மீளா நிழல்

This entry is part 23 of 32 in the series 24 ஜூலை 2011

*
கைப்பிசைந்து நிம்மதியிழக்க நேர்கிறது
இப்பெரு அமைதியில்

காலடி ஓசைகளின் அதிர்வில்
நடுங்குகிறது நிற்கும் நிழல்

ஒளி கசியும் ஜன்னல் திரையில்
மடிந்து மடிந்து தொங்குகிறது
மீளா துக்கம்

கையெழுத்து இடச் சொன்ன படிவத்தில்
உறுதி செய்து கேட்கிறார்கள்
அவன் மரணத்தை

வெண்துணி போர்த்திய உடலென
வருகிறான் பின் எப்போதும் பார்க்க விரும்பாத
விழிகள் நிலைக் குத்த..

*****
–இளங்கோ

Series Navigationதையல் கனவுகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அன்புமயமும் சமத்துவமும் (Love & Equality) (கவிதை -47 பாகமும் -1)
author

இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *