“மதத்தை விட்டு வெளியேறு அல்லது நாட்டை விட்டு வெளியேறு “

author
18
0 minutes, 1 second Read
This entry is part 11 of 26 in the series 26 ஏப்ரல் 2015

rinkal-kumari1மகேஷ் குமார்

நாங்கள் முஸ்லீம்கள் அல்ல, நாங்கள் இந்துக்கள் அல்ல. முற்றும் முதலாக நாங்கள் சிந்திகள். சிந்தி இந்துக்களை சிந்து மாநிலத்திலிருந்து துரத்த சதி நடக்கிறது. நாங்கள் அந்த தீய சதிவேலைகளை வெற்றிபெற விடமாட்டோம்”. பாகிஸ்தான் ஹைதராபாத் பிரஸ் கிளப்பின் முன்னே ஒரு அரசியல் சேவகர் முழக்கமிட்டுகொண்டிருந்தார்.

பெரும்பாலான தேசியவாதிகளைப் போல, அவரும் தன்னுடைய குரல் பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகெங்கும் கேட்கும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

சோகமான உண்மை என்னவென்றால், இந்த போராட்டங்களுக்கெல்லாம் எந்த வித பயனும் இல்லை. இந்த செய்திகளெல்லாம் பயனற்றவை. இந்து சமூகத்தின் உறுதியான எதிர்ப்பை எல்லாம் மீறி, நேற்றைக்கு இருந்ததை போலவே இன்றும் நிலைமை இருக்கிறது என்பதுதான் உண்மை. இந்து சிறுமிகள் கடந்த காலத்தில் கட்டாய மதமாற்றம் செய்விக்கப்பட்டார்கள். இன்றும் செய்விக்கப்படுகிறார்கள். கடைசி இந்து சிந்து மாநிலத்தில் இருக்கும் வரைக்கும் இந்த சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுகொண்டே இருப்பார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.

சிந்து மாநிலத்தில் ஒரு சிந்து இந்து பெண் கடத்தப்பட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டாலோ, ஏராளமான சிந்தி இந்துக்கள், பயத்தின் காரணமாகவும், கையறு நிலை காரணமாகவும் இந்தியாவுக்கு ஓடி விட விரும்புகிறார்கள்.

தாஹார்க்கியை சேர்ந்த அஞ்சலி பாய் மேக்வார் கடத்டஹ்ப்பட்டபோதும், மதியாரி மாவட்டத்தை சேர்ந்த காஜல் பீல் கடத்தப்பட்டபோதும், நவாப்ஷா மாவட்டத்தை சேர்ந்த கரின் கடத்தப்பட்டபோதும், (இவர்களது பெயர்கள் பெரும்பான்மை மக்களுக்கு தெரியக்கூட தெரியாது) என்னுடைய அருமை நண்பன் அஜித் குமார் உட்பட ஏராளமான சிந்தி இந்துக்கள் இந்தியாவுக்கு சென்று விடுவதை தீவிரமாக சிந்திக்கிறார்கள் என்பது உண்மை.

சில நாட்களுக்கு முன்னால் அஜித் என்னிடம்,”தப்பிக்க ஒரே வழியாக இந்தியாவுக்கு சென்று விட முடிவு செய்திருக்கிறோம்” என்றான்.

“எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இங்கே இல்லை. எங்களது உடமைகள் அபகரிக்கப்படுகின்றன. அரசாங்கத்தில் இருப்பவர்கள் எங்கள் குரலை கேட்பதில்லை. எங்களது கோவில்கள் பட்டப்பகலில் தாக்கப்படுகின்றன. யாருமே எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எங்கள் பெண் குழந்தைகள் கடத்தப்படுகின்றன, கட்டாய மதமாற்றம் செய்விக்கப்படுகிறார்கள். நீதி கிடைக்கும் என்ற வெற்று வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்கு கிடைக்கிறது”

“கடந்த 65 வருடங்களில் எதுவுமே நடக்கவில்லை. இனி வரும் காலத்திலும் எந்த விதமான முன்னேற்றமும் இருக்கும் என்று தோன்றவில்லை. இன்னும் நிலைமை மோசமடைந்துதான் போயிருக்கிறது”

எல்லா அரசியல்கட்சிகளும் 12 வயது அஞ்சலி கடத்தப்பட்டதையும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்விக்கப்பட்டதையும் கண்டித்தன. ஆனால், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ இது பற்றி ஒரு அறிக்கை விட்டதோடு சரி, அந்த கட்சியின் மற்ற தலைவர்கள் இதனை பற்றி கண்டுக்கொள்ளக்கூட இல்லை. இந்த நிலைமையை மாற்றமுடியாது என்று அறிந்தது போல வாயை மூடிகொண்டு சென்றுவிட்டார்கள். இந்த நாட்டில் மத சகிப்புத்தன்மை அற்ற நிலையில் பாதிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள் மட்டும் அல்ல. கிறிஸ்துவர்கள், அஹ்மதிகள், ஷியாக்கள் என்ற அனைவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

குர்ஷீத் ஷா என்பவர் முஹாஜிர் என்ற வார்த்தையை உபயோகித்ததற்காக மத நம்பிக்கையை புண்படுத்திவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். பகத் சிங் என்ற இந்த பாகிஸ்தான் மண்ணில் பிறந்தவரது பெயரை ஒரு சாலைக்கு வைப்பதற்கு பெரும் பிரச்னை வருகிறது. மும்தாஜ் குவாதிரி என்ற கொலைகாரன் (தஸீர் என்ற பஞ்சாப் கவர்னரை கொன்றவன்) ரோஜா மலர்களால் வரவேற்கப்படுகிறான். இந்த சூழ்நிலையில், தங்களது மதத்தை விட்டுவிட்டு அச்சுருத்தும்படி நிற்கும் மதத்தில் சேர்வது வித்தியாசமாகவா இருக்கும்?

“இன்னும் சில மாதங்களில் எங்கள் தாய்நாட்டை விட்டு நாங்கள் சென்று விடுவோம்” என்று அஜீத் சொன்னான். “இவர்கள் இந்த நிலைக்கு எங்களை கொண்டுவந்துவிட்டார்கள். எங்களது மத நம்பிக்கையை விட வேண்டும் அல்லது நாட்டை விட்டு ஓடவேண்டும் என்று இவர்கள் கோருகிறார்கள்”

இந்த சூழ்நிலையில் என்ன செய்யமுடியும்? கட்டாய மதமாற்றம் என்ற செய்தி வரும் ஒவ்வொரு நாளும், பயத்தையும் கையறு நிலையையுமே அதிகரிக்க செய்யும். இந்த தாய்நாட்டை விட்டு ஓட வேண்டிய உணர்வையே தூண்டும். நல்ல வசதி படைத்தவர்கள் கூட வேறு வழியின்றி இந்தியாவுக்கு செல்வதை யோசித்துகொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் சிந்துமாநிலத்திலிருந்து சுமார் 5000 இந்துக்கள் இந்தியாவுக்கு சென்றுவிடுகிறார்கள் என்று தேசிய பாராளுமன்றத்தில் ரமேஷ் முகார் வங்க்வாணி தெரிவித்தார்.

சிந்து மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 5 சதவீதமே இந்துக்கள் இருக்கிறார்கள். அவரது கணக்கின் படி, சுமார் 22.22 சதவீத இந்துக்கள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவுக்கு ஓடுகிறார்கள்.

இன்னும் எவ்வளவு வருடங்களில் சிந்தி இந்துக்கள் முழுவதும் காலி செய்யப்படுவார்கள்?

சென்றவருடம் சிந்து மாநில அரசாங்கம் பாலிய விவாகத்தை தடை செய்து சட்டமியற்றியது.

ஆனால், அஞ்சலியை கட்டாய மதமாற்றம் செய்தவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையையாவது இந்த அரசாங்கம் எடுத்ததா? இது வெறுமனே, குழந்தையாக இருந்த அஞ்சலியை கட்டாயபப்டுத்தி ஒருவருக்கு திருமணம் செய்துவைத்தது மட்டும்தான் பிரச்னையா?

அஞ்சலி மக்வாரின் அப்பா குந்தன் லால் அவளது பள்ளிக்கூட சான்றிதழ்களையும், பிறப்பு சான்றிதழையும் கோர்ட்டின் முன் அளித்தார். அதில் அவளது வயது 12 என்று தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது.

முன்பு நடந்ததை போலவே இந்த விஷயமும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகும் என்று நான் நினைக்கிறேன். மியான் மித்து (ரிங்கிள் குமாரி, அஞ்சலி மக்வார் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்) போன்றவர்களை பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர்களாக வைத்திருக்கும் கட்சியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?

சென்ற வருடம் ரிங்கிள் குமாரியை மதமாற்றம் செய்த அதே கும்பல்தான் இதிலும் ஈடுபட்டிருக்கிறது. போலீஸிலிருந்து, கோர்ட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிகள் வரைக்கும் எல்லோரையும் சென்ற மதமாற்ற வழக்கில் சமாளித்துவிட முடியும் என்றால், இதிலும் அதேதானே? கோர்ட்டுக்குள்ளேயே ஆயுதங்களை காட்டி நீதிபதியை சென்ற வழக்கில் மிரட்டியதை காட்டிய வீடியோவே இணையத்தில் காணக்கிடைக்கிறது. சென்றமுறை குற்றமிழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு எம்பியும் ஒரு எம் எல் ஏவும் பேசவே இல்லை. இப்போதும் பேசவில்லை.

ஆகவே, அஜித் குமார் போன்றவர்கள் நிலைமை சீரடையும் என்ற எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டு பேசுவது சரியானதுதான். இன்னும் இந்து திருமண சட்டத்தை, இந்து திருமணத்தை அங்கீகரிக்கும் ஒரு சட்டத்தை பாகிஸ்தான் அரசு இயற்றவில்லை. அப்படியிருக்கும்போது அது அவர்களது உடைமைகளை எப்படி பாதுகாக்கும்? ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்படும்போது எப்படி அதனை தடுக்கும். இதுதான் இந்த அரசின் கேவலமான நிலைமை.

“சிந்து மாநிலத்தை விட்டு செல்வது கஷ்டமானதுதான். இதுதான் எங்கள் தாய்நாடு. இதுதான் எங்களை பிறப்பித்தது. ஆனால் எங்களது மதத்தை விட்டும் வரமாட்டோம். ஆகவே வெளியேறுவதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி”

குட்பை அஜித்

 

மூல இணைப்பு

 

லார்க்கானாவில் மார்ச் 15 2014இல் எரிக்கப்படும் இந்து கோவில்

54609d1920504

 

ஆயிரம் இந்து/கிறிஸ்துவ சிறுமிகள் முஸ்லீம்களுக்கு கட்டாய திருமணம்

இந்து திருமண சட்டம் இன்னும் இயற்றப்படாததை குறித்த டான் பத்திரிக்கை தலையங்கம்

அஞ்சலி வழக்கை பற்றிய டைலி டைம்ஸ் இதழ் தலையங்கம்

 

 

Series Navigationஇரு குறுங்கதைகள்சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை
author

Similar Posts

18 Comments

  1. Avatar
    BS says:

    //இந்து திருமண சட்டத்தை, இந்து திருமணத்தை அங்கீகரிக்கும் ஒரு சட்டத்தை பாகிஸ்தான் அரசு இயற்றவில்லை. அப்படியிருக்கும்போது அது அவர்களது உடைமைகளை எப்படி பாதுகாக்கும்? ஒரு பெண் கட்டாய மதமாற்றம் செய்யப்படும்போது எப்படி அதனை தடுக்கும். இதுதான் இந்த அரசின் கேவலமான நிலைமை.
    “சிந்து மாநிலத்தை விட்டு செல்வது கஷ்டமானதுதான். இதுதான் எங்கள் தாய்நாடு. இதுதான் எங்களை பிறப்பித்தது. ஆனால் எங்களது மதத்தை விட்டும் வரமாட்டோம். ஆகவே வெளியேறுவதுதான் எங்களுக்கு இருக்கும் ஒரே வழி”//

    அதவானியும் ஜேத்மலானியும் சிந்திகள். இந்தியாவைத்தாய்நாடாக்கிக்கொண்டோர். பாகிஸ்தான்-இந்தியா பிரிந்த போது இந்தியாவைத் தாய்நாடாக்கிக்கொண்டோர் எவரும் ஏழைகளாகவில்லை. செழிப்பாக இருக்கிறது சிந்தி இனம். பாகிஸதான் சிந்திக்களை மோதி அரசு இந்தியாவில் குடியேற்ற வேண்டும். பிரச்சினை தீர்ந்தது.

    1. Avatar
      paandiyan says:

      இதை போல karnadaka, srilanga, கேரளா தமிழனும் உதை வாங்காமல் தமிழ்நாட்டுக்கு போற வழியை தேட வேண்டும் . பிரச்சினை தீர்ந்தது

  2. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //பாகிஸதான் சிந்திக்களை மோதி அரசு இந்தியாவில் குடியேற்ற வேண்டும். பிரச்சினை தீர்ந்தது.//

    பேஷ்! எப்படிப்பட்ட அருமையான கருத்து!

    இப்படிப்பட்ட கருத்தை இந்திய் தலித்துகளின் நிலைமையைப்பற்றியோ, இந்திய முஸ்லிம்கள்/கிறித்தவர்கள் உரிமை கோரும்போதோ நீங்கள் சொல்வீர்களா, அல்லது சொல்லிவடத்தான் முடியுமா?

    1. Avatar
      BS says:

      முசுலீம்கள் தனிநாடு கேட்டனர். பிரிட்டிஷ் அரசு இந்தியாவைப் பிரித்து முசுலீம்களுக்கு பாகிஸ்தான் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் என்று கொடுத்தது. பாகிஸ்தான் பின்னர் தன்னை இசுலாமிய குடியரசாக்கிக் கொண்டது. பிரிவினையின்போது முசுலீம்கள் பாகிஸ்தானுக்குப் போகவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படவில்லை; காரணம், இந்தியா தன்னை மதம்சாரா நாடாகப் பிரகடனப்படுத்திக்கொண்டதால். ஆனால், பாகிஸ்தான் தன்னை மதச்சார்புள்ள நாடாக அறிவித்தபின்னரும் அங்கே இந்துக்கள் இருக்கக்காரணம்? தங்கள் மூதாதையர் நாடு என்பதாலா? அப்படியென்றால், மதம் சார்புள்ள நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது மேலாதிக்க மதம் திணிக்கப்பட்டு இவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் எப்படி குறைசொல்லமுடியும்?

      தற்போது, இந்துத்வ இயக்கங்கள் தலையெடுத்துவிட்டன‌. ஆர் எஸ் எஸ் தலைவர் பகத், 600 ஆண்டுகளுக்குப்பின், இந்துக்கள் ஆட்சி பீடத்தில் ஏறியிருக்கின்றனர். இத்தருணத்தைப்பயன்படுத்தி இந்து ராஷ்ட்ரத்தை உருவாக்கலாமென அபிலாசையைத் தெரிவித்திருக்கிறார். அப்படியே அது வந்துவிட்டால், இசுலாமியருக்கு சொல்லவேண்டியது: அதே: //

      //அப்படியென்றால், மதம் சார்புள்ள நாட்டில் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது மேலாதிக்க மதம் திணிக்கப்பட்டு இவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் எப்படி குறைசொல்லமுடியும்?//

      மோதி அரசு சிந்திக்களை மட்டுமல்ல, எஞ்சியிருக்கும் அனைத்து இந்துக்களையும் பாகிஸ்தானிலிருந்து வரச்சொல்லி இந்தியாவில் குடியேற்றவேண்டும். எப்படி காசுமீரத்துப்பிராமணர்களுக்கு பிறமாநிலங்களில் குடியேற்றினார்களோ அப்படி. ஏன் கூடாது? பிரச்சினை தீர்ந்ததுவிடுமன்றோ? எங்கு மரியாதையும் சம உரிமைகளும் பறிக்கப்படுகின்றனவோ அங்கு வாழும் இன்னல்களை அனுபவித்தே தீரவேண்டும். Beggars cannot be choosers என்பது ஆங்கிலப்பழமொழி.

      ஒரே வழி: அங்கிருந்து கிளம்பிவிடுவது.

  3. Avatar
    ஷாலி says:

    //பேஷ்! எப்படிப்பட்ட அருமையான கருத்து!//

    பாகிஸ்தான் சிந்தியைப்பற்றி கவலைப்படுபவர்கள். நம்ம இந்தியாவுக்குள்ளேயே உள்ள காஷ்மீர் பிராமண பண்டிட் அகதிகளைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுங்களேன்.பாஜக கூட்டணி முப்தி முடியாதுன்னு சொல்கிறார்.

    பாகிஸ்தானுக்குள் போவதை விட நம்ம பக்கத்தில் உள்ள இலங்கையில் இருந்து வந்து தமிழ் நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இந்து சகோதரர்களுக்கு குடியுரிமை வாங்கித்தர பிரதமர் மோடியிடம் சொல்லி ஏற்ப்பாடு செய்யுங்கள்.எந்த கிறிஸ்தவனும்,முஸ்லிமும் நிச்சயம் தடுக்க மாட்டார்கள்.

    சிந்திக்காரர்கள் மதத்திற்காக நாட்டை துறக்க தயாராக இருப்பதுபோல இலங்கை தமிழ் இந்துக்க.ள் இந்து மதத்திற்காக இலங்கையை துறக்க தயாராக உள்ளார்கள்.தமிழ் நாட்டில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அணைத்து இலங்கை அகதிகளையும் தன் கட்சியில் சேர்த்து குடியுரிமை கொடுத்து கோட்டையை பிடிக்கலாமே? செய்வார்களா?

    ஆள் அம்பு,சேனையின் மூலம் முள்ளியில் குழிபறித்த அரசு குடியுரிமை கொடுக்குமா?

    1. Avatar
      BS says:

      இதைப்படித்தபோது எனக்குள் வந்த ஒரு அனுபவ நினைவு. ஒரு தடவை, நான் பங்குபெற்ற இணையதள விவாதமேடையில் ஒருவர் எழுதினார்; அய்யோ தில்லி ரயில்வே ஸ்டேஷனில் பிராமணர் ஒருவர் ரிகஷா ஓட்டிப்பிழைக்கும் நிலைக்கும் தள்ள்பட்டுவிட்டாரே? அது பத்திரிக்கையில் வந்த செய்தி.

      நான் கேட்டேன்: சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப்பக்கத்தில் உள்ள சேரிகளிலெல்லாம் மக்கள் ரிக்ஷாக்காரகளாகத்தானே இருக்கிறார்கள் என்றேன். அவர்களுக்கு ஒரு சொட்டுக்கண்ணீரும் இல்லையா? இரண்டாயிரம் மைல்களுக்கப்பால் ஒரே ஒரு பிராமணன் இப்படி ஓட்டினால் மட்டும் ஏன் சொல்லவொண்ணா துயரம்?

      அதுதான் இக்கட்டுரையைப்படித்த போதும் தோன்றுகிறது. பாகிஸ்தான் இந்துக்களுக்காக கண்ணீர் வடிக்கும் கட்டுரைகள், இதோ இருபத்தைந்தே மைலகளுக்கப்பால் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள். அவர்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு அவர்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்ட போதும் அவர்கள் பெண்டிர்கள் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போதும் ஏன் திண்ணையில் கண்ணீர்வடிக்க ஆளில்லை?

      காசுமீரத்துப்பண்டிட்களுக்கும் பாண்டேக்களுக்கும் கண்ணீர் வடிக்கும் நபர்கள் ஏன் கடல் கடந்து பிழைக்கப்போன இடத்தில் வென்கொடுமைக்கும் ஆளாகும் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை? மதம், ஜாதியைப் பார்த்து இரங்கும் மனம் என்ன மனம்? இரக்கம் என்பதற்கும் எல்லைகளா? வரைவுகளா?

      பாரதியார் பிஜி தீவுகளில் அப்படிப்பட்ட கொடுமைகளுக்கான தமிழருக்காக கண்ணீர் வடித்தார். கூட்டமாக கூட்டமாக மூட்டை முடிச்சுகளோடு குடும்பம குடும்பாமாக குழந்தை குட்டிகளோடு ஆசை வார்த்தை காட்டி வெள்ளைக்காரன் கப்பலில் அடைத்துக்கொண்டு எங்கோ அழைத்துப்போய், கரும்புத்தோட்டத்திலே வைத்து சவுக்கால அடித்து வேலை வாங்கினான். பெண்டிர் மானபங்கப்படுத்தப்பட்டு கடலில் தூக்கியெறியப்பட்டதாக செய்திகள் வந்தன: படித்த பாரதியார் துடிக்கிறார்: தமிழனுக்காக இப்படி…

      (அடுத்த மடலில்)

      1. Avatar
        BS says:

        நெஞ்சங் குமுறுகிறார் – கற்பு
        நீங்கிடச் செய்யுங் கொடுமையிலே யந்தப்
        பஞ்சை மகிளரெல்லாம் – துன்பப்
        பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
        தஞ்சமு மில்லாதே – அவர்
        சாகும் வழக்கத்தை இந்தக்கண்த்தில்
        மிஞ்ச விடலாமோ!

        கரும்புத்தோட்டத்தினிலே – ஆ
        கரும்புத்தோட்டத்தினிலே

  4. Avatar
    paandiyan says:

    BS, shalli , சொல்வதை வைத்து பார்க்கும்போது , சிங்களவர்களை நாம் பெரிதாக குறை ஒன்றும் சொல்ல முடியாது .

    //எங்கு மரியாதையும் சம உரிமைகளும் பறிக்கப்படுகின்றனவோ அங்கு வாழும் இன்னல்களை அனுபவித்தே தீரவேண்டும். Beggars cannot be choosers என்பது ஆங்கிலப்பழமொழி.//

  5. Avatar
    என்.செல்வராஜ் says:

    மரியாதையும் சம உரிமையும் பறிக்கப்படும் நாட்டில் உரிமைக்காக போராடியே வெல்ல முடியும்.அதற்காக எத்தனை மக்கள் நாட்டை விட்டு ஓட முடியும். போகும் நாட்டில் என்ன மரியாதை கிடைக்கும்?

    1. Avatar
      BS says:

      அது நாட்டைப்பொறுத்தது. ஆஃப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சி. அங்கு இருந்துகொண்டு போராடி வெற்றியடைய முடியாது. இஸ்லாமியரிலும் வஹாபி இசுலாமியர் மட்டுமே வாழமுடியும். அங்கு எப்படி இந்துக்கள் கோயில்கள் கட்டி சம உரிமைகள் கேட்க முடியும்? அங்கிருந்த சீக்கியர்கள் நானக் காலத்திலிருந்தே வாழ்கின்றன. நானக்கின் சமாதியும் அங்கிருக்கிறது. ஆனால் என்ன பயன்? அவர்களனைவரும் பாகிஸ்தான், இந்தியா, மற்ற நாடுகள் என்று போய் விட்டனர். இப்படிப்பட்ட நாட்டில் ஒரு சிறு குழு மக்கள் போராடி வெற்றியடைய வேண்டுமானால் உலகநாடுகள் அப்போராட்டத்தில் கலந்து போராட்டத்தை நடாத்தினால், ஓரளவுக்குத்தாக்குப்பிடிக்கலாம். இராக்கில் வாழும் குர்த்களைப்போல. மற்றபடி வேஸ்ட். பாகிஸ்தான் இந்துக்கள் சிறுபான்மையினர். அங்கிருக்கும் இசுலாமியர் அவர்கள் மீது இரக்கம் காட்டுவதில்லை. வெறுப்புதான். அரசோ, குடியரசு என்று பெயரளவில் இருந்து இசுலாமியத்தலைவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது. ஒரே ஒரு வழி சாத்தியம்: உலகநாடுகள் தலையிடவேண்டும். தலையிடா. அதற்குப்பல கரணியங்கள். இந்தியாதான் தலையிட வேண்டும். தலையிடாது. காரணம். எங்கள் நாட்டுப்பிரச்சினையில் தலையிட நீங்கள் யார்? அப்படி நீங்கள் தலையிட்டால், காஷ்மீர் பிர்ச்சினைக்கு முதலில் தீர்வு காணுங்கள் பின்னர் இங்கு வாருங்கள் என்பார்கள்.

  6. Avatar
    ஷாலி says:

    //இதை போல karnadaka, srilanga, கேரளா தமிழனும் உதை வாங்காமல் தமிழ்நாட்டுக்கு போற வழியை தேட வேண்டும் . பிரச்சினை தீர்ந்தது..//

    பாண்டியன்! தமிழன் எங்கு சென்றாலும் ஒற்றுமையின்றி இறுதியில் அகதிகளாகவே வந்து சேருவான் பர்மா,இலங்கையில் இதுதான் நடந்தது.சிங்கப்பூர்,மலேசியாவில் உள்ள சேர,சோழ,பாண்டிய தமிழர்கள் கொஞ்சம் சூதனமாக பிழைத்துக்கொள்ளுங்கள்.இல்லையேல் நீங்களும் அகதி முகாம்களில் அள்ளித்திங்கும் நிலைமை வந்துவிடும்.

  7. Avatar
    ஒரு அரிசோனன் says:

    //அதுதான் இக்கட்டுரையைப்படித்த போதும் தோன்றுகிறது. பாகிஸ்தான் இந்துக்களுக்காக கண்ணீர் வடிக்கும் கட்டுரைகள், இதோ இருபத்தைந்தே மைலகளுக்கப்பால் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள். அவர்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு அவர்கள் கொத்து கொத்தாகக் கொல்லப்பட்ட போதும் அவர்கள் பெண்டிர்கள் மானபங்கப்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட போதும் ஏன் திண்ணையில் கண்ணீர்வடிக்க ஆளில்லை?//
    //பாகிஸ்தானுக்குள் போவதை விட நம்ம பக்கத்தில் உள்ள இலங்கையில் இருந்து வந்து தமிழ் நாட்டு அகதி முகாம்களில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் இந்து சகோதரர்களுக்கு குடியுரிமை வாங்கித்தர பிரதமர் மோடியிடம் சொல்லி ஏற்ப்பாடு செய்யுங்கள்.எந்த கிறிஸ்தவனும்,முஸ்லிமும் நிச்சயம் தடுக்க மாட்டார்கள்.//

    BS, ஷாலி,

    சிலசமயம் நீங்கள் இருவரும் ஒருவரோ என்று எனக்குத் தோன்றுகிறது.

    ஒருவர் சம்பந்தமே இல்லாத, கவைக்குதவாத ஒரு வரியைச் சொல்கிறார். ஏன் என்று கேட்டால், அடுத்தவர் திசை திருப்ப முயலுகிறார்.

    ஐயாமார்களே, காஷ்மீருக்கு தனி நிலைமை கொடுத்திருப்பதை அகற்றி, இலங்கையில் இருக்கும் எல்லாத் தமிழர்களையும், பாகிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் இந்துக்கள் அனைவரையும் குடியேற்றிவிடலாம்.

    பாகிஸ்தானும், இலங்கையும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கும்.

    கனவு காணுங்கள்!

    ஒரு இடத்தில் அநீதி நடக்கிறது என்று கண்டித்து எழுதினால், உருப்படியான யோசனையைச் பகருங்கள். இல்லாவிடில் கண்டனம் செய்து நகருங்கள்.

    நேபாளத்தில் நிலநடுக்கம், சில ஆயிரம் பேர் சாவு என்றால், உடனே “அங்கு ஏன்மக்கள் குடி இருக்கவேண்டும், நிலநடுக்கம் இல்லாத இடத்திற்கு — இந்தியாவுக்குக் குடிபுகலாமே என்று எழுதிவிடுங்கள்.

    பேஷ், பேஷ், பேஷ்!

    நல்லவேளை, நீங்கள் இந்திய அரசாங்கத்தில் முக்கிய பதவியில் இல்லை!

    1. Avatar
      BS says:

      //நேபாளத்தில் நிலநடுக்கம், சில ஆயிரம் பேர் சாவு என்றால், உடனே “அங்கு ஏன்மக்கள் குடி இருக்கவேண்டும், நிலநடுக்கம் இல்லாத இடத்திற்கு — இந்தியாவுக்குக் குடிபுகலாமே என்று எழுதிவிடுங்கள்.//

      உண்மையே அதுதான். இயற்கை வாழவிடாமல் தடுக்கும்போது அதை எதிர்த்து போராடி வெல்ல முடியுமென்றால் வாழலாம். இல்லாவிட்டால் எங்கு இடரில்லையே அங்கு போய் வாழலாம். கிராமஙகளில் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டால் மக்கள் பட்டணம் போய்ச்சேருகிறார்கள். (கெட்டும் பட்டணம் போ என்ற முதுமொழி அப்படித்தான் வந்தது) நாகரிகங்கள் ஆறறுப்படுகைகளில்தான் தோன்றின. பாலவனங்களில் இல்லை. நில அதிர்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே போனால் நேபாளத்தைவிட்டு மக்கள் கிளம்பத்தான் வேண்டும். மாலத்தீவுகள் இன்னும் 100 ஆண்டுகளில் கடலுக்குள் மூழ்கிவிடும் என்பது ஆராய்ச்சியின் முடிவு. (குளோப்ல வார்மிங்கில் கடல் நீர்மட்டம் உயர, பல தீவுகள் கடலுக்குள் போய்விடும்) அதற்காக அம்மக்கள் இப்போதிருந்தே ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியேறுகிறார்கள். இயற்கையை அரசியலாக்க முடியாது அரிசோனன்; பணிந்துதான் போகவேண்டும்.

      பாகிஸ்தான் அரசு இசுலாமியக்குடியரசு. எனவே இன்னும் இந்துக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிமைகளும் கேட்கப்படுகின்றன. குடியரசாக இல்லாமல் இசுலாமிய சர்வாதிகாரகமோ, முடியாட்சியோ ஆகிவிட்டால், இந்துக்களின் நிலமையென்ன? வெளியேறத்தான் வேண்டும். சவுதி அரேபியாவில் இந்துக்கள் கோயில் கட்ட முடியுமா? பக்கத்து நாட்டில் இந்துத்வா ஆட்சி வந்து விட்டது. பாக் இந்துக்களை இங்கு வரவழைத்துக்கொண்டால், இந்துமதச்சேவையாகுமே அதையேன் செய்யக்கூடாது? பர்மாவிலிருந்து விரட்டப்பட்டோரையும் பங்களாதேசிலிருந்து 1977லி ஓடிவந்தோரையும் ஏற்றுக்கொள்ளவில்லையா? இந்துக்களாக அரியணையேறியிருக்கும் மோதி பாக் இந்துக்களையேன் அரவணைத்து ஏற்கக்கூடாது? வெறும் கண்ணீர் எதற்கு? சுவற்றில் வைத்துத் தேய்க்கவா? Act !

  8. Avatar
    ஒரு அரிசோனன் says:

    இலங்கைத் தமிழர் நிலைமையைக் கண்டு கண்ணீர் வடித்து ஆயிரம் பதிவுகள் வந்துவிட்டன. அப்போழுதெல்லாம் ஷாலி/BS அவர்கள் கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்கள் போலிருக்கிறது

    1. Avatar
      BS says:

      இலங்கைத்தமிழர்கள் என்றுதான் ஆயிரம் பதிவுகள். இந்துக்கள் என்றில்லை. ஜஃனாவில் கோயில் அர்ச்சகரின் பெண் அவரின் முன்னே பாலியல் கொடுமைக்குள்ளாக்கிக்கொல்லப்பட்டார் சிங்களப்படையால். இந்துக்கோயில்கள் எல்லாம் இடிக்கப்பட்டன. ஆனால் தமிழ்நாட்டு இந்து இயக்கங்கள்காஷ்மீர் பண்டிட்களுக்காகவும். உ பி பாண்டேக்களுக்காகவும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். அப்படிப்பட்ட கட்டுரைதான் இது. இலங்கைத்தமிழர் இந்துக்கள் கிடையா. ஆனால் பாகிஸ்தான் காரர்கள் இந்துக்கள். என்ன வேஷமிது அரிசோனன்?

  9. Avatar
    BS says:

    /நல்லவேளை, நீங்கள் இந்திய அரசாங்கத்தில் முக்கிய பதவியில் இல்லை!//

    இருந்தால், கண்டிப்பாக அனைத்து பாகிஸ்தான் இந்துக்களையும் இந்தியாவுக்கு வரலாம். நிரந்தரமாகக் குடியேறலாமென்பேன்.

  10. Avatar
    ஷாலி says:

    //BS, ஷாலி,
    சிலசமயம் நீங்கள் இருவரும் ஒருவரோ என்று எனக்குத் தோன்றுகிறது.//

    இதைத்தான் “காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்..” என்பார்கள்..நானும் BS ம் ஒரு கொடியில் இரு மலர்கள். ஒத்த கருத்துள்ள மனிதர்கள் உலகில் ஓராயிரம் பேர் கூட இருக்கலாம்.அரிசோனன் அண்ணனுக்கு இது கூட தெரியவில்லை.

    //ஐயாமார்களே, காஷ்மீருக்கு தனி நிலைமை கொடுத்திருப்பதை அகற்றி,//

    அய்யா! அரிசோனரே! அவசரப்படாதீர்கள்! பத்து மாதம் தான் முடிந்துள்ளது.இன்னுன் நான்கு வருடம் உள்ளது.உங்கள் ஆசை விரைவில் ஒவ்வொன்றாக நிறைவேறும்.இப்பத்தான் மாட்டுக்கறி மேல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.இனி அடுத்து பாவப்பட்ட மனுஷன் விவசாயி..கடைசியில் காஷ்மீரில் முடியும்.கவலைப் படாதீர்கள். வளர்ச்சி…படிப்படியாகத்தான் வளரும்…

    //ஒரு இடத்தில் அநீதி நடக்கிறது என்று கண்டித்து எழுதினால், உருப்படியான யோசனையைச் பகருங்கள். இல்லாவிடில் கண்டனம் செய்து நகருங்கள்.//

    ஹையா! ஆப்கானில்தான் தாலிபான்கள் இருப்பதாக அறிந்தேன்.இப்ப அரிசோனாவிலும் இருப்பதாக தெரிகிறது. இப்படித்தான் எழுதவேண்டும்,இப்படி எழுதக்கூடாது எனும் தாலிபான்தனம்… இது வேணான்னே!

    //இலங்கைத் தமிழர் நிலைமையைக் கண்டு கண்ணீர் வடித்து ஆயிரம் பதிவுகள் வந்துவிட்டன.//

    வாஸ்தவம்தேன்! ஊர் உலகே அழுது ஆயிரம் பதிவு வந்துவிட்டதுதான், ஆயிரத்து ஒண்ணாவது நீங்க அழுத கணக்கெங்கே?
    ஓ…காஷ்மீர் பண்டிட்டுக்கும்,பாகிஸ்தான் இந்துக்களுக்கும் அழுதே கண்ணீர் வற்றி விட்டதோ? தாய்த்தமிழனுக்கு அழுகாத கண் இருந்தென்ன! இறந்தென்ன!!

  11. Avatar
    BS says:

    சிலசமயம் இருவரும் ஒருவரோ எனக்கேட்கும் அரிசோனன் இத்தீய பழக்கத்தை கிருஷ்ணகுமாரிடமிருந்து பெற்றுக்கொணடாரோ? நமக்கு நன்றாகத் தெரிந்து உறுதிபடுத்திய பின்னரே தனிநபர்களைப்பற்றி பொது இடங்களில் நாம் பேசவேண்டும். 16 வருடங்கள் நீதிமன்ற வழக்கு; பின்னர் வெற்றியடைந்தார் நடிகை மேனகா சன் தொலைக்காட்சி அவ்ரைப்பற்றி, நேரடியாக அவருக்கும் சந்தணக்கடத்தல் வீரப்பனுக்கும் தொடர்பு உண்டு என்று ஒலி-ஒளி பரப்பியதற்காக. அத்தொலைக்காட்டி மேனகாவுக்கு பல இலடசங்கள் நட்ட ஈடாகத் தரவேண்டும். அவர் தன் பேட்டியில் சொன்னார்: ஒலி-ஒளி பரப்பும் முன் என்னுடன் கேட்டிருக்கலாம்; அல்லது, ஒரு ஊகமாக சொல்லியிருக்கலாம். மாறாக, நேரடியாகவே என் பெயரைச் சொல்லி தொடர்பு படுத்த ஒட்டு மொத்த தமிழகமே என்னைக் கேள்விக்குறியுடன் பார்த்தது. என் உற்றாரும் உறவுகளும் என்னைத்தவிர்த்தார்கள். பல தொழில் வாய்ப்புக்கள் பறிபோயின. 16 வருடங்கள் நான் சித்திரவதையடைந்தேன்.

    எனவே அரிசோனன், மெய்ப்பொருள் காண்பது அறிவு.

Leave a Reply to BS Cancel reply

Your email address will not be published. Required fields are marked *