முன்னறிவிப்பு

This entry is part 11 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011


 

இரைச்சலில்லை

வருடிச் செல்லும் காற்று

மண்ணைத் தின்னும் புழுவாக

காலநதியில்

கால் நனைத்துக் கொண்டிருந்தது

மனம்

நேற்றைக்கும் இன்றைக்கும்

வித்தியாசம் இருப்பதால் தான்

வாழ முடிகிறது

இரைக்கு ஆசைப்பட்ட மீன்

உலையில் கொதிப்பது போல

இன்பத்துக்கு ஏங்கும் உள்ளத்தால்

மீண்டும் மீண்டும்

பிறவி எடுக்கிறோம்

கண்ணைப் பார்த்து

பேச முடியவில்லை இப்போது

உள்ளேயும் சாக்கடை

வெளியேயும் சாக்கடை

பெண்ணின் நினைப்பு

லேசில் விடாது போலிருக்கு

பீஷ்மரைப் போல் வாழ

யாருக்குத்தான் ஆசை இருக்காது

நேற்று வந்தான்

இன்றும் வந்தான்

நாளையும் வருவான்

வானத்துக்கு கீழேயுள்ள

ஒவ்வொன்றையும்

பேசிப் பேசி தீர்த்தாலென்ன.

 

 

 

 

 

 

 

ப.மதியழகன்

Series Navigationஎங்கிலும் அவன் …(75) – நினைவுகளின் சுவட்டில்
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *