புலி வந்திருச்சி !

This entry is part 2 of 22 in the series 19 ஏப்ரல் 2020

புலி வருது ! புலி வருது !!

புலி வருதென

அலறி

அலை அலையாய்

எழுந்தார்

விழித்துக் கொண்டு !

இப்போது

புலி வந்திருச்சி !!!

உயிருக்குப் பயந்தோர்  எல்லாம்

ஓடி வாரீர் !

தலை வைப்பீர்

என் மீது !

எதையும் தாங்கும் இதயம்

எனக்கு !

வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ

காட்சி அளித்தார்

எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி !

நாடாளும் மன்றம்

ஆடாமல், குறட்டை விட்டு

உறங்குது !

பிரதம மந்திரி தெருவில் நின்று

மக்களுக்கு

மூக்கு வாய் மூடக்

சுவாசக் கவசம்  கொடுத்தார் !

வீட்டில்  அடைபட்டு

நாட்டு மாந்தர்

ஊழிய மின்றி, ஊதியம் இழந்து,

உணவுத் தானியம்

காலியாகி

கை கட்டி நின்றார்

கண்ணீரை

டையில் துடைத்துக் கொண்டு !  

வயல்களில்

காத்துக் கிடக்கும் பசுமையாய்

காய்கறிகள், கனிகள்

எடுப்பாரின்றி !

மூலையில் எடுத்த கிழங்குகள்

குவித்துக் கிடக்கும்

வாகனத்தில்

ஏற்றிக்

கொடுப்பாரின்றி !

சுவாசக் கருவிகள்,

மூக்கு வாய் கவசங்கள்

தைத்து

மலிவாய்ச் செய்ய

ஈபாடில்

இன்றுதான் ஆர்டர்

சைனாவுக்குப் போய்

உள்ளது !

நெடுதொலைக் குகையின்

முடிவில்

வெளிச்சம் தோன்றுமா ?

சந்திர னுக்குச் சென்று மீண்ட  

விண்சிமிழ் செய்யும்

வல்லரசுகள் கைவசம் இப்போ

யந்திரம் இல்லை !

செய்யும் திறம்,

தொழில் நுணுக்கம் இல்லை !

கோடான கோடி

வல்லரசு நிபுணர்கள்

டைகட்டி, கைகட்டி

வாய் மூடி

எதுவும் செய்ய இயலாது

சைனா

வேதாளத்தின்

பாதத்திலே கிடக்கிறார்

பாரீர் ! பாரீர் !

பாரீர் !

+++++++++++++++++++++ 

Series Navigationகைகொடுக்கும் கைபிள்ளை யார்?
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *