முனைவர் ரெ.கார்த்திகேசுவின் “விமர்சன முகம் 2”, “நீர்மேல் எழுத்து” இரு நூல்கள் வெளியீட்டு விழா

author
0 minutes, 8 seconds Read
This entry is part 12 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

நாடறிந்த தமிழ் எழுத்தாளரும் புத்திலக்கிய விமர்சகருமான முனைவர் ரெ.கார்த்திகேசுவின் இரு புதிய நூல்கள் தலைநகரிலும் கெடா மாநிலத்தில் லுனாசிலும் வெளியீடு காணுகின்றன.

தமிழ்ப் புத்திலக்கியத்தை உலக அளவில் கவனித்து விமர்சித்து வரும் அவருடைய சமுதாய, இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல் “விமர்சன முகம் 2”.  அவருடைய அண்மைய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நூல் “நீர் மேல் எழுத்து”. இதில் அவர் மலேசிய இதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிய புதிய கதைகளும் ஒரு குறுநாவலும் உள்ளன.

 

தலை நகர் வெளியீட்டு விழா:

 

குவால லும்பூரில் நூல்கள் வெளியீடு ஆகஸ்ட் 27ஆம் நாள் (திங்கள் கிழமை) மாலை 5.30க்கு கிராண்ட் பசிஃபிக் தங்கும் விடுதியில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவோடு நடைபெறும். நிகழ்வுக்கு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். சங்கத்தின் செயலாளர் ஆ.குணநாதன் வரவேற்புரை நல்குவார். தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் தலமை நிர்வாகி டத்தோ பி.சகாதேவன் முன்னிலை வகிப்பார். மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறைத் தலைவர், இணைப் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் நூல்களை அறிமுகம் செய்வார். முதல் நூல்களை டத்தோ பி.சகாதேவன் அவர்களும், “சோழன் வென்ற கடாரம்” நூலாசிரியர் டத்தோ வீ.நடராசன் அவர்களும் பெற்றுக்கொள்வார்கள்.

 

வெளியீட்டு விழாவுக்குச் சிறப்புச் சேர்ப்பிக்க வந்திருக்கும் மதுரைக் காமராஜ் பல்கலைக் கழகப் பேராசிரியரும் புத்திலக்கியத் திறனாய்வாளருமான இரா.மோகன் நூல்கள் குறித்துத் திறனாய்வுப் பேருரை நிகழ்த்துகிறார்.

 

கெடா, லூனாசில் வெளியீட்டு விழா.

 

இந்த இரு நூல்கள் வெளியீட்டு விழா கெடாவில் லூனாசிலும் தியான ஆஸ்ரமத்தின் தலைவர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் அரவணைப்பில் நடைபெறுகிறது. ஆசிரமத்தில் செப்டம்பர் 7ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியீட்டு விழா நிகழும். நாவல் ஆய்வாளர் த.குமாரசாமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். “நீர் மேல் எழுத்து” நூலினை எழுத்தாளர், கவிஞர் கோ.புண்ணியவானும், “விமர்சன முகம் 2” நூலினை சுங்கைப் பட்டாணி துங்கு அப்துல் ஹாலிம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் ப.தமிழ்மாறனும் அறிமுகப் படுத்துவார்கள். சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி தலைமை உரையாற்றி நூல்களை வெளியிடுவார். முதல் நூல்களை கெடா சட்டமன்ற முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ சுப்பிரமணியம் அவர்களும் டத்தின் தாமரைச்செல்வியும் பெற்றுக் கொள்வார்கள்.

 

நூல் ஒவ்வொன்றுக்கும் ரிம.25.00 என விலையிடப்பட்டிருந்தாலும் வெளியீட்டு விழாவில் மட்டும் இரண்டு நூல்களையும் சேர்த்து  ஒரே நூலின் விலைக்குப் பெற்றுக்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவிக்கின்றனர்.

 

இந்தநூல் வெளியீட்டினை ஆதரிக்குமாறு இலக்கிய ஆர்வலர்களும் தமிழ்ப் பற்றாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

(Professor Ira. Mohan)

 

 

 

 

 

 

 

(Datuk B. Sahadevan)

 

 

 

(Smami Brammanandha Saraswathy)

 

Series Navigationஇந்திய மக்களாட்சியின் பாதையில் தேர்தல்முறை(98) – நினைவுகளின் சுவட்டில்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *