மஹாத்மா (அல்ல) காந்திஜி

author
31
0 minutes, 16 seconds Read
This entry is part 14 of 21 in the series 27 ஜூன் 2016

 கலவை வெங்கட்

ஜனவரி 30, 1948.

 

gandhi-prayer“மஹாத்மா காந்தி வாழ்க!” என்ற பெரும் கோஷம் யமபுரியில் சித்ரகுப்தன் வீற்றிருந்த அவையின் வெளியே கேட்டது. இவ்வாறான கோஷத்தை அதுவரை சித்ரகுப்தன் கேட்டதே இல்லை.

 

பல்லாயிரம் ஆண்டுகள் முன், யமராஜன் யமபுரியின் ஆளுநராக இருந்தார். புவியில் மனிதர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களை கவனமாகக்  கண்காணித்து கணக்கெழுதுவது அவர் வேலையாக இருந்தது. ஒருவர் செய்கின்ற நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்றார்போல வினைப்பயன் கூடும். அவரவர் வினைப்பயனுக்கு ஏற்றார் போல கொஞ்ச காலம் சுவர்க்கத்துக்கோ இல்லை நரகத்துக்கோ யமனால் அனுப்பிவைக்கப்படுவர். வரையறுக்கப்பட்ட சுவர்க்கவாசமோ நரகவாசமோ முடிந்தபின் புவியில் மறுபிறவி என்ற சுழற்சி தொடரும்.

 

புவியில் ஜனத்தொகை பெருகியது. மனிதர்கள் செய்யும் நல்ல மற்றும் தீய செயல்களும் பெருகின. யமனுடைய வேலை ஒரு பிரம்ம பிரயத்தனமாகவே மாறிவிட்டது. தவறான கணக்கெழுதிவிடக்கூடாதே என்ற கவலையில் எமன் பிரம்மனிடம் உதவிகேட்டு முறையிட்டார். பிரம்மனும் தியானத்தின் வழியாக, மனித கணக்கை எழுதுவதற்காகவே, சித்ரகுப்தனைப் படைத்தார். சித்ரகுப்தனுக்கு அபரிமிதமான சக்திகளையும் கொடுத்தார். சித்ரகுப்தனும் யமனுடைய மகளை மணந்து யமபுரியில் அவை நடத்தினார்.

 

மரித்தபின் யமபுரி வரும் ஒவ்வொருவரும், சித்ரகுப்தன் தங்களுக்கு சுவர்க்கவாசம் அளிப்பாரா இல்லை நரகவாசம் அளிப்பாரா என்று அறியாது, பயந்துகொண்டு, மௌனமாகத்தான் வருவார்கள். பல்லாயிரம் ஆண்டுகளில், இன்றுதான் முதன்முறையாக வாழ்த்தொலியோடு ஒருவர் யமபுரிக்குள் நுழைவதை சித்ரகுப்தன் கண்டார்.

 

ஆச்சரியத்தோடு மந்திரிகளைக் கேட்டார், “யார் இந்த மஹாத்மா காந்தி?”

 

“என்ன சித்ரகுப்தரே, மஹாத்மா காந்தியுடைய பெருமை தெரியாமலே அவருடைய கணக்கை இத்தனை நாட்களாக எழுதியிருக்கிறீரே? அவரைப் பற்றி புவியில் பெயர் பெற்ற செய்தித்தாள்கள் எப்படியெல்லாம் புகழ்கின்றன  என்று பாருங்கள்” என சொல்லி நியூ யார்க் டைம்ஸ், ஹிந்து முதலிய செய்தித்தாள்களையும், பாரதியார் காந்திஜியைப் போற்றி எழுதிய வரிகளையும்  அவர் முன் மந்திரிகள் வைத்தார்கள். அவற்றை அவசர அவசரமாகப் படித்த சித்ரகுப்தன் வெலவெலத்துப் போய்விட்டார். இந்தியர்கள், மேற்கத்தியவர்கள் என்று எல்லாரும் சகட்டு மேனிக்கு போற்றியிருக்கும் இந்த மஹாத்மாவைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று அவருக்கு உறுத்தல்.

 

தொண்டர்கள் புடைசூழ காந்திஜி அவையில் நுழைந்தார். சித்ரகுப்தன் அதீத மரியாதையுடன், கூப்பிய கைகளோடு காந்திஜியை வரவேற்றார்: “பூலோகத்து செய்தித்தாள்கள் எல்லாம் படித்தேன். உங்களை அவர்கள் போற்றுவதைப் பார்த்து பிரமித்துவிட்டேன். பாரதியார் இயற்றிய பஞ்சக வரிகளும் படித்தேன். எவ்வளவு அசாதாரணமான மனிதர் நீங்கள்? உங்களைப் போன்ற மஹாத்மாவை வரவேற்கும் பேறு எனக்குக் கிடைத்ததே! நீங்கள் பல்லாயிரமாண்டுகள் சுவர்க்கத்தில் தங்கியருள வேண்டும் மஹாத்மா அவர்களே. நீங்கள் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர் என்றாலும் உங்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு அரண்மனையையும், தோளில் கைபோட்டு நடக்க இரண்டு இளம் தேவதைகளையும் ஒதுக்கியிருக்கிறேன்.”

 

செய்தித்தாள்களைப் படித்து மட்டுமே முடிவெடுக்காமல் காந்திஜியின் செயல்களைப் பதிவு செய்த கணக்குப் புத்தகத்தையும் ஒருமுறை பார்த்துவிடலாமே என்று முணுமுணுத்த மந்திரியை சித்ரகுப்தன் கோபப்பார்வையால் தகித்துவிட்டார்.

 

“அதனாலென்ன, அதிக செலவில் பராமரித்த ஆசிரமங்களில் நான் எளிமையாக வாழவில்லையா? அதே போன்ற எளிய வாழ்வை, இராட்டை சுற்றிக்கொண்டு, சுவர்க்க அரண்மனையிலும் வாழ்ந்தால் போச்சு!” என்று சிரித்துக்கொண்டே சொன்ன காந்திஜி தேவதைகளின் தோள்களை அணைத்தவாறு சுவர்க்க அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவையில் இருந்த எல்லாரும் அவருக்குத் தலை வணங்கி நின்றார்கள்.

 

ஒரு சிலர் தவிர.

 

அந்த ஒருசிலரில் ஒரு இளம் பெண், “காந்திஜி, ஒரு நிமிஷம் நில்லுங்கள்!” என்றாள். மஹாத்மா என்று அழைக்கவில்லை. வயதுக்கு மரியாதை அளித்து ஒரு ‘ஜி’ மட்டுமே சேர்த்திருந்தாள்.

 

“என்னைத் தெரிகிறதா?”

 

இல்லை என்று காந்தி தலையசைத்தார்.

 

“என்னை உங்களுக்குத் தெரியுமென்று நான் நினைக்கவில்லை. நான் கேரளாவில் பிறந்து வளர்ந்த ஒரு ஹிந்து. எனக்கு  பதினெட்டு வயதில் கல்யாணம் ஆனது.  கல்யாணமாகி ஒரு வருஷம் இருக்கும். ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தேன். அப்போது கேரளாவில் மோப்ளா கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் ஹிந்து ஆண்களைக் கொன்று போட்டுவிட்டு ஹிந்து பெண்களைக் கற்பழித்தார்கள்.

 

அன்று எனக்கு வளைகாப்பு சடங்கு. அன்றுதான் எங்கள் வீட்டின் மேல் முஸ்லிம்கள் குவிந்தார்கள். என்னுடைய அப்பாவை என் கண்ணெதிரேயே வெட்டித்தள்ளினார்கள். என் கணவர் என்னைக் காப்பாற்ற தைரியமாகத்தான் போராடினார். என்னை ஓடச்சொன்னார். ஆனால் எங்கே ஓட? அவரை சகட்டுமேனிக்கு வெட்டினார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக வீழ்ந்தார். கண்ணில் அசைவு இருந்தது. ஏதோ சொல்ல முயல்கிறாரே? காதில் ஒலிக்கவில்லையே. ஏன்?

 

என் அழுகைக் குரல்தான் எனக்குக் கேட்டது. விலாவில் ஒருவன் உதைத்தான். தடுமாறி விழுந்தேன். உடலிலிருந்த சேலையை ஒருவன் உருவி எறிய மற்றவர்கள் மாறி மாறிக் கற்பழித்தார்கள். அய்யோ வயிற்றில் இருக்கும் என் குழந்தை! யாராவது உதவிக்கு … ஏன் யாருமே வரவில்லை?  சுருக்கென்று வயிற்றில் ஏதோ தைக்க, கண் இருண்டது.

 

கண் விழித்தபோது தெருவோரத்தில் கிடந்தேன். மருத்துவச்சி என்னை அணைத்துக்கொண்டிருந்தாள். வயிற்றில் கட்டு போட்டிருந்தாள். தொடையிலும் கையிலும் பிசிபிசுப்பாக காய்ந்த இரத்தமும், திசுக்களும் ஒட்டிக்கொண்டிருந்தன. அய்யோ வயிற்றில் இருந்த என் குழந்தையா? ஓவென்று அழுதேன். என் கணவர் எங்கே? அம்மா? யாருமே இல்லையா? நான் ஏன் சாகவில்லை? திரும்ப கண் இருண்டது.

 

என்னைப் போல எத்தனையோ பெண்கள். யாருக்கு என்று வைத்தியம் பார்க்க என்றாள் மருத்துவச்சி. எதை வைத்து வைத்தியம் பார்க்க? ரொம்ப வலித்தது. பசித்தது. நாவறண்டு, தடித்து, எது பேசினாலும் குழறியது. ஓடு என்று சொன்னாரே? ஏன் ஓடவில்லை? எங்கே ஓட? இரவில் திடீரெண்டு கண் விழித்தால், அருகில் சில நாய்கள் எதையோ தின்றுகொண்டிருந்தன. அது திசுத்தானே? அய்யோ என் குழந்தை! அலறினேன். ஊளையிடுவதுபோல என் குரல் வெளிப்பட்டது.  உறுமிக்கொண்டு ஒரு நாய் என் மீது பாய, கண் இருண்டதுதான் தெரியும். திரும்ப கண் திறக்கவில்லை.

 

அன்று நவம்பர் 4, 1921. எனக்கு வளைகாப்பு போட்ட நாள். அதுவே நான் இறந்த நாளும். மோப்ளா கலவரத்தில் கற்பழிக்கப்பட்டு, குடும்பத்தை இழந்து, நாதியில்லாமல் தெருவோரம், நிர்வாணமாக இறந்த பல ஆயிரம் ஹிந்துப் பெண்களில் நானும் ஒருத்தி.”

 

அந்த இளம் பெண் இதை சொல்லி முடிக்கையில் அவையே ஸ்தம்பித்திருந்தது. காந்திஜியும் கலங்கிப் போயிருந்தார். அடங்கிய குரலில் “மகளே உனக்கு நடந்த அசம்பாவிதம் எனக்கு வருத்தமளிக்கிறது” என்றார்.

 

வேறு யாருக்கும் பேச நா எழவில்லை. அவளே தொடர்ந்து பேசினாள்:

 

“காந்திஜி, இன்று சித்ரகுப்தன் படித்த செய்தித்தாள்களை, நான் யமபுரி வந்த நாள் முதல் தினமும் கவனமாகப் படிக்கிறேன். நீங்கள் மோப்ளா கலவரத்தைப் பற்றி இட்ட அறிக்கைகளையும் படித்தேன். நீங்கள் என்னைப் போல ஹிந்துப் பெண்களை கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றவர்களைக் கண்டனம் கூட செய்யவில்லையே? மாறாக, கொலையும், கற்பழிப்பும் நடத்திய முஸ்லிம்கள் போலீஸிடம் சிக்கி இறந்தபோது அந்த முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கி அறிக்கை விட்டீர்கள். அவர்களுக்குப் பண இழப்பீடு தரவேண்டும் என்றும் வலியுறுத்தினீர்கள். காந்திஜி, என்னைப் போல அப்பாவிப் பெண்களைக் கொடூரமாகக் கற்பழித்துக் கொன்றவர்களை தார்மீக ரீதியாகப் போராடியவர்கள், வீரர்கள் என்றெல்லாம் பாராட்டி அறிக்கை விட்டீர்கள்.”

 

காந்திஜி வாயே திறக்கவில்லை.

 

அந்த இளம் பெண் கேட்டாள்: “காந்திஜி, என்னை மகளே என்று அழைத்தீர்களே? ஒருவேளை நான் நிஜமாகவே உங்கள் மகளாக இருந்திருந்தால் அப்போதும் என்னைக் கருவறுத்து, கற்பழித்துக் கொன்றவர்களை தார்மீகமானவர்கள், வீரர்கள் என்று வர்ணித்திருப்பீர்களா?”

 

சில கணங்கள் பதில் பேசாமல் நின்று, பின் வேதனையுற்ற குரலில் காந்தி சொன்னார், “நான் என் குடும்பம் அடுத்தவர்கள் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை. ஒருவேளை. நீ எனக்குப் பிறந்த மகளாக இருந்திருந்தாலும் …”

 

“அப்படியானால், நீங்கள் ஒரு நல்ல தலைவராகவோ, தார்மீகமான மனிதராகவோ மட்டுமில்லை, ஒரு நல்ல தந்தையாக இருக்கும் தகுதிகூட அற்றவர்” என்றாள் அந்த இளம் பெண். அவள் குரலில் கோபமோ, வெறுப்போ இல்லை. நிதர்சனமான உண்மையை சொல்லும் வைராக்கியம் மட்டுமே இருந்தது.

 

காந்திஜி தலை குனிந்து நின்றார்.

 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த சித்ரகுப்தன் நிலைகுலைந்துவிட்டார். கற்பழிப்பும் கருக்கலைப்பும் மஹாபாதகமன்றோ? அந்த செயல்களையா தார்மீகமானவை என்று காந்திஜி நியாயப்படுத்தினார்? அந்த மஹாபாதகங்களை செய்தவர்களையா வீரர்கள் என்று போற்றினார்? பாதிக்கப்பட்டவர்களுக்கு வக்காலத்து வாங்காமல் மஹாபாதகர்களுக்கா வக்காலத்து வாங்கினார்? அவரைப்போய் மஹாத்மா என்று செய்தித்தாள்கள் வர்ணித்ததெல்லாம் வெறும் பிரச்சாரமா? எப்படி நான் வெறும் தலைப்பு செய்தியைப் படித்துவிட்டு அவசர முடிவுக்கு வந்தேன்? இந்த இளம் பெண்ணோ பிரச்சாரத்தைத் தாண்டி உண்மையை நாடியிருக்கிறாளே? உண்மை அறிந்துதான் மஹாத்மா என்று அழையாமல் காந்திஜி என்று வயதுக்கு மட்டுமே மரியாதை அளித்து விளித்தாளோ?

 

அவரைப் போய் எங்ஙனம்

 

“பாரத தேசந் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி

மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!

முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்

புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!”

 

என்றெல்லாம் பாரதியார் போற்றினார்? அதுசரி, பாரதியாரும் வெறும் மனிதர்தானே? மகத்தான சக்திகள் பெற்ற நானே தவறான ஊகத்துக்கு வரமுடியுமென்றால், பாரதியார் தவறாக ஊகித்ததில் ஆச்சரியமென்ன? இனிமேலாவது,

 

“எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண் பதறிவு”

 

என்ற வள்ளுவன் வாக்கை மறவாது நடக்க வேண்டுமென்று சித்ரகுப்தன் தீர்மானித்தார்.

 

அவையில் இருந்த அனைவர் மனதிலும் ஒரு கேள்வி முள்ளாய் நிரடியது: மஹாபாதகங்கள் செய்த இழிசனர்களை வீரர்கள், தார்மீகமானவர்கள் என்று மெச்சி வக்காலத்து வாங்கிய காந்திஜியிடம் தார்மீக திசைகாட்டி என்று ஒன்று இருந்ததா?

 

பின்னுரை: இது மோப்ளா கலவரத்தில் காந்தியின் செயல்களையும், சொற்களையும் சரித்திர அடிப்படையாய் கொண்டு அமைத்த கதை. ஆதாரம் வேண்டுவோர், R. C. Majumdar இயற்றிய The History and Culture of the Indian People, Volume XI, Struggle for Freedom என்ற நூலின் பக்கங்கள் 360-365 காண்க. ஆர்வலர்கள் பார்வையில் காந்திஜி மஹாத்மாவாகத் தென்படுகிறார். ஆனால் அது வெறுமே ஊகத்தை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக அமைந்த பார்வையே. மீளாய்வைத் தாக்குப்பிடிக்கும் ஒன்றல்ல. ஆதாரம் பின்பற்றி அமைந்த மதிப்பீடு அல்ல. காந்திஜியை வேறு ஒரு விதமாகவும் மதிப்பீடு செய்ய முடியும். அது அவர் செயல்களால் வாழ்கையின் விளிம்புக்கு வெளியே தள்ளப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, ஆனாலும் தார்மீக சிந்தனை வழுவாதவர்கள் பார்வையின் மூலமாக. அது வெறுமே ஊகத்தை ஊர்ஜிதப் படுத்தும் விதமாக அமைந்த பார்வை அன்று. அது ஆதாரம் பின்பற்றி அமைந்த மதிப்பீடு சார்ந்த பார்வை. அப்பார்வையில் காந்திஜியைப் பற்றி அமைத்த மதிப்பீடே இக்கதை.

 

Series Navigationகாப்பியக் காட்சிகள் 10.​பொழுது​போக்குகள், பழக்க வழக்கங்கள்பாடம் சொல்லும் கதைகள்
author

Similar Posts

31 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    காந்திஜி வழக்கறிஞர் ஆயினும், அவர் நியாயம், தவறிழைத்த சிறுபான்மை இஸ்லாமியருக்கு ஆதரவாக இருந்தது. ஏன் ? ஏன் ? ஏன் ? இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டாம் என்ற குறிக்கோளுடன் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்குப் போராடி, முடிவில் உயிரிழந்தார். அதனால்தான் அவர் மகாத்மா காந்தி என்று போற்றப் படுகிறார்.

    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சுதந்திரப் போராட்டத்தின் இறுதியில் பாகிஸ்தான் பிரிவுற்ற போது புலம்பெயர்ந்த இந்துக்களும், இஸ்லாமியரும் ஆயிரக் கணக்கில் ஒருவரை ஒருவர் குத்திக் கொலை செய்தனர். காந்திஜி யார் பக்கம் நியாயம் வழங்குவார் ? அவர் இஸ்லாமியரை ஆதரித்தார், இந்துக்கள் கொலையை வேடிக்கை பார்த்தார். அதனால் அவர் மகாத்மா இல்லை என்னும் வாதம் எப்படி நியாயமாகும் ? சிறுபான்மையோருக்குப் பரிந்து பேசினால் அது தவறா ?

    சி. ஜெயபாரதன்.

  3. Avatar
    Arunagiri says:

    கலவை வெங்கட்டின் பார்வையை நான் முழுவதுமாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விவாதம் அவசியம். கிலாபத் சமயத்தில் காந்தியின் நிலைப்பாடு குரூரமானது, அதர்மமானது. இஸ்லாமிய மதவாத வன்முறைகள் எழும்போதெல்லாம் அதை பூசி மெழுகும் இன்றைய அரசியல் நபும்சகத்தனத்தின் விதை கிலாபத்தில் தொடங்குகிறது. அதை முன்னெடுத்த பெரும் தலைவராக காந்தி அப்பாவி இந்து ரத்தத்தின் அழியாத கறை படிந்தவராக நம்முன் நிற்கிறார். இன்று கொல்பவர்களின், கொல்லப்படுபவர்களின் மதம் பார்த்து ஊடகங்கள் வேசி எழுத்தை வைக்கும்போது எப்படி அதை விமர்சிக்கிறோமோ அதே போல் தான் காந்தியையும் விமர்சிக்க வேண்டும்.

    காந்தி எனக்கு மஹாத்மாதான், ஆனால் அவரது வேறு சில நிலைப்பாடுகளுக்காக, செயல்களுக்காக அவர் என் மஹாத்மா. அவருடன் நான் உடன்படாத இடங்கள் உண்டு. அவரை மஹாத்மா என்று ஒப்புக்கொள்ள எனக்கு அவை தடைகளானதில்லை.

    அவரது வரலாற்றுத் தவறுகளையும் தாண்டி வெளிவரும் ஒளிக்கீற்றுகள்தான் காந்தியை மஹாத்மா என்று அடையாளம் காட்டுபவை என்று நான் நினைக்கிறேன். அந்த வரலாற்றுத்தவறுகளை பூசி மெழுகி அல்லது மூடி மறைத்து காந்தியை நாம் காப்பாற்ற வேண்டியதில்லை.

    அப்படிக்காப்பாற்ற வேண்டிய நிலையிலும் காந்தி இல்லை.

  4. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    காந்திஜி பெரும்பான்மை இந்துக்களை ஆதரித்து, சிறுபான்மை இஸ்லாமியரை, கிறித்துவரை வெறுத்திருந்தால் அவரை உலகம் மகாத்மா என்று போற்றாது. அவரை சங்கராச்சாரியர் போல் ஓர் இந்துமதவாதி யாகத்தான் கருதும்.

    சி. ஜெயபாரதன்

  5. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    ////அவரைப் போய் எங்ஙனம்

    “பாரத தேசந் தன்னை
    வாழ்விக்க வந்த காந்தி
    மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!

    முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்
    புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்!”

    என்றெல்லாம் பாரதியார் போற்றினார்?///

    வன்முறையின்றி ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பிரிட்டனிடமிருந்து சுதந்தரம் பெற்று இந்தியாவைத் தலை நிமிர்ந்து உயர வைத்து, உலகுக்கும் புதுவழி காட்டிப் புவிக்குள்ளே முதன்மை பெற்றவர் காந்திஜி. அதனால் ஐயமின்றி முடிவில்லா கீர்த்தியும் பெற்றவர்.

    பாரதியார் எழுதிய கவிதை வரிகள் உண்மை யானவை.

    காந்திஜியின் வன்முறையற்ற விடுதலைப் போராட்டத்தை உலக விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பாராட்டுகிறார்.

    சி. ஜெயபாரதன்

  6. Avatar
    Kalavai Venkat says:

    ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகத்தான் காந்திஜி கற்பழித்துக் கொல்லப்பட்ட ஹிந்துப் பெண்களுக்கு வக்காலத்து வாங்காமல் மஹாபாதகம் செய்த முஸ்லிம்களுக்கு வக்காலத்து வாங்கினார், போற்றினார் என்று சி. ஜெயபாரதன் வாதிடுகிறார். மஹாபாதகர்களைப் புகழ்ந்தால் மட்டுமே ஒற்றுமை ஏற்படும் என்றாலும் அந்த செயல் அதர்மமானதே. ஆனால், இந்த சப்பைக்கட்டெல்லாம் செல்லாது என்பதற்கு ஒரு உதாரணம் இடுகிறேன்.

    சமீபத்தில், தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு தலித் இளைஞனை வெட்டிக் கொன்றார்கள். காரணம், அவன் ஒரு தேவர் பெண்ணை மணந்ததே. ஒருவேளை யாராவது அரசியல்வாதி, தலித் இளைஞனுக்கு வக்காலத்து வாங்காமல், “அந்த சில தேவர் ஜாதிக்காரர்கள் தார்மீகமாகவும், வீரத்தோடும் நடந்திருக்கிறார்கள்” என்று அறிக்கை விட்டிருந்தால் கேட்டுக்கொண்டா இருப்போம்? அந்த கொலைகாரர்களுக்கு அரசு பண இழப்பீடு தரவேண்டும் என்று சொன்னால் பொறுப்போமா?

    மாட்டோம். ஆனால், காந்திஜி அதையே செய்ல்தா சப்பைக்கட்டு கட்டுகிறோம்.

  7. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    சுதந்திரப் போராட்டத்தின் இறுதியில் பாகிஸ்தான் பிரிவுற்ற போது புலம்பெயர்ந்த இந்துக்களும், இஸ்லாமியரும் ஆயிரக் கணக்கில் ஒருவரை ஒருவர் குத்திக் கொலை செய்தனர். காந்திஜி யார் பக்கம் நியாயம் வழங்குவார் ? அவர் இஸ்லாமியரை ஆதரித்தார், இந்துக்கள் கொலையை வேடிக்கை பார்த்தார். அதனால் அவர் மகாத்மா இல்லை என்னும் வாதம் எப்படி நியாயமாகும் ? சிறுபான்மையோருக்குப் பரிந்து பேசினால் அது தவறா ?

    சி. ஜெயபாரதன்.

  8. Avatar
    Jayakumar says:

    R S S பிரவர்த்தகர்கள் திண்ணையிலும் வர ஆரம்பித்து விட்டனர் போலும். மாப்பிள்ளை கலவரம் என்பது மதக் கலவரம் அல்ல. அரசியல் கலவரமும் அல்ல. அது ஜன்மி எனப்படும் நிலப் பிரபுக்களுக்கும் அவர்களிடம் வேலை செய்த குடியானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. கலவரங்கள் சில அற்ப காரணங்களால் உருவாகலாம். இந்தக் கலவரத்தில் எத்தனையோ நம்பூதிரிப் பெண்கள் முஸ்லிம்களால் காப்பாற்றப் பட்டுள்ளனர்.

    இந்தக் கட்டுரை மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறது. காந்தி கலவரத்தை ஆதரிக்கவுமில்லை எதிர்க்கவுமில்லை.


    Jayakumar

  9. Avatar
    ஷாலி says:

    //R S S பிரவர்த்தகர்கள் திண்ணையிலும் வர ஆரம்பித்து விட்டனர் போலும். மாப்பிள்ளை கலவரம் என்பது மதக் கலவரம் அல்ல. அரசியல் கலவரமும் அல்ல. அது ஜன்மி எனப்படும் நிலப் பிரபுக்களுக்கும் அவர்களிடம் வேலை செய்த குடியானவர்களுக்கும் இடையில் ஏற்பட்டது. கலவரங்கள் சில அற்ப காரணங்களால் உருவாகலாம்.//

    திரு.ஜெயகுமார் அவர்களே! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நம்ம கலவை.வெங்கட்.அவர்களின் மரியாதைக்குரிய மம திரு.மலர்மன்னன். அவர்கள் மாப்ளா கலவரம் பற்றி அவரது பார்வையில் முன்பே முன்மொழிந்ததை,இவர் பின் மொழிகிறார்.இவர்கள் வேலையே பொய்யை மெய்யாக்குவது.

    //இவ்விவசாயிகள் போராட்டத்தை, மதச்சாயம் பூசி இந்து-முஸ்லிம் கலவரமாய்ச் சித்தரித்து, நம்பூதிரிகளைக் காக்கும் முயற்சியில் இறங்கிய பார்ப்பனர்களும், உயர் சாதியினரும், ‘ஹிந்து மஹா சபை’ மூலமாய் ‘இந்துக்களே! ஒன்றுபடுங்கள்’ எனும் முழக்கத்தை முன்வைத்து, அதே நேரத்தில் ‘வர்ணாஸ்ரமம்’ எனும் நால்வர்ணப் பிரிவினையின் கீழ் ஒன்றுபடவேண்டும் என வற்புறுத்தினர்.
    ஆனால் ஜமீனின் சுரண்டலில் பாதிக்கப்பட்டிருந்த ஏழை இந்து விவசாயி இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்து மகா சபையின் பருப்பு அவர்களிடம் வேகவில்லை. இந்து விவசாயிகளும் மாப்ளா முஸ்லிம் எழுச்சியில் அவர்களுடன் கை கோர்த்தனர். முஸ்லிம் உழவரும், இந்து உழவரும் (குத்தகை விவசாயிகள்) இணைந்த ஆயுதப் போர் தொடர்ந்தது.
    அக்கிளர்ச்சியில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, காலனி ஆட்சி எதிர்ப்பு ஆகியன வெளிப்பட்டன.//

    http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20604285&edition_id=20060428&format=html

  10. Avatar
    smitha says:

    Jayabharathan,

    U are more keen in arguing that Gandhi is a mahatma. When Pakistan was carved out of India, he forced the Indian Govt to give 55 crores. Why?

    When many mosques & temples were demolished during partition, he insisted that mosques must be built with Govt money but not temples.

    Somnb

    Why?

    He openly sided with the minorities though they were in the wrong. Is this neutrality? Is this secularism?

    In Indi, if your are anti hindu U are secular but if you are anti minority, U are criminal?

    Strange logic.

    Justice should be meted out irrespective of religion/caste.

    He may be a mahatma to you bcos he supported the minorities but the truth id different.

    Pls take a closer study of Gandhgi & his impact on country before making such bkanket statements.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திருமிகு. ஸ்மிதா,

      ///When many mosques & temples were demolished during partition, he insisted that mosques must be built with Govt money but not temples.///

      Thanks for giving more examples to support my point of view. Yes Gandhiji was on the minority side all along. How could he say Hindu temples might be built by Hindu Govt. as they were the majority rulers and sure, they would do so.

      ///He openly sided with the minorities though they were in the wrong. Is this neutrality? Is this secularism ?///

      Please tell me when will the majority Hindus honestly say that the minority Muslims are right in their demands ?

      Great men like Leo Tolstoy, Bharathiar, Tagore, Albert Einstein, Martin Luther King, Mandala, Aung San Suu Kyi [Burma] praised Gandhiji for his new path of non-violence to achieve freedom for India.

      A Herculean freedom task like that of Gandhiji with 60 [?] crore multi-minded Indian people would surely have some pitfalls, which one might not relish.

      Regards,
      S. Jayabarathan

  11. Avatar
    smitha says:

    Just bcos Bharathiyar & Tagore have praised Gandhi does not make him a blunder.

    Gandhi’s blind support for the khilafat movement, his blind trust of Jinnah & total misreading of the situation lead to partition, the ill effects of which we are still experiencing today.

    When Rajaji warned Gandhi as early as in 1942 not to trust Jinnah & accept that Pakistan was an eventuality, Gandhi refused to pay heed to his words & Rajaji was branded a traitor.

    After all the bloodshed, he said that he should have listened to rajaji. But it was too late.

    1. Avatar
      சி. ஜெயபாரதன் says:

      திருமிகு. ரமா,

      Great men like Leo Tolstoy, Bharathiar, Tagore, Albert Einstein, Martin Luther King, Mandala, Aung San Suu Kyi [Burma] praised Gandhiji for his new path of non-violence to achieve freedom for India.

      Were they right or wrong in their assessment of Gandhiji ?

      Regards,
      S. Jayabarathan

      1. Avatar
        Kalavai Venkat says:

        Of course, they were wrong. That is what I point out in the concluding section of the story. You’re committing the logical fallacy of argument from authority when you argue that Gandhi must indeed be great because he was hailed as great by a few popular figures. That is a very unscientific approach.

        1. Avatar
          சி. ஜெயபாரதன் says:

          கலவை வெங்கட்,

          டால்ஸ்டாய், தாகூர், பாரதியார், ஐன்ஸ்டைன், மார்டின் லூதர் கிங், மண்டாலா, சூ கி ஆகியோர் யாவரும் சொல்வது தவறா. என்ன லாஜிக் இது ? ஆனால் உங்கள் ஒருவரது கூற்று உண்மை.

          இந்தியர் காந்திஜியைப் பற்றி அந்நியர் பலர் என்ன சொல்கிறார் என்பது முக்கியம். உள்ளூர்க்கார் நோக்கு குறுகியது. அந்நியர் நோக்கு நீண்டது. பரந்தது.

          சி. ஜெயபாரதன்

          சி. ஜெயபாரதன்

        2. Avatar
          BSV says:

          Of course, you are wrong. You have not read Jayabharatan’s post. He said leaders (as listed by him)

          “praised Gandhiji for his new path of non-violence to achieve freedom for India”.

          Note the words “new parth of non-violence to achieve freedom” These leaders (except the two writers) fought for freedom and following the example of Gandhi, non-violently and won. If they hadn’t won, there was no question of quoting Gandhi at all. For that simple reason, Gandhi can be rightly called Mahatma. Further, these leaders did not dissect Gandhi’s acts for logical fallacies like you do. They had no purpose for doing that whereas persons like you do have.

          Gandhi may or may not remain a Mahatma in Indian eyes thanks to the consistent efforts by RSS or BJP or variety Hindutva outfits; but in international imagination, his halo remains unpunctured. Hopefully, more so now due to strifes, conflicts and bloodshed everywhere.

  12. Avatar
    Rama says:

    As usual, my non politically correct comments on Gandhi, never see the light of the day in Thinnai. JB, Shalli et all, all get free rein but counterpoint and unpalatable views are ignored.

  13. Avatar
    ஷாலி says:

    அதெல்லாம் சரிதான் திரு.ராமா (ரமா) அவர்களே! சற்று சோம்பலை தவிர்த்து.தமிழில் அடிக்க முயற்சிசெய்யுங்கள்.
    செல்லினம் அல்லது Google Transliteration மூலம் சுலபமாக.

  14. Avatar
    சிவா says:

    காந்தி எனும் பிம்பத்தை மகாத்மா எனவும், தேசபிதா எனவும் உயர்த்தி பிடிப்பதையே வெறுத்துதான் அவர் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறார் பாருங்கள், எனகூறி அவரை சிறுமை படுத்த எண்ணுகிறார்கள் . பொது இடத்தில் ஒரு வார்டு எம்.எல்.எ வையோ, கவுன்சிலரையோ ஏன் பொது ஊடகமான சினிமா நாயகர்களையோ விமர்சித்து கருத்து கூறுவது இயலாத நிலையில், காந்தியை தன்னிஷ்ட படி வசைந்தாலும் யாரும் கேட்கமாட்டார்கள் எனும் நிலை வெட்க பட வேண்டியது . தன்னளவில் காந்தி யார் என்றோ அவரின் வரலாற்றின் சில பக்கங்களையோ படித்திராத ஒருவர் கூற நான் கேட்டது, ( டிசம்பர் 08 2015 – கொடுமழை நாள் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் – ரயிலில்) எல்லாம் இந்த காந்தியாலயும் நேருவாலயுந்தா, யாரு கேட்டா விடுதல, வெள்ளகார இருந்திருந்தா நல்லா நாலு அணை கட்டிருப்பான், இப்படி வெள்ளம் வந்தே இருக்காது .
    இவரின் கருத்து ஆங்கிலேயர் இந்தியாவை கண்கலங்காமல் பார்த்து கொண்டதாகவும், காந்தி இந்தியாவின் சம்மதமின்றி கதற கதற இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி குடுத்துவிட்டதாகவும் எண்ணுகிறார்.
    ஆங்கிலேயர் காலத்தில் நிகழ்ந்த தாது பஞ்சம், அவர்களின் வரிவசூலிப்பு முறை, போராட்ட அடக்குமுறை, இந்தியாவில் அவர்கள் சுரண்டியது போன்றவை முதலில் மக்கள் அறியட்டும். அதனை அறியாமல் அவர்கள் காந்தியை வசைபாடுவதற்கு, வரலாற்றை படித்து காந்தியின் புகழை ஏற்க முடியாமல், அவரை சிறுமை படுத்துபவர்களே காரணம் . இக்கதையில் //நீங்கள் எளிமையான வாழ்க்கையை விரும்புபவர் என்றாலும் உங்களுக்கு சுவர்க்கத்தில் ஒரு அரண்மனையையும், தோளில் கைபோட்டு நடக்க இரண்டு இளம் தேவதைகளையும் ஒதுக்கியிருக்கிறேன்//, //காந்திஜி தேவதைகளின் தோள்களை அணைத்தவாறு சுவர்க்க அரண்மனையை நோக்கி நடக்கத் தொடங்கினார்//. அற்புதமான அறிய கற்பனை, காந்தியை கொச்சை படுத்த வேண்டும் என முடிவு செய்து தலைப்பு முதல் இறுதி வரை எழுதிவிட்டு மாப்ளா போராட்டம் – காந்தியின் கருத்து- அதற்கு ஆதாரம் எனப்ன தேவையற்றது.

  15. Avatar
    Rama says:

    Shalli, you cannot teach old dog ( that is me) new tricks. It is over fifty years since I left school. I have not written in Tamil since. It is not lack of trying but ignorance on my part. But as long as you get my views, does it matter anyhow?

    1. Avatar
      BSV says:

      Lame excuse.

      பிறப்பிலிருந்து தமிழ் கேட்கிறோம் நம்மைச் சுற்றி. பின்னர் மழலை; சொற்கள்; சொற்றொடர்கள். உறவாடுதல் தமிழில். எப்;போது பள்ளிப்படிப்பு முடிவடையும்? நாம் 17 அகவையெய்தும்போது. ஆக, 17 வருடங்கள் தமிழ்ப் பேசி, எழுதி வாழ்ந்த பின் புலம்பெயர்கிறோம். மறந்துவிடுமா தமிழ்? கல்லூரி இரண்டாமாண்டிலேயே ;பட்டப்படிப்பை பாதியில் அம்போவென்று விட்டுவிட்டு தெலுங்கு பேசும் ஆந்திரா, மராட்டி பேசும் மும்பை, பின்ன்ர் ஹிந்தி பேசும் மாநிலங்கள். இணையம் வந்தபின்னே தமிழரோடு உரையாடுதல். ஆக, பல பத்தாண்டுகள் தமிழோடு தொடர்பில் இல்லை. எனக்கு மறகக்வில்லையே?

      The underlying reason is that you hate the language. You seem to link the speakers with the language. Transference of hatred. புருஷன் மேலேயுள்ள கோபத்தில் பிள்ளையைப் போட்டு மொத்தினாளாம். Transference of hatred.

      புருஷன் மேலேயுள்ள கோபத்தில் பிள்ளையைப் போட்டு மொத்தினாளாம். அவளாவது, நான் பெத்தேன்; நான் மொத்திறேன். என்பாள். நீங்கள்?

  16. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    திரு ரமா அவர்களே,

    என் வயது 82. தமிழில் எழுதுவது மிக மிக எளிது. வயது இளமையாய் இருந்தால்தான் தமிழில் எழுத முடியும் என்றோர் வரையறை கிடையாது. தமிழை வாசிக்கக்கூடிய திறன் எப்படி வந்தது ? ஆங்கிலம் எழுதுவது போல் ஆங்கிலக் கீபோர்டில் தட்டித் தமிழும் எழுதலாம். இது ஒன்றும் ராக்கெட் சையன்ஸ் இல்லை.

    ஏகலப்பை மென்சாதனம் [eKalappai Software Program] இறக்கிப் பயன்படுத்தலாம். மிக எளிது.

    சி. ஜெயபாரதன்

  17. Avatar
    BSV says:

    //படித்திராத ஒருவர் கூற நான் கேட்டது, ( டிசம்பர் 08 2015 – கொடுமழை நாள் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகில் – ரயிலில்) எல்லாம் இந்த காந்தியாலயும் நேருவாலயுந்தா, யாரு கேட்டா விடுதல, வெள்ளகார இருந்திருந்தா நல்லா நாலு அணை கட்டிருப்பான், இப்படி வெள்ளம் வந்தே இருக்காது .//

    சொன்னவர் ஓர் ஆதங்கத்தில் சொன்னதைத் தவறாக புரிந்திருக்கிறீர்கள். அவர் சொன்னது காந்தி, நேரு என்ற கட்டதினுள் வைத்து பார்க்கக்கூடாது. இற்றை நாளில் நாடு எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது எனறு விரிந்த பார்வையில் சொல்கிறார். முரட்டுக்கண்வன் வேண்டாமென இன்னொருவனைக் கட்டியவள் அவனிடம் அடி உதை வாங்கும்போது முந்தைய ஆள் எப்போதாவதுதான் முரட்டுத்தனம்.இவ்னோடு நேரந்தவறாமல் கொல்கிறானே என்றால், அவளிடம் போய், முந்தைய ஆள் மோசமானவன்; இவன் பரவாயில்லை என்றா எடுத்துச்சொல்வீர்கள்?

    அவர் சொல்வதில் இன்னொரு கருத்தும் புதைந்து கிடக்கிறது. பொதுவாக ஐரோப்பியர் குணம் தொடரும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பது. தொலை நோக்குப்பார்வை. நகரங்களை அமைக்கும்போதே வெள்ள அபாயத்திலிருந்து தடுக்க அமைப்;புக்களையும் சேர்த்து உருவாக்குவது. அப்படி இல்லையாயினும் ஒரு தடவை வெள்ள அபாயம் வந்தால், அதைத் தடுக்க தாற்காலிக நடவடிக்கை முடிந்தபின் நிரந்தர அமைப்பு உருவாக்க முனைவது.

    இக்குணம் நம்மிடம் எங்குமே இல்லை எனப்துதான் அவர் சொன்னது. என்ன பெரிய சுதந்திர இந்தியா என்று பீற்றிக்கொள்கிறீர்கள்! சென்னையையே எடுத்தாலும் அது தாறுமாறாக விரிகிறது. எந்த வருமுன் காப்போம் என்ற சிந்தனை எவருக்குமே இல்லை. சென்னையைப்பார்க்கும் போது: அதே சொற்களைத்தான் நானும் சொல்வேன்: வெள்ளைக்காரன் இருந்திருந்தால் வெள்ளம்வராமல் தடுத்திருபபனே? தேனி மதுரை மாவட்டங்களுக்கு நீர் ஆதாரத்தைத் தந்த பென்னி க்விக் மாதிரி என்ற் பெருமூச்சு எழுமெனக்கு. சுதந்திரம் கிடைத்தவுடன் என்ன செயுதீர்கள்? நீர்நிலைகளையெல்லாம் அளித்து வீடுகளைக் கட்டிக்கொண்டீர்கள். சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. இல்லையா? வெள்ளைக்காரன் செய்வானா?

      1. Avatar
        சிவா says:

        ஆங்கிலேயரில் ஒருவர் தனது தேசத்தையும் எதிர்த்து கட்டிய அணையை அந்நாட்டினர் சார்பில் சேர்க்க இயலாது, அவர்கள் பெரும்பாலும் கட்டியது ரயில் தடம், சில சாலைகள் மற்றும் சென்னை செயற்கைதுறைமுகம் . நன்கு கவனித்தீர்களேன்றால் அது அனைத்தும் போக்குவரத்துகாக பயன்படுவன என்றும் இந்திய இயற்கை வளங்களை சுரண்ட மட்டுமே பயன்படும் என்றும் அறியலாம், 200 ஆண்டுகால ஆளுமையில் அவர்கள் செய்யாததை விடுதலை பெற்ற இவ் 60 ஆண்டுகளில் செய்திருக்க வாய்ப்புள்ளது என நம்புவது மிகவும் முட்டாள்தனமானது.

    1. Avatar
      சிவா says:

      மிகவும் சரி தான் நீங்கள் சொல்பவை எல்லாம், வரும்முன் காப்போம் என்கிற எண்ணமும் கிடையாது, அதற்கான தீர்வின் கண்ணியும் அறியாது தான் இருக்கிறார்கள், ஆனால் அது பற்றி பேசுவது தனி விவாதமென்று விரியும் . நேரு hirakut, bakranangal என்ற மாபெரும் இரு அணைகளை கட்டியவர், காந்தி இறுதிவரை கிராமங்களை நோக்கி செல்லுங்கள் என்று சொன்னவர், அவர்கள் தேசத்தின் எதிர்காலம் சிந்தித்து செயல் படுபவர்களே, நாம் சிந்திக்காதது அவர்கள் தவறு அல்ல, மேலும் முழுக்க முழுக்க hyderabad இந்தியர்களால் வடிவமைக்கபட்ட மிக சிறந்த வடிகால் அமைப்பும், நீர்மேலாண்மையும் கொண்டது, நம்மை அனைத்து நகரங்களையும் அவ்வாறு அமைக்க இயலாதது முற்றிலும் இக்கால அரசியலே, ஆங்கிலேயர்களை இவ்விவாதத்தின் உள்ளே அனுமதிப்பது சரியில்லை.

  18. Avatar
    smitha says:

    Jayabhrathan,

    “Please tell me when will the majority Hindus honestly say that the minority Muslims are right in their demands ?”

    It is because hindus are so tolerant that the minorities are much better off in India than in any other country.

    Do you know the plight of minority hindus in pakistan?

    Seems like you do not.

    It is not a question of whether Gandhi is great or not. An
    honest assessment is necessary. Not blindly deifying him.

  19. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    மிஸ். ஸ்மிதா

    ///It is because hindus are so tolerant that the minorities are much better off in India than in any other country.///

    என் கருத்தை மீண்டும் உறுதிப் படுத்துவதற்கு நன்றி. இந்தியப் பெரும்பான்மை இந்துக்களின் பொறுமைப்பாட்டுக்கு யார் காரணம் ? மகாத்மா காந்தி. படேல் இல்லை. வீர சாவர்க்கர் இல்லை. ராஜாஜி இல்லை.

    காந்திஜி இல்லாது போயிருந்தால் இந்தியாவும் பாகிஸ்தான் போல் மாறி இருக்கும்.

    தென் ஆப்ரிக்காவில் அனுபவம் பெற்ற காந்திஜியை இந்திய சுதந்திரப் போராட்டத்து அழைத்து வந்தவர், மராட்டிய கோகலே. அவர் மராட்டிய வீர சாவர்க்கரையோ, குஜராத் படேலையோ விடுலைப் போராட்டத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கவில்லை.

    Gandhiji is really great nationally or internationally whether you like it or not. You are free not to agree.

    சி. ஜெயபாரதன்

  20. Avatar
    smitha says:

    Jayabharathan,

    Since you blindly adore Gandhi, you are unable to make a logical assessment.

    Anyway to each his own.

  21. Avatar
    Ali says:

    Mappila Riots or Mappila Outbreaks refers to a series of riots by the Mappila (Moplah) Muslims of Malabar, South India in the 19th century and the early 20th century (c.1836–1921) against native Hindus and the state. The Malabar Rebellion of 1921 is often considered as the culmination of Mappila riots.[1] Mappilas committed several atrocities against the Hindus during the outbreak. Annie Besant reported that Muslim Mappilas forcibly converted many Hindus and killed or drove away all Hindus who would not apostatise, totalling to one lakh (100,000)

Leave a Reply to BSV Cancel reply

Your email address will not be published. Required fields are marked *