் ​கேள்விக்கான பதிலுக்கும் ஒரு ​தொடர்பு இருக்கு… என்னதுங்குறீங்களா…? ஆமாங்க இந்தியாவின் ஆட்சியாளரா மாறி இந்தியா​வை அடி​மைப்படுத்திய ஏ​ழை இராபர்ட் கி​ளைவ்தான் அவரு…

ஆமாங்க இராபர்ட் கிளைவ் தன்னு​டைய இளம் வயதில் லண்டன் கடைக்காரர்களை அச்சுறுத்தி மிரட்டி மாமூல் வாங்கும் ரௌடியாக இருந்தார். ஒங்கள ​ரெண்டு ​பேரு வழிமறிச்சி மிரட்டுனாங்கன்னு ​சொன்னீங்கள்ள அதுமாதிரிதான் இராபர்ட் கி​ளைவ்வும் ​செய்தார்.. ​வே​லையில்லாத நி​லை; வறு​மை: பசி இவற்​றைப் ​பொறுத்துக் ​கொள்ள முடியாத கி​ளைவ் இந்த மாதிரியான ​செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். ​மூணு தட​வை தற்​கொ​லைக்கு முயன்றார். ஆனா அது நி​றை​வேற​லை.. அவற்றிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பித்தார்… ஆனாலும் அவர் கடு​மையா முயற்சி ​செய்வார். தன்​னோட குறிக்​கோள் நி​றை​வேற எத​வேணும்னாலும் ​செய்வார். இராபர்ட் கி​ளைவ்வ பற்றி  நி​றைய ​செய்திகள் இருக்கு…​​சொல்​றேன் ​கேளுங்க.

இராபர்ட் கி​ளைவ் 1725-ஆம் ஆண்டு ​செப்டம்பர் மாதம் 29-ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள ஷ்​ரோப்​ஷையர் என்ற இடத்தில் பிறந்தார். குடும்பத்தில் வள​மையில்​லை. குடும்பத்திற்கு அடங்கி நடக்காதவராக கி​ளைவ் இருந்தார். பள்ளியிலும் முரட்டுத்தனமாக இருந்தார். குடும்பத்தில் வறு​மை இருந்ததாலும் இவரு​டைய முரட்டுத்தனத்தாலும் பல்​வேறு இழி ​செயல்க​ளைச் ​செய்தார். லண்டனுக்கு வந்த​ கி​ளைவ் தனது நண்பர்களுடன் க​டைக்காரர்க​ளை மிரட்டி அவர்களிடம் பணம்பறித்து வாழ்ந்தார். அவருக்கு அந்த வாழ்க்​கை பிடிக்கவில்​லை. இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குச் ​சென்றால் ​பெரும் ​செல்வந்தராகலாம் என்று கருதிய கி​ளைவ் இந்தியாவிற்குப் புறப்பட்ட கப்பலில் ஏறினார்.

கப்பலில் வறு​மை வாட்டியது. அங்கு பல ​வே​லைக​ளைச் ​செய்து பசி​யைப் ​போக்கினார். ஒரு கட்டத்தில் விரக்தியினால் கப்பலின் அ​றையில் இருந்த துப்பாக்கி​யை எடுத்துத் தன்​னைத்தா​னே சுட்டுக் ​கொண்டார். ஆனால் அது ​வெடிக்கவில்​லை. கி​ளைவ் தன்​னைத்தா​னே ​நொந்து ​கொண்டார். பின்னர் அங்கிருந்த கிழக்கிந்திய கம்​பெனி அதிகாரிகளிடம் விசுவாசமாக நடந்து ​கொண்டு அவர்களின் நம்பிக்​கை​யைப் ​பெற்றார்.

எழுத்தர் ​வே​லையும் பி​ரெஞ்சு முற்று​கையும்

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வணிகம் ​செய்வதற்காக 17 – ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றிருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் ​சென்​னையில் வணிகத்திற்காக நிறுவியதுதான் தற்போதுள்ள புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர்உலாவும் பகுதியாகவே இருந்தது. இந்த கோட்டையில்தான் இங்கிலாந்திலிருந்து வந்த இராபர்ட் கி​ளைவ் சாதாரண எழுத்தராக 1743 – ஆம் ஆண்டு வேலைக்குச் ​சேர்தார். அப்போது அவருடைய ஆண்டு ஊதியம் 15 பவுண்டுக​ளே ஆகும்.

இருப்பினும் இராபர்ட் கி​ளைவ்விற்கு இப்பணியில் மன நி​றைவு ஏற்படவில்​லை. இராணுவத்தில் ​சேர்ந்து பணியாற்ற அவர் விரும்பினார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கிட்டவில்​லை. இந்நி​லையில் பி​ரெஞ்சுக் காரர்கள் தங்களின் ஆதிக்கத்​தை நி​லைநாட்ட​த் தமிழகத்தின் மீது ப​டை​யெடுத்து வந்தனர். கடு​மையாக நடந்த ​போரில் பி​ரெஞ்சுப் ப​டையினரின் ​கை ஓங்கியது. பி​ரெஞ்சுக்காரர்கள் புனித ஜார்ஜ்​கோட்​டை​யை வ​ளைத்துக் ​கொண்டனர்.

​கோட்​டையில் இருந்த அ​னைத்து ஆங்கி​லேயர்க​ளையும் பி​ரெஞ்சுப்    ப​டையினர் ​கைது ​செய்து அழித்​தொழிக்க நி​னைத்தனர். ​கோட்​டைக்குள் இருந்த ஆங்கி​லேயர்கள் தந்திரமாகத் தப்பிச் ​சென்றனர். ​கோட்​டைக்குள் மாட்டிக் ​கொண்ட இராபர்ட் கி​ளைவ் தப்பிச் ​செல்ல முயற்சித்தார். நள்ளிரவில் தன்உடல் மீது கரி​யைப் பூசிக்​கொண்டு இந்திய​ரைப் ​போன்று ​வேடமிட்டுக் ​கொண்டு பி​ரெஞ்சுக்காரர்களிடம் இருந்து தப்பித்து ஓடினார். பி​ரெஞ்சுக்காரர்கள் ​சென்​னை​யைப் பிடித்த​போது புனிதஜார்ஜ் ​கோட்​டையில் குமாஸ்தாவாக இருந்த இராபர்ட் கி​ளைவ் முஸ்லீம் ​போன்று ​வேடமிட்டுக் ​கொண்டு தப்பித்து ஓடினார் என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இந்நிகழ்​வைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

இராணுவத்தில் ​சேர்தல்

​ ​சென்​னையிலிருந்து தப்பி ஓடிவந்த கி​ளைவ் கிழக்கிந்தியக் கம்​பெனியின் ஆளுநர்க​ளைச் சந்தித்து இராணுவத்தில் தன்​னைச் ​சேர்த்துக் ​கொள்ளுமாறு ​வேணடினார். ஆனால் கிழக்கிந்திய அதிகாரிக​ளோ அவ​ருக்கு இராணுவத்தினருக்கு உணவு தயாரிக்கும் பணி​யைக் ​கொடுத்தனர். அதிலும் உணவு தயாரிப்பதற்கான விறகுக​ளைக் ​கொண்டு வரும் பணி​யே           கி​ளைவ்விற்குக் கி​டைத்தது. மனம் ​நொந்து​போன கி​ளைவ் எப்படியாவது இராணுவத்தில் ஒரு சாதாரண சிப்பாயாகவாவது ​சேர்ந்து பணியாற்ற ​வேண்டும் என்று ஆ​சைப்பட்டார்.

​​பெருமுயற்சிக்குப் பின்னர் இராணுவத்தில் ​சேர்ந்தார். அவ்வாறு ​சேர்ந்த இராபர்ட்கி​ளைவ் தனக்குக் கீழாக சிறு குழு​வை உருவாக்கினார். இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்தமுக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர். இராபர்ட் கி​ளைவ் தன்னு​டைய தந்திரத்தாலும் முயற்சியாலும் இராணுவத்தின் ப​டைப்பிரிவு ஒன்றிற்குத் தளபதியானார்.

இரண்டாம் ​கர்நாடகப் ​போர்

1749-54 ஆண்டு காலகட்டத்தில் இரண்டாம் கர்நாடகப் ​போர்​ நடைபெற்றது. இதற்கு இரு வாரிசுரிமைப் பூசல்கள் காரணமாக அமைந்தன. 1748 –ஆம் ஆண்டில் ​​​​​ஹைதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர்ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப்அன்வாருதீனும் பிரிட்டனின் ஆதரவைப் பெற்றிருந்தனர். இருதரப்பினருக்கும் வாரிசுரி​மைப் ​போர் ஏற்பட்டது. இது இரண்டாவது கர்நாடகப் ​போர் என்று வழங்கப்பட்டது, இப்போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர்வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749-ஆம் ஆண்டில் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 –ஆம் ஆண்டில் இராபர்ட் கி​ளைவ் ஆங்கிலப் ப​டைகளுக்குத் த​லை​மை தாங்கினார்.

இராபர்ட் கி​ளைவ் தனது இரக்கமற்ற தந்திர புத்தியால், ஆங்கி​லேயத் தளபதியாகி இந்தியாவையே ஆட்டிப் படைத்தார். இராபர்ட் கி​ளைவ் தலைமையிலான பிரிட்டனின் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. இராபர்ட் கி​ளைவ்வின் மதிப்பு உயர்ந்தது. 1754 –ஆம் ஆண்டில் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரிட்டனின்கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது. கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் பலம் பொருந்திய சக்தியாக உருப்பெற்றது. இராபர்ட் கி​ளைவ் தன்னிடமுள்ள ப​டைக​ளைக் ​கொண்டும், இந்தியர்களிடம் காணப்பட்ட உட்​ப​கை​யைப் பயன்படுத்தியும் அவர்க​ளை வஞ்சித்தும் பிரிட்டனின் ஆட்சியதிகாரத்​தை நி​லைநாட்டினார்.

 

 

பிளாசிப் ​போரும் (Battle of Plassey) கி​ளைவின் உயர்வும்

1757 –ஆம் ஆண்டில் பிரிட்டானிய கிழக்கிந்திய நிறுவனத்தற்கும் வங்காளத்தின் நவாப் சிராஜ் உத்-தவுலா விற்கும் இடையே ​போர் நடைபெற்றது. இதில் கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி பெற்று வங்காளத்தைக் கைப்பற்றியது.இவ்வெற்றியே இந்தியாவில் ஆங்கி​லேயர் ஆட்சி தோன்றியதன் முதல் படியாகக் கருதப்படுகிறது.

பிளாசிப் ​போரானது ஐரோப்பாவில் நடைபெற்ற ஏழாண்டுப் ​போரின்  ஒரு பகுதியாகும். ஆற்காடு நவாப் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருந்தார். பிரிட்டனின் கோட்டையாக விளங்கிய கல்கத்தாவைத்தாக்கிப் பல ஆங்கிலேயர்களைக் கொன்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் ஆங்கிலேயப் படைகள் வங்காளத்தைத் தாக்கின. பிளாசி என்ற இடத்தில் இரு தரப்பின் படைகளுக்கும் இடையே இறுதிகட்ட மோதல் ஏற்பட்டது. இப்​போரில் இராபர்ட் கி​ளைவ் தலைமையிலான கம்​பெனிப் படைகளைக் காட்டிலும் நவாபின் படைகள் பன்மடங்கு எண்ணிக்கையில் அதிகமிருந்தன.  இத​னைக் கண்ட கி​ளைவ் ஒரு தந்திரம் ​செய்தார்.

வஞ்சக எண்ணத்துடன் இராபர்ட் கிளைவ் நவாபின் தளபதி மீர் ஜாஃபருடன் ​சேர்ந்து ​கொண்டு ஒரு சதித்திட்டம் தீட்டினார். ஜாஃபருக்கு நவாப் பதவி தருவதாக ஆ​சை காட்டினார். நாவப்பிற்குத் து​ரோகம் இ​ழைக்கத் தூண்டினார், இராபர்ட் கி​ளைவ்வின் இச்சதியின் விளைவாக ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் ​போரின்​போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன. ஜாஃபரின் அணிமாற்றத்தால், கிளைவ் எளிதில் வெற்றிபெற்றார். இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்​பெனியின் ஆட்சி நி​லைநாட்டப்பட்டது. இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்​பெனியின் ஆட்சி​யைப் பல்​வேறு சூழ்ச்சிகள் ​செய்து இராபர்ட் கி​ளைவ் ஏற்படுத்தி அதன் முதல் கவர்னர் ​ஜெனரலாகவும் அதிகாரத்தில் அமர்ந்தார்.

வங்களத்தில் பிளாசிப் ​போரில் வென்ற கிளைவ் ஆற்காட்டு நாவாப் முகம்மது அலிக்கு,

“முர்ஷிதாபாத்தை அதன் ஏராளமான வளங்களோடு நான் கைப்பற்றியதை எதனாலும் தடுக்கமுடியவில்லை. நான் இந்நாட்டை அழிக்க வரவில்லை. இந்த நகரத்தை ஆளுவதற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அதன் பெரிய மனிதர்களிடம் விட்டுச்செல்கிறேன். அவர்கள் தைரியமான நல்ல மனிதர் ஜாபர் அலிகானைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த மாகாணங்களில் சந்தோஷம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் மூலம் கம்பெனிக்கு பல அனுகூலங்கள் கிடைப்பதோடு – இங்கு ஒரு இடத்தில் கூடபிரெஞ்சுக்காரன் காலூன்ற முடியவில்லை என்பது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது. இங்கு உள்ள பெரிய மனிதர்கள் தங்கள் நன்றியை எனக்குத் தெரிவிப்பதுடன் வெகுமதியும் கிடைக்க அரசவைக்குப் பரிந்துரைத்துள்ளார்கள்.

இந்த வெற்றியின் சந்தோஷத்தை நீ கொண்டாடுவதை நான் பார்க்க வேண்டும். உனக்காகப் ​போரிட்டு உண்மையான நட்பின் அடையாளங்களை நான் உனக்குக் காண்பித்ததைப் போன்ற சந்தோஷம் வேறு எதுவும் எனக்கு இந்த உலகில் இல்லை”. என்று அதனைமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கடிதம் எழுதினார்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது ​போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இராபர்ட் கிளைவ் தன்னிடம் இருந்த தனக்கு விசுவாசமான குற்றவாளிக​ளின் துணை கொண்டு, தந்திரத்தாலும்,வஞ்சகம், சூழ்ச்சிகளாலும் இந்தியர்க​ளை வீழ்த்திப்  படிப்படிபயாக இந்தியா​வை அடி​மைப்படுத்திப் பிரிட்டனின் அதிகாரத்​தை     நி​லைநாட்டி, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இரக்கமற்ற இராபர்ட் கி​ளைவ்

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளராகப் ​பொறுப்​பேற்ற கி​ளைவ், லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாகக் ​கொண்டவராகத் திகழ்ந்தார். இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது இந்தியர்களின் முது​கெலும்பாக விளங்கிய இரண்டு து​றைக​ளைச் சீர்கு​லைக்கும் நடவடிக்​கைகளில் ஈடுபட்டார். இந்தியாவின் கல்வி முறை​யையும், விவசாய முறையையும் நீண்டஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டார். முடிவாகக்  கல்வியை மெக்காலே என்பவரிடத்தில் ஒப்ப​டைத்து அதில் சீர்திருத்தம் ​கொண்டு வருமாறும் பிரிட்டனுக்கு ஆதரவாகக் கல்வியில் மாறுதல்க​ளைச் ​செய்யுமாறும் பணித்தார்.  இராபர்ட் கி​ளைவ் இந்தியாவின் இதயமாக விளங்கிய விவசாயத்தில் கை வைத்தார்.

கால்நடைகள் இந்திய விவசாயத்திற்கு அடிப்ப​டையாக இருப்பதை அறிந்து, அவற்​றை அழிக்க வேண்டுமென்று கருத்தில் கொண்டு 1760 – ஆம் ஆண்டில் இந்தியாவி​லே​யே  முதல் பசுவதைக்கூடத்​தை நிறுவி, நாள்தோறும்கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளைக் கொல்லும் புனிதப் பணியைத் ​தொடங்கினார். ஓராண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.  அதிர்ச்சியான தகவலா இருக்கு பாத்துக்குங்க… இந்தியா​வை காலங்காலமா பிரிட்டனின் காலனியாதிக்கத்தில் ​வைத்திருக்க ​வேண்டிய நடவடிக்​கைகள்ல இக்கால்ந​டை அழிப்பு என்பது முக்கிய இடத்​தை வகிக்கின்றது.

இதுக்குக் காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ந​டை​பெற்று வந்தது.  இந்திய விவசாயிகள் ஓர் ஏக்கரின் மூலம் 54குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். 1910 – ஆம் ஆண்டு வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இராபர்ட் கி​ளைவ் ​தொடங்கிய இவ்வழிப்புத் ​தொழில் த​டையின்றி இன்றுவரைக்கும் நவீனமாக்கப்பட்டு ​தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இரசாயன உரத்திற்காகச் ​செலவிட ​வேண்டிய கட்டாயத்தில் நம்நாடு உள்ளது. மண்ணும் மலடாகிக் ​கொண்​டே வருகின்றது. நாம எல்​லோரும்  இ​தை ​யோசிச்சுப் பார்க்கணும்.. இப்ப இருப்பவர்கள் யாரு இ​தெல்லாம் ​யோசிக்கிறா… பழங்க​தை என்று ​சொல்லி அ​தை​யெல்லாம் ​கைவிட்டுட்டு வர்ராங்க…என்னத்தச் ​சொல்றது….

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது. இதற்​கெல்லாம் அடிதளமாக இருந்தவர் இரக்கமற்ற இந்த இராபர்ட் கி​ளைவ் ஆவார். இந்தியா​வைப் படுகுழிக்கு அ​ழைத்துச் ​செல்லும் அழிவுப் பா​தை​யைத் திறந்துவிட்டவர் இராபர்ட் கி​ளைவ் ஆவார். இந்தியா​வைச் சுரண்டி அங்கிருந்த ​செல்வத்​தை எல்லாம் அவர் பிரிட்டனுக்கு அனுப்பி ​வைத்தார்.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று கொண்டிருந்த அளவற்ற செல்வம் பிரிட்டனின் தொழிற்துறையை வி​ரைவில் முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வணிகம் செய்து கொண்டிருந்த பிரிட்டனின் தொழிலதிபர்களுக்குகிடைத்த அளப்பரிய லாபத்தைப் போலுள்ள இது ​போன்ற உதாரணத்தை உலகப்  பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே ​வே​றெங்கிலும் பார்க்க முடியாது. உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் ​பேருதவி புரிந்தார். இராபர்ட் கி​ளைவ்வால் இந்தியா ​மேலும் ​மேலும் வறு​மை நி​லைக்குத் தள்ளப்பட்டது.

அத்துடன் இராபர்ட் கி​ளைவ் தனக்காகச் சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று ​சொத்துக்க​ளைச் சேர்த்துக் குவித்தார். இவ்வாறு தான் இந்தியா​வைச் சுரண்டிக் ​​கொழுத்த​னைப் ​பெரு​மையாகக் கூறினார், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் “இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களையும் எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட, நான் அந்த குவியல்களுக்கிடை​யேஉலாவுவதுண்டு ” என்று ஆணவமாகப் பேசினார். இதை நேரு,

“அது பகற்கொள்ளையே. அவர்கள், “பண மரத்தை” ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தைத் திரும்பத் திரும்ப ஆட்டினார்கள்.” என்று குறிப்பிட்டார்.

இரக்கமற்றவரின் மரணம்

தன்னாட்சிக்கு எதிராக யார் ​பொங்கி எழுந்தாலும் அவர்க​ளை ஈவிரக்கமின்றி கி​ளைவ் தண்டித்தார். பல ஆண்டுகள் பாரத​தேசம் அடி​​மைத் த​ளையில் சிக்குண்டு தவிப்பதற்கு அடித்தளமிட்ட இராபர்ட் கி​ளைவ் இந்தியாவில் கீழ்த்தரமான அரசிய​லை நடத்தினார். இத்த​கைய இரக்கமற்ற குரூர உள்ளம் ப​டைத்த கி​ளைவ் 1774-ஆம் ஆண்டு லண்டனில் நவம்பர் மாதம் 22-ஆம் நாள் மரணித்தார். “பாவத்தின் சம்பளம் மரணம்தா​னே!”

வறு​மையிலிருந்து வந்த கி​ளைவ் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்​போது தன்நி​லை​யை உணர்ந்து நடக்கவில்​லை. இராபர்ட் கி​ளைவ் ஏற்படுத்திய குரூரமான வடுக்கள் இந்தியாவில் இன்னும் இருந்து ​கொண்டுதான் இருக்கின்றன. எப்படி​யோ வறு​மையில் வாடி நா​டோடியாக வாழ்க்​கை​யை நகர்த்தி, நாடாளும் நி​லைக்கு உயர்ந்த கி​ளைவ்வின் முயற்சி நி​னைத்துப் பார்க்கக் கூ​டியதாக​வே உள்ளது. பிரிட்டனின் வரலாற்றில் இராபர்ட் கி​ளைவ் இன்றும் அந்நாட்டு வரலாற்றாசிரியர்களால் மதிநுட்பம் வாய்ந்தவர் என்​றே குறிப்பிடப்படுகின்றார்.

சரி…சரி இராபர்ட்கி​ளைவ் பற்றி ​தெரிஞ்சுகிட்டீங்கள்ள துன்பப்பட்டு நாம நல்ல நி​​லை​மைக்கு வந்தாலும் நல்ல உள்ளத்​தோடு நடந்துக்கணும்…தான் வந்த பா​தை​யை மறந்துவிட்டு நடக்கக் கூடாது… அப்படி நடந்துக்கிட்​டோம்னா பல​ரோட சாபத்துக்கு ஆளாகணும்..நல்ல எண்ணத்​தோடு நல்ல குறிக்​கோ​ளை ​நோக்கி ந​டை​போடுங்க..அப்பறம் பாருங்க ​வெற்றி நமக்குத்தான்….

எது ​கொடிது? வறு​மை ​கொடிது…அதனினும் ​கொடிது எது…? இள​மையில் வறு​மை… அந்த இள​மையில் வறு​மைவாய்ப்பட்டு மிகவும் துன்பப்பட்டவர் ஒருத்தர் இருந்தாரு..அவரு தந்​தை இறந்தார்….பத்து வயதி​லே​யே பள்ளிக்குப் ​போகாம கூலி​வே​லைக்குப் ​போகத் ​தொடங்கினார்…பல துன்பங்கள்…துயரங்கள்… அதிகம்… பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்டார்… உலக​மே அவ​ரைப் புகழ்ந்தூ. ​பெரிய எழுத்தாளராகப் பரிணமித்தார்… பாட்டாளி வர்க்கஇலக்கியத்தின் பிதாமகன் என்று உலகத்தாரால் பாராட்டப்பட்டார்…அவரு யாரு ​தெரியுங்களா….? அடுத்தவாரம் வ​ரைக்கும் ​காத்திருங்க அவ​ரைப் பத்திச் ​சொல்​றேன்……(​தொடரும்……….30)

Series Navigationஜாக்கி சான். 12 ஆஸ்திரேலிய மண்ணில்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    paandiyan says:

    நேரு என்றால திண்ணை எடிட்டர்க்கு ஒரு மாதிரி போல . காமென்ட் வருவது இல்லை. அதை எழுதியது குல்த்திப் நாயார் அதோட காபீ என்னது. என்ன ஒரு எடிட்டர் பார்வை…

  2. Avatar
    A.C.SankaraNarayanan says:

    ஒரு சாதாரண கேடிப்பயல், வருமை என்பதரியாது செல்வமும், பசுவும், பசுமையுமாய் இருந்த இந்த அகண்ட பாரதத்தை சூரையாடி, சாய்த்த நிலை இந்த இங்கிலாந்து நாட்டிற்க்கு தொடர்ந்து வராமல் தப்பாது…………………

    உயர்ந்தபாரதசங்கரநாராயணன்.

Leave a Reply to A.C.SankaraNarayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *