பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

This entry is part 9 of 37 in the series 22 ஜூலை 2012

இந்தியா ஜனநாயகநாடு

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை.

இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா?

இல்லை.

தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா?

தெரியும்.

சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா?

முடியாது!

!பிறகு என்னய்யா வெங்காயம்!!

நீங்களும் உங்கள் சட்டங்களும்.

****

எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக

எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக

அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார்

என்று உச்சநீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்து உடனே சிலர்

வழக்குத் தொடுத்தார்கள். அதன் பின் என்னவோ அவர்கள் வழக்கு தொடுத்தக் காரணத்தாலேயே இந்த ஜாம்பவான்கள்

நிறைவேற்றிய சட்டம் அமுலுக்கு வரமுடியாமல் போய்விட்ட மாதிரியும் ஒரு காட்சி உருவாக்கப்பட்டது!

இதில் வாதியும் பிரதிவாதியும் ஒருவருக்கொருவர் பேசி வைத்துக்கொண்டு இந்த மாதிரி ஸ்டண்ட் அடிக்கிறார்களோ என்னவோ.. வேறு எப்படித்தான் இவர்கள் அடிக்கிற இந்த லூட்டிகளை சகித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களோ தெரியவில்லை.

நான் சட்டம் போடற மாதிரி போடறேன், எனக்கு

அது தேவையாக இருக்கிறது, நீங்கள் அதை எதிர்த்து

கோர்ட்டுக்கு போயீடுங்க, மறந்திடாதீங்க,

எனக்குத் தெரியும், கோர்ட்டுக்குப் போனா என் சட்டத்தின்

கதி என்ன என்பது!

இந்திய சட்டப்படி அய்யா மலர்மன்னன் அவர்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை. (துப்பாக்கி நாயுடு: தமிழகத்தின் முன்னோடி ஹிந்துத்துவர் என்ற அய்யா மலர்மன்னன் கட்டுரையின் பின்னூட்டங்களில் இக்கருத்து போகிற போக்கில் விவாதமாகி இருக்கிறது.) திண்ணையில் தன் கட்டுரைக்குப் பின்னூட்டமாக

திரு பரமசிவம் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும்

அய்யா மலர்மன்னன் :

>. File a counter at the SC if the case regarding archakas is pending there. You can argue no discrimination is permissible under the Constitution. The SC will summarily reject your counter stating it is purely a religious matter, as it is related to temple formalities of a particular religion and that it is not a social issue.>

ஏன் முடியாது என்பதை எல்லாம் அய்யா மலர்மன்னன் கட்டாயம் விவரமாக சொல்லித்தான் ஆகவேண்டும் என்று

நாம் பிடிவாதம் பிடித்தால் அது “அபத்தம்”.

தேடினால் தெரியும், திருடன் நம் வீட்டு குதிருக்குள் தான்

இருக்கிறான் என்கிற உண்மை.

உச்ச நீதிமன்றத்தால் ஏன் செய்ய முடியாது என்று நம் அரசியல் தலைவர்களுக்குத் தெரியும்தானே.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அமுலுக்கு கொண்டுவரும் போது அச்சட்டத்தின் சொல்லப்பட்டவை மட்டுமே சட்டமாகவில்லை, அதற்கு முன்பிருந்த சட்டங்களும் வால் போல ஒட்டிக் கொண்டே வந்தன. அந்த வால் வலிமையானது என்பதை உணர்ந்த பாபாசாகிப் அம்பேத்கர்

சட்டத்தில் மிகவும் தந்திரமாக நுழைக்கப்பட்டிருக்கும் வர்ணாசிரம தர்மம்,

சடங்கு சம்பிரதாயங்களைக் காப்பாற்றும் வரிகளை நீக்க இந்து சட்ட வரைவை முன்வைத்தார்.

(Dr. Ambedkar as chairman of the constitutuon drafting committee was aware that those who prepared the first

draft of the constitution in 1947 had cunningly enjoined provisions to protect Varunashrama dharma and traditional

customs and usages. with an aim to defeat their purpose , Ambedkar presented the amendment in the form of the

“Hindu code bill ” in 1947, that all the laws which were in force till date of adoption of the Indian constitution

will stand abolished)

ஆனால் அவர் தோல்வி அடைந்தார். அவர் தோல்வி அடைய யார் யார் காரணமாக இருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது தலைவர்கள், மதங்கள் , புரட்சிக் காரர்கள் எல்லோர் மீதும்

ஓர் அவநம்பிக்கை தான் ஏற்படுகிறது.

இதெல்லாம் என்னவோ பரம ரகசியம் இல்லை.

இந்த நாட்டில் பாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பாதிபேருக்கு

வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். சிலருக்குத் தெரிந்தும்

தெரியாமல் இருப்பது போலவே இருப்பதில் அதிக பாதுகாப்பு இருக்கிறது. இதைப் பற்றி நன்றாக தெரிந்தவர்கள் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் தான் இருக்கிறார்கள்.

இலவசங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு இதைப் பற்றி எல்லாம் பேசவோ

அல்லது சிந்திக்கவோ நேரமில்லை. தங்களை அறிவுஜீவிகள்

என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் எம் தோழர்களும்

அவர்களின் இடது வலது சார்புகளும் இதில் விதிவிலக்கல்ல.

***

தமிழ்நாட்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து என்னவோ சிலர் உச்சநீதிமன்றத்தில் எதிர்வழக்காடுவதால்

மட்டுமே பிரச்சனை என்று மேம்போக்காக போகிற போக்கில்

சொல்லிச் செல்வது சரியா?

அந்த சிலர் உச்சநீதிமன்றம் வரை போயிருக்காவிட்டாலும்

இச்சட்டம் அமுலுக்கு வந்திருக்க முடியுமா?

சரி, அந்தச் சிலர் யார்?

இச்சட்டத்தின் மூலம் அவர்களுக்கு என்ன இழப்பு?

இக்கோவில்கள் குறித்து பேசும் போதெல்லாம் ஆகமவிதி என்றும்

ஸ்மிருதி விதி என்று இரண்டு விதிகள் பற்றிய பேச்சு அடிபடுகிறதே!

எது ஆகமவிதி?

எது ஸ்மிருதி விதி?

ஆகமவிதி என்ன சொல்கிறது?

ஸ்மிருதி விதி என்ன சொல்கிறது?

பிராமணர்கள் கர்ப்ப கிரஹத்துள் நுழைவதாலும் அர்ச்சனை செய்வதாலும் அரசனுக்கும் பொதுமக்களுக்கும் கேடு விளையும் என்று திருமூலரின் திருமந்திரம் பதிவு செய்திருக்கிறதே,

அப்படியானால் எப்போது இந்த ஆகமவிதி மறைந்து போனது.

இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக

மட்டுமே இந்தக் கோர்ட், வழக்கு வாய்தா எல்லாம்!

ஆனால் நம்ம ஊரு முனியாண்டி,

மாடசாமி, இசக்கி அம்மன் கோவில்களில் சூத்திர பஞ்சம பூசாரிகள் தான். இது ஏன்?

**

இந்த நாட்டில் கடவுள்களுக்கும் சாதிகள் உண்டு.

திருப்பதி பாலாஜி

திருச்செந்தூர் முருகன்

திருநெல்வேலி மாடசாமி

சாதிப்படிநிலையின் அடையாளங்கள்.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பெரு வெடிப்புக்கு முன்பே பிரபஞ்சத்தில் கருந்துளைகள் சில இருந்துள்ளன (கட்டுரை 81)‘பினிஸ் பண்ணனும்’
author

புதிய மாதவி

Similar Posts

124 Comments

  1. Avatar
    சான்றோன் says:

    இதுல என்ன விஷயம்னா கோயிலுக்கு போற எவனும் இதப்ப‌த்தி கவலைப்ப‌டறது கிடையாது……கோயிலுக்கே போகாதவனும், கட்வுளே இல்லைன்னு சொல்ற‌வனும்தான் இதப்பத்தி ரொம்ப அலட்டிக்கிறான்……

    1. Avatar
      Kavya says:

      எப்படி எவர் கோயிலுக்குப்போகவில்லை? எவர் போனார்? எவர் கடவுள் மறுப்பாளர்; எவர் கடவுள் உண்டென்று தொழுபவர் என்று கண்டுபிடித்தீர்கள்? அந்த சிதம்பர இரகசியத்தை எல்லாருடனும் பகிர்ந்துகொள்ளுங்களேன். அட்வான்ஸ் தேங்க்ஸ்.

      1. Avatar
        சான்றோன் says:

        காவ்யா அவர்களே…..

        துணிவிருந்தால் , எல்லா கோயில்களிலும் ,உள்ளே சென்று வழிபட்டுவரும் பக்தர்களிடம் ஒரு நேர்மையான கருத்துக்கணிப்பை நடத்திப்பாருங்கள்…….ஹிந்து விரோதிகளின் இது போன்ற விஷமத்தனமான கருத்துக்களுக்கு ஒரு சதவீத ஆதர‌வு கூட கிடைக்காது…..

  2. Avatar
    சான்றோன் says:

    //இந்தியா ஜனநாயகநாடு

    இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை.//

    ஆனா சிவில் சட்டம் மட்டும் மதத்துக்கு ஒன்னு வெச்சுக்கலாம்……இதப்ப‌த்தி எந்த அறிவு ஜீவியும் மூச்சுவிட மாட்டாங்க……[ அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தில் மிக விரைவில் அனைவருக்கும் பொதுவான சிவில்சட்டம் கொண்டுவரனும்னு சொல்லியிருக்காரு……]

    இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீருக்கு மட்டும் ஏன் தனி அந்தஸ்து? அரசியல் சட்டத்தின்[காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து வழங்கும்] 370 வது பிரிவை நீக்கனும்னு சொன்னா அவன் மதவாதி……..

    இஸ்லாமியர்கள் ,கிறித்தவர்கள் ஆகியோரது வழிபாட்டுத்தலங்களை அவங்களே நிர்வகிச்சுக்கலாம்…..ஆனா ஹிந்துக்களின் கோயில்களில் மட்டும் அரசாங்கம் புகுந்து கொள்ளையடிக்கலாம்……

    இதப்பத்தியெல்லாம் மூச்சே விடாம ,திரும்ப திரும்ப ஹிந்துக்களையே தாக்குங்க…அதுதான் பாதுகாப்பான வழி…. என்னடா இவன் நம்மை இப்படி கேட்டுபுட்டானேன்னு உணர்ச்சி வசப்பட்டு மத்த மதங்கள விமர்சிக்க கிளம்பீராதீங்க……கை போயிரும்…..[ கேரள பேராசிரியர் நினைவிருக்காரா?]

    1. Avatar
      Kavya says:

      இந்துமதத்திலுள்ள ஒரு பெரிய பிரச்சினையைப்பற்றிமட்டுமே இக்கட்டுரை. இங்கு பிறமதங்களைப்பற்றி பேச்செதற்கு? அப்படிப் பேசின், பின்னூட்டங்கள் திசை மாறாவா?

      1. Avatar
        சான்றோன் says:

        காவ்யா அவர்களே…..

        // இந்துமதத்திலுள்ள ஒரு பெரிய பிரச்சினையைப்பற்றிமட்டுமே இக்கட்டுரை//

        எது பெரிய பிரச்சினை? ஹிந்து விரோதிகளுக்கும் ,வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் ஹிந்து மதத்தின் மீது பாயும் ஆபிரகாமிய அடிவருடிகளுக்கும், ஹிந்து மதத்தை மதமாற்ற சக்திகளிடம் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் திராவிட இயக்கங்களுக்கும் வேண்டுமானால் இது பெரிய பிரச்சினையாக இருக்கலாம்…… ஹிந்துக்களை பொறுத்த‌வரை இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை…..கோயிலுக்கும் போகும் எந்த ஹிந்து அர்ச்சகர்களை மாற்ற வேண்டும் என்று இவர்களிடம் புகார் கொடுத்தான்?

        //இங்கு பிறமதங்களைப்பற்றி பேச்செதற்கு?//

        கட்டுரையாளர் மதன் முதலில் இந்திய அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று குறிப்பிட்டிருந்தார்…..உண்மை நிலவரம் அப்படி இல்லை என்று குறிப்பிடுவதற்காகத்தான் பிற மதங்களை இழுக்க நேர்ந்தது….

        மதத்திற்கு ஒரு சட்டத்தை அனுமதித்துவிட்டு ,அரசியல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் என்ன அர்த்தம்? யாரை ஏமாற்ற இந்த பசப்பல்கள்?

        வேறு ஒன்றுமில்லை…..காலம் காலமாக ஹிந்துக்களின் தலையில் மிளகாய் அறைத்தே பழகி விட்டீர்கள்…இப்போது ஹிந்துக்கள் விழித்துக்கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்….அதை உங்களைப்போன்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை……

        1. Avatar
          ஆனந்தன் says:

          அர்ச்சகர்களே ஹிந்து(பார்ப்பனர்) வாக இருக்கும்போது அவர்கள் புகார் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்களா?

      2. Avatar
        ஆனந்தன் says:

        பிறகு? காலங்காலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதிலில்லாத நிலையில் திசையை மாற்றுவதைத் தவிர வேறு மார்க்கம் என்ன?

  3. Avatar
    A.K.Chandramouli says:

    அய்யா சான்றோன் அவர்களே நீங்கள் உசுப்பி விடாதீர்கள் காவ்யா அவர்கள், கிறிஸ்தவ இஸ்லாமியர்களின் வழக்கறிஞர் வந்து தீவிரமாக ஹிந்து மதத்தைப் பற்றி திட்ட ஆரம்பித்து விடுவார்கள். .

    1. Avatar
      Kavya says:

      நண்பர் சந்திரமவுளி

      கட்டுரையாசிரியர் சொல்வதென்ன? பலபல வகைகளில், தந்திரமாகவும், நேரடியாகவும், சட்டத்தின் ஓட்டைகளைத்தேடித்துளைத்து, வருணாஷிரத்தை எப்படியாவது நிலைக்க வைத்து, தங்களைக்கடவுளின் அவதாரங்களாகவோ அல்லது கடவுளின் இடைத்தரகர்களாகவோ ஆக்கிக்கொண்டு பிறமக்களை மதிமயங்கச்செய்ய முனைகிறார்கள் என்பதே.

      இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஏன் கோர்ட்டுக்குப்போனார்கள்? கோர்ட்டு கட்டுரையாசிரியர் சொன்னதுபோல, அல்லது மலர்மன்னன் ஆங்கிலத்தில் சொன்னது போல, இஃதொரு மதப்பிரச்சினை யென்று தள்ளிவிட்டால், நால்வகை வருணங்களில் வருணத்துக்கப்பால் தலித்துக்கள் இருக்கவேண்டுமென்பதுதானே அவா?

      இதைப்பற்றி சொன்னால் ஹிந்து மதத்துரோகமா? எங்குபார்த்தாலும் நாங்கள் எந்த சீர்திருத்தவாதியையும் வெட்டிக்கொல்லமாட்டோம் என்று தம்பட்டமடிக்கும் நீங்கள் ஏன், இப்படி கேள்வி கேட்பவரைக்கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?

      1. Avatar
        கண்ணன் says:

        ஆனா சிவில் சட்டம் மட்டும் மதத்துக்கு ஒன்னு வெச்சுக்கலாம்……இதப்ப‌த்தி எந்த அறிவு ஜீவியும் மூச்சுவிட மாட்டாங்க……[ அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டத்தில் மிக விரைவில் அனைவருக்கும் பொதுவான சிவில்சட்டம் கொண்டுவரனும்னு சொல்லியிருக்காரு……] இதைப்போன்ற கேள்விகளுக்கு ஒரு நாளும் நேர்மையான பதிலே வருவதில்லையே இந்த புரட்சிக்கார சமதர்ம வாதிகளிடமிருந்து!!!!!!!!!!!!!!!

        1. Avatar
          ஆனந்தன் says:

          நீங்கள் குறிப்பிடும் நேர்மை உங்களுக்கானதா? அல்லது பொதுவானதா என்ற ஒரு சந்தேகத்தை உங்கள் பின்னூட்டங்களே உருவாக்கி விட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்கிற, ஐரோப்பிய நேசர்கள், அவர்களது நேச நாட்டிலேயே மாநிலங்கள் தோறும் சட்டங்களில் மாற்றங்களை அனுமதித்திருக்கிறார்கள் என்பதை அறியவில்லை, அல்லது மறைக்க நினைக்கிறார்கள் என்பதுதானே உண்மை? இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை வலியுறுத்த நினைப்பதனுள்ளிருக்கும் ஆர்வம் மனுக் கோட்பாட்டினை மறு கட்டுமானம் செய்வதுதானே? பெண்கள், தலித்துக்கள், ஆதிவாசிகள், விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர் போன்ற பெரும்பான்மை மக்களுக்கும் நீதி செய்வதான ஒரு பொதுச் சிவில் சட்டம் அதாவது, நம்முடைய கனவுத் திட்டத்திற்கு நீங்கள் குறிப்பிடுகிற புரட்சிக்கார சமதர்ம வாதிகள் எதிர்நிற்கப்போவதில்லை. அதை நினைத்து இப்போது விசனப்படுவதும் வேண்டாத வேலை.

  4. Avatar
    Paramasivam says:

    Thanks Pudhiyamaadhavi for taking up the matter again.You are under the impression that the TN Act cannot be implemented.It is not so. In an earlier Kerala case, SC in its verdict has stated thus,”After India attained freedom and has a constitution,the old dogmas based on birth cannot be accepted”Kerala govt has appointed archagars in 2000 temples controlled by Travancore Devasthanam about 6 months back..40% of these archagars are non-brahmins as per Mr Jayakumar,Addl Chief Secretary,Govt of Kerala.How come Agama sastra was not affected by such appointments in Kerala and litigants in TN say that Agamas do not permit nonbrahmins to be priests.The suit is still pending in SC.Previous Govt brought the legislation and the present Govt is not preferring appeal in SC.

  5. Avatar
    Kavya says:

    நண்பரே, கட்டுரை எழுதியவர் ஜாதகம் நமக்கெதற்கு? அவர் கருத்துக்கள் எவை? அதை நாம் எதிர்நோக்கி நம் கருத்துக்களை வைப்போமா? அப்படி நாம் செய்யாவிட்டால், அல்லது வேறெதையோ கதைத்தால், படிப்போரும், அக்கட்டுரையாசிரியரும் கட்டுரையின் கருத்துக்கள் உண்மையோ, அதை எதிர்நோக்க பயப்படுகிறார்களோ என நினைத்துவிடுவார்கள். படியுங்கள். வையுங்கள் உங்கள் கருத்துக்களை கட்டுரையை ஒட்டி அல்லது வெட்டி.

  6. Avatar
    paandiyan says:

    கழக வழிவந்தவர்கள், அடிபொடிகளிடம் பிடித்த ஒன்று தெரியாமல் உண்மையை உளறி விடுவது (அதை சமாளித்து சிரிப்பா சிரிப்பது வேறு விசயம் ) அப்படிதான் இந்த ஒன்று — “இன்றைக்கும் நிறுவனமயமான கோவில்களில் அர்ச்சகராக”

  7. Avatar
    A.K.Chandramouli says:

    காவ்யா அவர்களே வர்ணாஸ்ரமம் வேறு இன்று உள்ள ஜாதி முறை என்பது வேறு. வர்ணாஸ்ரமம் சரியா தப்பா என்பது இப்போது பிரச்சினை இல்லை. எந்தவருனத்தில் இன்று நீங்கள் சொல்லும் ஐயர், ஐயங்கார், பிள்ளை, (அதி உள்ஜாதிகள்), முதலியார்(உள்ஜாதிகள்), செட்டியார் (உள்ஜாதிகள்), நாயுடு (உள்ஜாதிகள்) , நாடார்(உள்ஜாதிகள்),………….எல்லாம். சொல்லப் பட்டிருக்கின்றன. எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொண்டவைதானே. இவை எல்லாம் நம்மைப் பிரிக்கின்றன என்று நீங்கள் உணர்ந்தால் எந்த வேறுபாடும் பார்க்காமல் எப்படி ஒன்றினைக்ப்பது என்று யோசனை சொல்ல வேண்டும. அது இல்லாமல் இன்று வழக்கொழிந்து போன பழைய விஷயத்தைக் கிளறி விஷத்தைக் கக்குவதி என்ன பயன். தயவு செய்து மக்களை ஒன்றிணைக்கப் பழகுங்கள்.இறை வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் கோவில்களைப் பற்றி கவலைப் பட்டால் போதும். இத்தனை நாட்களாக மக்களை பிரித்தே வைத்து நாசம் செய்தது போதும்.

    1. Avatar
      dharmaraj.A says:

      So Thiru A.K. chandramouli accept that the people of our country were not allowed to unite so far.The main reason for this is social set up formed by the rulers with the guidance of religious leaders.Even now the democracy is unable to update the above set up fully.

      1. Avatar
        பொன்.முத்துக்குமார் says:

        Ok, let’s accept – FOR THE ARGUMENT SAKE – that it was the social set-up formed by the rulers with the guidance of religious rulers that prevented the unity of the people.

        As far as TN is concerned, it was ruled for decades by only those who’re against religious leaders (when I say religious leaders, read it as HINDU religious leaders). What did they do to unite them ? If KK thought, he could’ve created history in TN by establishing a conducive atmosphere for the oppressed community such as the Dalits, to live with pride and peace along with everyone ;

        Instead, what did he do ? Only lip service (“my daughter-in-law is a dalit”, as though it uplifted the entire dalit community in TN)

        If JJ had thought, she could’ve used her charm and the so called “will power” and the “mind of steel” to control the Devar community, which’s her vote bank to live in harmony with the Dalits in the southern districts where the communal clash is still a burning issue.

        What did she do ?

        Who or what stopped them in setting the field a level-playing one ?

        1. Avatar
          dharmaraj.A says:

          Pon muthukumar sir,
          jj and kk are not in the position of creating new law.What happened to the law related to 1/3rd seats in parliament for ladies. Every action will take its own time.Nothing can stop the forth coming communal harmony which was existing before ihe invasion of aariyans.Past is past.It can never be revived.Pease be confident of our glorious future.

          1. Avatar
            பொன்.முத்துக்குமார் says:

            dharmaraj Sir, I thought, JJ & KK were – and one of them is currently – the CMs of TN and hence they were/are IN the position to create a new law within TN to alleviate the sufferings of the oppressed.

            I’m sorry, if I’m so pathetically ignorant.

            Also, they need not’ve created any new law to uplift the socially downtrodden. What they could’ve done is to strictly implement the un-touchability laws protecting the dalit communities and paving the way for them to live in peace and with respect.

            Did they do that ? When the problem is with the corrupt minded politicians who spoil everything, why put the blame on the religious leaders, as if they’re the ones who arm-twist the rulers to suit their motives ?

  8. Avatar
    smitha says:

    Chandramouli,

    Kavya cannot do it. He always finds fault with brahmins & hinduism. He will not dare to talk ill of any other religion – he just does nmot have the guts.

    He is a true follower of EVR, veeramani & mu.ka.

  9. Avatar
    மலர்மன்னன் says:

    பூசாரியாகவும் ஆக முடியாதுதான்! கிராமிய சமுகக் கட்டமைப்பில் பூசாரி குல மரபு அனுசரிக்கப்படுகிறது.
    தாழ்த்தப் பட்டோரிலும் வள்ளுவ மரபு உண்டு.
    குறிப்பாகத் தமிழ்நாட்டில் மிகப் பெரும்பாலான புராதன சிவாலயங்களும் வைணவ ஆலயங்களும் மட்டுமே ஆகம விதிப்படி உள்ளன. தமிழகத்தின் எல்லையோர ஆந்திர, கர்நாடக ஆலயங்கள் சில ஆகம விதிப் பிரகாரம் உள்ளன. கேரளத்தில் உள்ள ஆலயங்கள் வைதிக முறையிலானவை.

    சிவாகமங்கள் 28 இருந்தாலும் முக்கியமாக காமிக முறையிலேயே உள்ளன. வைணவத்தில் நான்கு ஆகமங்கள் சொல்லப்பட்டாலும் வைகாசனம் பாஞ்சராத்திரம் ஆகிய இரண்டுதாம் முக்கியமாகப் பின்பற்றப்படுபவை. இவற்றில் வைகாசன முறை ஆலயத்தில் வைகாசன மரபில் வருவோர் மட்டுமே அர்ச்சகராக இருக்கலம் என்பது விதி. பாஞ்சராத்திரத்தில் இந்த நிபந்தனை இல்லை.
    சாக்த ஆலயங்களில் தாந்திரிகமே ஆகமங்கள். இவை சிவாகமங்களுக்கு நெருக்கமானவை.
    ஆகமங்கள் வேதங்களிலிருந்து வேறு பட்டவை. ஆனால் வேதங்களுக்கு எதிரானவை அல்ல.
    சிவாலய அர்ச்சகர்கள் சிவாசாரியார்கள்.
    அர்ச்சகர்கள் பிராமணப் பிரிவு எதிலும் வருவதில்லை.
    பிராமணர் தவிர வேறுபல பிரிவினரும் பூணூல் அணிவதுண்டு.
    ஆகம விதிகளின் பிரகாரம் அமையாத வைதிக சைவ, வைணவ, சாக்த ஆலயங்களில் ஹிந்து சமய சடங்காச்சாரங்களில் நம்பிக்கை உள்ள ஹிந்து சமய நடைமுறைகளை அனுசரிக்கும் ஹிந்துக்கள் யாராயினும், சைவர் எனில் சிவாலயங்களிலும் வைணவர் எனில் வைணவ ஆலயங்களிலும் சாக்தர் எனில் சாகத ஆலயங்களிலும் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் அர்ச்சகராகத் தொண்டு செய்யலாம் என்பதே எனது கருத்து.
    -மலர்மன்னன்

  10. Avatar
    Kavya says:

    //திரு பரமசிவம் அவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லும்

    அய்யா மலர்மன்னன் :

    >. File a counter at the SC if the case regarding archakas is pending there. You can argue no discrimination is permissible under the Constitution. The SC will summarily reject your counter stating it is purely a religious matter, as it is related to temple formalities of a particular religion and that it is not a social issue.>
    //

    அய்யா அவர்களின் ஆங்கிலத்தைத் தமிழில் பெயர்த்தால் இப்படி வரும்:

    “அர்ச்சகர்கள் எவருமே ஆகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்போட்டுப்பார். (File a counter…) அங்கே இந்திய இறையாண்மைச்சட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை உண்டு என்று வாதிடலாம். அம்மன்றம் உங்கள் வாதத்தை, இஃதொரு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் சடங்குகளைப்பற்றியது எனவே சமூகப்பிரச்சினையன்று என்று தள்ளுபடி செய்யும்”

    இங்கு ஒன்றை நோக்கவேண்டும். அனேக இந்துமதப்பிரச்சினைகள் மட்டுமன்றி, கோயில் வழிபாட்டு முறைகளும் சென்றிருக்கின்றன. நீதிமன்றம் தள்ளுபடி செய்ய்வில்லை. கோர்ட்டில் வாதம் நடந்தபின்னரோ, அல்லது கோர்ட்டுக்குச்சென்றபின்னரோதான், நாம் சொல்லமுடியும். அதற்குமுன்னரே கோர்ட்டு தள்ளுபடி செய்யும் என்பது எதிராளியை முடக்குவதாகும். அதாவது சைக்காலாஜிக்கல் பிரஸர் கொடுப்பதாகும்.

    போகட்டும். மலர்மன்னனின் விளக்கத்துக்கு வருவோம். அதாவது எவரும் அர்ச்சகர் ஆக அவர் மதத்தில் வழியுண்டு என்கிறார். பார்த்தசாரதி கோயிலிலோ, கபாலீசுவரர் கோயிலிலோ, சிரிரங்கத்திலோ, திருச்செந்தூர், திருத்தணி, இன்று அறுபடை வீட்டுக்கோயில்களிலோ ஆக முடியுமா? அங்கே போய் அய்யா மலர்மன்னன் அவர்கள் விளக்கத்தைச் சொல்லி இடம் கேட்கமுடியுமா? சொல்லுங்கள் எவருக்காவது தெரிந்தால்.

    சரியோ தவறோ நமக்கு வேண்டாம். கட்டுரையில் சொல்லப்பட்டது என்ன? எவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசு (கருநாநிதியின் அரசு) போட்டச் சட்டம் உச்சநீதிமன்றத்தில் வழக்குபோட்டு எதிர்க்கப்படுகிறது. எதிர்த்தோர் ஆர்? தமிழகப்பார்ப்பனர்கள் மட்டுமே. அல்லது அர்ச்சகர்களின் ஆதரவாளர்களான தமிழ்ப்பார்ப்ப்னர்கள். ஒட்டுமொத்த ஜாதியைச்சொல்லக்கூடாதென்றால், ஒரு ஜாதியின் உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பதேன்? கார‌ண‌ம், தம் ஜாதிக்கார‌ர்க‌ள்தான் அத்தொழிலைச்செய்ய‌ வேண்டுமென்ற‌ ஒரே குறிக்கோள்தானே?

    இதுவும் போக‌ட்டும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ ச‌ட்ட‌ம் எதிர்க்க‌ப்ப‌ட‌வேண்டுமா வேண்டாவா என்ப‌த‌ற்கு ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் சொல்வ‌தென்ன‌? ஒன்றையும் காணேம். ச‌ரி, இப்போது எழுதிய‌தைப்பார்த்தால், எவ‌ரும் அர்ச்ச‌க‌ர் ஆக‌லாம் என்ப‌தைத் தாம் ஏற்றுக்கொள்வ‌து போல‌ தோன்றுகிற‌தே? உண்மையென்றால், ஏன் ப‌ர‌ம‌சிவ‌னைப்ப்பார்த்து, வ‌ழ‌க்குப்போட்டுப்பார் என்று அநாக‌ரிக‌மாக‌ ஆங்கில‌த்தில் சொல்ல‌வேண்டும்? “ஆம், ப‌ர‌ம‌சிவ‌ம், இப்ப‌டிப்ப‌ட்ட‌ த‌மிழ்ப்பார்ப்ப்ன‌ர்க‌ளை எதிர்த்து நாம் எதிர்வ‌ழ‌க்குப்போட‌ வேண்டுமென்ற‌ல்ல‌வா சொல்லியிருக்க‌வேண்டும் ம‌ல‌ர்ம‌ன்ன‌ன்?

    க‌ட்டுரையின் அடிநாத‌ம் நீதிம‌ன்ற‌ வ‌ழ‌க்கும் அதைப்ப‌ய‌ன்ப‌டுத்தி ஒரு ஜாதியின‌ர் ம‌ட்டுமே அர்ச்ச‌க‌ராக‌ வேண்டும் என்ற‌ உள்ள‌க்கிடைக்கை, (அஃதென்ன‌ க‌ழுதைச்சொல் “உள்ள‌க்கிடைக்கை”? வெட்ட‌ வெளிச்ச‌மான‌ கிடைக்கைதான்!) இவையே பேச‌ப்ப‌டுகின்ற‌ன‌. இத‌ற்கெல்லாம், அய்யா ம‌ல‌ர்ம‌ன்ன‌ன் அவ‌ர்க‌ள் என்ன‌ சொல்கிறார்க‌ள்? அதைச்சொன்னால் போதும். ம‌ற்ற‌ விள‌க்க‌ம் வேண்டாம்.

  11. Avatar
    Paramasivam says:

    If Archagars are not brahmins,why Subramaniyam samy is in the forefront opposing the TN Govt”s Act?Why Ramakrishna Jeer,who was teaching the Archagar trainees was assaulted?In an article in Bhavan”s journal issue dated 31st July,2012,titled as “SHOCK TREATMENT IN BHAGAVAD GITA”,Koti Sreekrishna and Hari Ravikumar,have stated that Krishna gently mocked at the elite and the orthodox,and repeatedly claimed that the religion of the Vedas is inclusive.The authors also pointed about an orthodox brahmin who had resigned from his position at a state-run Vedic school when the authorities insisted that he teach the Vedas to anyone who wanted to learn.They also felt that this is perhaps the effect of attaching importance to outdated traditions in the face of the eternal truth.The training camps conducted for the Archagar trainees faced threats from Hindu Munnani also.The above authors also opined that,down the ages,usually tradition tends to shake the truth,like a tail wagging the dog.

  12. Avatar
    dharmaraj.A says:

    Pon muthukumar sir,
    jj and kk the presesent and prior chief ministers were unable to demolish the “WALL OF UNTOUCHABILITY” upto recent past.That is why this type of challenges outbreak.Time will give proper solution.Please wait and see.

  13. Avatar
    சான்றோன் says:

    முன்பு ஒரு கட்டுரையில் அய்யா மலர்மன்னன் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ஆங்கில தளங்களில் நாம் தமிழில் கருத்து பதிவு செய்தால் வெளியிடுவார்களா? பரமசிவம் ,மற்றும் தர்மராஜ் ஆகியோர் முதலில் தமிழில் எழுதப்பழகலாமே?

  14. Avatar
    punaipeyaril says:

    சான்றோம், ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவது நம்மை அறிவாளியாக காட்டும்… டி எம் கே மீட்டிங்கில் இடையில் ஆங்கிலத்தில் பேசுவது போல…

  15. Avatar
    Ramesh says:

    ஐயா மலர் மன்னனுக்கு சில ஐயங்கள் :

    ”பூசாரியாகவும் ஆக முடியாதுதான்! கிராமிய சமுகக் கட்டமைப்பில் பூசாரி குல மரபு அனுசரிக்கப்படுகிறது. “

    இது புதிய செய்தி. குல மரபு என்றால் அதே குடும்பத்தை சேர்ந்தவரேவா, இல்லை அந்த ஜாதியில் உள்ளவர் மட்டுமா ?

    ”தாழ்த்தப் பட்டோரிலும் வள்ளுவ மரபு உண்டு “

    அவர்களுக்கென்று தனிக்கோவில்கள் உண்டா..இல்லை நாட்டர் தெய்வங்களா.. எந்த மாதிரியான கோவில்களில் அவர்கள் பணியாற்ற முடியும்.

    ஆகமம் என்பது Entire South கோவில்களுக்கு மட்டும் உரித்தானதா ?. அதனது வரலாறு என்ன.. எப்போது வந்தது.. வடக்கில் பெரிய பெரிய கோவில்களில் கூட, சாநித்தியம் நிறைந்த கோவில்களில் கூட இத்தகைய ஆகமங்கள் இல்லையே.

    ஆனாலும் அங்கேயும் பிராமணர்கள் மட்டுமே கருவறைக்குள் அநுமதிக்கபடுகிறார்களா..

    It would be nice if you could able to explain.. more. .thanks.. malar mannan aiyya..

  16. Avatar
    கண்ணன் says:

    Kerala govt has appointed archagars in 2000 temples controlled by Travancore Devasthanam about 6 months back..40% of these archagars are non-brahmins as per Mr Jayakumar,Addl Chief Secretary,Govt of Kerala. இதைப் பாராட்டி ஏதேனும் ஏழுதியிருக்கிறீர்களா புரட்சிக்காரர்களே? எழுதியிருதால் பாராட்டுக்கள்; இல்லாவிட்டால் யோசியுங்களேன் ஏன் எழுதவில்லை என்று!

    1. Avatar
      Kavya says:

      எனக்கு ஏற்கனவே தெரியும். கண்ணனுக்குத் தெரியாதது, அல்லது தெரியவிரும்பாதததையும் சொல்கிறேன்.

      கேரளாவில், அர்ச்சகர்கள் தட்டுப்பாடு. நம்பூதிரி இளைஞர்கள் பலதுறைகளுக்குச்சென்று விட்டபடியாலும், அவர்களின் மக்கட்தொகை குறுகிவிட்டபடியாலும்.

      நம்பூதிரி இளைஞர்களுக்கு நம்பூதிரி அல்லது நாயர் பெண்கள் மனைவிகளாகக்கிடைப்பது குதிரைக்கொம்பாகி விட்டது. காரணம் நம்பூதிர்களைடையே கடுமையான வறுமை கேரளாவில் நிலவுகிறது. காமம் ஒருவன் அல்லது ஒருத்தியின் அடிப்படைத்தேவை. முறையே நிரப்புக; இல்லவிடில் கொடூரமான வழியில் நிரப்பிவிடுவோம் என்பது எச்சரிக்கை.அவர்கள் தலித்துப்பெண்களைக்கூட மனைவிகளாக ஏற்றுக்கொள்ளத் தயாரகி விட்டதாகவும். அப்படிப்பட்ட தம்பதிகளுக்குப் பிறக்கும் குழந்தைகளும் அர்ச்சகராகலாமென அவர்கள் குலமே தீர்மானித்துவிட்டதாகவும் செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரசில் வெளியாயின‌.

      அரசு கோயில்களில் அர்ச்சகர்கள் தட்டுப்பாடு இருப்பதாலும், நம்பூதிர்களிடமிருந்தே ஆதரவு இருப்பதாலும், எவரும் அர்ச்சகர் என்பதில் எவருக்கும் ஆட்சேபனையில்லாமல் போய்விட்டது.

      ஆக, காலம் தன் கொடிய கரங்களால் கோயில் ஒழுக்கங்களையும் பிடித்துக்கொண்டுவிட்டது என்பதுதான் நிதர்சன உண்மை. ஊரில் ஆண்களேயில்லையென்றாலோ, அல்லது பெண்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தாலோ, களவு வாழ்க்கையும் கலியாண வாழ்க்கையும் தாருமாறாகச்சென்று புதிய ஆத்திச்சூடியை சமூகம் எழுதித்தான் தீரும். அஃது ஒருவனுக்கு ஒருத்தியன்று; பலருக்கு ஒருத்தி; அல்லது பலப்பெண்களுக்கு ஒருவன். இல்லையா? அதே அதே.

      எல்லாம் இருக்கின்றபடி இருந்தால் சமத்துவமாவது மண்ணாங்கட்டியாவது கண்ணன் ? ஆனால் க‌ண்ண‌ன் போன்றோர் அந்நித‌ர்ச‌ன உண்மையைத் த‌ம‌க்குச்சாத‌கமாக‌த் த‌லைக்க‌ட்டுகிறார். என்ன‌வோ இவ‌ர்க‌ள் ச‌ம‌த்துவ‌த்தை உச்சிமீது வைத்து நுக‌ர்வ‌தாக‌.

      அதேவேளையில், ஏன் தமிழகப்பார்ப்பனர்கள் விடாப்பிடியாக இந்த விசயத்தில் மட்டும் இருக்கின்றார்கள் என்பது கண்ணன் போன்றோரால் ஆராயப்படவேண்டும். ஏன் “இந்த விசயத்தில் மட்டும்” என்கிறேன். ஏனென்றால், மற்றெல்லா விசயங்களிலும், அவர்கள் மற்றவர்களை விட முன்: அதாவது பழமையை கடாசி வீசியெறிவதில்.

      நான் கொஞ்சம் ஆராயலாம். அதன்படி, இச்சமத்துவத்தை இந்த சோ கால்டு பகுத்தறிவு வியாதிகள் கொண்டுவராமல், மற்றவர்கள் கொண்டுவந்திருந்தால், எதிர்ப்பு வந்திருக்காது. கருனநானிதி, கழகங்கள் என்று இறங்கியதால், கிருஸ்ணகுமார் எழுதியது போல அவர்களின் நோக்கம் சமத்துவமன்று; இந்துமத விமர்சனமும் பார்ப்பன எதிர்ப்பும் மட்டுமே என்று முடிவை ஒட்டுமொத்த தமிழ்ப்பார்ப்பன சமூகம் எடுக்கிறதெனலாம்.

      நம்பூதிரிகளின் எண்ணிக்கைக்குறைவைப்போல இங்கும் இவர்கள் எண்ணிக்கைக்குறைந்தால், அர்ச்சகர் தொழிலுக்கு ஆளே இல்லாமல் போனால்! போது, மற்றவரைக்கெஞ்சும் நிலைவரும்போது கருநாநிதி சொன்னாலென்ன உதயநிதி சொன்னாலென்ன? ஆராவது வாருங்கப்பா என்பார்கள். ஏன்? ப‌சு மாடு பால் க‌ற‌க்க‌ம‌றுக்க‌ப்ப‌ட்டு பாலுக்கே த‌ட்டுப்பாடு வ‌ரும்போது காளைமாடாவ‌து க‌ற‌க்குமா என்று அத‌ன் ம‌டியைப்போட்டுத்திருக்கிப்பார்ப்ப‌து ம‌னித‌ சுபாவ‌ம்.
      Necessaity knows no law.

    2. Avatar
      Kavya says:

      Why had not Hindu Munnai or its parent outfit VHP implead itself in the SC against the few Tamil brahmins peititoners and in favour of Karunanithi’s TN govt law if the outfit is so concerned about equality in Hindu religion?

    3. Avatar
      ஆனந்தன் says:

      அர்ச்சகர்களாக பார்ப்பனர்கள் அல்லாதவர்களை நியமிப்பதென்பது பல்வேறு அடுக்குகளைக்கொண்ட மூடநம்பிக்கையினுள் நிகழ்ந்த அடிப்படையான ஒரு சீர்திருத்தம் மட்டும்தான். இதையும் அரசாங்கம்தான் செய்திருக்கிறதே தவிர ஆன்மிகவிதிகள் அனுமதி கொடுத்தல்ல. வேதம் கோபால் சொன்னதுபோல் கல்லையும் கட்டையையும் மட்டையையும் பூஜிக்கும் செயலுக்கு அரசாங்கம் பாகுபாடில்லாமல் ஆட்களை நியமித்து விட்டதற்காக புரட்சியாளர்கள் பாராட்டுத் தெரிவிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்களே, இது நியாயமா கண்ணன்?

  17. Avatar
    கண்ணன் says:

    The training camps conducted for the Archagar trainees faced threats from Hindu Munnani also. எதற்கா இப்படி துணிந்து பொய் சொல்கிறீர்கள்? ஆதாரம் கொடுங்களேன்! இந்து முன்னணின் சகோதர அமைப்பான விசுவ ஹிந்து பரிஷத் எல்லா சாதியினர்க்குமான அர்ச்சகர் பயிற்சி வகுப்புக்களை வருடந்தோறும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறதே! அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இந்து முன்னணி வரவேற்றிருக்கிறதே!

    1. Avatar
      Paramasivam says:

      Mr.Kannan,MrV.Ranganathan,an Archagar trainee who passed the course in 2008,impleaded himself in the SC suit in 2009,in his capacity as State Coordinator of the TN Govt Archagar Training Students Association,in his interview to Outlook magazine has stated that the Archagar trainees received threats from Hindu Munnani.In Outlook magazine dated 26-9-2011,an article on this matter was written by Pushpa Iyengar.The title of the article was,”Secular Threats”.The Archagar trainees also alleged trouble from RSS cadres during Ayudha Pooja in 2010.Mr Malarmannan,in an earlier reply to me has stated that VHP will not be interested in this kind of activity.Let him also reply to Mr.Kannan.

  18. Avatar
    puthiyamaadhavi says:

    இக்கட்டுரையின் பின்னூட்டமாக காத்திரமான தங்கள் பங்களிப்பைக்
    கொடுத்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.

    திரு ரமேஷ் அவர்கள் அய்யா மலர்மன்னனிடம் சில கேள்விகளைக் கேட்டிருக்கிறார். இது குறித்த எழுத்துப் பதிவுகள்
    எதுவும் இருக்கிறதா என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது.
    ஆனால் நடைமுறையில் என்னவாக இருக்கிறது என்பதை இங்கே பதிவு செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறேன்.
    வள்ளுவர் சமூகத்தில் பூசாரியாக இருப்பது குலத்தொழிலாக
    குடும்ப மரபு வழியாக இருப்பதில்லை. யார் வேண்டுமானாலும்
    குறிப்பாக சுத்த பத்தமாக இருந்து விரதம் இருப்பவர் யார் வேண்டுமானாலும் பூசாரியாக இருக்கலாம்.
    கிராமங்களில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிக் கோவில்கள் இருப்பதைக் காணலாம். அதைப் போலவே வள்ளுவர் சமூகத்திற்கும் தனிக்கோவில்கள் இருக்கின்றன. ஆனால் அத்தனிக் கோவில்களில் பிற சமூகத்தினர் கருவறையில் நுழைய அனுமதி மறுக்கப்படுவதில்லை. நானறிந்து எங்கள் ஊரில் பெண்கள்
    மட்டுமே கருவறையில் நுழைவதில்லை.

  19. Avatar
    Muttal says:

    Please note thatall brahmins can not become priests in the temple. Only the Archaka community can become a priest. I am a brahmin but I am not allowed to do pooja inside the temple or even allowed to enter in garpagraha.

    Every system has a procedure. The procedure should be followed.

    MUTTAL

    1. Avatar
      Kavya says:

      இதை எல்லாரும் சொல்வதுதான். பிராமணர்கள் என்போரில் எல்லாரும் ஆக முடியாது. ஒரு சிலர் மட்டும்தான் அர்ச்சகர்கள் ஆக முடியும். அந்த ஒரு சிலரைப்பற்றித்தான் இக்கட்டுரை. அந்த ஒரு சிலரும் பார்ப்ப்னரல்லாதோரிடமிருந்து வரமுடியாதென்பதற்காகவே அரசு பிறஜாதியினரும் அர்ச்ச்கராகலாம் என்று சட்ட்ம் போட்டது. அச்சட்டம் அந்து ஒரு சிலராலும், அவர்களின் ஆதரவாளர்களான சுப்பிரமணியம் சுவாமியாலும் எதிர்க்கப்படுகிறது.

  20. Avatar
    vedamgopal says:

    சில சந்தேகங்கள்
    பூசாரி ஆகலாம் அர்சகர் ஆகமுடியாது
    பட்டை அடிக்கலாம் பட்டைபோடக்கூடாது
    மொட்டை போடலாம் பின்குடுமி கூடாது
    இடுப்பில் பெல்ட் போடலாம் தோளில் போடக்கூடாது
    பீடி பிடிக்கலாம் பீடாபோடலாம் ரூத்திராட்சம்போடhJவோ கச்சைகட்டவோ கூடாது
    புதியமாதவியாக ஆகலாம் பழைய மாதவியாக !!

    இன்றும் எல்லா கோவில்களிலும் அன்னிய தேசத்தவரை அன்னிய மதத்தவரை ஒரு எல்லைக்கு மேல் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்று போர்டு போட்டு இருப்பதை ஏன் தடை செய்யக்கூடாது ? அதை ஏன் யாரும் எதிர்ப்பதில்லை ?
    ஒரு காலத்தில் ஜனங்களுக்கு கடவுளிடம் பயமும் பக்தியும் நிறைந்திருந்தது அதனால் அது கல்லோ கட்டையோ மட்டையோ அதற்கு சக்தியிருந்தது. ஆனால் இன்று ……….. ? எல்லோரும் (பெண்கள் உட்பட) அர்சகர் ஆகலாம் – எல்லா மொழியிலும் அர்சனை செய்யலாம் – எல்லா ஜனங்களுமே கடவுளை கர்பகிரஹம் வரையில் சென்று கட்டி தழுவலாம் – உடல் சுத்தம் உள்ள சுத்தம் என்பதை எல்லாம் குப்பையில் போடலாம் – 500 ரூபாய் கூட வருமானம் இல்லாத ஒரு மகேச சேவைக்கு மக்கள் சேவையே மகேச சேவை என்பவர்கள் ஏன் மகேச சேவையே மக்கள் சேவை என்று மாற்றிக்கொண்டு சேவை போடடியில் இறங்கவேண்டும்..
    இவை எல்லாம் சாதித்துவிட்டால் நாட்டில் ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் தீண்டாதவன் என்ற வித்தியாசமே இருக்காதா ?

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      “500 ரூபாய் கூட வருமானம் இல்லாத ஒரு மகேச சேவைக்கு மக்கள் சேவையே மகேச சேவை என்பவர்கள் ஏன் மகேச சேவையே மக்கள் சேவை என்று மாற்றிக்கொண்டு சேவை போடடியில் இறங்கவேண்டும்..”

      அப்படியானால் 50,000 ரூபாய் வருமானம் இருந்தால் அப்போது போட்டியில் இறங்கலாமா ?

      “இவை எல்லாம் சாதித்துவிட்டால் நாட்டில் ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் தீண்டாதவன் என்ற வித்தியாசமே இருக்காதா ?”

      ஏழை/பணக்காரன், உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற வித்தியாசம் இருக்குமா இருக்காதா என்பதல்ல இங்கு பிரச்சினை. தகுதியுள்ள ஒருவர் (ஆழ்ந்த இறை பக்தியும், நாவன்மையும் இறைதுதிக்கு பயன்படும் பாடல்கள்/மந்திரங்கள்/பாசுரங்களில் பாண்டித்யம் போன்ற) பிறப்பால் அந்தணராக இல்லாமலிருந்தாலும் அர்ச்சகர் ஆவதை தடுப்பது எது ? ஏன் ? இதுவே இங்கு பிரச்சினை.

  21. Avatar
    ஆனந்தன் says:

    ஆற அமர உட்கார்ந்து யோசித்துப் பின்னூட்டம் போடலாமே? முதல் ஐந்தாறு வரிகளும் ஆதிக்க இழப்பின் வார்த்தைகள். பக்தியுடன் கும்பிட்டால், கல்லோ கட்டையோ மட்டையோ சக்தி பெறும் என்பதை எப்படி ஐயா உங்களால் முன்வைக்க முடிகிறது. சிலவற்றை சாதித்த பின்னரும் வேற்றுமைகள் இருக்குமென்பது உண்மைதான். தற்போதைய வியாதி குறைந்து விட்டால் புதிய வியாதிகள் வராதென்று உறுதி சொல்ல முடியாதுதான். அதற்காக தற்போதிருக்கும் வியாதிகளே பரவாயில்லையென்ற முடிவுக்கு வருகிறீர்கள்போலிருக்கிறது.

  22. Avatar
    Kavya says:

    நான் உங்களுக்கு எழுதிய பதில் தடைசெய்யப்பட்டு விட்டது. எனவே அதையே வேறுவிதமாக எழுதுகிறேன்.

    நீங்கள் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சுப்போடுகிறீர்கள். இங்கு பேசப்படுவது எப்படி ஒரு ஜாதியினருக்கு மட்டும் அர்ச்சகராகலாம் என்று சொல்லப்படுகிறது அல்லது செய்யப்படுகிறது என்பதே. அந்த ஒரு ஜாதியினரிலும் ஒரு சிலர்தான் என்றால், அந்தச்சிலர் தகுதியின் அடிப்படையிலா? வாரிசினடிப்படையிலா?

    கண்டிப்பாக வாரிசுதாரகளாகத்தான் வருகிறார்கள். ஒரு கோயில் அர்ச்சகர், அவருக்குப்பின் அவர் பிள்ளைகளில் ஒருவனையாவது அவர் தொழிலில் இறக்கிவிடுகிறார்.

    அவருக்கோ அல்லது அவர் பிள்ளைக்கோ என்ன தகுதிகள் இருக்கின்றன அல்லது இருந்தன என்று எந்த பக்தர்களுக்கும் தெரியாது. மிகவும் மோசமானவர் என்று வெட்ட வெளிச்சமாகத்தெரிந்தாலொழிய அக்கோயில் நிருவாகத்தினர் அந்த அர்ச்சகரை வெளியேற்ற முடியாது.

    நான் ஏற்கனவே திண்ணையில் எழுதிவிட்டேன். திருப்பரங்குன்றத்தில் ஒரு அர்ச்ச்கர் பெண்ணுடன் சல்லாபித்ததை நேரில் கண்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் நீக்கம் செய்யப்பட்டார். நேரில் எவரும் காணவில்லையென்றால்? அல்லது பெண் சல்லாபம் மட்டும்தான் தடையா? பலபல குணக்குறைகள் இருக்கலாமில்லயா? அவை எப்படி வெளியே தெரியும்? தெரியா.

    அக்கோயிலின் அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக. அங்கிருப்பவர்கள் எல்லாரும் மகேசன் சேவையென்று இல்லை. பரம்பரைத்தொழில் எனவேதான் அத்தொழிலை விடமறுக்கிறார்கள்.

    ஆக, ஒரு தொழிலுக்கு தகுதியிருக்கிறதா இல்லையா என்று தெரியாமல் நாம் ஒரு ஜாதியினரைத் தேர்ந்தெடுக்கின்றபடியாலே, காஞ்சிபுரம் தேவநாதன் போன்ற கசப்பான சம்பவங்கள் நேரிடுகின்றன.

    மாறாக, எவராகினும் சரி, அவருக்கென்று சில அடிப்படைத் தகுதிகள் இருக்கவேண்டுமென நிர்ணயித்து அதன்படி செயல்பட்டால், சமத்துவம் மட்டுமன்றி, கோயில்களில் புனிதத்தன்மையும் காப்பாற்றப்படும் என்பதே இந்துமதத்துக்கு நாம் செய்யும் பெருஞ்சேவையாகும்.

    எடுத்துக்காட்டாக இத்த‌குதிக‌ளை எதிர்பார்க்க‌லாம்:

    1. இன்துவாக‌ இருக்க‌வேண்டும‌ட்டும‌ன்றி, அதில் நம்பிக்கையுட‌ன் அக்க‌ட‌வுள், அல்ல‌து க‌ட‌வுள‌ர்க‌ளை ம‌ட்டுமே தொழுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும்.
    2. வைதீக‌ ம‌த‌த்தை ஏற்றுக்கொண்டு, அதே ச‌ம‌ய‌ம் தொல் த‌மிழ‌ர் இன்துவ‌ழிபாட்டு முறைக‌ளையும் ம‌தித்துப்போற்றுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும். (இன்த‌ இர‌ண்டாவ‌தில் த‌மிழ்ப்பார்ப்ப்ன‌ர்க‌ள் செய்வ‌தில்லை)
    3. சைவ‌த்திலிருன்தால், த‌மிழ் திரும‌றைக‌ளை ந‌ன்கு க‌ற்றுத்துறைபோகிய‌னாக‌வும், அதை நாளும் தொழுதுப‌டிப்ப‌வ‌னாக‌வும், பிற‌ருக்குஞ்சொல்ப‌வ‌னாக‌வும் இருக்க‌வேண்டும்.
    4. வாழ்க்கைச்சுக‌ங்க‌ளை நுக‌ர‌த்துடிப்ப‌வானாக‌ இல்லாம‌ல், சிறுக‌க்க‌ட்டி பெருக‌ வாழ்ப‌வனாக‌ இருக்க‌வேண்டும்.
    5. பெண்ணை ம‌தித்துப்போற்றுப‌னாக‌ இருக்க‌ வேண்டும். இர‌க்க‌ சுபாவமுள்ள‌வான‌க‌வும் சான்த‌ குண‌மிக்க‌வ‌னாக‌வும் இருக்க‌வேண்டும்.
    6. வைண‌வ‌த்திலிருன்தால் ஆழ்வார்க‌ளில் பாசுர‌ங்க‌ளில் ஆழ‌ங்கால்ப‌ட்ட‌வனாக‌வும், அவ‌ற்றை நாளும் பாராய‌ண‌ம் ப‌ண்ணுப‌வ‌னாக‌ இருக்க‌ வேண்டும். ஆச்சாரிய‌ர்க‌ளைத் தொழுப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும். திருமாலின் அனைத்துஅவ‌தார‌ங்க‌ளையும் இதிகாச‌ங்க‌ளையும் போற்றித்துதிப்ப‌வ‌னாக‌ இருக்க‌வேண்டும்.

    இவைய‌னைத்தும் அவ‌னுக்கு முத‌லில் இருன்த‌ பின்ன‌ர், அர்ச்ச‌க‌ர் ப‌யிற்சி நிலைய‌த்தில் சேர்ன்து அப்ப‌யிற்சியைப்பெறுப‌வ‌னாக‌ இருக்க‌ வேண்டும்.

    Daunting list, isnt? ஆனால் நீங்கள் ஒரு ஜாதியில் பிறந்துவிட்டால், நான் கூறிய அனைத்துத்தகுதிகளும் (இதற்கு மேலும் தகுதிகள் வரும்!) இருந்துவிடும் முடிவு செய்வது எங்ஙனம் சுவாமி? இன்றைய வாழ்க்கையில் எவரேனும் அப்படி நீங்கள் கண்டதுண்டா? ஒரிருவர் இருக்கலாம். அப்படி அங்கு இருந்தால், பிறஜாதியிலும் இருப்பரே?

    நாம் ஏன் நம் வலையை அகலமாக வீசக்கூடாது? சமத்துவம் என்பதன்று இங்கு விவாதம். இந்துமதம் சிறக்கவேண்டின் தகுதிகளா அல்லது பரம்பரையாக வந்த தேவநாதன்களா என்று முடிவு செய்யவேண்டும்.

    சித்தர்கள் ஒர் மாட்லி க்ரவுட். (motley crowd): பலஜாதிகள், பல தொழில்கள். பல ஊர்களிலிருந்து வந்தார்கள். அதே ஆழ்வார்களிடையேயும். பலஜாதிகள், பல தொழில்கள், பல ஊர்கள். நாயன்மார்கள் கதைகளும் அதே. இல்லையா? அங்கு எங்கே போனது உங்கள் சாஸ்திரங்கள்?

    இறுதியாக, நான் எழுதினால் தடை செய்யப்படும். அவரே சொல்லட்டும்.


    சூத்திரனுக்கு ஒரு நீதி – தண்டச்

    சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

    சாத்திரம் சொல்லிடுமாயின் – அது

    சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

    If I write the above, it will be banned as words against a community. But these harsh words came from Subramania Bhrati. I apply it here, because it is citing the Shastras that people like Vedam Gopal feel that only one community i.e Tamil Brahmins should do archanai.

    When the shastra posed obstacles for reforms in the religion, they were just ignore. Similarly, we should override it (I dont want to use the harsh word for such rejection as the disgruntled poet did) and bring archakas who are dedicated, but may even be from the lowest caste of Dalits.

    1. Avatar
      ஆனந்தன் says:

      என்னுடைய பின்னூட்டத்திற்கு அடுத்ததாக நீங்கள் கருத்தைச் சொல்லியிருப்பது, அல்லது, வசதி? களைக் கருதி பின்னூட்டங்களைக் குலைத்துப் போடுவது சில தவறான அர்த்தப் புரிதல்களுக்கு வழி வகுக்கிறது. பகவானாகப்பட்டவன் தீராத விளையாட்டுப்பிள்ளை அல்லவா? ஆகவே, இந்த மொட்டைத்… உவமை எனக்கான பதிலாக இருக்குமோ என்ற சந்தேகம் வந்தது. மற்றொன்று, நான் கல். கட்டை, மட்டையென்று குறிப்பிட, நாட்டார் வழக்காற்றின் கடவுட்களைக் குறிப்பிட்டதாக நீங்கள் கருதியிருக்கலாம். எதுவாயினும் உண்மையும் அதுதான். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், கடவுட்களை பெருந்தெய்வம் நாட்டார் தெய்வம், அல்லா, கர்த்தர் என்றுப் பிரித்துப் பார்த்து வழிபடுபவர்களை முட்டாள் என்று சொல்லவில்லை. கடவுட்களில்கூட பேதம் பார்க்காத மனிதர் அவர். கலைஞர் தமிழைப் போற்றுவதால், தமிழைக் குறைகூறுபவர்கள்போல், பகுத்தறிவை முன்வைத்துப் பிரச்சாரம் செய்யும்போது அது இயல்பாக மதத்தின் நடத்துனர்களைப் பாதிக்கவே செய்யும். அதற்காக, யாரும் பகுத்தறிவையே புறக்கணிக்க வேண்டுமென்பதில்லை. குப்பையை யார் கொட்டினால் என்ன என்பதால் நான் அதைப் பற்றி எழுதவில்லை என்பதையும் வேதம் கோபாலின் கருத்துக்கான பதில் அது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      சிறப்பான பின்னூட்டம். பாராட்டுக்கள்.

  23. Avatar
    smitha says:

    Only brahmins should become archakas.

    No other community has the commitment, discipline or the dedication required towards this profession.

    1. Avatar
      Kavya says:

      ஆர்வம், ஒழுக்கம், முனைப்பு. ஒருமனது போன்ற குணங்களையுடைவர்களை உங்கள் ஜாதியில் எப்படி கண்டுபிடிப்பது? எப்படி உங்கள் ஜாதியினர் அனைவருமே இகவாழ்க்கைச் சுகங்களை (பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, ஐம்புலசுகங்கள்) நிராகரித்து, சிறுகக்கட்டிப் பெருக வாழ்வோர் என்று சொல்லமுடியும்? எந்த அர்ச்சகர், தன் மகளையோ அல்லது மகனையோ பொறியியல் வல்லுனராக்கி அமெரிக்காவிற்கு அனுப்பி டாலர்களாக சம்பாத்தியம் பண்ண ஆசைப்படவில்லை? ஒருவரை உங்களால் காட்டமுடியுமா?

      இங்கே இரண்டைச்சுட்டிக்காட்டுகிறேன். அவற்றிற்கு நிரூபணங்கள உங்களால் காட்ட முடியுமா?

      1. நீங்கள் காட்டிய அனைத்துக்குணங்களையும் கொண்டவர்கள் உங்கள் ஜாதியில் மட்டுமே உண்டு.

      2. பிறஜாதியில் அப்படிப்பட்டோர் கிடையவே கிடையாது.

      (இரண்டாவதைச்சரியென்றால், பிறஜாதியினர் கீழ்மையுடைய மாக்கள் என்றும் உங்கள் ஜாதியினர் மட்டுமே உயர்குணமுடைய மக்கள் என்றும் வரும்! உண்மையெனில், ஆழ்வார்களில் 5 பேர் அவுட்! (நம்மாழ்வார் – சூத்திரர்; திருமழியிசையாழ்வார், திருப்பாணாற்றாழ்வார் – எஸ்.ஸிக்கள், திருமங்கையாழ்வார் – ஓபிசி (கள்ளர்), குலசேகராழ்வார் – சத்திரியர்)’ நாயன்மார்களில் திருநாவுக்கரசர் அவுட்; அருணகிரிநாதர் அவுரட் – பரத்தையர் குலமாதுக்குப்பிறந்தவர்; சித்தர்கள் நிறையபேர் சேரிக்குத்தான் போகவேண்டும்!!) ஆக, எஞ்சியவர்கள் நீங்களே)

      ரேசிசம். வெளிநாடென்றால் உங்களை உள்ளே தள்ளிவிடுவார்கள். நானே போலீசுக்கு கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்.

    2. Avatar
      Paramasivam says:

      Who should decide that?Is this rule applicable only to TN?Gods at TN temples only will reject priests from other castes?Is it correct to arque that other caste people are characterless and indisciplined?

    3. Avatar
      punaipeyaril says:

      ஆமாம்,,,ஆமாம்,,, ஜெயேந்திரரின் கமிட்மெண்ட்டையும் இன்வால்வ்மெண்டையும் இளமை புதுமை என்று தங்கதாரகை சூழ பார்த்தோம்….

  24. Avatar
    Paramasivam says:

    Mr Kavya,The heriditory appointment of Archagars was abolished by an amendment in TN Hindu Religious&Charitable Endowment Act in 1971.
    It is for Mr Vedam Gopal-Mr S.Raju,who represents Archaga students in SC says,”It is not just a matter of job.It is actually a fight against caste supremacy.We will continue our fight.”

  25. Avatar
    மலர்மன்னன் says:

    இந்த அர்ச்சகர் விவகாரம் பற்றி ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்களே நீங்களாவது இதுபற்றிச் சிறிது விரிவாக விளக்கமாகொரு கட்டுரை எழுதக் கூடாதா என்று மின்னஞ்சல்கள் வருகின்றன.
    அர்ச்சகர் தொடர்பான வழக்குகள் தமிழ் நாடு மட்டுமின்றி ஆந்திரம், கேரளம் முதலான பகுதிகளிலிருந்தெல்லாம் உச்ச நீதிமன்றங்களுக்குச் சென்றுள்ளன. அவை பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால் அப்புறம் வேறு எதைப்பற்றியும் எழுதவே அவகாசம் இல்லாமல் போய்விடும். ஆகவே தமிழ்நாடு தொடர்பான வழக்குகளை மட்டும் குறிப்பிட்டு சில நாட்களுக்குமுன் கட்டுரை எழுதி முடித்து ஒரு தடவைக்கு இரு முறை சரி பார்த்துவிட்டுத் திண்ணைக்கு அனுப்பி யுள்ளேன். இக்கட்டுரையை வேறு பத்திரிகைக்கு அனுப்பிவிட்டு அது பிரசுரமான பிறகு திண்ணைக்கு அனுப்பினால் மிகவும் கால தாமதமாகிவிடும். எனவே முதலில் திண்ணையில் வந்துவிடட்டும் என்று திண்ணைக்கே அனுப்பியுள்ளேன். அது பிரசுரிக்கத் தகுந்தது எனத் தேர்வு செய்யப்பட்டால் திண்ணையில் வெளிவரக் கூடும்.
    முதலில், 1959 ஆண்டின் ஹிந்து அறநிலையச் சட்டத்தில் அர்ச்சகர் தொடர்பான திருத்தச் சட்டம் ஒன்றை 1972-ல் கருணாநிதி தலைமையிலான தி மு க அரசு கொண்டு வந்தது. இதை ஆட்சேபித்து அர்ச்சகர் சங்கங்கள் உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் ஃபுல்பெஞ்ச் எனப்படும் ஐந்து நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு அர்ச்சகர்கள் பரம்பரை பாத்தியதை கொண்டாட முடியாது என்று கூறி ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்தது. ஆனால் வேறு அம்சங் களுக்காக இது இன்னமும் நிலுவையில் இருப்பதாக அறிகிறேன் (இது குறித்து ஒரு வழக்கறிஞர் அளித்த தகவல் இது. ஆனால் இன்னும் சிலரிடம் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்). இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டபோதே உறுதியாகியிருந்தால் 1976 வரை தி மு க அரசு ஏன் வாளாவிருந்திருக்க வேண்டும்? ஆகையால் 1972 வழக்கு வேறு காரணங்களுக்காகவும் நிலுவையில் இருப்பதாகவே எண்ண வேண்டியுள்ளது. எனவேதான் 2006 -ல் தி மு க அரசு மீண்டும் ஓர் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இதையும் அர்ச்சகர் சங்கங்கள் ஆட்சேபித்து வழக்காடுகின்றன. இது குறித்து மூவர் அமர்ந்த உச்ச நீதி மன்றம் விசாரித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழ் நாடு அரசுக்கு அறிவுறுத்தியது. 2011 மார்ச் மாதம் வரை அவகாசம் இருந்தும் தி. மு. க. அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. 2009-ல் இடைக்கால அறிக்கை ஏதோ தாக்கல் செய்ததாகத் தெரிகிறது. ஆனால் எனக்கு இது பற்றி விவரம் கிடைக்க வில்லை. ஆகையால் இந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதற்கு தி மு கழக அரசு மீதுதான் குறை சொல்ல முடியும் எனக் கருதுகிறேன். நான் எழுதியுள்ள கட்டுரை வேறுபல எழுத ஒப்புக்கொண்டுள்ள நூல்களுக்கு இடையே எழுதப்பட்டதாகும். எனவே இக்கட்டுரையில் சில விவரங்கள் விடுபட்டிருக்கலாம். முக்கியமாக ஆகம விதிகளைப் புறந் தள்ள இயலாது என்பதே உச்ச நீதி மன்றத்தின் கருத்தென்று தெரிகிறது. எனவேதான் இதில் அவ்வளவு சுலபமாகத் தீர்ப்புக் கூறி விட முடியாது என மூவர் அமர்வு உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. மேலும் 1972 வழக்கை ஐவர் அமர்வு விசாரித்ததால் இறுதித் தீர்ப்பும் அவ்வாறே அமைய முடியும் என மூவர் அமர்வு மன்றம் கூறிவிடக் கூடும். ஆகம விதிகளின் பிரகாரம் அமையாத ஆலயங்களில் எந்தச் சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர் பொறுப்பேற்கலாம் என்பதே எனது கருத்து. ஆனால் வெறும் வீம்புக்காக உன் சாதிக்கு மட்டும் கொம்பு முளைத்திருக்கிறதா என்று சவால் விட்டு அர்ச்சகர் பணியை மேற்கொள்ள வருவதை அனுமதிக்க முடியாது. உண்மையிலேயே பக்தியும் இறைப்பணி ஆற்றுவதில் தணீயாத ஆர்வமு இருப்போரே அர்ச்சகர் பணியை ஏற்க முன்வர வேண்டும். மற்ற வேலைகளைப் போல் என்னிடம் காகிதங்கள் உள்ளன என்று காண்பித்துவிட்டு உரிமை கோர இது எல்லா வேலைகளியும் போன்றதல்ல. இப்போதே பல அர்ச்சகர்கள் இது ஏதோ வேலை என்பதுபோலத்தான் நடந்து கொள்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தயை தாட்சண்யமின்றி நீக்கிவிடவேண்டும். அர்ச்சகர் பணியின் புனிதம் உணர்ந்தோரே அர்ச்சகராகப் பொறுப்பு வகிக்க இயலும்.
    எனது கட்டுரையில் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள பின்னூட்டங்கள் தொடர்பான கருத்துகளும் இடம் பெறுகின்றன என்று மின்னஞ்சல் மூலம் என்னிடம் கேட்டவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -மலர்மன்னன்

  26. Avatar
    கண்ணன் says:

    Archagar Training Students Association,in his interview to Outlook magazine has stated that the Archagar trainees received threats from Hindu Munnani.In Outlook magazine dated 26-9-2011,an article on this matter was written by Pushpa Iyengar.The title of the article was,”Secular Threats”.The Archagar trainees also alleged trouble from RSS cadres during Ayudha Pooja in 2010.உங்கள் ஒருவரது பொய்க்கு சப்பை கட்ட இன்னும் சிலரது பொய்கள் அவ்வளவுதான்; இந்து முன்னணியோ ஆர்.எஸ்.எஸ். இந்த சட்டத்தை எதிர்க்கவும் இல்லை அதற்கு எதிராக எந்த போரட்டத்திலோ வழக்குகளிலோ ஈடுபடவேயில்லை; மாறாக வரவேற்றிருக்கிறது.

    1. Avatar
      Paramasivam says:

      Mr KannIf any magazine supports your view points,then it is truth.When one magazine points out your mistakes,that magazine becomes bad.You asked for proof.I have given proof.You cannot tell that I am telling lie.I have carefully avoided citing names of rationalist magazines.The article was written by Pushpa IYENGAR.What about my other question about Archagars trained by VHP every year?Where they are employed?I can also say that you are telling lie about training given by VHP.

  27. Avatar
    Paramasivam says:

    If the readers keenly observe the comments,they will notice that Malarmannan,Vedam Gopal,Chandramouli and Smitha got perturbed when some people wanted clarification in the Archagar issue.How one to prove that he has true devotion and a missionary zeal to serve the God?Will Malarmannan and his disciples conduct Agnipariksha?If a person is born as Brahmin,all such tests are unnecessary?His birth will give him license?In the Kerala case,already SC has stated that Brahmins can not claim Archagar post as their birth right.It has observed,”After India attained freedom and has a constitution,the old dogmas based on birth cannot be accepted”Before blaming any other people or the TN Govt(past and present),let the Brahmins do self introspection.If they continue to feel that other caste people are unclean,characterless and have no discipline,all the criticism against them for not joining the mainstream is justified.Whatever written about them by Katherine Mayo in her book,”Mother India”after touring India in 1927 proved to be correct.Even after so many years,the status quo continues.

  28. Avatar
    ஆனந்தன் says:

    விவகாரத்தை முடித்து வைக்கும் திறனுள்ளவரென்று கருதி பல மின்னஞ்சல்கள் வரப்பெற்ற மலர்மன்னன் அவர்களே, அர்ச்சக சேவையை ‘ஏதோ’ வேலை என்பதுபோல் நடந்துகொள்பவர்களை அடையாளம் காண்கிற பணியை புலனாய்வு பத்திரிகைகள் செய்துகொண்டுதானே வருகிறது? வேறுவகையான அடையாளம் காணலைக் குறித்து நீங்களாவது சற்று விரிவாக விளக்கமாக ஒரு கட்டுரை எழுதக்கூடாதா?

  29. Avatar
    Kavya says:

    ஆகம விதிகளின்படி நடக்கா கோயில்களில் எவரும் அர்ச்சகர்களாகலாம்; அவ்விதிகளின்படி நடக்கும் கோயில்களில் மலர்மன்னனின் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக வேண்டும். இதுவே மலர்மன்னன் எழுதிய நீண்ட மடலில் அடிக்கோடிடப்பட வேண்டிய கருத்து. அவர் எக்கட்டுரை எழுதினாலும் இதைத்தான் அடிப்படையாகக்கொள்வார்.

    ஆகம விதிகள் என்ன சொல்கின்றன? ஒரு ஜாதியில் பிறந்தால் மட்டுமே இறைவன் தனக்கு அர்ச்சனை செய்ய தகுதி என்றானா? இதுதானே தீண்டாமையின் அடிப்படை?

    மலர்மன்னன் தெளிவுபடுத்தவேண்டும். இல்லை..இல்லை… அஜ்ஜாதியில் எல்லாருமாகமுடியாது. ஒரு சிலர்தான் ஆகமுடியுமென்ற வாதம் எமக்குத்தேவையில்லை. ஒருசிலரேயாயினும் அவர்களுக்கு வேண்டிய முதற்தகுதி ஜாதி என்று சொல்கிறீர்களே !

    ஆகம விதிகள் கோயில்களில் எவரும் ஆக முடியாது. பிற கோயிலகளில் எச்சாதியினரும் ஆகலாமென்றால், இவ்விரு கோயில்களில் ஒன்று உயர்ந்ததா? மற்றொன்று தாழந்ததா? இல்லை..இல்லை ஆகம விதிகளின்படி என்று நீட்டி இழுத்தால், எம் கேள்வி: அந்த ஆகம விதிகளைச்சொல்லுங்கள் இங்கே. பாரதியாரின் ஒரு ஜாதிக்கொரு நீதியெனில் என்ற அவமானமான சொற்கள் வெளியே தெரிக்கலாம். அப்படிப்பட்ட விதிகளை அவர் சதியென்கிறார். ஏற்றுக்கொள்ளலாமா?

    ஒரு ஜாதிக்கென்றேதான் ஆகம விதிகள் என்றால், அந்த ஜாதிக்கு மட்டுமே அக்கோயில்கள் இருக்கட்டுமே? உங்கள் விட்டுப்பூஜையறைக்குள் நான் நுழைய முடியாதல்லவா? அதைப்போல. உங்கள் வைதீக மதத்தை உங்கள் ஜாதியினருக்கு மட்டுமே வைத்துக்கொள்ளுங்கள். ஆரும் கோர்ட்டுக்குப்போக மாட்டார்கள். ஏன் தாய் மதத்துக்குத் திரும்புங்கள் என்று பிரச்சாரம்? ஏன் ஒரிசாவில் போய் காட்டுவாசிகளிடையே பிரச்சாரம்? ஏன் கன்யாகுமரி மாவட்ட மீனவர்களை கிருத்துவமதத்தில் இருக்காதீர்கள்; எம்மதத்துக்கு வாருங்கள் என்று பிரச்சாரம்? எல்லாமே வாருங்கள்; வந்த பின் சாட்டையால் விலாசுவோம் என்பதுதானே நோக்கம்? அதாவது எமக்கு ஒரு நீதி; உமக்கு ஒரு நீதி என்றதுதானே? எந்த இளிச்சவாயன் வருவான் இப்படி துரோகம் பண்ணினால்?

    கிடக்கட்டும். ஒரு ஜாதிக்கென்றேதான் ஆகம விதிகள் என்றால், உத்தபுரம் பிள்ளைகளும், முதுகுலத்தூர் தேவர்களும், எங்கள் கோயில்களுக்கு நீங்கள் வரக்கூடாதென்றது, கண்டதேவியம்மன் தேரை நீங்கள் இழுக்கக்கூடாது என்று தலித்துகளை விரட்டுவது எப்படி தவறாகும் என்று கேட்கிறேன். நண்பர்களே, தேவர்களும் பிள்ளைகளும் இரட்டைவேடம் போடவில்லை. ஒரே சொல். வராதே. வரலாம்…ஆனால் என்ற பசப்பு வேலை இங்கேதான். பகவத்கீதையைக்காட்டி வெளியே தள்ளுகிறீர்கள். அல்லது ஆகம விதிகளைக்காட்டி வீம்புக்காக நுழையாதீர்கள் வித்தியாசமாக அதே கருத்தை வீசுகிறீர்கள். உண்மையா பொய்யா ,மலர்மன்னன்?

    ஏன் உங்கள் ஜாதிக்கு மட்டும் வைதீக மதம் என்று கேட்கிறேன். ஏன் ஊருக்கு நடுவில் பெரிய மீனாட்சியம்மன் கோயில்? அக்ரஹாரத்தில் தமிழ்ப்பார்ப்ப்னர்களுக்கு மட்டும் கட்டித்தொலைக்கவேண்டியதுதானே?

    அடுத்து மலர்மன்னன் சொல்வது: ஆகம விதிகளின்படி எங்களுக்கு மட்டும்தான். நாங்களும் வருவோம் என வீம்புக்காக வராதீர்கள் என்பது, முதலில் ஜாதியடிப்படையில்தான் எங்களுக்கு எல்லாம் என்று சொல்லிவிட்டு, அதன்பின்னர் வீம்புக்கு என்றால் என்ன பொருள் மலர்மன்னன்? அப்படியே வீம்புக்கு வராமல், நான் ஏற்கனவே சொன்ன குணங்களைக்கொண்டோர் வந்தால் ஏற்றுக்கொள்ள முடியாதே! முதலிலேயே கதவை இழுத்துமூடிவிட்டு வீம்புக்கு வராதீர்கள் என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது?

    சாஸ்திரங்கள் என்றும் சாசுவதமன்று. நாங்கள் இந்துக்கள்./ இசுலாமியரைப்போல விடாப்பிடியாக இருக்கமாட்டொம் என்றும் பக்கம்பக்கமாக எழதித்தள்ளிக்கொண்டே, இப்படி சாஸ்திரங்கள் என்று இருக்கிக்கொள்கிறீர்களே ! If it is not hypocrisy, what else? Pl tell me.

    Hindus, awake…your enemy is within. Show them the door.

  30. Avatar
    vedamgopal says:

    ஹிந்து என்றும் ஹிந்து ஆத்தீகன் என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவனை தவிற மற்ற இந்தியர்களுக்கு அர்சகர் பூசாரி பற்றி கேள்விகேட்கும் உரிமை முதலில் கிடையாது. மற்றவர்கள் செக்யூலரிஸம் நம் நாட்டில் உண்மையில் இருக்கிறது என்றால் முதலில் அவர்கள் ஹிந்து கோவில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து வீடுவிக்க குரல் கொடுக்கவேண்டும். இது ஹிந்து ஆத்தீகர்களின் உரிமையை பறித்த படுபாதகசெயல் ஆகும். அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்து ஹிந்து கோவில்களை விடுவிக்க குரல் கொடுப்பதுதான் உண்மையான செக்யூலர்களின் கடமையாகும்.
    ஹிந்து ஆத்தீகன் எந்த ஜாதியில் பிறந்தாலும் முதலில் அவன் ஹிந்து ஆத்தீகனுக்கு உரிய குறைந்தபஷ்ச அடையாளமான பூனூல்அணிய வேண்டும் நெற்றிபொட்டு வைக்கவேண்டும். (இதற்கு பிராமிணன்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை). ஆகமவிதிப்படி அமையாத கோவில்களில் இன்றுள்ள பூசாரிகளை ஒழுங்குபடுத்தவும் அவர்களது குறைந்த பஷ்ச வருமானத்தை பெருக்குவதற்கும் இன்று பல ஹிந்து இயக்ங்கள் ஆக்கபூர்வமான செயலில் இறங்கியுள்ளன. அதைபோல் ஆகமவிதிப்படி அமைந்த கோவில்களில் பூஜாரி ஆகவோ அர்ச்சகர் ஆகவோ வரவேண்டும் என்றால் அவர் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் சிறுவயதிலேயே (7 அல்லது 8 வயதில்) ஆதீனமட வைதீகமட குருகூலங்களில் சேர்ந்து முறையான எல்லா பயிற்ச்சிகளையும் பெறவேண்டும். அதை அவர் அவர் தாய் மொழியிலேயே கற்கலாம். மேலும் இந்தியாவில் ஹிந்து மதத்தின் பல ஆகம வைதீக சாஸ்திரங்கள் சமிஸ்கிரத மொழியில் மட்டும் இருப்பதால் தாய் மொழியுடன் சமிஸ்கிரத மொழியும் கற்பது வேண்டும். இதற்கு பிராமிணர்கள் முடிந்தால் ஒத்துழைக்கவேண்டும். இல்லை என்றால் ஒதுங்கியிருப்பதுதான் அவர்களுக்கு நல்லது.(63 நாயன்மார்களின் பெருபான்மையோர் சமிஸ்கிரதம் கற்றவர்கள். அதில் பிராமிணர்கள் சொற்பமானவரே)
    எனவே வாலிபம்தாண்டியவர்களை இந்த அரசாங்கம் படிப்பு என்று சொல்லி அர்சகராகவும் பூசாரியாகவும் திணிப்பது ஏற்புடையது அல்ல. இது இருப்பதை குட்டிசுவராக மாற்றும் செயலேயாகும். இதுதான் எனது நிலைபாடு.

    1. Avatar
      Paramasivam says:

      Why to release Hindu temples from Govt?To continue the loot made by vested interests?.Why the Archagar trainees to begin their training at the age of 7 or 8?Will Vedam Gopal arrange to admit students from other castes in this training?Will they teach Sanskrit to all people who are willing to learn it?Is it true that Tirupati priests are prohibited to conduct yaagas for private persons as per the respective shastra?Is it also true that these priests are violating those rules by flying to Mumbai and other places to do yaagas for wealthy persons?How do you come to a conclusion that all people who are raising questions on Archagar issues are not Hindu devotees?

    2. Avatar
      K A V Y A says:

      வடமொழி வைதீகக்கோயில் அர்ச்சகர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும். ஆனால் எத்தனை பேருக்கு தற்போது தெரியும்? மந்திரங்களை மனப்பாடம் செய்து வருடக்கணக்கில் சொல்லான் தன்னாலேயே வரத்தான் செய்யும். பள்ளிப்பிள்ளைகள் நன்றாகவே செய்வார்கள். இன்றைய தமிழகத்தில் வாழும் பார்ப்ப்னர்களில் ஒருசிலரைத்தவிர மற்றெல்லாருக்கும் தெரியாது. அவர்கள் தெரியவும் விரும்பவில்லை. காலம் அப்படி ஆக்கிவிட்டது. காயத்திரி மந்திரத்தைச் சொன்னால் வடமொழி தெரிந்ததாக ஆகிவிடுமா? ஜன கண மண் எல்லாருக்கும்தான் தெரியும் அதனால் நமக்கெல்லாருக்கும் வங்க மொழி நன்கு பரிச்சயமா?

      வடமொழி கண்டிப்பாகத் தெரிந்திருக்கவேண்டுமென்றால் எதுவுமே சாத்தியமில்லை இன்று தமிழ்நாட்டில். ஆயினும் ஒரு அர்ச்சகனாக விழைவோனுக்கு அது தெரிந்திருக்கவேண்டும் அல்லது பயிற்சியின்போது தேவையான அளவுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டுமெனப்தில் உடன்படுகிறேன்.

      அரசு தன் கொள்கையை எவ்வாறு செயல்படுத்துகிறதெனப்தைப்பற்றிய விவாதம் வேறானதாகும். அரசின் அடிப்படைக்கொள்கையை மட்டுமே எடுத்துப்பேசவேண்டும். அது எதிர்க்கப்படுகிறது. ஏன்? ஒரு ஜாதியினர் மட்டுமே அர்ச்ச்கராக வேண்டுமென்பதால். இதைத்தான் எதிர்க்கிறேன். ஏனென்றால், இது சரியென்றால், மிசுநோரிகளும் இசுலாமிய மதமாற்றலார்களும் இந்துமதத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டு சரியே. அதை ஏன் பொய் என்கிறீர்கள்? அவர்கள் ஏன் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்கிறீர்கள். நீங்களே பலவழிகளில் பிராமணனுக்கு மட்டும் என்று சொல்லிவிட்டு, அப்படிச் சொல்லி உங்களைத்தள்ளுகிறார்கள். எங்களிடம் வந்துவிடுங்கள் என்று அவர்கள் சொன்னால் என்ன தப்பு? என்று கேட்கிறேன்.

      மற்றபடி வேதம் கோபால் எழுதியவைகள் அடிப்படை கருத்தைவிட்டுவிட்டு வேண்டாவிடயங்களைப்பேசுவதாகும். இந்து இயக்கங்கள் என்ன செய்கின்றன? பூசாரிகளுக்கு வருமானம் வருகிறதா என்பவைகளைப்பற்றியா பேசுகிறோம்? ஏன் ஒரு ஜாதி மட்டும் கருவறைக்குள் நுழைந்து இறைவனின் அர்ச்சகர்களாக ஆக முடிகிறது? மற்றவர்களால் முடியவில்லை. அல்லது தடுக்கப்படுகிறார்கள் ஆகம விதிகளைக்காட்டி என்பதே. அதைபாருங்கள்.

      நாயன்மார்களில் பலருக்குத்தெரியாது வடமொழி. ஆழ்வார்களிலும் அப்படியே. முதலாழ்வார்கள். குலசேகரர், ஆண்டாள், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்,இவர்களுக்குத்தான் வடமொழி தெரியும். வைணவக்குலபதியெனவழைக்கப்படும் நம்மாழ்வாருக்குத்தெரியாது.

      என் நிலைபாடு என்னவென்றால், அர்ச்ச்கர் எவராக விழைகிறாரோ அவர் அதற்கான தகுதிகளைச்தேடிச்சென்று பெறட்டும். அவர் எஜ்ஜாதியினராக இருந்தாலும் சரி. தடுக்கவேண்டாம். ஒரு ஜாதிக்கு ஒரு நீதி என்ற கொள்கை இந்துமதத்தை நாசம் செய்து விட்டது. இனியும் செய்யவேண்டாம். அஃதொரு சதி என்பது வெகுசரி.

      இதற்குமேல் என்னிடம் புதினமில்லை.

    3. Avatar
      ஆனந்தன் says:

      ஆகமவிதிகளைப் புறக்கணித்து அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் ஏதாவது செய்ய முன்வந்தால்கூட உங்களுக்கு அது ஏற்புடையதாக இல்லை கவனித்தீர்களா? பகவான் அருளால் பிற சாதியினரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவோம். மற்றவர்களுக்கு இதில் என்ன வந்தது என்று கேட்கிறீர்கள். கோயில்களை அரசாங்கத்தின் பிடியிலிருந்து விடுவித்து யார் கையில் ஒப்படைக்கச் சொல்கிறீர்கள்? ஒப்படைத்த பிறகு, சொத்துக்கள் மாயமானது குறித்து ஒரு விசாரணை கமிஷன் அமைக்கச் சொல்ல மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது? கோயில்களில் ஆறுகால பூஜைக்குப் பதிலாக ஒரு விளக்குகூட ஏற்றப்படுவ தில்லை. அரசாங்கம் கவனிக்க வேண்டுமென்று சொல்ல மாட்டீர்கள் என்று எப்படி நம்புவது?

  31. Avatar
    puthiyamaadhavi says:

    எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 2006ல் தமிழக அரசு ஆரம்பித்த அர்ச்சகர் வகுப்புகள் தற்போது மூடப்பட்டுவிட்டன.
    சரி, இதில் சேர்ந்து படித்தவர்களின் கதி!
    அர்ச்சகராகும் கனவில் வெளியில் வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து அர்ச்சகர் சங்கம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்களாம்.
    இந்து பத்திரிகையை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அடிக்கடி
    அதில் வெளிவரும் இச்செய்திகள் தெரிந்திருக்கும்.
    திரு. மலர்மன்னன் கட்டுரையை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். திரு காவ்யா அவர்களின் கேள்விகளுடன் நானும் உடன்படுகிறேன்.

  32. Avatar
    smitha says:

    Kavya,

    U have got many facts wrong. None of the aalwars were archakars.

    Also, many sons of archakas are also becoming archakas. The archakas are not paid well enough for them to make their sons study & settle in US.

    Brahmins are not denying temple entry here, whereas the upper caste non brahmins do not even admit dalits into the temples. There is a difference.

    The point is only on the entrance into the garba griha & conducting pooja.

    Also, being an archaka requires a certain amount of discipline which is found wanting in other castes.

    An archakars job is a thankless one. It is very easy to sit back & comment on it.

    Ur posts clearly indciate that U indulge in brahmin bashing, instigate the non hindus & divide the society further.

    Ur thalaivar EVR had only this 1 point agenda & that has done further damage to society.

    Being a EVR follower, U cannot be expected to contribute to do any good to society, but U can atleast try not to harm it.

    Atleast try.

    Puniapeyaril has unnecessarily dragged in Jayendrar here.

    1. Avatar
      Paramasivam says:

      Because of EVR only social equality was brought in TN.In many ways,he brought a revolution in the society.The exploiters were attacked by him.Naturally,the offsprings of those,who were oppressors hate him.Who gave the license toBrahmins to deny other castes to gain entry into the garba graha?An Archagar”s job is thankless one.OK.See my reply to Vedam Gopal about the priests of Tirupathi.Your comments about other castes is not non-brahmin bashing?isn’t it?

    2. Avatar
      Kavya says:

      தேவர்களும் பிள்ளைகளும் தலித்துக்களைத்த்டுக்கிறார்கள். நீங்களும் தடுத்தீர்கள். தலித்துகளின் ஆலயப்பிரவேசம் நடந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவில்லை. ஒரு சில பத்தாண்டுகளே ஆகியிருக்கின்றன. ஒரு பெரிய போராட்டம் பண்ணித்தான் உங்களை அடக்கமுடிந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீங்கள் மதுரை மீனாட்சி கோயிலுள் வரக்கூடாது அவர்கள் என்று தடுத்தீர்கள். உங்கள் காலடிபட்டால் மீனாட்சி கோயிலில் புனிதம் கெட்டுவிடும் என்றும் சுத்திபரிகாரம் பண்ணவேண்டுமென்றும் சொன்னீர்கள். ஆனால் நீங்களாகவே திருந்தினீர்களா? இல்லை. சட்டம்போட்டு உங்களை மிரட்ட வேண்டியதாயிற்று. சரி இப்போதாவது திருந்தினீர்களா? இல்லை. ஆகம விதிகளைக்காட்டி எங்கள் ஜாதிமட்டுமே புனிதம் என்கிறீர்கள். இதற்கு மேல் என்ன சொன்ன? பெரியார், வீரமணி, கருநாநிதி என்றெழுதிவிட்டால், எல்லாவற்றையும் மூடிவிடலாம் என்று கற்பனை பண்ணுகிறிர்கள். இங்கு படிப்பவர்கள் குழந்தைகளல்ல.

      தேவர்கள், பிள்ளைகள் ‘கடவுள் சொன்னார்;ஆகம விதிகள் தடுக்கின்றன’ என்று தலித்துகளைப்ப்யமுறுத்தவில்லை. உம்மை விட பலமிக்கவர்கள் நாங்கள் எங்களுக்கு ஈடாக நீங்கள் இருக்க முயலக்கூடாதென்றுதான் தடுக்கிறார்கள். அதை உங்களால் சொல்லமுடியாது. அருவாளைத்தூக்க மாட்டீர்கள் இல்லையா? ஆனால் கடவுள் சொன்னர் என்கிறீர்க்ள்.

      இந்த வேறுபாட்டைச்சுட்டிக்காட்ட நீங்கள் பார்க்க மறுக்கிறீர்களே ஏன்?

      அடுத்து வருமானம் வரும் தொழிலா இல்லையா? என்பதன்று கேள்வி. ஏன் ஒரு ஜாதிக்கு மட்டும் என்பதுதான் கேள்வி.

      மற்றவர்கள் வாழ்வது ஆகஸ்டு 2012. நீங்கள் வாழ்வது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன். கற்பனையாக வாழ்கிறீர்கள்.

      பெரியாழ்வார் ஒரு சிறிய கோயில் குருக்கள். அக்கோயில் அருகில் நந்தவனம் வளர்த்து வடப்த்ர சாய் கோயிலுக்கு பூமாலைகள் சப்ளை பண்ணிவந்தார்.

  33. Avatar
    dharmaraj.A says:

    Publisher sir,
    POOSAARIYAAHALAAM,! ARCHCHAHARAAGA MUDIYAATHU?.
    Here veterans are in both sides.They can argue endlessly.They all know what is true.There are a lot of leaders serving for the developement of religions and society.Let them do their work peacefully.Only those things capable can survive. Shall we take it as these arguement are continued to show their vast knowledge in this field?Why can not the publising authority put an end.

  34. Avatar
    punai peyaril says:

    No other community has the commitment, discipline or the dedication required towards this profession.–> சுமிதா இது நீங்கள் சொன்னது தானே… ஜெயேந்திர நீங்க சொல்ற ஒழுக்க ஜாதி தானே…. அவா எவ்வளவு ஒழுக்கமுடன் இருந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி… கொலை வரை போனவர். பெண்களுடன் குஷால் செய்தவர். பிராயசித்தமாக ஜெயலலிதா இவருக்கு வைத்தார் ஆப்பு. ஆனால், கருணாநிதியை ஜெயேந்திர அண்டிப் பிழைத்து தப்பித்து வந்தார்… மு.கவிற்கு ஓட்டும் போடச் சொன்னார்.. யாரை..? இந்து மதக் கடவுளுக்கு செருப்பு மாலை போட்டவருக்கு வெற்றி மாலை போடச் சொன்னார்… ஏன்… கம்பி எண்ணாமல் இருக்க…. தட்டில் போடும் காசிற்கு ஏற்றார் போல் அர்ச்சனை செய்பவர்கள் எந்த ஜாதியாய் இருந்தால் என்ன … தூக்கி வெளியே எறிய வேண்டும்…

  35. Avatar
    A.K.Chandramouli says:

    ஸ்மிதா அவர்களே, நான் உங்கள் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்

  36. Avatar
    மலர்மன்னன் says:

    ஆலயப் பிரவேசத்தை முன்னின்று நடத்தியவர்கள் பிராமணர்களே. அதன் பொருட்டு சாதி விலக்கம் செய்யப்பட்டுப் பலவாறான துன்பங்களுக்கு ஆளானவர்களும் பெரும்பாலும் பிராமணர்களே. இதேபோல் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றமைக்காக சாதி விலக்கம் செயப்பட்டுத் தொல்லைகளை அனுபவித்த பிராமணர்கள் பலர். ஹிந்து சமூகத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளைக் களைவது உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் ஸ்ரீ ராமானுஜர் காலத்திலிருந்தே பதிவாகியிருப்பதும், ராஜா என்கிற பட்டம் பெற்ற ராம்மோகன் ராய், பிரம்ம சமாஜத் தலைவர்கள், ஆரிய சமாஜத் தலைவர்கள், ஜி சுபிரமணிய ஐயர், வீரேச லிங்கம் பந்த்துலு இப்படிப் பலரும் பிராமணர்களே. ஹிந்து சமூக மாற்றம் எதுவாயினும் அதை முன்னெடுத்துச் சென்று மற்ற வகுப்பாருக்கு வழிகாட்டுவது பிராமணர்களே. ஈ.வே.ரா.வுக்கு அரசியல் ஞானம் புகட்டியது கூட பிராமணரே. தமிழ் நாட்டில் சமூக சீர்திருத்தத்திற்குக் காரணமே ஈ.வே.ரா. தான் என்று நினைத்துக் கொண்டிருப்பது அறியாமை. ஈ.வே.ரா. அவர்கள் பல காரணங்களுக்காகப் பாராட்டப்பட வேண்டியவர் என்பதுபோலவே கண்டிக்கப்பட வேண்டியவரும் ஆவார். மூத்த தலைமுறையினருக்கே உரிய நேட்டிவ் விஸ்டம் என்னும் சுய சிந்தனையின் விளைவாகப் பெற்ற அறிவை வெளிப்படுத்தியவர்தான் அவரும். ஆனால் சமய சந்தர்ப்பங்களூக்கு ஏற்ப ஆதாயம் பார்த்து சமரசங்கள் பல செய்துகொண்டவர். அவரைப் பற்றி ஒரு மதிப்பீட்டிற்கு வர வேண்டுமானால் அவருடன் பழகிய கோவை ஆனை முத்து, திரு.வி.க., கி ஆ பெ விசுவநாதம், ஜீவானந்தம், அன்பு பொன்னோவியம், எம் சி ராஜா இப்படிப பலரும் பதிவு செய்துள்ள புத்தகங்களை (முதற் பதிப்பை) படித்தறிய வேண்டும். வெறும் திராவிடர் கழக வெளியீடுகளைப் படித்துவிட்டு அவரைத் தலைமேல் வைத்துக் கொண்டு கூத்தாடக் கூடாது. ஈ.வே. ரா. வால் நாட்டிற்கு நன்மையைவிடத் தீமைகளே அதிகம் விளைந்துள்ளன. இத்தனை வருஷங்களுக்குப் பின் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சுற்றுலாப் பயணியாக வந்துவிட்டுப் போன, சமூகவியலோ, மானிடவியலோ, வரலாற்று அடிப்படையோ ஏதும் இல்லாத, கிறிஸ்தவம் வந்த பிறகுதான் பாரதம் உள்ளிட்ட கீழ்த்திசை நாடுகளில் மானுடம் விழித்துக் கொண்டது என மிஷனரிகள் தந்த ஊக்குவிப்பில் காத்தரின் மேயோ என்கிற சாக்கடை வாடையை மட்டுமே ரசித்த பெண்மணியை இத்தனை வருஷங்களுக்குப் பிறகு சம்பந்தா சம்பந்த மில்லாமல் இங்கு கொண்டு வந்து நிறுத்துவதில் உள்ள சுய மரியாதையை என்ன வென்பது? விவரம் அறிந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலரே மேயோவின் புத்தகத்தை வெறும் குப்பை, உள் நோக்கத்துடன் எழுதப்பட்ட அரைகுறை அறிவுடனான உளறல்கள் என்று விமர்சித்திருக்க, அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு இங்கே வந்து கூத்தாடுவதை என்னவென்று சொல்வது? அந்தக் குப்பைக்கும் இங்கு எழுதப்பட்டுள்ள கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்?
    கருவறைக்குள் பூசாரியைத் தவிர வேறு எவரும் பிரவேசிக்கக் கூடாது என்பது எங்கும் உள்ளதுதானே! இது அர்ச்சகர் உள்ள கோவில்களுக்கு மாத்திரம் உள்ள நியமம் அல்லவே? இதில் பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்கிற பிரச்சினை எங்கு வந்தது? அர்ச்சகர்-பூசாரி பிரச்சினை ஏன் அனாவசியமாக வேறு எங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுகிறது? ஒரு முக்ககிய தகவல்: தமிழ் நாட்டில் முதல் முதலாக சமூக சீர்திருத்தச் சங்கம் என்ற ஒன்றை 19 ஆம் நூற்றாண்டில் தொடங்கியவர்களே பிராமணர்கள்தாம்! சென்னையில் தொடங்கப்பட்ட அதில் சுப்பிரமணீய பாரதி உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்!அவர்களின் முக்கிய நோக்கம் முதலில் சமூக விடுதலை, அதற்குப் பின்னரே அரசியல் விடுதலை என்பது! மெட்ராஸ் சோஷியல் ரிஃபார்மிஸ்ட் அசோசியேஷன் என்பது அதன் பெயர். சமூகத்தில் சாதி ஏற்றத் தாழ்வு பார்க்கும் வழக்கம் ஒழிய வேண்டும், சாதி வித்தியாசமின்றி ஹிந்து சமூகம் ஒற்றுமையுடன் விளங்க வேண்டும் என்றும் தாழ்த்தப்பட்டோரும் இதற்கு விதி விலக்கு அல்ல என்றும் இந்தச் சங்கம் பிரசாரம் செய்து வந்தது. செட்டூர் சங்கரன் நாயர் போன்றவர்களையெல்லாம் அழைத்துப் பேச வைத்தவர்கள் அவர்கள். டிரவிடியன் வொர்த்தீஸ் என்கிற புத்தகம் எழுதியதற்காக இன்று அவரைக் “திராவிட ஆய்வாளர்கள்” கொண்டாடுகிறார்கள். அவர் ஹிந்து மகா சபைக்காரர் என்பது பாவம், அவர்களுக்குத் தெரியாது! செட்டூர் சங்கரன் நாயர் முதலில் காங்கிரசிலும் இருந்தவர், பின்னர் நீதிபதியாகி ஆஷ் படுகொலையை விசாரித்தவர்களில் ஒருவராய் இருந்தவர், பிராமாணர்களைக் கண்டு வயிறு எரியாமல் அவர்களைப் போல் முன்னேறுகிற வழியைப் பாருங்கள், நீங்கள் பின் தங்கியிருக்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்களேதான் காரணம், என்றெல்லாம் அறிவுறுத்தியவர், அவர்!
    பிராமணனைத் தவிர வேறு எந்த சாதிக்காரனும் தனது சாதியை அவ்வளவு கடுமையாக விமர்சித்தது இல்லை! சுய விமர்சனத்தை பிராமணர் அளவுக்கு வேறு எந்த சாதியாரும் செய்துகொண்டதில்லை!
    -மலர்மன்னன்

    1. Avatar
      Kavya says:

      முதல்வரியே சர்ச்சைக்குறியது. ஆலயப்பிரவேசத்தை நடாத்தியது ஒரு தமிழ்ப்பார்ப்ப்னர் எனபது உண்மை. ஆனால், ‘ஒரு’ என்பதும் உண்மை. அவரைச்சிறையில் அடைக்க முயன்றது அன்றைய அரசு. அதன் தலைவரும் ஒரு தமிழ்ப்பார்ப்பனரே. எப்படி இதற்கப்பாலும் நாம் இந்தியாவில் இருப்பது நமக்கே நல்லதன்று என்று நினைத்து வெள்ளைக்காரன் போனானோ அதன்படியே இதற்குமேல் இந்த அசிங்கத்தை நாம் செய்தால் த்ம் மதமே காணாமல் போகும் என நினைத்துத்தான் அவரைச்சிறையில்டைககக்கூடாதென்றார் அந்தத்தலைவர். இதற்கிடையில் மிசுநோரிகள், மற்றும் இசுலாமிய மதமாற்றாளர்களின் தொல்லை தாங்க முடியாமல் போய்க்கொண்டிருந்தது. அவர்களெல்லாரும் தலித்துகளிடம் ‘பார்த்தீர்களா, உங்களை தீண்டத்தகாதவர்களென்று சொல்லி கோயிலுக்குள் நுழையவிடாமல் செய்கிறார்கள் இந்துமதத்தில். எங்களிடம் வந்து விடுங்கள். எல்லாரும் சமம்!’ என்று சொன்னார்கள். சுவனப்பிரியன் சொல்லிக்கொண்டேயிருக்கிறார் இன்னும் இல்லையா!. இப்படிப்பட்ட சங்கடமான காலகட்டத்தில் தாமிருப்பதாக உணர்ந்தபடியாலேயே ஆலயப்பிரவேசம் வெகுவாக சிரமத்தைச்சந்திக்கவில்லை. இஃதென் சொந்த கருத்து.

      தலித்து, நாடார் இளைஞர்களோடு அவர் உள்ளே நுழைய ஆரம்பித்தவுடன் மீனாட்சி கோயில் ஆகம விதிகளின்படி ‘தகுதியுடைய’ அர்ச்சகர்கள் திரண்டுவந்து ஒரு சுவராக நின்றார்கள். போலீசுக்கு போன் போட்டுவரவழைத்தார்கள்.

      தமிழ்ப்பார்ப்ப்னர்களுள் அரிசனநலத்துக்காகவும், தீண்டாமை ஒழிப்புக்காகவும் உழைத்தோருண்டு. ஆனால் அவர்கள் எண்ணிக்கையை மற்ற தமிழ்ப்பார்ப்ப்னர்களோடு ஒப்பிடும்போது குறைவே. அன்றைய பார்ப்ப்னர்களுள் எத்தனை பேர் வைத்தியநாதையருக்கு ஆதரவளித்தார்கள்?

      இன்றும் சுமிதா எழுதுகிறார்; சந்திரமவுளி சரியென்கிறார். வேதம் கோபால். மற்றவர்கள் ஆகக்கூடாதென்று சொல்லிவிட்டு இப்போது மாற்றிக்கொள்கிறார். மலர்மன்னன் ஆகம விதிகள் பார்ப்ப்னரை மட்டும்தான் ஏற்றுக்கொள்கின்றன என்கிறார்.

      ஆலயப்பிரவேசம் தடைசெய்யப்பட்டது தலித்துகளுக்கு. அது தீண்டாமை என்கிறோம். அர்ச்சகர்களாவது பார்ப்ப்னர்கள் மட்டுமே என்றும் பிறருக்கு இறைவனருகில் செல்ல தகுதியில்லை என்பதும் தீண்டாமையே.

      இவர்களைத்தவிர இறைவனுக்கு மற்ற மக்களைப்பிடிக்காதாம். அப்படி ஆகம விதிகள் சொல்கின்றனவாம். இறைவனை இப்படி ஆராவது இம்சைப்படுத்துவரா?

        1. Avatar
          Kavya says:

          முதலில் தடுக்கும் ஆகம விதிகளை மலர்மன்னன் திண்ணை வாசகர்களுக்கு எடுத்து வைக்கட்டும். அதில் எங்கே இறைவன் வேண்டாவெனத் தடுத்தார் என்று பார்க்கலாம்.

    2. Avatar
      Paramasivam says:

      Let Malarmannan list out the evils brought about by EVR.EVR”s reforms brought benefits to majority of Tamilians.Nobody can dispute it.As I said earlier,the oppressers are only hating him.There may be difference of opinion and methodology adopted by EVR and others named here.Even they cannot deny his contributions.Whether Katherine Mayo is a reformer or not,she has brought out the evils in Indian society.Even Dr Muthulakshmi Reddy,took initiative to abolish Devadasi system,child marriage etc after reading Mayo”s book.Mayo has written many chapters about opposition from Brahmins against banning of child marriage.The major beneficiaries of abolition of child marriage are Brahmins themselves.If Maxmuller says that Sanskrit is the best language,it will be accepted,even though Maxmuller is a German.If ISCON members sing Hare Rama Hare Krishna,it will be accepted,even though they are foreigners.Mayo has written about Hindu widows in 1927.Any improvement in 2012?Read SC”s anguish about the pitiable position of Vrindavan widows in Times of India.We will not correct our ways.When some body points out those things,we rush to call that person names.If sewage running in our society,why to blame the person who is pointing out those things.Whether caste supremacy is removed?Until then you have to smell the sewage.When I wrote about Archagar issue for the first time about 6 months back,Malarmannan brushed aside saying that such things were only figment of my imagination.At one stage,he also offered to help those Archagar trainees to get appointment.His followers in Thinnai challenged me to furnish full details.When I furnished all details,their reply is different.Accept that you will not change your attitude.What is the use of reeling out statistics?Reply for the Vrindavan widows now?

    3. Avatar
      K A V Y A says:

      கட்டுரையில் சொல்லப்பட்டதற்கும் மலர்மன்னனின் தற்போதைய பதிலுக்கும் தொடர்பில்லை. சொல்லப்பட்ட விடயத்தை இருட்டடிப்பு செய்யும் முயற்சிதான் வெளித்தெரிகிறது. மலர்மன்னன் சொன்னது ஆகம விதிகள் ‘பிராமணர்கள்’ என்று சொல்லும் அவர் ஜாதிக்காரகளை மட்டும்தான் கருவறைக்குள் நுழைந்து கடவுளை அர்ச்சனை பண்ணவிடுகின்றன என்றார். அவரைப்போல சுமிதா, சந்திரமவுளி, வேதம் கோபால் போன்றோரும் எழுதினர்.

      இங்கு எழும் கேள்விகள் திண்ணையில் நம்மால் வைக்கப்படுகின்றன. ஈ வேரா, மற்றவெருமே இங்கில்லை. விடுதலைப்போராட்ட வரலாறு தேவையில்லை.

      மலர்மன்னன் கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் வரும் விபரீத விளைவுகளைப்பாருங்கள்: எவ்வளவுதான் உயரிய ஆன்மநிலையை அடைந்து, அர்ச்சகராக ஒரு கோயிலில் தன் வாணாளைக் கழித்து இம்மதத்துக்கு தன்னால் ஆகமுடிந்த தொண்டைச்செய்ய பேராவாக்கொண்ட ஒருவனும், கருவறைக்குள் புகுந்த விலைமகளிரைப்புணர்ந்து சிவலிங்கத்தில் பின் க்ண்டோமை விட்டெறியும் தேவனாதனும் நம் முன்னே வந்து அரச்சகராக விழைவதைச்சொல்லும்போது முன்னவர் நிராகரிக்கப்படுவார்; தேவநாதன் அழைக்கப்படுவார். ஒரேகாரணம் ஆகம விதிகள் முன்னவர் அபார்ப்பனராக இருந்தபடியாலே தடுக்கின்றன; அதே விதிகள் பின்னவர் பார்ப்பனப்பெற்றோருக்குப்பிறந்ததனாலே தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் புராதனமான மச்சேசுவரர் திருக்கோயிலில் அரச்சனை பண்ண அழைக்கப்படுவார்.

      இந்த கொடுமை ஏன்?

      மெரிட் போகிறது இட ஒதுக்கீடு கொடுத்தால் என கூக்குரலிடுவோர்., இங்கே பிறப்பால் ஒருவனுக்குத் தகுதி வருகிறது என்கிறார்கள். இப்படிச்சொல்லும் இதே மலர்மன்னன் தான் ஹிந்து மதத்துக்காகப்பாடுபடுவதாக பெரிதும் பறைசாற்றி வருகிறார். எப்படி சாத்தியமாகும்? சாதிகள் அவசியமென்றும் ஆகம விதிகள் பார்ப்ப்னரைத்தான் விடுகின்றன எ\ன்றும் சொன்னால் மற்ற ஜாதியினர் ஹிந்து மதத்தில் ஏன் இருப்பார்கள்? இருக்க வேண்டும்? மதமே ஜாதிக்கொரு நீதியென்று சொல்லிவிட்டதே!

      இந்துமதத்தில் பெரும் சாபக்கேடு இந்த ஜாதிகள். அவை அவசியமென்று சொன்னால், அஃது இந்துமதத்தை முடக்கிப்போடும். சாதிகள் அவசியமானால், சாதிகள் இருக்கும். சாதிகள் இருந்தால் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். சாதிகள் இருக்கும்போது, மேல், இடை சாதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துப்போவர் அவர்களிடம் பலவகை பலங்கள் இருக்கின்றபடியால். கீழ்ச்சாதியினரான, பறையர்கள், பள்ளர்கள், சக்கிலியர்கள், குறவர்கள் நிலையென்ன? அவர்களை மேல், இடை ஜாதிகளின் இடத்தில் வைத்துப்பார்க்க முடியுமா? விடுவார்களா? அதைத்தானே பரமக்குடியில் பார்த்தோம் போனவாண்டு!

      ஆக, மலர்மன்னன் செய்துகொண்டிருப்பது தலித்துக்களை இந்து மதத்திலிருந்து ஓட ஓட விரட்டும் செயலாகும். பார்ப்ப்னரகள் மட்டுமே இறைத்தொண்டு செய்யலாமென்றால், பார்ப்பனரல்லா இடை ஜாதியினரெர்ல்லாம் கூண்டோடு இழிவுபடுத்தப்படுகிறார்கள். அவர்கள் ஒன்றும் அர்ச்சகர் தொழிலுக்கு ஏங்கவில்லை. வரவும் மாட்டார்கள்.. ஆனால் சொல்பவன் பார்ப்ப்னருக்கு மட்டுமே அதற்குத்தகுதி – சுமிதா எழுதியதைப்போல அவர்கள் மட்டுமே நல்ல பண்புடையோர் என்று_ சொல்லும்போது இடைஜாதியினருக்கு கண்டிப்பாக‌ வலிக்கத்தான் செய்யும்.

      தமிழகத்தில் பார்ப்ப்ன எதிர்ப்பை முன்னின்று நடாத்தியவர்கள் தலித்துக்களல்ல. இடைஜாதியினரே. அவர்களை அனுசரிக்கத்தெரியாமல் தாம் அவர்களை விட மேல் ஜாதியெனற தமிழ்நாட்டுப்பார்ப்பன்ர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்தமையால் அவர்களின் வெறுப்புக்காளானார்கள். இதுவே பார்ப்பன எதிர்ப்பின் அடிப்படையாகும். மற்றெல்லாம் செயல்கள் மட்டும்தான். அடிக்கருத்தே அல்லது உந்துக்கருத்தே நாம் பார்ப்பது.

      மறற மாநிலங்களில், குறிப்பாக, குஜராத்தில், பார்ப்ப்னர்கள் விரும்பப்படுகிறார்கள். காரணம் அவர்கள் தலித்துகளை மட்டுமே தள்ளினார்கள். இடைஜாதியினரோடு அணுக்கலாக வாழ்ந்தபடியாலே அங்கு பார்ப்பன எதிர்ப்பு வரவேயில்லை.

      ஆக, தலித்துகளைத் தள்ளினார்கள். ஒன்றும் பெரிய விடயமில்ல. காரணம் இடைசாதி அதை விரும்பியது. இடைஜாதியினரைத் தள்ளினார்கள் அதுவே பெரிய தவறு. அத்தள்ளளின் ஓரம்சமாகவே தேவநாதன் அர்ச்சகராகலாம். மற்றவர் எவரும் – எத்துணைதான் ஆன்மிகச்செம்மலாக இருந்தாலும் – ஆக முடியதென்பது.

      இந்துமதத்துக்கு உதவியில்லாவிட்டாலும் உபத்திரம் இல்லாமல் இருக்க முடியாதா?

      இந்துமதத்தைப்பற்றி வாய் திறக்கமறுக்கிறார். ஆனால் அவர் ஜாதியின் புகழைபபாட தய்ங்குவதில்லை என்பது மேலுள்ள அவர் பதிலில் தெளிவாகும். பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை.

  37. Avatar
    வெங்காயபகுத்தறிவு says:

    ஒரு மதத்தில் உள்ள பெண் குழந்தைகள் 15 வயசிலேயே மேஜராயிடுவாங்க.கல்யாணம் பண்றது தவறில்லையாம்.அதே இன்னொரு மதத்துல 18 வயசுலதான் மேஜராம். இதை ஒரு பகுத்தறிவு வெங்காயமோ,சிவப்பு அரிவாள்-சுத்தியலோ ஒரு வார்த்தை கூட கேட்காமல் (காதே கேட்கலையோ…)கம்னு ஊமைக்கோட்டானாட்டம் இருந்துட்டு இதுக்கு மட்டும் கோவம் வருமாமே…அடடா என்ன ஒரு சமத்துவம்,என்ன ஒரு அறச்சீற்றம்

  38. Avatar
    Ramesh says:

    ஈ.வே.ரா.வுக்கு அரசியல் ஞானம் புகட்டியது கூட பிராமணரே ”
    மலர் மன்னன் ஐயா. நீங்கள் யாரை சொல்கீறீர்கள். you mean rajaji. God.. few more feed backs are going to flow.. opposing that. Well apart from all trashes.. I could able to summarise for understanding below.

    1) EVR is not only the social reformer as it is projected in TN. ஜெயமோகன் ஒரு கட்டுரையில் சொன்னது போல அறுவை சிகிச்சைக்கான கடப்பாரை ஈவேரா.. அவரது சந்தர்ப்ப வாதமும், பொய்முகமும் பேசப்படாமலே போனது அவருக்கே துரதிருஸ்டம்.. He needs for that time. He is realised chq. You cant and dont need to deposit once again..

    2) There is need for temple archagar law changes. And it should be done by people who cares for vedic culture and not just by paper tigers ?

    I had been to one famous ஆகம் கோயில் recently when my trip back to my place. When i asked how many people are doing archani in tamil even though it is in practice.. archakar asked and ensured that i am not spy/govt officials..

    Then he said sir nobody wants. even if i am asking them to do it, they felt offended and asking why r u doing in these..

    So it made me to think that just making all these changes superficially may create some vote bank for dravidian party.. but will not make needed changes.. in roots..

    ஆழமான சமய மாற்றம் இந்து மதத்தை சேர்க்க வேண்டும் என்று எண்ணுபவரிடமிருந்து வந்தால் தான் அதன் சத்தியம் நிலைக்கும்.

    சந்தர்ப்பவாத ஈவேரா, வாழ்நாளெல்லாம் மற்றவரை திட்டி வாழ்ந்த ஒரு நெகட்டிவ் கேரக்டர் எப்படி சமூக சீர்திருத்தத்தை கொடுக்க முடியும் ( It would have created some shaking.. I also to the extend agreeing that Negative EVR helped in reduce down some sect domination. in all sphere.. )

    காவ்யாவின் பசு, கறவை மாடு, ஒருத்தி பலபேர் என்கிற வாதங்கள் எந்த கருத்தாங்களின் எச்சம்.. சந்தேகமில்லாமல் அது ஈரோட்டு கழனிக்கு இட்டு செல்கிறதே.. கேராளாவில் நடந்ததே பாராட்டுவார்களே என்று பார்த்தால், போட்டாரே ஒரு குண்டு.. எந்த ஜாதிப்பெண்கள் வந்தாலும் பரவாயில்லை என்று காலக்கொடுமையால் நினைக்கிற நம்பூதிரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையென்று..

    நல்ல வேளை, ஈவேரா இல்லை, இது மட்டும் தெரிந்திருந்தால், பிராமணப் பெண்களின் கரு இருந்தால் தானெ, இந்த பசங்கள் இந்த ஆட்டம் போடறான்கள்.. பேசாம அதையே கட் ப்ண்ணிட்டா என்ன. என்று ஒரு போராட்டம் ஆரம்பித்து இருந்திருப்பார்..

    காவ்யா சொன்ன நிறைய ஆலோசனைகளையும், வேதம் கோபால் சொன்னா கருத்துக்களையும் இந்து மதப்பெரியவர்கள் யாராவது ஆராய்ந்து சொன்னால்.. இந்து மதம் நன்றாயிருக்க வேண்டும், வெறும் வெங்காய மதமாகிவிடக்கூடாது என்கிற அக்கறை உள்ள சிலருக்கு உபயோகமாயிருக்கும்.

    மலர் மன்னனே, இந்த போராட்டதை எடுத்து நடத்தினாலும், நாங்கள் திட்டிய திட்டால் தான் இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது என்று வழக்கமான திராவிடத்துதியை இவர்கள் பாடத்தான் போகிறார்கள் என்றாலும், பழம் விழுந்தால் சரிதான். எந்த காக்காய் உட்கார்ந்தாலென்ன..

    திண்ணை இப்போது சுப்ரீம் கோர்டு ஆகிவிட்டதால்.. கனம் கோர்ட்டார் அவர்களே, உங்கள் கத்திரிக்கோலை வைத்து ஈவேரா செய்த முழு கத்திரி செய்துவிடாதீர்கள். எங்கெங்கு அறுக்க வேண்டுமோ அதை மட்டும் அறுத்து மற்றதை பிரசுரித்துவிடுங்கள்..மொட்டையும் அறுப்பேன், குடுமியும் அறுப்பேன் என்று எல்லாவற்றையும் கட் செய்துவிடாதீர்கள் :)_
    நீங்களும் திராவிட ப்ரேமிற்குள், பிரேமைக்குள் போய்விடாதீர்கள்.. நன்றி..

    1. Avatar
      punai peyaril says:

      ரமேஷ், இங்கு யாரும் தம் பக்கம் இருக்கும் குறைகளையும் எதிர் பக்க பலங்களை பாராட்டியும் எழுதுவதில்லை. பெரியார் என்பது ஒரு வேகமான இயக்கமாக இருந்தது உண்மை. அதற்கு காரணம் அய்யர்கள் இவர்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னதே… ஆனால், உண்மையில் மேலை இருந்து கீழே ஓட்டியது ஜாதி இந்துக்களே. இவர்கள் உண்மையில் வீரர்கள் என்றால் ஜாதி இந்துக்களின் தலைவர்களை, “மு.தேவர், ராமசாமி படையாட்சி, “ ஆகியோரை தாக்கிப் பார்க்கட்டும். பேடிகள்… கோவிலுக்குள்ள விட மாட்டேன் என்கிறான் என்று புலம்பாமல் காடன் மாடன் கோவிலுக்கு ஏன் எவனும் வர மாட்டேன் என்கிறான் என்று சொல்லட்டும். சில கோவில்களில் டாஸ்மாக் கடையை விட சாராயம் அதிகமாக சாமிக்கு படைக்கப்படுகிறது. அவனுக கடா வெட்டி தின்ற விதத்த பார்த்தாலே ஏதோ ஹாலிவுட் அப்பகாலிப்டோ பட ஷூட்டிங்கோ எனத் தோனும். ஏன்யா, அய்யர் பசங்கள தான் விரட்டியாச்சே… ஒழுங்கா ஒரு ஆட்சிய கொடுக்க வேண்டியது தானே…. இன்னும் எத்தனைக் காலத்துக்கு தான் 10மார்க் வாங்கினவனும் 100 மார்க் வாங்கினவனும் ஒன்று என்று அட்மிஷன் நடக்கும்..? அதனால் தான் பாதி டிகிரி துடைச்சுப் போடும் தரத்தில் இருக்கு….

  39. Avatar
    vedamgopal says:

    இங்கே சிலர் ஹிந்து கோவில்களை மட்டும் அரசாங்க கட்டுப்பாட்டில் அடிக்கி ஆளுவது ஏன் ? அதற்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால். அப்படியில்லை என்றால் கோவில் கொள்ளை போய்விடும் என்கிறார்கள். அதேநேரம் மற்ற மதத்தின் வழிபாட்டு தளங்களை ஏன் அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்பதை கேள்விகேட்க பகுத்தறிவு வியாதிகளுக்கு தெம்பு இல்லை திராணி இல்லை தொடைநடுக்கம். மேலும் ஹிந்து கோவில்களின் வருமானத்தில் பெரும் பகுதி சர்சுகளுக்கும் முல்லாகளுக்கும் மதராஸாகளுக்கும் செலவிடப்படுகிறது. அதையும் அவர்கள் வெட்கம் இல்லாமல் புணித வெளிநாடு பயண சலுகைகளை பெறுவதுபோல் பெற்றுக்கொள்கிறார்கள்.
    ஹிந்துமித்திரன் என்ற பத்திரிகையில் திரு கோவில்களின் அவல நிலையை பற்றி ஒரு முழுகட்டுரை வந்துள்ளது. இதில் 1925 முதல் அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட கோவில்களின் அவல நிலை பற்றி கூறியுள்ளது. நடந்த சிலை திருட்டுக்கள், நகை திருட்டுக்கள், இதை தடுக்க வந்த காவளாலி அர்சகர் கொலைகள், கோவில் நிலங்களின் ஆக்ரமிப்பு, குத்தகை பித்தலாட்டங்கள் விலையுயர்ந்த கோயில் தேர்கள் எரிப்பு என்று ஒரு நீள பட்டியலை தருகிறது. இதை தவிற அத்தியாவைசிய தேவைகளுக்கான ஆறு கால பூஜைகள் பல கோவில்களில் நடக்காமல் இருப்பது. கோவில் மண்டபங்களை இடித்து தள்ளுவது. இதுபோன்று பல பழி பாவ செயல்களை அரசாங்கம் கண்ணை திறந்துகொண்டே செய்கிறது. இதையெல்லாம் கேள்வி கேட்க ஒரு பகுத்தறிவாளியும் இல்லை. இந்த லஷ்சணத்தில் எல்லா ஜாதியினரும் ஏன் அர்சகராக முடியவில்லை என்று கேள்வி. முதலில் கோவில் இருந்தால்தானே அர்சகர் பிரச்சனை. கோவில்களே இல்லாமல் செய்துவிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும். பிராமிணனை டாஸ்மாக் கடைமுன் நிறுத்த வேண்டுமானால் (கெடுக்க) இந்த பகுத்தறிவாளிகளால் முடியும். ஆனால் டாஸ்மாக் கடைமுன் இருக்கும் கீழ் ஜாதிகளை கோவில் அர்சகராக்குவது (நல்லது) செய்ய ???.
    இதைவிட கேவலம் தமிழகத்தில் ஒரு கோவில் வாயிற் கதவில் பெரியார் தெரேசா போன்று ஹிந்து ஆண்மீகத்திற்கே சம்பந்தம் இல்லாத தவைவர்களின் முகங்களை செதுக்கி வைத்துள்ளார்கள். 24.7.97 இல் அறநிலைதுறை அமைச்சர் தமிழ்குடிமகன் தலைமையில் தமிழ் லஷ்ஷார்சனையில் ”1000 போற்றிகளில்” சகஸ்ரநாமத்தில் சில போற்றிகள் கீழே –
    கடம்பூர் மேவிய கலைஞரே போற்றி (642)
    கடமை கண்ணியம் கட்டுபாடு தரும் கபாலியே போற்றி (879)
    கூட்டம் கூட்டமான திருவளர் தமிழ்குடிமகனே போற்றி (677)
    கலியுகத்தின் கருவில் கழகமான கபாலியே போற்றி (934)
    கணக்கற்ற காதல் உடையோன் போற்றி (670)
    கணக்கிட முடியா அருள் கணிப்பொறியை உருவாக்கித் தரும் கபாலியோ போற்றி (883)
    தனித்தமிழ் வளர்க்கும் தன்மானத் தலைவா போற்றி (896)
    சாதிகளை ஒழித்த சமயக்காவலரான கபாலியே போற்றி (898)

    வெட்கம் மானம் சூடு சொரணை உள்ள தமிழன் வேதனை படுவான் ஆனால் இந்த தமிழக பகுத்தறிவு கும்பல் !!!!!!!! ?????????

    1. Avatar
      punai peyaril says:

      வே.கோபால், கடவுளுக்கு கூட சில வேளை தீபாரதை. சந்தனப் பெட்டியில் உறங்குபவருக்கு தொடர்ந்து தீ எரிகிறது. எதுகை மோனை பேசியவருக்கே இந்த நிலையெனில், வேதங்கள் படைத்தோருக்கு… ? சிலைகளை வழிபடுதல் மூடநம்பிக்கை என்றோர், தெருதோரும், மூத்திர சந்து கூட விடாமல், அண்ணா, பெரியார் என சிலைகள், அது என்ன நம்பிக்கையோ…? ஒரு பெண் – ஐந்து ஆண் என்ற மகாபாரத்தை கேலி செய்தவர்கள் இயக்கத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனும் பரந்த மனம் கொண்ட பெண்கள் பற்றி என்ன சொல்வார்கள். ஒழுக்கம் என்று ராமனையும் சீதையும் காட்டினால், ஒழுக்கம் என்பது உடலில் இல்லை என ஊர்மேயும் கூட்டத்தை திருத்த யார் வருவார்..? பால்ய விவாகம் என்பதை சாடி மாற்ற வேண்டியவர்கள், தாதியாய பணிவிடை செய்தவரை தாரமாய் ஆக்கிக் கொண்ட கொடுமையை யார் கேட்பார்..? இயக்கத்தில் ஒரு அடுத்த தலைவனை தேர்ந்தெடுக்காமல் தன் மனைவி ஸ்தானத்தில் தான் நம்பிக்கை இருக்கும் என்று நினைத்த தலைவனை விட தசரதன் மேலானவன்… ஆனால், அவன் மகனுக்கு செருப்பு மாலை என்றால் இவனுக்கு என்ன மாலை…. அதன் கீழிருக்கு தூசியால் ஒரு மாலையா…? இந்துக் கோவில் சொத்துக்கள் அரசிடம் இருப்பது நல்லது என்போர், பகுத்தறிவுவாதி வீரமணியின் கைகளில் குடும்பச் சொத்தாக போன பெரியார் டிரஸ்டை எப்படி மீட்டெடுப்பது… ஏன், யாராவது ஆர் டி ஐ போட்டு அதைக் கிண்டக் கூடாது… பல அய்யர்கள் அமெரிக்காவில் இருந்து திரும்பி சேவகைள் பல செய்ய.. வீரமணி அய்யரோ, அமெரிக்காவில் சிகிச்சையுடன் சுகமாய்… நிலாவை காட்டி சோறு ஊட்டுவது போல் அய்யர்களைக் காட்டி சோற்றை திருடுகிறார்கள்… அது கூட தெரியாத வத்தல் தொத்தல்களாய் இவர்கள்… திருப்பதி மொட்டை போட்டால் கேடு… பெரியார் செத்து மொட்டை போட்டால் பகுத்தறிவு… என்ன இழவுடா.. இது… இந்த பெரியாரிஸ்டுகள் கடவுள் இல்லை.. அல்லாவை கும்பிடுபவன் முட்டாள் எனச் சொல்லட்டும் அப்புறம் பார்ப்போம் இவர்களின் வீரத்தை…

  40. Avatar
    vedamgopal says:

    மேலும் அறநிலைதுறை கட்டுப்பாட்டில் நடக்கும் சில அட்டுழியங்கள். ஆண்மீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தினரை கோவில் தர்மகர்தாக்களாக நியமித்தல். சிறப்பு தரிசனம் என்று தரகர்கள் அடிக்கும் கொள்ளை. சினிமா சூட்டிங் நடத்தபடும் இடம் போல வேண்டாத சக்திவாய்ந்து மின்சார பல்புகளை போடுதல். பிரகாரத்தின் உள்ளேயே கழப்பிடங்களை அமைத்தல். கோவில் கோபுரதரிசனம் செய்யமுடியாமல் அருகிலேயே பல அடுக்கு மாடிகளை கட்ட அனுமதி அளித்தல். கற்தரைகளை எடுத்து வழிக்கிவிமும் வண்ணம் கிரானைட் தரைகளை அமைத்தல். கோவில் சிலைகள் சித்திரங்கள் செதுக்கி வைத்துள்ள சரித்திர சம்பிரதாய கட்டுமான பணி பற்றிய விபரங்களை புனர்நூதாரணம் என்ற பெயரில் உருதெரியாமல் செய்தல் என்று சொல்லஒண்ணா கொடும் பழிபாதக செயல்களை தொடர்ந்து செய்து மொத்தமாக தமிழனின் அடையாளங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்

  41. Avatar
    K A V Y A says:

    திண்ணையில் என்னால் வைக்கப்படும் கருத்துக்களுக்கு ன் மட்டுமே சொந்தக்காரன். கிரடிட்டோ டெபிட்டோ என் கணக்கில்தான் சேரவேண்டும். ஏன் அவற்றை எப்போதோ வாழ்ந்த ஈ வே ரா என்ற ஆளுக்கு நான் விட்டுக்கொடுக்க வேண்டும் ரமேஷ்? உங்கள் சொத்தை பிறருடையது என்று பச்சையாகப் பொய் சொன்னால் ஏற்பீர்களா?

    கிடக்கட்டும். ஜெயமோஹன், ஈவேரா, மலர்மன்னன் இவர்களுக்கிடையே நடப்பது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயம். திண்ணையில் விவாதம் வேறு. இங்கு நாந்தான் நிற்கிறேன் பழமையை எதிர்த்து. எனக்குப்பதில் சொன்னால் போதும். அதை எல்லாரும் வாசித்துப்பார்க்கட்டும்.

    தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இங்கிலீசு மீடியம். அரசு பெருமுயற்சிகள் எடுத்து ஆங்கில மோஹத்தை வீழ்த்திவிடலாமென செயல்படுகின்றது. தமிழ் பாடத்தை எடுத்தவருக்குத்தான் ரேங்க்கில் முதலிடம். தமிழில் படித்தால் ஸ்காலர்ஷிப் என்று ஏகப்பட்ட உந்துக்கள்.

    நேற்றைய செய்தித்தாள்கள் சொல்லின‌: தமிழறிஞர்கள் கூடி (குமரி அனந்தன் தலைமையில்) ஆங்கில மீடியமே இருக்கக்கூடாதென்று கோரிக்கையை அரசுக்கு வைத்திருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட நிலையில், ஒரு தலைமையாசிரியரை அணுகி, உங்கள் பள்ளியில் எத்தனை பேர் தமிழ் மீடியத்தை விரும்பி எடுத்தார்கள் என்று கேளுங்கள்: அவர் சொல்வார்: ஒருவருமே இல்லை.

    இதையே உங்கள் தமிழர்ச்சினையை எத்தனை பேர் கேட்டார்கள் என்ற கேள்விக்கு ஒப்பீடுங்கள்., விடை கிடைக்கும்.

    தமிழர்ச்சினை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டது ஒரு சில பத்தாண்டுகளுக்குமுன்புதானே. வடமொழி அர்ச்சினையென்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கிறதே!

    மேலும், தமிழிலிலா, வடமொழியிலா ? என்ற சர்ச்சை திராவிடவியாதிகளால் மட்டுமே எழுப்பப்பட்டது என்று நினைத்துவிடாதீர்கள்/ அவர்கள் உங்கள் கான்ஷியசை நிறைத்து வருத்துகிறார்கள். எனவே. ஆதிகாலத்திலிருந்தே வருவது. திருமங்கையாழ்வார் முன்னேயும் வந்தது. அதன் தீர்வாக அவர் ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். படித்துப்பாருங்கள். அத்தீர்வே என் தீர்வும் ஆகும் என்னிடம் கேட்கப்பட்டால்.

    ஆக, நீங்களும் நானும் உயிர்வாழும்வரைக்கும் அதற்கப்பாலும் கோயில்களில் வடமொழி அர்ச்சனைதான் கேட்பார்கள். மகிழ்ச்சியடையுங்கள். தமிழ் என்றாலே துர்நாற்றம். இல்லையா? நானும் உங்கள் கட்சிதான். எனக்குத் தமிழ் பிடிக்காது. திண்ணை கட்டாயப்படுத்துகின்றப்டியாலே தமிழில் எழுத வேண்டியாதியிற்று. என்று தணியும் இந்த தமிழ் மோஹம் திண்ணை ஆசிரியர் குழுவுக்கு?

    ரமேஷ். உங்களுக்கு ஒரு செய்தி சொல்கிறேன். நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழில் எழுதப்பட்டதனால் அதற்கு தெய்வத்தின் முன் பாட தகுதியில்லை என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்ப்பார்ப்ப்னர்கள் எதிர்த்தார்கள். இராமனுஜர் காலத்தில்தான் தமிழுக்கு தகுதியுண்டு என்று வந்தது.

    நீங்கள் அன்றிருந்தால், அந்த எதிர்ப்பாளர்களுள் ஒரு சிறப்பான இடத்தைப்பெற்றிருப்பீர்கள்.

  42. Avatar
    Kavya says:

    மலர்மன்னன் தமிழக பிராமணர்களின் தொண்டு என்பதை அடுக்கும்போது இராமனுஜரையும் அவர் ஜாதியாளாக எடுத்துக்கொண்டு எழுதுகிறார். நல்லவேளை இங்கு எழுதும் எவரும் தமிழ்வைணவர்களில்லை (சிரிவைணவர்கள்). இராமானுஜரை ஒரு தமிழ்ப்பார்ப்ப்னராக எடுத்துப்பார்ப்பது, பேசுவது இவை ஒரு மஹா பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது.

    மலர்மன்னன் தன் தவறை உணர்ந்து இனியாவது இவர் வேறு; இராமனுஜர் வேறு என்று உணர்ந்து எழுதவேண்டும். இராமானுஜருக்கு சாதி கிடையாது. அவருக்கு அஃது அவசியமில்லை.

    சாதிகள் அற்பர்களுக்கு. Please do not hurt the followers of Ramanujar by listing him as one of your caste ppl.

    1. Avatar
      punai peyaril says:

      சாதி அற்பர்களுக்கு என்றால் மதம்….? சாதி என்பது பிறந்த குடியின் குறியீடு. ரஹ்மான் என்று சொன்னாலும் பிறப்பால் பிறாமணனே… காசுக்கு ஓட்டு போடுபவனும் தன் சுயலாபத்திற்கு மதம் மாறுபவனும் ஒன்றே… தத்துவங்கள் கற்று மாறினால் வேறு… ராமானுஜர், புத்தர் மாதிரி மகான்களை வேறு மதங்கள் உருவாக்குவதில்லை.. உருவாக்க விடுவதுமில்லை… சிந்தனையை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லாத தத்துவங்கள் வெறும் கீழ்படியச் சொல்லும் எதேச்சிகார கட்டளைகளே… மம- தவறெதுவும் செய்யவில்லை… லா படிப்பதே ஓட்டைகளில் குற்றவாளிகள் தப்பிப்பதற்கே எனும் சிந்தனைபோன்றது காவ்யாவின் படித்தலில் வந்த தகவல் பெட்டகம்…

  43. Avatar
    Bala says:

    இந்துமதப் பக்தி உள்ளவர்கள்தாம் கோயில்களைப் பற்றிப் பேசவேண்டும் என்றால், அதேபோலப் பெரியார் மீது பக்திகொண்டவர்கள் மட்டும்தான் அவரைப் பற்றிக் குறை கூறலாம் என்ற முடிவுக்கு வரலாமா?

    1. Avatar
      paandiyan says:

      பெரியார் மீது பக்திகொண்டவர்கள் மட்டும்தான் — ஆகா உங்கள் பகுத்தறிவு புல்லரிகின்றது போங்கள். நீங்கள்தான் இந்த நூறாண்டின் ஈடு இணையில்லா பகுத்தறிவுவாதி !!!!

  44. Avatar
    punai peyaril says:

    பெரியார் மீது பக்திகொண்டவர்கள் —> பக்தி பெரியார் மீது வந்தால் பின் பகுத்தறிவு என்ன ஆனாது. பெரியார் ஒரு சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக கம்பு சுழட்டினார், இந்து மதத்திற்கு எதிராக என சாயம் பூசினார். பெரியாரின் அடிப் பொடி தொண்டர்கள், வீரமணியின் லபக்கிய எதேச்சிகாரத்தை தட்டிக் கேளுங்கள்… வீரமணி மடத்தில் அவர்தம் பிள்ளைகளுக்கு மட்டுமே பெரியாரின் அனைத்து சொத்துக்களும்…. இந்து மதக்கோவில் விடுங்கள்… பெரியார் சமாதிக்குள் நீங்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியாது… வீரமணி போதகர் உங்களை பெண்டு நிமிர்த்தி விடுவார்….

  45. Avatar
    punai peyaril says:

    இங்கு பெரியாரின் பக்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள், அவரை நன்கு அறிந்த அண்ணா, கருணாநிதி, கண்ணதாசன், அவரை விட்டு ஓஓஓஒடிடிடிடிட்யது ஏன் என்று சொல்லவும்.

  46. Avatar
    A.K.Chandramouli says:

    வேதம்கோபால் அவர்களே உங்கள் ஆதங்கம் அர்த்தமுள்ளது. ஏனெனில் கோவில் என்பது பக்தி பூர் வமான இடம், அதற்கு ஏதுவான பூஜை விதிமுறைகள் இவை இரண்டும் மட்டுமே உங்கள் கண் முன் நிற்கிறது. மற்றவர்களுக்கு மூலவர் முன்னாள் நின்று பூஜை செய்பவர்கள் யார் எனபது மட்டுமே கண் முன் நிற்கிறது எல்லா கோவிகளிலும் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகர் ஆகிவிட்டால் இவர்கள் வாயை மூடிக்கொண்டு வீட்டில் உட்கார்ந்து கொண்டு வேறு கட்டுரைக்குள் புகுந்து ஹிந்து மதத்திற்கு எதிரான விஷத்தைக் கக்க போய்விடுவார்கள். உங்களுக்கு அதற்கும் மேலே கோவிலைப் பற்றிய கவலை இருக்கிறது. என்னே செய் வது.

  47. Avatar
    Kavya says:

    வேதம் கோபால்!

    நன்றாகப்பட்டியல் போட்டிருக்கிறீர்கள். ஆனால் அதற்கும் ஆகம விதிகள் மற்ற ஜாதியினரை தடுக்கின்றன என்பதற்கும் என்ன தொடர்பு? பிளீஸ் சொல்லுங்கள்.

    பகுத்தறிவு வியாதிகள் சென்று அரசிடம் இந்துக்கோயில்களை எடுக்காதே என்று கேட்க வேண்டுமென்றால், நீங்கள் ஏன் இந்து என்று சொல்லிக் கொண்டு வாழ்கிறீர்கள்?

    மசூதிகளையோ, தேவாலயங்களையோ அரசு எடுக்க முயன்றால், அவர்கள் என்ன ‘ஓடி வாருங்கள் பகுத்தறிவு வாதிகளே! எங்களைக்காப்பாற்றுங்கள்!! எங்கள் மசூதிகளைக்காப்பாற்றுங்கள் !! எங்கள் தேவாலயங்களைக்காப்பாற்றுங்கள்!!!” என்றா கூக்குரலிடுவார்கள் ?

    சிறிது சிந்தியுங்கள். அவர்கள் அப்படி செய்யும் நிலையிலில்லை. அவர்களை அவர்களே நன்கு காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் நன்றாக நிற்கிறார்கள்.

    ஆனால் உங்கள் நிலையென்ன? உங்களுக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு ஆகம விதிகளிலும் பகவத் கீதையிலும் வேதங்களிலும் சாட்சிகளைத்தேடி கண்டுபிடித்து எழுதுகிறீர்கள். பேசுகிறீர்கள். பார்ப்பனர்களைத்தவிர மற்றவர்கள் இந்துமதத்தில் இருக்காதபடி பார்த்துக்கொள்கிறீர்கள். மதமா ஜாதியா என்றால், ஜாதியே என்று சொல்கிறீர்கள். ஆக, உங்கள் பானைக்குள் பெருச்சாளி இருக்கிறது. அதை ஓட்ட உங்களுக்கு மனமில்லை. You are breaking the unity in Hindu religion with your caste feeling and attachments.

    உண்மையா பொய்யா ?

  48. Avatar
    smitha says:

    Punaipeyaril,

    U have called Jayendrar a murderer & a womaniser. That is your opinion & not a fact. He never told the people to vote for mu.ka. Maybe your blind loyalty towards Ur thalaivar made U write this.

    Kavya,

    Ur sudden soft corner for Ramanuja is amusing. Malarmannan has clearly mentioned that Ramanuja belonged to the brahmin community & made many reforms. That does not mean that others do not accept him.

    Vedam gopal has clearly listed the fate of the present hindu temples. Ur reply?

    The problem here is U have made EVR a God. That is itself a defeat for EVR. He cleverly divided the hindu society into Bs & NBs.

    Even in temples built & funded by non brahmins, they have appointed a brahmin as an archagar. We have seen many such instances. Can You say why?

    Do you know the present plight of the archakars? Do you know what their earnings are? I am not talking of the Meenakshi Amman & Tirupati temples here, which are a minority. I am talking about the scores of other temples.

    Being an archakar is an absolutely thankless job – no 2 ways about it. He is the object of ridicule & used when wanted by the devotees. Can you deny that?

    1. Avatar
      Kavya says:

      Ramanujar does not need either soft or hard corner from anyone. He is a historical icon in Tamil religious history; or world religious history. We just write about him or talk about whoever we are in awe and wonder. He had a running battle with the old school of Hinduism and risked his life many times.

      This forum is not being read by Srivaishanvaas. If they had, and If they had read the association of caste to their iconic acharya, their hearts will bleed. Ur reply, and many before it, indicate you r person with scant regard or respect for the sect set up by Ramanujar. You cant be stopped. That s a pity.

      I can only pray u r not read by the followers of that acharya.

      Abt archakars who are BPL, it is high time you gave up all and started a movement for their welfare. Empty words wont bring anything. Join a movement and clamor for their deserts and respect from society.

      Temples and their poor state are not the issue of this essay by Pudhiya Madhavai. Vedam Gopal is attempting to divert the issue and want to run away from the core question: Why should only his caste ppl become archakas?

  49. Avatar
    paandiyan says:

    Admin should get some proof from Kavaya before publich any comments based on his hindu relegion or admin should check it properly before publish. one person always giving wrong info without any proof and admin also happily publishing means somethign wrong here. and whenever solid question comes – am going overseas/srivaishanvam next article ete etc and escaping also happening..

  50. Avatar
    knvijayan says:

    காவ்யா அவர்கள் சொல்வதுபோல் அய்யங்கார்கள் பிராமணரல்லாத வைணவர்களையும் ஒத்துகொள்வது இல்லை ஆச்சாரியன் ஸ்ரீ இராமனுசரையும் ஒத்துகொள்வது இல்லை.போறபோக்கில் இந்த சின்னசாதிகளை நம்மிடம் சேர்த்துவிட்டார் என்று மிகவும் சலிப்பு.பிராமணரல்லாத வைணவர்களுக்கு ஆச்சாரியன் நாராயணனை விட பெரிய தெய்வம்.

  51. Avatar
    suvanappiriyan says:

    //சுவனப்பிரியன் சொல்லிக்கொண்டேயிருக்கிறார் இன்னும் இல்லையா!. இப்படிப்பட்ட சங்கடமான காலகட்டத்தில் தாமிருப்பதாக உணர்ந்தபடியாலேயே ஆலயப்பிரவேசம் வெகுவாக சிரமத்தைச்சந்திக்கவில்லை. இஃதென் சொந்த கருத்து.//

    இப்படி எங்களுக்காவது பயந்து கொஞ்சம் அந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதையை கொடுக்குமாறு மலர் மன்னன் ஐயாவைக் கேட்டுக் கொள்கிறேன்.

    1. Avatar
      paandiyan says:

      the same request from hindu friends to your people. female are not machines, respect them in your relegion.. first see your … before commenting on anything..

    2. Avatar
      மலர்மன்னன் says:

      ஸ்ரீ சுவனப்பிரியன், இதை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நான் எவரிடமும் அச்சப்படுவதிலை! ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் இரண்டு மிரட்டலாவது எனக்கு வருகிறது! நான் அதைக்கூடப் பொருட்படுத்துவதில்லை! எங்கும் போய்ப் புகார் செய்வதும் இல்லை!பக்தியுள்ளவனுக்கு பயம் என்பது இல்லை! எனது வாழ்க்கையில் ஒரு பகுதி வனவாசிகளுடனும் தாழ்த்தப் பட்டோர் இருப்பிடங்களிலும்தான் கழிந்தது! நான் எவரிடமும் மரியாதைக் குறைவாக நடந்துகொள்வதும் இல்லை!
      -மலர்மன்னன்

  52. Avatar
    paandiyan says:

    extract from Mr.Malarmannan another article…
    “ஒருவர் சொன்னதைச் சொல்லவில்லை என்பதுபோல் சொல்லிச் செல்வது, சொல்லாததைச் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்கு பதில் சொல்வது, சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் புரிந்துகொண்டதுபோல பாவனை கொண்டு அதற்கேற்ப சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது, சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே திசை மாறிப் போவது இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் திராவிட அரசியல் சம்பிரதாயம். இவையெல்லாம் இந்த அர்ச்சகர் விவகாரங்களிலும் தப்பாமல் இடம் பெற்று வருகின்றன”
    i think this is enough to conclude for this article. after Nanthan katha another comedey article…. enjoy it..

    1. Avatar
      K A V Y A says:

      The last line of my reply to Sumita referring to Vedam Gopal is aptly applicable to your message also. The core qn to face for all of u:

      Why shd only a particular caste ppl become the hereditary legatees of the profession of Archakaas? Face it. cant u? All other talks r clever evasions !

  53. Avatar
    punai peyaril says:

    தமிழில் உரையாட முடிகிறது, படிக்க முடிகிறது என்றே திண்ணைக்கு வருகிறோம்… இது ஆங்கில பத்திரிக்கை என்றால் , எதற்கு இங்கே. இதற்கு தயை செய்து திண்ணை ஆசிரியர் ஒரு நேரிடையான பதிலையும் , தன் நிலைப்பாட்டையும் வாசகர்களுக்கு சொல்ல வேண்டும். ஆங்கில புலவர்களுக்கு பேசாமால் http://www.EnglishThinnai.com ஆரம்பிக்கலாமே…

  54. Avatar
    Bala says:

    [பெரியார் மீது பக்திகொண்டவர்கள் மட்டும்தான் — ஆகா உங்கள் பகுத்தறிவு புல்லரிகின்றது போங்கள். நீங்கள்தான் இந்த நூறாண்டின் ஈடு இணையில்லா பகுத்தறிவுவாதி !!!!]

    [பெரியார் மீது பக்திகொண்டவர்கள் —> பக்தி பெரியார் மீது வந்தால் பின் பகுத்தறிவு என்ன ஆனாது. பெரியார் ஒரு சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக கம்பு சுழட்டினார், இந்து மதத்திற்கு எதிராக என சாயம் பூசினார். பெரியாரின் அடிப் பொடி தொண்டர்கள், வீரமணியின் லபக்கிய எதேச்சிகாரத்தை தட்டிக் கேளுங்கள்… வீரமணி மடத்தில் அவர்தம் பிள்ளைகளுக்கு மட்டுமே பெரியாரின் அனைத்து சொத்துக்களும்…. இந்து மதக்கோவில் விடுங்கள்… பெரியார் சமாதிக்குள் நீங்கள் நினைத்த மாதிரி எதுவும் செய்ய முடியாது… வீரமணி போதகர் உங்களை பெண்டு நிமிர்த்தி விடுவார்….]

    திராவிட அடிப்பொடிகளே பிரச்சினைகளைத் திசை திருப்புபவர்கள் என்று அவ்வப்போது அர்ச்சனை செய்துகொண்டே எவ்வளவு சாமர்த்தியமாகப் பிரச்சினைகளைத் திசை திருப்புகிறார்கள்!

    கேள்விக்குப் பதில் என்ன?

  55. Avatar
    Kavya says:

    //Being an archakar is an absolutely thankless job – no 2 ways about it. He is the object of ridicule & used when wanted by the devotees. Can you deny that?//

    மக்களில் பலர் தம் வாழ்க்கைத்தொழிலைப்பற்றி சிந்திப்பதே இல்லை. அவர்கள் அதை தகப்பனிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள். ஐஸ்கீரிம் விற்பவன், பழம் விற்பவன், காய்கறி விற்பனையாளன், நகர சுத்தித் தொழிலாளி, பொற்கொல்லர், நெசவாளி என்று பலர். சிறுவயதிலேயே அவர்கள் தகப்பன் சூழ்நிலையைத்தாண்டிவராததனால், 25 ஆண்டுகளுக்குப்பின் அவர்களால் வேறு சிந்தனைக்குப்போக முடியாமல் அப்படியே தகப்பன் தொழிலுக்கு வந்துவிடுவார்கள். தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள் நிலையும் இப்படியே.

    அர்ச்சகர் அப்படித்தான் பெரும்பாலும். எவராவது அதை விரும்பி எடுத்தனரா என்பது வியப்பே. ஒரு சிறுகோயில் அர்ச்சகர். அங்கே வருமானம் இல்லை; ஆனால் அவரின் தனயன் இருக்கின்றான். தகப்பனுக்கு வயதானதும், அவன் அததொழிலையே செய்ய, அது வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள தொழில் என்ற உணர்வுக்கிடமில்லை.

    நீங்கள் ஒன்று செய்யலாம். அவர்களை இத்தொழிலைச்செய்யாதீர்கள் என்று எச்சரிக்கலாம். உங்களை பலரும் பரிகாசம் பண்ணுவார்கள். (பணமிருந்தால் பண்ணமாட்டார்கள்!) உங்கள் வாழ்க்கை பரிதாபமாகும் என்று உபதேசம் பண்ணி சிலரையாவது காப்பாற்றலாம்.

    ஆன்மிக நிலையில் நின்று இறைத்தொண்டு செய்கிறார்கள் என்று மட்டும் சொல்லாதீர்கள். அது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும். பெருங்கோயிலும் வருமானத்திற்காக. சிறுகோயில்களில் மூளை தன்னிச்சையாக சிந்திக்கும் திறனை இழந்துவிடுவதால். ஆன்மிகம் என்பது உங்கள் முப்பாட்டன் வீட்டுச்சொத்தன்று. தயை செய்து ஊரை ஏமாற்றாதீர்கள் !

    The children in match box and cracker industries are put to the work right from the early chidhood; not allowed to attend school. When they turn 25, they become morons, and their brains are conditioned to work in preconcluded channels only. In other words, fit for nothing but cutting and pasting. It is a sort of drug addiction; it is almost impossible to wean them away !

    Similarly, in many occupations, including that of archakars. They cant think beyond the daily chores attached to a temple and their mantras are parrotting. I often wonder whether they have any feeling towards the statue they wash daily. Just like I wonder whether the librarian could appreciate the contents of the book I borrow !

    Pl dont jump to the conclusion I am arriving at the dangerous gate of caste based occupations. There, no choice is given to move out. Here, choices r aplenty. But conditioned by circumstances, not by birth.

    ALL OCCUPATIONS SHOULD BE ONE’S OWN CHOICE, if the person is willing.

    Therefore, we have a constable who has now become our Home Minister. A circus trepeze artist’s son and a grocer’s daughter could become the PMs of UK (John Major and Margeret Thatcher).

  56. Avatar
    Ramesh says:

    திருமங்கையாழ்வரின் அந்த பாசுரத்தை கொஞ்சம் அனுப்புங்களேன்.

    நான் சொல்ல வந்தது, ஒரு சாதாரண பக்தர்கூட இப்போது வடமொழி அர்ச்சனைக்கு எதிர்ப்பாக இல்லை. இதை எழுப்புவர்கள் அரசியல் வாதியே. இல்லை மொழி வாதிகளே.

    அப்போது வடமொழி பிரசித்தம். மெல்ல மெல்ல தமிழ் எல்லாயிடங்களுக்கும் போகும். அதற்காக பாடுபட்ட நிறைய பிராமண ஆச்சார்யார்களை தவிர்த்து நீங்கள் பேசச் சொல்வது எப்படி சரியாகும்.

    எந்த மாற்றங்கள் வரும்போதும் எதிர்ப்பவர்கள் இருக்கத்தானே செய்வாரக்ள காவ்யா.. அது எதற்காக எதிர்க்கப்படுகிறது என்பதுதானெ முக்கியம். ராமசாமியின் எதிர்ப்பு பெரும்பாலும் குறுகிய பிராமண் அப்பிராமணத்தில் தான் கூடியிருந்ததே தவிர இந்து மத வளர்ச்சியில் இல்லை. ராமனுஜரை நீஙக்ள் சாதியிலிருந்து எடுத்துவிட்டு பேசுங்கள் என்று சொல்வதே – ஈரோடு கழனி சிந்தனைதான் என்று நான் சொல்லவந்தது..
    ஆடு நனைவதைப்பற்றி ஓநாய்களின் கவலைப்ற்றித் தான் நமது கேள்வி.. இந்துமதத்தின் சீரழிவுகளைப்பற்றி யார் தான் பேசாமல் இருக்கிறார்கள். அது தமிழ் மட்டுமல்ல எல்லா மொழிகளையும் இணைத்து வள்ரவேண்டும் என்பதுதானே ஒரு இந்து அபிமானியின் எண்ணமாகயிருக்க முடியும். அந்த விரிவாக்கம் கத்தியை எடு, வெட்டு, உள்ளே செருகு என்பது போன்ற ஒரு வரி பதிலாக இருக்க முடியாது. அவற்றில் சமூதாய மாற்றங்கள் வந்துவிடப்போவதில்லை என்பது தெரிந்தது தானே.
    பிறப்பின் அடிப்படையில் இருக்கிற இந்துமதம் மாறுவது ஒரு முக்கிய காரணமாயிருந்தாலும், அது மட்டுமே எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வாகிவிடாது. அது ஒரு ஏற்றத்தாழ்வாய் பெரிது படுத்துப்பட்டது என்றே நினைக்கிறேன்.

    கண்டிப்பாய் நீங்கள் சொல்வது போல நானும் எதிர்த்திருக்கலாம். அதுதானெ பொதுப்புத்தி. நானென்ன ராமசாமியின் அடிப்பொடியா.. பகுத்தறிவோடு யோசிப்பதற்கு..

    You should not come and conclude like that.. these is problem with you guys.. just make some statment if some body argues.. make some conclusion and run away..

  57. Avatar
    smitha says:

    Kavya,

    Why are u so confused? First u said brahmins are not alllowing non brahmins to become priests.

    Then u say, மக்களில் பலர் தம் வாழ்க்கைத்தொழிலைப்பற்றி சிந்திப்பதே இல்லை. அவர்கள் அதை தகப்பனிடமிருந்து எடுத்துக்கொள்வார்கள்

    If so, why did U oppose rajaji’s kula kalvi thittam? ok, that is another issue.

    Now, when no one comes forward, you say that sons of archakars have no other choice, so they do it.

    U also say that archakars do pooja as a routine & not with any devotion. Accepted.

    Then, why do u want your non brahmin friends to also become like that?

    Leave them alone.

    The issue is this – U want to criticise hindusim. At any cost. How does one do it?

    If you criticise a non brahmin , then veechu aruval thaan.

    U will not live to see another day.

    next option – critcise the brahjmins bcos U know they will not retaliate.

    Suddenly U found that EVR alone is not enough. So U roped in Ramanujar, Vivekenandar & portrayed as them as “paghutharivadis’ & anti hindu.

    So much confusion.

    But do mot sop denigrating brahmins, ok. We need amusement.

  58. Avatar
    Paramasivam says:

    This is my response to Malarmannan”s comment on Sir Settuoor Sankaran Nair on 4th August.Yes.Sankaran Nair once during his visit to his native village met a local Namboodhiri.Namboothiri,”Eda,Sankara,nee high court judjaame?”Sankaran Nair,”yellaam ungal kadaatchamthaan”While replying like this,Sir Sankaran Nair touched the feet of the Namboothiri,folded his hands and body and stood humbly before him.EVR only chided this lack of self respect.Dr T.M.Nair while quoting the above episode,lamented that he was also treated as a sudra in his native state in spite of the fact that he was a foreign educated medical doctor respected in Chennai and London.He gave this information in his speech in a public meeting held at Spurtank Road on 7th October,1917.The meeting was presided over by Rettamalai Srinivasan.

  59. Avatar
    மலர்மன்னன் says:

    மிக்க நன்றி, ஸ்ரீ பரமசிவம். நீங்கள் விவரங்களைத் தேடிக் கண்டு பிடித்து மறுமொழி அளிக்க வேண்டும் என்பதை உணர்ந்து சிரமம் எடுக்கத் தொடங்கியுள்ளமைக்காக! இந்த விஷயங்களை எல்லாம் நான் கிழக்குப் பதிப்பகத்திற்காக திராவிட அரசியல் பற்றி எழுதியுள்ள நூலில் விவரித்துள்ளேன். அது வெளிவருவதில் தாமதம் ஆகிறது. காரணமாகத்தான்!
    டி.எம். நாயர் சென்னையில் புலி, கேரளத்தில் எலி! நாயர்களைப் பற்றி ஒரு பழைய விஷயம் உங்களுக்குத் தெரிய வேண்டும். இவர்கள் நம்பூதிரிகளுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்கள். அதனால் நீங்கள் குறிப்பிடும் அதே ஸ்பர் டாங்க் சாலைக் கூட்டத்தில் எனது உடம்பிலும் சங்கரன் நாயர் உடம்பிலும் ஓடும் ரத்தம் நாயர் ரத்தம்தான் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சொன்னார்!
    நாயர்கள் தங்களை நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களாகவே கருதிக் கொண்டவர்கள். ஒரு நம்பூதிரி நாயரான சங்கரன் நாயரிடம் எடா சங்கரா என்று கேட்டது போலவே ஒரு நாயர் அடுத்த நிலையில் உள்ள சாதியாரிடம் எடா, கிங்கரா என்று கேட்கவே செய்வார்! சென்னையில் அதட்டல் பேச்சும் டாம்பீகமுமாக மேட்டிமைக் கோலத்துடன் வலம் வந்த டி எம் நாயர் பலகாட்டுக்குத் திரும்பி அங்கு நம்பூதிரி மேலாதிக்க எதிர்ப்பு இயக்கம் ஆரம்பித்திருக்கலாமே! ரொட்டியில் எந்தப் பக்கம் வெண்ணை தடவப் பட்டுள்ளது என்பது அவருக்குத் தெரியும்! நாயர்கள் நம்பூதிரிகளின் நிலக் குத்தகையாளர்களாக இருந்து ஈழவர் உழைப்பைச் சுரண்டிப் பெறும் விளைச்சலை நம்பூதிரிகளுடன் பங்கு போட்டுக் கோண்டவர்கள்! நம்பூதிரி பிராமணர்களைக் கனவிலும் எதிர்க்க மாட்டார்கள்! மேலும் கல்வி கேள்விகளில் முன்னேறி வேலை வாய்ப்புகளில் மற்ற சாதியாரைப் பின்னுக்குத் தள்ளியவர்கள்! இதெல்லாம் எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிலை! இப்போது நிலைமை மாறிவிட்டது! பகவத் கீதையை அனுதினமும் பாராயணம் செய்து, ஹிந்து மஹா சபைத் தலைவராக விளங்கிய செட்டூர் சங்கரன் நாயர் ஹிந்து சமூகத்தில் பிராமணர்-பிராமணர் அல்லாதார் என்ற பிளவு கூடாது என்ற நல்லெண்ணத்துடன் பிராமணர்களைப்போல் முன்னேற முனையுங்கள் என்று சொன்னார். அதற்கும் இப்போது அவரைப் பற்றி டி எம் நாயர் அட்டகசமாகப் பேசியதற்கும் என்ன சம்பந்தம்? அந்த ஸ்பர் டாங்க் சாலை மைதானத்தில் (அப்போது அங்கு ஒரு ஏரியும் மைதானமும் இருந்தன!)நாயரின் துவேஷப் பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட சிலர் அங்கு ஒரு புறம் விளையாடிக் கொண்டிருந்த பிராமணச் சிறுவர்களை அடித்து விரட்டினார்கள்! இது பற்றி ஹிந்துவில் செய்தி வந்தது. அப்போதைய சட்ட மன்றக் கவுன்சிலில் கேள்வியும் கேட்கப்பட்டது! இனி பூசாரி ஆகலாம், அர்ச்சகர் ஆக முடியாது என்கிற கட்டுரைத் தலைப்புடன் தொடர்புள்ள கேள்விக்கே பதில் சொல்வேன். தொடர்பில்லாத இதுபோன்ற மறுமொழிகளுக்கு பதில் சொல்வதில் பொழுதை விரையம் செய்ய மாட்டேன். மேலும் பூசாரியாகவும் ஆக முடியாது என்றும் நான் விளக்கமாக எழுதியாகிவிட்டது!-மலர்மன்னன்

  60. Avatar
    மலர்மன்னன் says:

    //Dr T.M.Nair in the same speech has quoted the prevalent slogam,”nasudraaya madhim dadhya” which meant according to him,”Sudras should not be educated” – ஸ்ரீ பரமசிவம்//

    ப்ரிவெலண்ட் என்றால் நடப்பில் உள்ள என்று அர்த்தம். இது எங்கே எப்போது நடப்பில் இருந்தது? சூத்திரர் என்று நீங்கள் குறிப்பிடும் சாதிகளைச் சேர்ந்த பலர் சங்க காலம் தொட்டுப் பெரும் புலவர்களாக இருந்துள்ளனர்! கசாப்பு தொட்டியில் இறைச்சி வெட்டுபவரிடம் உபதேசம் பெறுமாறு ஒரு பிராமணனுக்கு அறிவுறுத்தப்பட்டது. பகவத் கீதையை அருளிய ஸ்ரீ க்ருஷ்ணன் இடையர்கோன் என அழைக்கப்படுவோனே! இடையர் சாதி உங்கள் கணிப்பில் எந்தப் பிரிவில் வருகிறது?
    -மலர்மன்னன்

  61. Avatar
    Paramasivam says:

    If non brahmins are kept under control for any reasons,Malarmannan would be happy.He does not want to see the injustice in it.He is not remorse about it.Same is his thinking about Archagar issue.When he says that others can not become Archagars because of restrictions imposed by the so called Agama rules,he feels justified.The SC case relating to Archagar issue was raised because of an Yezhava trying to become Archagar in Kerala.Finally yezhavas won the case.I am always writing after reading relevant matter only.Archagar issue was raised by me after painstaking search for information.

  62. Avatar
    sampath kumar says:

    Time will see that people of all castes will become archkas if they want -I doubt whether any one would like to become archaka-It is no longer a respected one .After all we have seen even brhmins as the manager of a shoe mart or as the chef of non vegetarian five star hotels.After all it is money that matters.Why this useless discussion then/

    1. Avatar
      Kavya says:

      ”இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் ஒற்றுமை மெய்யாகவே உருவாக வேண்டுமானால், சாதிமுறை ஆணிவேர், பக்கவேர், சல்லி வேரோடு ஒழிந்தாக வேண்டும்” – ஜீவானந்தம்.

      இதன்படி, மலர்மன்னனின் இக்கட்டுரை ஒரு சல்லிவேர் எனலாம். ஏற்கனவே அவர் திண்ணையில் ‘சாதிகளின் அவசியம்’ என்ற ஆணிவேர்க்கட்டுரையை எழுதி அதன் நீட்சியாக இச்சல்லிவேரைத் தருகிறார்.

      எல்லாவேர்களையும் நாம் அழிக்கவேண்டுமென்கிறார் ஜீவா. எனவே இச்சல்லிவேரைப்
      பூண்டொடு எடுப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. எனவே விவாதம்.

  63. Avatar
    Kavya says:

    மலர்மன்னனின் இக்கட்டுரையென்பது, அன்னாரின் ஆகமகங்களின் படி பார்ப்ப்னரே அர்ச்சகராகலாம் என்ற கட்டுரையையே.

  64. Avatar
    A.K.Chandramouli says:

    ஏங்க சம்பத்குமார், ஆகஸ்ட் மாதம் ஒருவழியாக முடிந்து போன விஷயத்தை அக்டோபர் மாதம் மீண்டும் உயிர் கொடுத்து காவ்யா அவர்களை சாமி ஆட வைத்து விட்டீர்களே. இன்னும் எவ்வளவு நாளைக்கு மலர் மன்னனைப் போட்டு உலுக்கப் போகிறாரோ. காவ்யா அவர்கள் ஜீவா ஜாதி சம்பந்தமான எல்லாவற்றையும் ஒழித்து விட வேண்டும் என்று கூறியதாக தெரிவித்து உள்ளார்கள். தயவு செய்து ஏதேனும் திட்டம் கொடுங்களேன். ஏனென்றால் இன்று சமுதாயத்தில் வ்ருபாடுகள் சாதாரணமாகவே பெருமளவு குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலை தொடர்ந்தாள் நமக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்று அரசியல்வாதிகள் அவ்வப்போது வேறுபாடுகளை தூண்டிவிட்டு குளிர்காய்கின்றனர். மீண்டும் ஆக்க பூர்வமான செயல்முறை எதுவும் கொடுக்காமல் தானும் செயல் திட்டத்தில் இறங்காமல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவற்றை திருப்பி திருப்பி தோண்டி எடுத்து பின்னூட்டத்தில் இடுவதனால் எந்த பயனும் இல்லை.இவர்களுக்கு இதைத் தவிர வேறேதும் செய்யத் தெரியாது. அந்த பணியை செய்கின்றவர்களுடனாவது சேர்ந்து கொள்வது நல்லது.

  65. Avatar
    Kavya says:

    //ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் சொன்னவற்றை திருப்பி திருப்பி தோண்டி எடுத்து பின்னூட்டத்தில் இடுவதனால் //

    தேவர் குருபூஜை அக்டோபர் 30ம் தேதி 2012 ல். மதுரை நகரமெங்கும் சுவரொட்டிகள். நான்கு மாவட்ட ஆட்சியர்கள் கலந்தாலோசிக்கிறார்கள். நடப்பது இன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பன்று.

    எத்தனை கொலைகள் விழப்போகிறதோ? எவருக்கு எங்கு வெட்டுப்படுகிறதோ? எத்தனைப் பொதுச்சொத்துக்கள் அழிக்கப்படுகிறதோ?

    என்று நான் கலவரப்பட்டுக்கொண்டு என் பயணத்தைத் தள்ளி விடலாமா என நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

    பூனை தலையை மண்ணில் புதைத்துக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என நினைக்குமாம்.

    அல்லது,

    ப்ரவுனிங் போல சந்திரமவுளி சொல்லிக்கொள்ளலாம்:

    God is in His Heaven and
    All is right with the world.

  66. Avatar
    A.K.Chandramouli says:

    குருபூஜை விழாவில் அரசியல் புகுந்ததனால்தான் இத்தனை களேபரங்களும். தேவர் ஜாதி மக்களின் ஓட்டை கவரவே எல்லா கட்சி தலைவர்களும் போட்டி போடுவதனால் இவ்வளவு கூத்தும். இவர்கள் விழாவிற்கு போகவில்லைஎன்றால் தேவர் ஜாதி மக்கள் ஓட்டளிக்காமல் போய்விடுவார்களோ என்ற அச்சம். அரசியல்வாதிகள் எல்லாம் மக்களை கட்சி வாரியாக பிரித்துவைத்து விட்டார்கள். அம்பேத்கார் பெயரைச் சொல்லி எத்தனை கட்சிகள் ஹரிஜன மக்களை எவ்வளவு கூறுகளாகப் பிரித்து வைத்திருக்கின்றன. எல்லாவற்றையும் தாண்டி மக்களை ஒன்றாக இணைக்க ஏதேனும் செய்ய வேண்டுமே. அதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போமே என்ற ஆத்தங்கம்தான்.ஒரு அமைப்பு சாதிவேறுபாடு பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் வேறுபாடின்றி வாழபழக்குகிரார்கள். அதுபோல ஏதேனும் திட்டம் இட்டு இதை மாற்ற முயற்ச்சிக்க வேறுபாடுகள் ஒழிய வேறுபாடுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பதால் மாற்றம் வராது.

  67. Avatar
    Natarajan says:

    காவ்யா அவர்களே. தேவரய்யாவும் பிராம்மணரும் சேர்ந்து தான் மீனாட்சி கோவினுள் தாழ்த்தப்பட்ட மக்களாக நினைக்கப்பட்டவர்களை கோவினுள் செல்ல வழிவகுத்தனர். மற்றும் அர்ச்சகர்களை போன்றே குடுமி வைத்து, வேட்டி துண்டு அனிந்து,ஆகமங்களும் பூஜை மந்திரங்களும் விதிகளும் கற்று, கற்பக்ரகத்துக்குறிய அந்நேரத்திலாவது ஆசாரத்தோடு நடந்தும், இதற்கெல்லாவற்றிக்கும் தயாராகி மற்றும் தட்டில் விழும் சொற்ப காசை வைத்து பிழைக்க இருக்கும் யாவரும் கண்டிப்பாக அர்ச்சகர் ஆகலாம்.. குடுமி வைத்துக் கொண்டு தெருவில் சகிப்புத் தன்மையுடன் வருபவர் வரட்டும்.

Leave a Reply to Paramasivam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *