மகாத்மா காந்தியின் மரணம்

This entry is part 23 of 32 in the series 3 பிப்ரவரி 2013
 cover-image-gandhi
[1869-1948]
சி. ஜெயபாரதன், கனடா

அறப் போர் புரிய மனிதர்
ஆதர வில்லை யெனின்
தனியே நடந்து செல் ! நீ
தனியே நடந்து செல் !

இரவீந்திரநாத் தாகூர்


பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

மகாத்மா காந்தி

Gandhi -1

முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக் காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் மடிந்தார்!

உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!’ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

Gandhi's last journey -2

அகால மரணத்திற்கு அபூர்வ இரங்கல் அறிவிப்புகள்!

மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், “அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது” என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் “நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார்” என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், “கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார்” என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், “ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார்” என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், “இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி” என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது ! “நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம்” என்று ஷா கூறினார். ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

Nehru and Gandhi

நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். “அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ?” என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! “காந்தி சாகட்டும்” என்று கூச்சலிட்டார்கள்!

டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், “உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ?” என்று கேட்டால், “ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

“முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தா லென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும்.” இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

Tagore and Gandhi

காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள்’ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது’ , என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே’ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும்’ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

Gandhi fasting and Indira

மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன்’ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர்’, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். அது நம் குருட்டு நம்பிக்கை இல்லை!’

அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்!’

1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்று வோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன்.’ மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மாபெரும் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது!’ என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

ஜாதி மதங்களைப் பார்ப்போம்! சகிப்போம் மதிப்போம்!

பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular]’ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே’ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம்’ [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை’, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்!’ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமை யிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்!’ என்பது காந்தியின் வாக்கு!

இந்தியர் பலருக்குத் தேசப்பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப்பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடையுடை பாவனைகள் மீதுள்ள சகிப்புத்தன்மை, மதிப்பு, நம்பிக்கை ஆகியவற்றின் மீது இந்தியர் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மாநிலச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்துள்ள, இந்தச் சகிப்பற்ற தன்மைகளே !

‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு’ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டீஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலைக் குறிக்கோளை அடைய வில்லையா ?

Gandhi's last journey

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

பிரிட்டீஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டுபட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டீஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

இப்போது அடிப்படைவாத இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். அதனால் நாட்டில் மீண்டும் மீண்டும் எழும் கொலை பாதக எதிர்ப்புகளுக்கும் இந்துக்கள் ஆளாகி வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! இராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப்பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலைநாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை’ என்று முழக்கினாராம்!

அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால்’ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார்’ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? மொம்பையில் பிரிட்டீஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல்’ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது’ என்று சீறினார். இராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள், தீயெரிப்புகள் !

மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர்’ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மையான அடிப்படை இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை ! இனியும் ஓயப் போவதில்லை!

கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் படுவதைத் தடுத்து நிறுத்திக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, தீயெரிப்புகளை இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அநியாயம், அறிவீனம்!

Gandhi Memorial

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா’ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி இரவீந்திரநாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார்’, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். ரஷ்ய மேதை லியோ டால்ஸ்டாய், விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காந்தியின் ஆயுதமற்ற விடுதலைப் போராட்டத்தைப் பாராட்டியுள்ளார். ஆஃப்ரிக்க அமெரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்’ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய்’ மாந்தருக்கு வழிகாட்டியாய் மறைமுகமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது ! பாழ்பட்டுப் பரிதபிக்கும் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி!

***************************

தகவல்:

1. Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

2. Gandhi His Life & Message for the World By: Louis Fischer (1954)

3. The Life of Mahatma Gandhi By : Louis Fischer (1950/1983)

4. http://graysparks.blogspot.com/2011/04/blog-post_18.html

jayabarat@tnt21.com

+++++++++++++++++
Mohandas Gandhi Timeline

From the Website : http://www.sparknotes.com/biography/gandhi/timeline.html

https://mail.google.com/mail/?hl=en&shva=1#all/13465cd01bf5bf45

Picture from Gandhi Movie with Ben Kingley as Gandhi [1982]
+++++++++++++++++

Mohandas Gandhi
Timeline

October 2, 1869: Birth of Mohandas Karamchand Gandhi

1883: Gandhi and Kasturbai are married.

1885: Death of Karamchand Gandhi, Gandhi’s father

September 4, 1888: Gandhi leaves for England to study law.

June 10, 1891: Gandhi passes the bar exam in England.

1891-1893: Gandhi fails as a lawyer in India.

April 1893: Gandhi accepts commission to spend a year in South Africa advising on a lawsuit.

Spring 1894: Gandhi elects to stay on South Africa, and founds the Natal Indian Congress.

Spring 1896: Gandhi returns to India to collect his wife and children.

December 1896: Gandhi returns to South Africa with his family.

October 1899: Outbreak of Boer War (1899-1901) in South Africa. Gandhi organizes an ambulance corps for the British.

1901: Gandhi returns to India to attend the Indian National Congress. G.K. Gokhale introduces him to nationalist leaders.

1901-1906: Gandhi struggles toward Brahmacharya, or celibacy, finally ending his sexual activity in 1906.

1904: Nationalists found the magazine the Indian Opinion, and soon print it on Gandhi’s farm, the “Phoenix Settlement.”

July 31, 1907: The Boer Republic Transvaal, now under the control of the British, attempts to register all Indians as members; Gandhi and others refuse to register. Their resistance efforts mark the first use of nonviolent non-cooperation by the Indian minority in South Africa, soon calledsatyagraha, or “soul-force.”

January 11, 1908: Gandhi is arrested and sentenced to two months in prison.

October 10, 1908: Gandhi is arrested again, spends a month in jail.

1909: Gandhi travels to London, pushing for rights of South African Indians. The Transvaal registration law is repealed.

November 13, 1913: Indians in Natal and Transvaal, under Gandhi’s leadership, march peacefully in protest of a racist poll tax and marriage laws. The marches continue through the winter.

June 30, 1914: Gandhi and Smuts, the Prime Minister of the Transvaal, reach an agreement, ending the protests.

July 18, 1914: Gandhi sails to England.

August 1914: Gandhi arrives in England, just at the outbreak of World War I(1914-1918).

January 9, 1915: Gandhi returns home to India, and receives a hero’s welcome.

May 25, 1915: Gandhi and his followers found Satyagraha ashram, the religiously-oriented communal farm where Gandhi, his family, and his followers will live.

April 6, 1919: Nationalists hold a hartal, or day of fasting and prayer, in protest of the Rowlatt Act, which drastically curtails civil liberties in India.

April 13, 1919: Amritsar Massacre; Under General Dyer, British troops slaughter Indian protesters.

August 1, 1920: Gandhi calls for a period of non-cooperation across India.

March 10, 1922: Gandhi is arrested for sedition.

March 1922-January 1924: Gandhi remains in prison.

1924-1928: Gandhi avoids politics, focusing his writings on the improvement of India.

1925: Despite his long absence from politics, Gandhi becomes President of the Indian National Congress.

February-August 1928: Residents in the district of Bardoli protest high rents using methods of non-cooperation inspired by Gandhi.

January 26, 1930: Gandhi publishes the Declaration of Independence of India.

March 2, 1931: Gandhi warns the Viceroy of his intention to break the Salt Laws.

March 12-April 6, 1931: Gandhi leads his Salt March to the sea.

May 5, 1931: Gandhi is arrested for violating the Salt Laws; non-cooperation movements break out across India.

January 1931: British government yields to protests, releases all prisoners, invites a Congress representative to Britain for a Round Table Conference (the Congress asks Gandhi to be this representative).

Autumn 1931: Gandhi participates in the Round Table Conference in Britain.

December 28, 1931: Gandhi returns to India.

January 4, 1932: Gandhi is arrested for sedition, and held without a trial.

September 20-25, 1932: Gandhi fasts in prison to protest the treatment of untouchables.

1934-38: Gandhi avoids politics, travels in rural India.

1935: Government of India Act passes British Parliament and is implemented in India; it is the first movement toward independence.

September 1939: World War II begins, lasting until 1945.

March 22, 1942: Sir Stafford Cripps arrives in India, presenting to the Indian National Congress a proposal for Dominion status (autonomy within the British Commonwealth) after the War.

August 8, 1942: The Indian National Congress rejects the Cripps proposal, and declares it will grant its support for the British war effort only in return for independence.

August 1942: Congress leaders are arrested; Gandhi is imprisoned in the Aga Khan’s palace.

February 10 to March 2, 1943: Gandhi fasts while imprisoned, to protest British rule.

February 22, 1944: Death of Kasturbai

May 6, 1944: Gandhi is released from the Aga Khan’s palace.

Summer 1944: Gandhi visits Muhammed Ali Jinnah in Bombay, but is unable to work out an agreement that will keep India whole.

May 16, 1946: British Cabinet Mission publishes proposal for an Indian state, without partition; Jinnah and the Muslim League reject the proposal.

March 1947: Lord Mountbatten arrives in India and hammers out agreement for independence and partition.

August 15, 1947: Indian independence becomes official, as does the partition into two countries, India and Pakistan.

August-December 1948: India dissolves into chaos and killings, as Hindus and Muslims flee for the borders of India and Pakistan.

January 30, 1948: Gandhi is assassinated by Nathuram Vinayuk Godse, a Hindu nationalist.

+++++++++++++

S. Jayabarathan (Revised January 30, 2013)

Series Navigationரணங்கள்அதிர்ஷ்டம்!!
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

36 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    அன்புள்ள ஸ்ரீ ஜயபாரதன்,
    ’உனது கொள்கையை ஏற்று உடன்வர எவரும் முன்வரவில்லை எனில் தனியே செல்’ என்பது தாகூர் பாடலின் முதல் வரி. இதைத்தான் நானும் நீண்ட காலமாகச் செய்து கொண்டிருக்கிறேன்!
    நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும். அது ஒரு விபத்து. ஒடிஷாவில் வனவாசி மாவட்டங்களில் சாலை ஓரம் புறம் போக்கு நிலங்களில் ஜப வீடு என்று கையால் எழுதிபோட்ட மத மாற்ற ஒற்றைச் செங்கல் ஓர் அறைக் குடிலகள்தான் எரிக்கப்பட்டன. சுவாமி லட்சுமணானந்தர் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் மக்கள் அவற்றுக்குத் தீயிட்டனர். அவற்றைச் சர்ச்சுகள் என்று பெரிதுபடுத்திவிட்டார்கள்! எல்லாம் நான் நேரில் சென்று சேகரித்த தகவல்கள்! இவை தொடர்பாக நான் எடுத்த வீடியோ குறுந்தகடுகள் ஸ்ரீமதி பத்மினி ரவிசந்திரனிடம் (சிங்கப்பூர்) தூங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்தான் என்னிடம் ரூ ஒரு லட்சம் கொடுத்து ஒடிஸ்ஸாக்கு அனுப்பினார். பல நாட்கள் அங்கு தங்கி சோறு தண்ணீர் இல்லாமல் அலைந்து ஹிந்து விரோத பொய்ப் பிரசாரங்களை ஆதாரப் பூர்வமாக முறியடிக்க வீடியோ எடுத்து வந்தேன். ஆனால் பத்மினி அவற்றையெல்லாம் வாங்கி வைத்துக்கொண்டு என்ன காரணத்தாலோ ஊறப் போட்டுவிட்டார்! வீடியோ குறுந்தகடுகளை என்னிடம் கொடுத்திருந்தாலாவது தக்க விதமாகப் பயன்படுத்தியிருப்பேன்!

    அயோத்தியில் ராமஜன்மஸ்தான் என்று அழைக்கப்படும் இடத்தில் ஹிந்துக்களை அவமதிக்க வேண்டும் என்பதற்காகவே பாபர் பெயரால் கட்டப்பட்ட வெற்றி நினைவு மண்டபம்தான் அகற்றப்பட்டது, மசூதி அல்ல. மேலும், நீண்ட நெடுங் காலம் ஹிந்துக்கள் விடுத்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் புறக்கணித்ததாலேயே ஹிந்துக்கள் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என முடிவெடுத்து பாப்ரி நினைவுச் சின்னம் என்கிற தேசிய அவமானச் சின்னத்தை அகற்றினர். நீல் சிலையை அகற்றியதுபோல. பாப்ரி நினைவுச் சின்னம் திட்டமிட்டு அகற்றப்பட்டதும் அல்ல. அப்படித் திட்டம் ஏதும் இருந்திருந்தால் ஒரே நேரத்தில் மதுரா, காசி ஆகிய இடங்களீலும் ஹிந்து ஆலய வளாகங்களுக்குள்ளேயே கட்டப்பட்ட மசூதிகளூம் இடிக்கப்பட்டிருக்கும். லட்சக் கணக்கில் கூடியவர்கள் மூன்று பிரிவுகளாக அந்தப் பணீக்குப் பிரித்து அனுப்பப்பட்டிருப்பார்கள். மூன்றுமே உத்தரப் பிரதேசத்தில் உள்ளவைதாம்.
    -மலர்மன்னன்

  2. Avatar
    paandiyan says:

    //காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம்’ என்று கொதித்தான் கோட்சே!//
    இதற்க்கு எல்லாம் காந்திதான, இதில் கோட்ச மீது என்ன தவறு இருக்கிறது . கோட்ச என்ன தனக்காகவ இல்லை தன குடும்பதிகாகவ சுயநலமாக பண்ணினார்???? அது சரி இங்கிலாந்த் ப்ரொப்லெம் மற்றும் நேதாஜி யின் மிரட்டல் தான் சுதந்திரம் கொடுக்க மூல காரணம் , மண்டியிட வேண்டாம் என்று காந்தியை இறுக்க பற்றினார்கள் வெள்ளையர்கள், தவரான வரலாறு இன்றுவரை கொடி கட்டி பறக்கின்றது . இந்த கட்டுரை மனம் போன போக்கில் எழுதப்பட்ட ஒன்று

  3. Avatar
    punaipeyaril says:

    மம, 200 வருடங்களில் அவர்களால் மதம் மாற்றம் முடிந்து மனதளவில் வலிமையில்லாதவரை மட்டுமே… மதம் மாறியதால் அவர்கள் ஒன்றும் லண்டன் மகாராஜாவாகிவிட வில்லை… வேர்களை மறப்பவர்கள் பங்களாவாசிகளின் வீட்டுத் தோட்டத்தில் தொங்குவதில் பெருமை கொள்ள மட்டுமே முடியும்… 600வருட இஸ்லாமிய எதேச்சிகாரம், 200 வருட கிறிஸ்துவ பாவிகளே கோஷம் தாண்டி காலச்சக்கரத்தில் அச்சாணியாய் இந்துமதம்… சுழன்று கொண்டேயிருக்கிறது…

  4. Avatar
    paandiyan says:

    கட்டுரையாளர் கடைசியில் என்ன சொல்ல வருகின்றார் என்றால் பாரத தேசம் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி! — என்பதை — காந்தி பேரை கொண்டு இங்கு கொள்ளை அடித்து கோடிகளை குவித்து வெள்ளையர தன்பேரை பயன்படுத்தி இந்த நாட்டை சூறை ஆடுவதை கண்டு இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகிலிருந்து கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், மகாத்மா காந்தி என்று சொல்லாமல் சொல்ல வருகின்றார் .

  5. Avatar
    punaipeyaril says:

    கிறிஸ்துவ ஆலயங்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ– > ஜெயபாரதன் கிறிஸ்துவ போதகரானது எப்போது..? இந்த தேசத்தில் கிறிஸ்துவ பாதிரிகளால் மானபங்கப்படுத்தப்பட்ட சிறார்கள் பற்றி அய்யா எழுதலாம். திண்டுக்கல்காரர்.. அங்கு செயிண்ட் மேரிஸ் மேல்நிலைப் பள்ளி டார்மட்டரி கூத்தை எழுதலாமே…

  6. Avatar
    ஷாலி says:

    அய்யா! அறிவியலாளர் திரு.ஜெயபாரதன் அவர்களே! உங்களுக்கு இது தேவையா?இதுவரை வானத்திற்கு மேல் நடப்பதை கட்டுரையாக எழுதியவரை ஒரு பிரச்சினையும் இல்லை.எல்லோரும் ஆஹா ஓகோ! என்றார்கள்.உங்கள் முதல் பார்வை காந்தி பூமியில் பட்டதும் கிடைத்துவிட்டது கிருஸ்தவ பிரச்சாரகர் பட்டம்.பட்டம் கொடுத்தவர்கள் பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சு உடையவர்கள்! இதுதான் இந்தியா. காந்தி கொலை கேஸில் மாட்டிய வீர சாவர்க்கருக்கு நம் நாடு கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? பாராளுமன்றத்தில் படத்திறப்பு. புகழாஞ்சலி.இருந்த சிறை நினைவுச்சின்னம்.இதுதான் காந்திக்கு செய்யக்கூடிய அஞ்சலி என்று அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.நீங்கள்தான் இன்னும் ஆய்வுச் சாலையில் இருக்கிறீர்கள்.அவர்கள் குஜராத் சபர்மதி ஆசிரமத்திலேயே அஹிம்சையை வைத்து பூட்டிவிட்டு,ஆயுதச் சாலையில் பயணிக்கிறார்கள்.

    கிறிஸ்தவ பாதிரியார் எரிக்கப்படவில்லை. அவர் வைக்கோல் போர் பத்திக்கிச்சு.ஆதார சிடி பத்மினி ஊறப்போட்டுட்டங்கா! இது எப்படி இருக்கு! “ அண்ணே! வேட்டி அவுந்துருச்சுன்னே! இல்லையென்றால் வூடு கட்டி அடிச்சிருப்பேன்!” பெரியவுங்க சொன்ன அது பெருமாள் சொன்னமாதிரி……வேறேன்னத்த சொல்ல..அய்யா! ஜெயபாரதன் அவர்களே! “நெஞ்சில் ஒரு களங்கமில்லை..சொல்லில் ஒரு பொய்யுமில்லை…வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியும்மில்லை…என்றும் தோல்வியுமில்லை….” என்ற பழைய பாடலை பாடிக்கொண்டு மீண்டும் களங்கமில்லாத வானத்தையே பார்க்க ஆரம்பியுங்கள்.
    உங்களைப்பார்த்து நான் பாடும் பாட்டு…”அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே!…..பனித் துளியைபோல குணம் படைத்த…….”

  7. Avatar
    punaipeyaril says:

    …”அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே!…..பனித் துளியைபோல குணம் படைத்த…….” –> என்ன குணம்..? தொப்புள்ள பம்பரம் விடுறதா….? :)

  8. Avatar
    paandiyan says:

    மத மாற்றம் சையும் போத கிறிஸ்தவ பாதிரியார் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு ஸ்ரியில் அடைத்து இருந்தால் ஏன் அந்த சம்பவம் நடந்து இறுக்க போகின்றது . வீர சாவர்க்கருக்கு புகழாஞ்சலி பண்ணாமல் கிறிஸ்து போடோவ வைது பூஜை பண்ண வேண்டும் ஹிந்து நாட்டில் . supreme கோர்ட் தீர்ப்புக்கு பின்பும் ஜெயபாரதான் போறவர்கள் மனம் போன போக்கில் RSS விமர்சனம் செய்தால் என்ன பண்ணுவது. கிறிஸ்துவ பாசத்திற்கு — அதற்காக — நான் கோர்ட் தீர்ப்பை மதிக்கமாட்டான் என் இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ணி என் கூடதிர்ற்கு வலு சேர்ப்பன் என்னும் பொது ஹிந்து நாங்கள் ஜகர்த்தியாக இருக்க வேண்டும் அல்லவா

  9. Avatar
    paandiyan says:

    “ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல…’ என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.

    அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், “தேவையில்லை’ என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

    காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.

    ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.
    “காங்கிரஸ் தலைமை,நேதாஜியின் இறுதி காலம் குறித்து முழுமையான விசாரணை நடத்தாமல் விட்டுவிட்டதே அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் போனதற்க்கு காரணம்” என்று முதல்முறையாக பகிரங்கமாக குற்றம் சாட்டி இருக்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

    நாடு விடுதலை அடைந்ததும் காங்கிரசை கலைத்துவிடுங்கள் என்று சொன்னார் காந்தி. ஆனால்,காந்தியடிகளின் பெயரை அடித்தளமாக வைத்து ஆட்சி பிடித்துவிட்டது காங்கிரஸ் கட்சி. அதன்பொருட்டே காந்தி தாத்தா, நேரு மாமா என்று பெருமையுடன் பாடப்புத்தங்களை திட்டமிட்டு தயாரித்த காங்கிரஸ், நேதாஜியையும்,அவரது வரலாற்றையும் இருட்டிப்பு செய்துவிட்டது.

    1. Avatar
      Needhidevan says:

      But Bose never anticipated and realized the nature of Japanese militarism which is worse than the English.after US entered the war ,the out come is a fore gone conclusion. Netaji was a victim of his times as he was unable to seek help of Stalin an ally of Britain in WWII. The real reason is the emergence of US as super power post WWII and the pressure of US on Britain to get out of India , much to the chagrin of Churchill.Britain became doubtful of its hold on Indian army after naval cadets rebellion in Bombay

  10. Avatar
    Indian says:

    “காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.”
    Gandhi was behind this plot. His candidate lost his pants to Netha ji in the elections. So, he went on sulking as usual. He always did that when he did not have his ways.He then implored all his cronies not to cooperate with Neta Ji. Neta Ji did not have a choice and resigned.
    Godse had more patriotism in the tip of his little finger than Gandhi in his entire body.Read Godse’s final speech in the court and weep. We have been reading history written by CON gress.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      உங்கள் புத்திரரில் யார் உத்தமன் என்று ஒருவர் கிராமத்தான் ஒருவனைக் கேட்டாராம். இது அவன் பதில் : ” அதோ வீட்டுக் கூரைமேல் தீ வைக்கிரானே அவன்தான் என் உத்தம புத்திரன்,” என்றானாம். ஆமாம் கோட்ஸே, வீர சாவர்க்கர் இவர்கள்தான் இந்தியாவின் உத்தம புத்திரர்.

      சி. ஜெயபாரதன்.

      1. Avatar
        paandiyan says:

        YES. any doubt? more than you they are — கோட்ஸே, வீர சாவர்க்கர் –surely. they scarafice and you are enjoing the freedom and crticise nowadays.

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          நண்பரே,

          என் தந்தையார் காந்தியின் சுதந்திரப் போரில் முழுப் பங்கெடுத்து நாடு விடுதலை பெறச் சிறைக்குச் சென்றவர். பெருமையாய் அப்படிச் சொல்லிக் கொள்ள முடியுமா நீங்கள் ?

          கோட்சே சட்டத்தை மீறித் தனக்குப் பிடிக்காத காந்திஜியைச் சுட்டுத் தள்ளியது நியாயம், அது ஓர் உத்தமன் வேலை என்று விடுதலை நாட்டில் சொல்லிப் பெருமைப் படுகிறீர்.
          சி. ஜெயபாரதன்

          1. Avatar
            paandiaan says:

            பெருமையாய் அப்படிச் சொல்லிக் கொள்ள முடியுமா — என என்னை பார்த்து நீங்கள் கேட்பத வீண் வேலை. நானா இங்கு வீர சாவர்க்கர்கரை இகழ்ந்து பேசினன் உங்களை போல ? என் இன பெண்கள் கொத்து கொத்தாக கற்பழிக்கும் போது பொங்கி எழுந்த வீரன் அவன் . அந்த வீரத்தை என்றும் மதிப்பவன் நான் . அப்படி கற்பழிக்க பட்டவர்களை, நீங்கள் மதிக்கும் சட்டம் , உங்கள் உத்தமர் எல்லாம் கூடி என்ன பண்ணினீர்கள் ? வேடிக்கை தான பார்த்தீர்கள். அப்படி பார்த்தால் உங்கள் உத்தமர் காங்கிரஸ் தேர்த்தலில் விளையடி சாதித்தார அதற்கு என்ன பதில் ? சட்ட விரோதாம் என்றால் அது மட்டும் என்ன மாதரி ?

  11. Avatar
    Needhidevan says:

    Indian Muslims must concentrate for the uplift of health, education, living conditions of poor Muslims who are used as vote banks by selfish leaders who for their individual benefit highlight non issues ,not pertaining to India. Be it Kilafat, BinLadan, Taliban, a third rate films etc. when Gandhi, Anna, Kamaraj died their socalled followers in second tier leadership heaved a sigh go relief. Only SardarPatel Never recovered from the shock.

  12. Avatar
    ஷாலி says:

    //என்ன குணம்..? தொப்புள்ள பம்பரம் விடுறதா….? :)// புனல்பெரியவர் தமாஷ் பண்றாரு! நான் சொல்லவந்தது, பனித் துளியைபோல குணம் படைத்த தென்னவனே! –நல்ல மனிதர்களை தெய்வத்துள் வைக்கப்படும் என்ற தென்னவன்-தென்னாடுடைய சிவனே போற்றி…..மற்றபடி தொப்புள் சமாச்சாரம் விளையாட்டுக்கிடையாது.படைப்பின் ஆரம்பமே அங்குதான்.ஸ்ரீ மகா விஷ்ணு முதலில் தன் நாபிக்கமலத்தில் பிரம்மனை படைத்தான்.பிரம்மன் சிருஷ்டிக்க தொடங்கினான். சங்கும் சக்கரமும் சுழற்றும் பரமன் தொப்புள் கோடி தாமரையில், பிரம்மன் அழகைப் படைத்தான். நம்ம விஜய காந்தும் பம்பரத்தை சுற்றிக்கொண்டு அந்த அழகை ரசித்தார். நாபிக்கமலத்தில் தேவி காமாட்சியும் இருக்கிறாள்.பம்பரம் சுற்றியவரும் சங்கு சக்கர சாமியின் பக்தரே! கடந்தவாரம் தம்பதி சமேதராக திருப்பதி சென்று சேவித்து வந்தார். நாபிக்கமலத்தில் பம்பரம் விட்டதால் பெருமாள் அவரை கைவிடவில்லை. இன்று எதிர்க்கட்சி தலைவர்.நாளைய முதல்வர்.
    அதுசரி,தெரியாத்தனமாக ஜெயபாரதன் ஹிந்து குளத்தில் கல்லைப்போட்டுட்டார்.சனாதன காவலர்கள் அலை எழுந்து விட்டது.ம ம,நீங்க,பாண்டியன் வந்தாச்சு ஒரு ஆள் பாக்கி இருக்கே ஸ்மிதா அம்மாவைக் காணோமே! நானும் உங்க ரூட்லேயே தாமஷா முடிக்கிறேன்.வாழ்க்கையில் டென்ஷன் கூடாதுங்க!.

    ம ம. மாயண்ணே! வந்துட்டாக! மொக்கச்சாமி வந்துட்டாக! உறவு மொறை வந்துட்டாக! வாம்மா….மின்னல்!

  13. Avatar
    ஷாலி says:

     paandiyan says:
    February 5, 2013 at 1:17 pm
    //“ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல…’ // திரு.பாண்டியன் மிகத்தெளிவாக சொல்லிவிட்டார்.இதைத்தான் சாமி நானும் சொல்கிறேன்.ஒண்ட வந்த வெள்ளைக்கார பயலிடம் அந்தமான் சிறையில் கெஞ்சி கதறி “என்னை எப்படியாவது வெளியே விட்டுருங்கோ மாட்சிமைமிக்க மகாராணிக்கு இனி நான் விசுவாசமாக நடந்துகொள்கிறேன்.” என்று சரணாகதி கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்த வீராதி வீரர்தான் சவார்க்கார். இப்படியாப்பட்ட மாமனுசனுக்கு பாராளுமன்ற படத்திறப்பு கெவ்ரவம் அவசியம் தான்.புரட்சி கம்யுனிஸ்ட்களின் சுவரெழுத்து வேறு ஞாபகத்திற்கு வருது. “பாராளுமன்றம் ஒரு பன்றித் தொழுவம்”……அப்ப சரிதேன்! மற்றபடி, கோர்ட் தீர்ப்பை மதிக்கிற விளையாட்டெல்லாம் எங்ககிட்ட வேணாம்.ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியில் ஜன்மஸ்தானில் பிறந்தார் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அதில் எந்தக் கோர்ட்டும் தலையிட முடியாது. அணிலும் மண் சுமந்து அகமகிழ்ந்த ஸ்ரீ இராமபிரான் கட்டிய பாலம் இராம பாலம் என்பது ஹிந்துக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கை இராம பாலத்தை உடைத்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற எந்தக் கோர்ட்டும் உத்தரவு போடமுடியாது. அகண்ட இந்துஸ்தானத்திலே 64 ஹிந்து தேசங்களாக நாங்க ஆண்டு, ஆண்டாண்டு காலமாக எங்களுக்குள் சண்டையிட்டு மக்கள் மண்டையை உடைத்தோம். இந்த மொகலாயரும்,வெள்ளைக்காரனும் ஒரே நாடாக்கி நாங்க வேட்டையாடுவதை தடுத்துவிட்டார்கள்.வேதம் மறுக்கப்பட்ட சூத்திரனையும்,பஞ்சமனையும்,வேதக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள். என்ன கொடுமை இது…இதைக்கேட்க நாதியில்லை. ஆனால் நீங்க இருக்கீங்க அண்ணே! நல்லா எழுதுங்க! நாக்கை புடுங்கிறமாதிரி எழுதுங்க! எவனும் திருந்துரானா பார்ப்போம்.

    1. Avatar
      paandiyan says:

      //அந்தமான் சிறையில் கெஞ்சி கதறி “என்னை எப்படியாவது வெளியே விட்டுருங்கோ //
      ஒரு ஒருவரும் தங்களின் நிலைக்கு தகுந்தாவரு இந்தியா விடுதலைக்கு போராடினார்கள், அவர்களை மதிக்கத்தான் கற்றுகொள்ளவில்லை, இகழவேண்டாம். நீங்கள் கேலி பண்ணுவதால் உங்களுக்குத்தான் நஷ்டம் ஒழிய போரடினவரின் செயலுக்கு அல்ல . அவரு என்ன அவரு வாரிசுக்கு 2G license வங்கி கொடுக்கவா வெளியில் வந்தார், இல்லை வெளிநாட்டு airport ல் வழக்கை தாமதபடுடுங்கள் என்று லெட்டெர் கொடுக்க வந்தாரா? இல்லை அவர் வாரிசு 3 ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி 300 கோடி குவித்து வைத்து இருகின்றார்களா? – இந்தியா tune சையப்ட்ட வரலாறு உங்களை எல்லாம் எப்படி மாற்றி இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சாட்சி . யாரு கண்ட சோனியாவை பாராட்டி நேதாஜி யை இகலந்து கூட ஒரு புதிய வராலாறு வரலாம் “அவர்களிடம்” இருந்து

  14. Avatar
    suvanappiriyan says:

    //நீங்கள் நினைப்பதுபோல் கிறிஸ்தவ பாதிரி எவரும் எரித்துக் கொல்லப்படவில்லை. நீங்கள் குறிப்பிடுவது ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்து வனவாசிகளிடையே மத மாற்றம் செய்வதில் ஈடுபட்டவர் தமது மகனுடன் வண்டிக்குள் உறங்குகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம். அவரது பிரசார வேனில் வெப்பத்தைத் தணிப்பதற்காகக் கூரையிலும் வேனுக்குள் தரையிலும் வைக்கோல் பரப்பப்பட்டிருக்கும்.//

    இவ்வளவு அப்பட்டமாக நடந்த ஒரு கொலையை மலர் மன்னன் என்ற ஒருவரால்தான் விபத்து என்று சமாளித்து எழுத முடியும். இதையே மாற்றி எழுதுபவர்கள் 2000 வருடங்களுக்கு முன்பு எந்த மாதிரியான சரித்திர புரட்டுகளை அரங்கேற்றியிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாழ்க பாரதம். வெல்க மலர்மன்னனின் சமாளிப்புகள்.:-(

    1. Avatar
      paandiyan says:

      suvanappiriyan என்ன சொல்ல வருகின்றாரர் அந்த கிறிஸ்தவ பாதிரி இன்னொரு காந்தி , பெரிய புனிதர் என்று இங்கு certificate கொடுகின்றார் – இதுதான் அவர்களின் மதசார்பற்ற இந்தியா என்பதை புரிந்துகொள்ளுங்கள்!

  15. Avatar
    க்ருஷ்ணகுமார் says:

    அன்பார்ந்த ஸ்ரீமான் ஜெயபாரதன்,

    விக்ஞானம் பற்றிய தங்கள் வ்யாசங்கள் என்னை மிகவும் பெருமிதம் அடையச் செய்வன. கணித மேதை ஸ்ரீ ராமானுஜம் அவர்கள் பற்றி தாங்கள் எழுதிய மிக அருமையான வ்யாசம் மூன்று தசாப்தங்களுக்கு முந்தி நான் வாசித்த கணிதத்தை நினைவு கூறும் படிக்கு சுவையான அனுபவம் தரும் வ்யாசம். நான் படி எடுத்து வைத்துக் கொண்டது.

    ஆனால், மகாத்மா காந்தியின் மரணம் என்ற வ்யாசம் சரித்ரம் என்ற போர்வையில் உண்மைகளும் பொய்களும் கலந்து படைக்கப்பட்ட ஒரு புனைவு; மத ஒற்றுமை மத நல்லிணக்கம் என்ற போர்வையில் அதீதமான மதவெறுப்பையும் மதக்காழ்ப்பையும் கக்கும் வ்யாசம் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். முதலில் எனது கருத்தை திண்ணையில் தங்களது வ்யாசத்தின் கீழ் உத்தரமாகப் பதிவு செய்ய நினைத்தேன். ஆனால் என் கருத்துக்களின் தொகுப்பு மிக விரிவாகக இருந்ததால் தனி வ்யாசமாக சமர்ப்பிக்க உத்தேசித்துள்ளேன்.

    ஓரிரு நாட்களில் மின்னஞ்சலில் திண்ணை தளத்தினருக்கு அனுப்பப் படும்.

  16. Avatar
    R Venkatachalam says:

    மலர் மன்னன் பற்றி ஒரு செய்தி கேள்விப்பட்டேன். அது உண்மையா? யாராவது கூறுவீர்கள?

  17. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    எழுத்தாளர் மலர் மன்னன் இறைவனடி சேர்ந்தார்
    Anna Kannan

    Feb 9 (1 day ago)

    எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மலர் மன்னன் அவர்கள், பிப்ரவரி 9 அன்று அதிகாலை 5 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து கவனித்து வந்த, எழுத்தாளர் தி.ஜ.ர. அவர்களின் பெயர்த்தி சத்தியபாமா, இதனைத் தொலைபேசியில் தெரிவித்தார். தன் மறைவுச் செய்தியை இறுதியாகச் சிலருக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் என் எண்ணும் இருந்தது.

    2003 முதலாக, அவர் தாடி வைப்பதற்கும் முன்பாகவே மலர் மன்னனுடன் எனக்கு நட்பு உண்டு. நான் அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது, அந்த இதழின் பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா, மலர்மன்னனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு மலர்மன்னன், நான் தயாரித்த பதிப்பகச் சிறப்பிதழில் உ.வே.சா. தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார். அவரின் ‘மலர்மன்னன் கதைகள்’ என்ற சிறுகதைத் தொகுப்பினை அமுதசுரபி வெளியிட, அதற்கு நான் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அது, அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (அவருக்கு முன்னதாகவே அவரின் சகோதரர் சாம்ராட் என்ற பெயரில் எழுதும் அசோகனை நான் அறிவேன். என் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அநேக முறைகள், அமுதசுரபிக்காக எழுதியிருக்கிறார். மலர்மன்னனின் சகோதரி விஜயா சங்கரநாராயணனையும் நான் நன்கு அறிவேன். அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.)

    மலர் மன்னன், 26.5.2006 அன்று நட்பு நிமித்தம் என்னை டைடல் பூங்காவில் சந்தித்தார். பல தலைப்புகளில் சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட மலர் மன்னனைத் தமிழ் சிஃபியில் தொடர்ந்து எழுத அழைத்தேன். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மலர் மன்னனை அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறும் கேட்டுக்கொண்டேன். இசைந்தார். அதன் பிறகு அவர், பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரை அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டைடல் பூங்காவிற்கும் அழைத்து வந்தார். தமிழ் சிஃபியில் தமது பத்தியைத் தொடங்கினார். ஏராளமான கட்டுரைகள் மூலமாக, தமிழ் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சினார். வரலாறு, சம கால அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள், உலக நிகழ்வுகள்… என ஒவ்வொரு கட்டுரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தார்.

    மலர் மன்னனின் இயற்பெயர், சிவராம கிருஷ்ண அரவிந்தன். இவர், 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர். ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற நாவல் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இது, கி.பி.1800இன் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திச் சிறையிலேயே உயிர் துறந்த டார்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது; ‘கண் விழித்த கானகம்’ என்ற தலைப்பில் அவரது சொந்தப் பதிப்பகத்தின் வாயிலாக மறுபதிப்பானது.

    ‘சிந்தனையாளர் நியெட்ஸே’ என்ற நூலைப் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ளது. ‘தி.மு.க. உருவானது ஏன்?’, ‘ஆரிய சமாஜம்’, ‘திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்’ ஆகிய வரலாற்று நூல்களைக் கிழக்குப் பதிப்பகம் வெளி யிட்டுள்ளது. ‘வந்தே மாதரம் – எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம்’ என்ற நூலைத் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அடுத்து, கிலாபத் இயக்கம் தொடர்பான நூலை எழுதி வருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

    மலர் மன்னன், அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். திராவிட அரசியலின் நேரடி சாட்சிகளுள் ஒருவர். அதே நேரம், இந்துத்துவ நிலைப்பாடு கொண்டவர். திண்ணை உள்பட பல தளங்களிலும் மலர் மன்னன் எழுதிய கட்டுரைகள், பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. மின்னிதழ்கள் மட்டுமின்றி, அச்சிதழ்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார்.

    மலர் மன்னனின் மறைவு, தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய, எங்கள் பிரார்த்தனைகள்.

    நன்றி: வல்லமை (http://www.vallamai.com/literature/articles/31798/)

  18. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சி. ஜெயபாரதன்
    Feb 8 (2 days ago)

    to vallamai, Seethaalakshmi, thinnai, editor

    மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி. இந்திய வரலாறு தெரிந்த உயர்ந்த தமிழ் ஞான முனிவர் ஒருவர் காலமானது தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத ஓர் இழப்பு.

    சி. ஜெயபாரதன்

  19. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    9 February, 2013, 19:00
    மலர்மன்னன் திண்ணை வலையிதழ் மூலம் எனக்குச் சில ஆண்டுகள் பழக்கமானவர். என்னுடைய விஞ்ஞானக் கட்டுரைகளுக்கு வரவேற்பும் பெரிது ஊக்கமும் அளித்தவர். அவை நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்று பதிவு செய்ய எனக்கு முன்னுதவ வந்தவர். அவர் திண்ணையில் பிப்ரவரி 4 ஆம் தேதி எழுதிய இறுதிப் பின்னோட்டம் எனது சமீபத்திய கட்டுரை “மகாத்மா காந்தியின் மரணம்” பற்றியது.

    [http://puthu.thinnai.com/?p=18201#comment-13424].

    மலர்மன்னன் தமிழர் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை வலை/நூல் இதழ்களில் ஓரளவு எழுதியவர். திண்ணை, தமிழ் ஹிந்து வலைகளில் நாங்கள் இருவரும் அரசியல், கடவுள் பற்றித் தர்க்கம் பலமுறைச் செய்துள்ளோம். அவரது அகால மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியா பெரிய இழப்பு.
    சி. ஜெயபாரதன்.

  20. Avatar
    ஷாலி says:

    பெரியவர் மலர் மன்னனின் மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கண்ணியமான பண்பாளர்.மாற்றுக்கருத்திற்க்கும் மதிப்பளித்து பதில் அளிக்கும் பெருந்தகை.இறுதிவரை தான் கொண்ட கொள்கையை உறுதியாக பற்றிப்பிடித்தவர். அறிஞர் அண்ணாவிடம் அன்பு கொண்ட அண்ணல்.தாம் அறிந்த கல்விச்செல்வத்தை மக்களுக்கு பயன்தர பங்கிட்டவர்.மலரோடு பின்னுட்டத்தில் கலந்துகொண்ட இந்த நாறும் மணம் பெற்றது ஒரு பாக்கியம்.மலர் மன்னன் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றும் மணம் பரப்பும்.

  21. Avatar
    punaipeyaril says:

    மம வின மறைவிற்கு அஞ்சலி. கண்ணன் அவரை கொள்வான்.

  22. Avatar
    suvanappiriyan says:

    திரு மலர் மன்னனின் மறைவு கேட்டு அதிர்ச்சியடைந்தேன். பேரான்டி என்று உரிமையோடு வாக்கு வாதங்களில் கலந்து கொண்டு பதில் சொன்ன அந்த பெரியவரை இனி இணையத்தில் காண முடியாது. முக நூலில் நண்பருக்கான அழைப்பை சில நாள் முன்பு அனுப்பியிருந்தார். நானும் அந்த அழைப்பை ஏற்று நெருங்கிய நண்பர்கள் குழாமில் இணைத்திருந்தேன்.

    அவ்வளவுதான் உலக வாழ்க்கை.

    அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  23. Avatar
    suvanappiriyan says:

    //Sp, where you have been? You have not come back on questions posed by me on abuse and murder of 5 year old girl in your beloved Saudi Arabia.//

    அந்த செய்தி எந்த அளவு புரட்டு என்பதை அங்கு நான் கொடுத்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.

  24. Avatar
    paandiaan says:

    தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள்.இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஆம், டோண்டு ராகவன், மலர்மன்னன் இருவரது மறைவும் மாபெரும் இழப்பாகும். ஒரு பத்திரிகையாளராக, கால் என்னும் இலக்கிய இதழின் ஆசிரியராக, இலக்கியவாதியாக, பேச்சாளராக, தொண்டராக, இந்த்துத்துவ அரசியலின் களம் இறங்கி செயல் பட்ட ஒரு துணிவான வீரராக,ஒரு அமைப்பாளராக பன்முகங்களிலும் தொடர்ந்து செயல் பட்டு தன் கடமைகளை முழுமையாகச் செயல் படுத்தி விட்டு விடை பெற்றிருக்கிறார் மலர் மன்னன் அவர்கள். தமிழ் இணையம் வந்த பிறகு அதன் மூலமாக தன் கருத்துக்களை பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம் கொண்டு சென்ற ஒரு சிறந்த சிந்தனையாளர் மலர்மன்னன். ஆனந்த விகடனில் பரிசு பெற்ற சிறுகதைகளும், நாவல்களும் எழுதியுள்ளார் மலர்மன்னன். அவரது ஆரிய சமாஜம், தி.மு.க. உருவாகியது ஏன்? நாயகன் பாரதி, வந்தே மாதரம் ஆகிய நூல்கள் முக்கியமானவை, திராவிட இயக்கங்களின் பொய் முகங்களைக் கிழித்தவர் மலர்மன்னன். எந்த நிலையிலும் கண்ணியத்தையும், பண்பையும் மரியாதையையும் தவற விடாத ஒரு பண்பாளர். அன்னாருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள். அவரது மகளுக்கும் குடும்பத்தாருக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  25. Avatar
    Rama says:

    I know Shri Malarmannan on a personnel level, albeit through private correspondence. I am proud to have been associated and contributed in a small way in his en devours against conversion of Hindus. I have only great respect and regard for this noble soul. Now I can console myself that at last he is now in union with his Istha Deivam,Shri Krishna. My heart felt condolences to his family.

  26. Avatar
    Srinivasan says:

    பெரியவர் மலர்மன்னன் அவர்களின் மறைவு குறித்த செய்திகளின் பின்னூட்டங்களை கவனிக்கும்போது ஒன்று தோன்றுகிறது . அவர், தனது தெளிந்த சிந்தனையாலும் – துல்லிய அனுமானத்தாலும் தமது அந்தராத்மாவின் வெளிப்பாடாக அவ்வப்போது சந்தேகம் எழா வண்ணம் தொகுத்து உண்மை சம்பவங்களின் சாட்சியாக வெளிப்படுத்திய காந்தி குறித்த கருத்துக்கள் – கட்டுரைகள் – கூரிய விமர்சனங்கள் இங்கே திண்ணையிலே பல ரூபங்களில் வெளி வந்தது பலருக்கும் நினைவிருக்கும் . அதன் தொடர்பாகவே, ஒரு பொருத்தம் கருதி , ” மகாத்மா காந்தியின் மரணம் ” என்கிற கட்டுரையின் தொடர்பாக மலர்மன்னன் மரணம் குறித்த அனுதாபங்கள் பதிவாவதை, அவரும் ரசித்து அனுபவித்திருப்பார் .

    இது எதேச்சையாக நடக்கிறதா என்பது எனக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது .

    ” உன் கருத்துக்களை நீ பின்னூட்டமாக இடாமல் ஒழுங்காகத் தொகுத்து பலருக்கும் புரியும் வண்ணம், செறிவான கட்டுரையாகவே அமைத்தாகவேண்டும் ” என்று ஒரு பிதாமஹருக்கு உரிய கம்பீரத்திலே அவர் ஒரு சக கருத்துப் பதிவாளருக்கு, வேறு ஒரு தளத்திலே கோரிக்கையாக ஒரு கட்டளையை பதிவு செய்திருந்தார். மகாத்மா காந்தியைப் பற்றிய ஒரு கருத்துக் கோர்வையை பலப்பல வருஷங்களாக மலர்மன்னன் வெளியிட்ட அந்த பாங்கினை தொகுத்து யாராவது – ஒரு ஆக்கபூர்வமான விவாதப் புரிதலுக்கு என ஏற்பாடு செய்ய வேண்டும் . முயற்ச்சிகள் தவறலாம் முயற்சிக்கத் தவறலாமா, என்று நாம் யோசிக்க வேண்டும்.

    ” உனது கொள்கையை ஏற்று உடன்வர எவரும் முன்வரவில்லை எனில் தனியே செல் ” – என்பதை நிஜமாகவே செய்து பார்த்தவர் மலர்மன்னன், என்பதை நினைத்துப் பார்க்கிறேன் .

    திரு கிருஷ்ணகுமார் சமர்ப்பிக்கும் வ்யாசத்தைப் படிக்க ஆவலாக இருக்கிறேன் .

    V. Srinivasan.

    ” Let Noble & Positive Thoughts come to us from all directions.” – ” Good ideas, when they’re presented by passionate individuals, have the power to transform the world and these powerful ideas, from some of the Greatest Thinkers, need to be shared. “

  27. Avatar
    சான்றோன் says:

    மிக மிக வருந்தத்தக்க அதிர்ச்சியான செய்தி…..சமீப காலமாக அவருடன் தொலைபேசி தொடர்பில் இருந்தேன்……

    உன்னதமான மனிதர்…..சிறந்த தேசபக்தர்……அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…….

  28. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அற்றைத் திங்கள் அன்றைய திண்ணையில் காந்திஜிக்கு
    இறுதிப் பின்னூட்டம் தந்தார், எழுதி வந்தார்.
    இற்றைத் திங்கள் இவ்வாரத் திண்ணையில் மன்னனுக்கு
    இரங்கல் மொழிகள், மலரும் இல்லையே.

    சி. ஜெயபாரதன்

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *