மாயமனிதன்

This entry is part 10 of 16 in the series 16 ஆகஸ்ட் 2015

காலையில்
நான் செய்தித்தாளில்
ஆழும் போது
அவன் தென்படுவான்
வாசிப்பில் எனக்குள்
ஓடும் எதிர்வினைகளை
அவன் பகடி செய்பவன்

என் செயல்களின்
வரிசையில்
இயந்திரத்தனமும் அடிமைத்தனமும்
அபூர்வ கிறுக்கு நொடிகளும்
அவனுக்கு
வேடிக்கையாய்

குறுஞ்செய்திகள் கைபேசி அழைபுகள்
இவற்றில் என் வேடங்கள்
அபிநயங்கள் மீது
அவன் விமர்சனம்
என்னை விரக்திக்கே தள்ளும்

எனக்கு முன்னால்
தூங்கி
நான் உறங்கும்போது
எழுந்து நடமாடி பின் உறங்கி
நான் விழித்த பின் எழுபவன் அவன்

என் இடங்களை
அவன் ஆக்கிரமிக்க
என் மௌனம் பிடிப்புள்ளதாய்
என் நடமாட்டம் அன்னியமாய்

என் கையிலிருக்கும் புத்தகத்தை
வாசிப்பான்
“உன் எழுத்தை விட இது
செறிவானது” என்பான்

ஒரு நாள்
நூலகத் தில்
என் கையிலிருக்கும்
புத்தகத்தை விட்டு
வேறு ஏதோ
தேடினான்

வெகு நேரம் கடந்து
நான் வீடு திரும்பும் போது
அவன் உடன் இல்லை

Series Navigationயாப்பு உறுப்பு: கூன்டெங்கூஸ் மரம்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *