வடகிழக்கு இந்தியப் பயணம் : 11 

This entry is part 10 of 13 in the series 29 மே 2022

 பாறைகளும், குகைகளும் வேர்ப்பாலங்களும் 

சுப்ரபாரதிமணியன்

பிரபு சாலமன் இயக்கிய ” கயல்” படத்தில் சிரபுஞ்சி வேர்பாலத்தில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. காதல் ரசம் சொட்டும் நெருக்கம் காதலர்களிடம் இருக்கும் .அதை கவனித்த சென்னை கண்ணய்யா அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமென்றார். அந்த இடம் டூயட் பாட இளசுகளுக்கானது. வேடிக்கை பார்க்க கூட வயதானவர்கள் அங்கே போய் சிரமப்படக்கூடாது என்றேன்.


டபுள் டக்கர் வேர்ப்பாலம் ஒன்று உள்ளது. அதைக்காணச் செல்லவே சிரமப்பட வேண்டியிருந்தது.

. இதே சிரபுஞ்சியில் அமைந்த புகழ் பெற்ற ஒரு இடம் தான் டபிள் டெக்கர் பாலம்..3000 படிக்கட்டுகள் முதலில் இறங்க வேண்டும்.. திரும்பும் போது ஏற வேண்டும்..

.இரு அட்டகாசமான தொங்கு பாலங்கள் உள்ளன.

டபிள் டெக்கர் பாலம் மரத்தின் வேர்களால் ஆனது. இரண்டு அடுக்ககளில் கீழும் மேலுமாய் இருக்கும் இதன் அமைப்பு மட்டுமல்ல, அருகில் இருக்கும் அற்புத இயற்கை நீச்சல் குளமும் அற்புதம்திரும்பும் போது பாதி வழி வரை அதிக சிரமம் இல்லை; ஆனால் கடைசி பகுதியில் 2000 படிக்கட்டுகள் செங்குத்தாக ஏறவேண்டும்..

இதேபோல் கண்ணையா அவர்களிடம் நான் போகக்கூடாத இடம் என்று ஆர்வா குகை போன்றவற்றைச் சொன்னேன் .

 

வகைவகையாய் குகைகள் . விதவிதமானப் பாறைகள். ராட்சத மனிதர்களைப் போல்.
சுண்ணாம்புக்கல் குகைகள் இவை. பூமியின் கீழே இயற்கையாகவும், தண்ணீரின் ஓட்டத்தால் ஏற்பட்ட அரிப்புகளாலும் சுண்ணாம்புக் கற்களில் பற்பல உருவங்கள் உருவாகி இருப்பதை காண முடியும்.

 

 

 

ஒவ்வொரு பாறைகளிலும் பல உருவங்கள் –இறைவன் உருவமோ, மனித உருவமோ, பறவைகள், விலங்குகள், என எதுவாகவும் இருக்கலாம். கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு ஒவ்வொரு உருவமாகப் பார்த்துக் கொண்டே செல்கிறார்கள் எத்தனை எத்தனை உருவங்கள். எத்தனை விதமான வடிவங்கள். இயற்கையாகவே உருவானவை என்பதால் ஒவ்வொரு உருவமும் இப்படி உருவாக எத்தனை வருடங்கள் ஆகி இருக்கும்

 

 

 

உள்ளேப் போகப்போக பல இடங்களில் குனிந்தும், தவழ்ந்தும், ஊர்ந்தும் செல்ல வேண்டிய அளவிற்கு இருந்தது அந்தக் குகை. எல்லா இடங்களிலும் மின்விளக்குகள் பொருத்தி இருப்பதால் கொஞ்சம் பயமில்லை என்றாலும், மின்விளக்கு இல்லாத சமயத்தில் என்ன ஆகும் என்ற எண்ணமும் வருவதை தடுக்க முடியவில்லை. விதம் விதமான சந்துகளில் புகுந்து வெளிவருவது கொஞ்சம் சவாலாகவே இருந்தது.

 

 

 

.

 

ஒரு சில இடங்களில் பாறைகளின் மேலே இருந்து வெளிச்சம் வரும் அளவிற்கு சிறிய ஓட்டைகளும், சில இடங்களில் பெரிய இடைவெளியும் இருந்தது. அவை மூலமும் வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது. பல இடங்களில் பாறைகளையும், அவர்களில் இயற்கை வடித்திருக்கும் சிற்பங்களைப் பார்த்தபடியே வந்தாலும், நடுநடுவே எங்களின் மறைத்து வைத்திருக்கும் வாலும் எட்டிப்பார்த்தது. அப்படி எட்டிப் பார்க்க, சில பாறைகள் மீது தத்தித் தாவி ஏறி பாதையை விட்டு விலகி மேலே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க பல வித்தைகள் தெரிந்திருக்க வேண்டும்

 

 

 

 

 

சில இடங்களில் குனிந்து சென்றாலும், நிறைய இடங்களில் பத்து பன்னிரெண்டு அடி உயர இடைவெளியும் இருந்தது. உள்ளே பல இடங்களில் கம்பிகள் கொண்டு பாதைகள் அமைத்திருக்கிறார்கள் – சில சமயங்களில் அந்த இடங்களில் தண்ணீர் வரும் எனவும், அந்தச் சமயத்தில் அவற்றைக் கடக்க இந்த இந்தப் பாலங்கள் பயன்படும் எனவும் தோன்றியது..

….

 

இந்தக் குகைகள் மிக நீளமானவை என்றாலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவது 150 மீட்டர் தொலைவு மட்டுமே. அதற்கு மேல் குகைக்குள் செல்வது சற்றே ஆபத்தானது – உள்ளே நுழைந்து வெளியே வர முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது! மேகாலயா சென்றால், பார்க்க விடக்கூடாத இடங்கள் இரண்டு – ஒன்று இந்த மாஸ்மை சுண்ணாம்புக்கல் குகைகள், மற்றது மரங்களின் வேர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலங்கள் –இது ஒரு நண்பரின் அனுபவம்.

 

பிரையன் டி. கார்ப்ரான் அனுபவம் கீழே ..

“பயணத்தில் நீங்கள் தனித்து போய்விட்டால் வெளியேறும் வழியை கண்டுபிடிக்க முடியாது” என்று, குகைக்கு செல்லும் கரடுமுரடான பாதையில் பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பிரையன் டி. கார்ப்ரான் முன்னெச்சரிக்கை விடுத்தார்.

காடுகளின் சரிவுகளில் மரங்கள், தாவரங்களுக்கு இடையே ஏறக்குறைய ஒரு மணிநேரம் கடந்து, குகையின் நுழைவாயிலை அடைந்தோம். உள்ளூர் காஷி மொழியில் ‘க்ரெம் புரி’ என்று அழைக்கப்படும் அந்த குகையை தமிழில் மொழிபெயர்த்தால் ‘தேவதைகளின் குகை’ என்று பொருள் வருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 4,025 அடி (1227 மீ) ஆழமான செங்குத்தான பள்ளத்தாக்கின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ‘தேவதைகளின் குகை’. 24.5 கிமீ நீளமும் (15 மைல்), 13 சதுர கிமீ பரப்பளவையும் உள்ளடக்கிய இந்த குகை, ஜிப்ரால்டரைவிட இருமடங்கு பெரியது.

பூமியிலேயே மிக அதிக மழை பெய்யும் பகுதியாக அறியப்பெற்ற மாசிம்ராம் பசுமை சமவெளிகளில் 13 சதுர கிமீ பரப்பளவில் ஜிப்ரால்டர் விரிந்து பரந்துள்ளது.

வெனிசுவேலாவின் 18.7 கிமீ நீளம் கொண்ட ‘இவாவரி யியூடா’ என்ற குகையே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உலகின் மிக நீண்ட குகையாக கருதப்பட்டது.

71 வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் பிரையன் டி. கார்ப்ரான் குகைகளைப் பற்றிய பல விஷயங்களை அறிந்திருக்கிறார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டாக இந்த அழகிய மலை மாநிலத்தில் குகைகளை தேடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

 

பட மூலாதாரம்,RONNY SEN

1992ம் ஆண்டு அவர் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கியபோது, மேகாலயாவில் ஒரு டஜன் குகைகள் மட்டுமே இருந்தன.

26 ஆண்டுகளில் 28 தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அவர், 30 ஆய்வாளர்கள் கொண்ட வலுவான சர்வதேச குழு ஒன்றை உருவாகியுள்ளார்.

புவியியலாளர்கள், நீர்வாழ் உயிரின நிபுணர்கள், உயிரியலாளர்கள், தொல்லியல் துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு துறையை சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, மாநிலத்தில் 1,650 குகைகளை கண்டறிந்துள்ளது.

தற்போது உலகின் மிகவும் சிக்கலான குகை அமைப்புக்கள் கொண்ட இடமாக அறியப்படும் மேகாலயா மாநிலத்தில் நாட்டிலேயே மிக அதிகமான குகைகள் உள்ளது தெரியவந்துள்ளது.

சரி, இப்போது தேவதைகளின் குகைக்குள் செல்ல நாங்கள் தயாராகிவிட்டோம்.

வழிகாட்டுவதற்காக விளக்குகளை கொண்ட கடினமான தொப்பிகளை அணிந்த நாங்கள், இருளில் நுழைந்தோம். இடப்புறம் கீழ்ப்பகுதியில் சிறிய நடைபாதை உள்ளது. இந்த மூடப்பட்ட, இருண்ட குகை மீள முடியா அச்சத்தை (கிளாஸ்ட்ரோஃபோபியா) ஏற்படுத்தும்.

துளைகள் மூலம் உள்ளே செல்ல விரும்பினால், குகை ஆராய்ச்சி உடையை (cave suits) அணிந்திருக்க வேண்டும். அப்போது குகையின் வாயிலில் இருந்து தவழ்ந்தவாறே செல்லலாம். நான் அந்த பிரத்யேக உடையை அணியாததால், அந்த சந்தர்ப்பத்தை இழந்து விட்டேன்.

பட மூலாதாரம்,MARCEL DIKSTRA

பிரதான நடைபாதையில், இரண்டு பெரிய பாறைகள் ஒன்றாக காணப்பட்டன. முன்னோக்கி செல்வதற்கு, அவற்றின்மீது ஏற வேண்டும் அல்லது அவற்றிற்கு நடுவே நீந்திச் செல்ல வேண்டும்.

நான் புத்திசாலித்தனமாக இரண்டு வழிகளிலும் முயற்சி செய்தேன், ஆனால் என்னுடைய காலணிகள் பாறைகள் இடையே சிக்கிக் கொண்டன. தண்ணீரில் மூழ்கியுள்ள பாறைகளைத் தாண்டிச் செல்கிறோம், அங்கு நீரோட்டம் மெதுவாக உள்ளது. மழைக்காலத்தில் நீரோட்டம் வேகமாகிவிடும்.

சுவரில் ஒரு பெரிய சிலந்தி இருப்பதை கண்டறிந்தார் பிரையன் கர்ப்ரான். அதுமட்டுமல்ல பாறையின் சுவர்களில் படிந்திருப்பது சுறாவின் பல் அச்சாக இருக்கலாம் என்று புவியியலாளர்கள் கருதுகின்றனர்.

“இந்தக் குகை பல ரகசியங்களை தன்னுள் மறைத்து வைத்துள்ளது” என்கிறார் அவர்.

ஒரு பெரிய வலையமைப்பில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான குறுகிய பாதைகளும், நீண்ட வழித்தடங்களையும் கொண்ட இந்த தேவதைகளின் குகை நம்பமுடியாத தனித்துவமான தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இந்த குகையில் வழக்கமாக பிற குகைகளில் காணப்படுவது போன்ற ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மைட்டுகள்) கணப்படுகின்றன. அதாவது நிலத்தின் மேற்பரப்பில் இருந்து கனிமங்கள், நீர் போன்றவை குகையின் உச்சியில் கசிந்து ஏற்படும் தோற்றம் விதானம் போன்று இருக்கும், அதை ஸ்டாலாக்டைட் என்கிறோம். அதேபோல் நிலத்தின் கீழ்பரப்பில் இருந்து கசிவதால் ஏற்படும் தோற்றம் ஸ்டாலாக்மைட் எனப்படும்.

தவளைகள், மீன்கள், பிரம்மாண்ட சிலந்திகள் மற்றும் வெளவால்கள் என ஏராளமான உயிரினங்களும் இங்கு காணப்படுகின்றன.

“இந்த குகைகளை ஆய்வு செய்வது மிகவும் கடினமான சவால்” என்கிறார் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த குகை மற்றும் குகை வரைபட நிபுணர் தாமஸ் அர்பென்ஸ்.

நிலத்தடி பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்கப்படும் குகையின் வரைபடத்தை உன்னிப்பாக கவனித்தால், குகை, அதன் பாதைகள், மேடு-பள்ளங்கள், பாறைகள் மற்றும் பெரிய பாறைகளின் எல்லைகளில் சர்வேயர் பெயர்களையும், குறிப்புகளையும் காணலாம்.

பட மூலாதாரம்,RONNY SEN

26 ஆண்டுகளாக குகைகளை தேடும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் பிரையன் டி. கார்ப்ரான்

உதாரணமாக, பள்ளத்தாக்கில் நடுப்பகுதியில் அமைந்துள்ள ‘கிரேட் வொயிட் ஷார்க்’ என்ற சாம்பல் பாறையை காணலாம். பார்ப்பதற்கு சுறா போன்ற தோற்றத்தில் இருக்கும்.

மணற்பாறைகளில் நடப்பது உண்மையிலுமே மிகப்பெரிய சவால். குறுகிய ஆபத்தான அச்சுறுத்தும் இடங்களில் தவழ்ந்து செல்லும் அனுபவம் கற்பனை செய்தே பார்க்க முடியாதது. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பதும் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது.

குகைகளை தேடி கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானி பிரான்செஸ்கோ சாவ்ரோ, சில சுறா பற்களை அடையாளம் கண்டதாகச் செல்கிறார்.

கண்டுபிடிக்கப்பட்ட சில எலும்புகள், 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கடல்வாழ் டைனோசர்களாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம்,RONNY SEN

“இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் பல பொருட்கள் அறிவியலாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்ட பிறகே, மனிதர்கள் இங்கு வாழ்ந்தார்களா என்பது தெரியவரும்” என்கிறார் செளரோ.

ஆனால் அதற்கான வாய்ப்புகள் கண்ணுக்கு எட்டிய வரையில் தெரியவில்லை என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏனெனில் ஆதி மனிதர்கள் வசிப்பதற்கு பெரிய அளவிலான குகைகளையே தேர்ந்தெடுப்பார்கள்.

அதோடு, மழைக்காலங்களில் தங்குவதற்கு இந்த இடம் பொருத்தமானது அல்ல. மேகாலயா அதிக மழை பெய்யும் இடமாக இருப்பதால், இங்குள்ள பெரும்பாலான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே சொல்லலாம்.

மழைநீர் காற்றில் இருந்து கரியமில வாயுவை ஈர்ப்பதால் சுண்ணாம்புப் பாறைகள் கரைந்து வலுவிழந்துவிடும். பொதுவாக மணற்கல்லால் உருவாகும் குகைகள் அரியவை. ஏனெனில் இந்த வகை பாறைகளின் கரையும் திறன் குறைவு. தாழ்வான இடத்தில் இருக்கும் பாறைகளை கரைக்கவும், அதில் வெற்றிடத்தை உருவாக்கவும், மிக அதிகமான அளவு நீர் தேவைப்படும்.

 

பட மூலாதாரம்,MARCEL DIKSTRA

உலகிலேயே மிக அதிகமான மழைப்பொழிவை கொண்ட மாநிலம் மேகாலயா. எனவே, இங்கு இத்தகைய மணற்குகைகள் வியத்தகு முறையில் உருவாக்கப்படுவது ஆச்சரியமளிக்கவில்லை.

தேவதைகளின் குகை போன்ற குகைகள், இந்த இடத்தின் உலகின் காலநிலை மற்றும் வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுகின்றன.

“இவை புவியின் உட்பகுதியில் உள்ள சூழல் தொடர்பான பாதுகாக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன” என்று கூறுகிறார் மேகலயாவில் இருக்கும் குகைகளைத் ஆரயும் ‘கிளவுட்ஸ் எக்ஸ்பேடிஷன்’ அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சைமன் ப்ரூக்ஸ்.

பூமி இந்த “மேற்பரப்பு காப்பகங்கள்” கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்பட்ட பனிச்சரிவு, எரிமலைகளின் செயல்பாடு, வெள்ளம் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தடயங்களை பாதுகாக்கின்றன.

மேகாலயாவில் இருக்கும் குகைகள் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கின்றன. 31.1 கி.மீ நீளம் கொண்ட லயட் பிரா (Liat Prah) சுண்ணாம்பு குகை அமைப்பும் இந்த மலைத்தொடரில்தான் அமைந்துள்ளது. அதிகபட்ச உயரத்தில் இருந்து, குறைந்த உயரம் வரையிலான இந்த ஆழமான குகைகள் 317 மீட்டர் முதல் 97 மீட்டர் வரையிலானவை.

பெரும்பாலான குகைகளில் எப்போதுமே மனிதர்கள் வசித்ததே இல்லை என்பது உண்மையாக இருந்தாலும், போர்க்காலத்தில் தஞ்சம் புக சில குகைகள் பயன்பட்டால், சிலவற்றை வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அதோடு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கும் சில குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம்,RONNY SEN

தேவதைகளின் குகையில் கிடைத்த சில பொருட்கள்

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் சுண்ணாம்பு வர்த்தகம் இந்த குகைகளுக்கு மாபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. (மேகாலயாவில் நிலக்கரி சுரங்கங்களைத் தடுப்பதற்காக, 2007இல் கார்ப்ரான் உச்சநீதிமன்றத்திற்கு சென்றார்.)

தேவதைகளின் குகையில் வெப்பநிலை எப்போதும் 16-17 டிகிரிக்கு இடைப்பட்ட நிலையிலேயே இருக்கும். இங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை, ஏனெனில் இந்தக் குகையின் சிறிய பிளவுகள், விரிசல்கள் மற்றும் இரண்டு நுழைவாயில்கள் வழியாக காற்றோட்டம் நன்றாகவே இருக்கிறது. பிரையன் டி. கார்ப்ரான் இணையதளக்குறிப்புகள் குகைகள் பற்றிய இவ்வகை ஆய்வுகளைச் சொல்கின்றன.

 

பிரையன் டி. கார்ப்ரான் வார்த்தைகளை அடையாளம் காண மெனக்கெட வேண்டியிருக்கும் சிரமப்பட வேண்டியிருக்கும். இது போல் பல குகைகள் உள்ளன. 1700 ..குகைகள் என்றாலே வாகனத்திலிருந்து இறங்க மறுத்த பலருள் நானும் ஒருவனாகிப் போனேன்ஓரிரு நாட்களிலேயே .

பாறைகளில் இருக்கும் கன்னிகளைக்காணவேண்டாமா என்றார் மு.சாமி

பாறை உருவங்களா

இல்லை. நிஜமாகவே கன்னிகள்

கன்னிகளைத் தேடும் முன் கொஞ்சம் பாறைகளுக்குள் நடக்க ஆரம்பித்தாலே தண்ணீர் தாகம் வாட்டியெடுக்கும்.

எனக்குத் தேவை தண்ணீர் .சிரமப்படுவதால் வரும் கண்ணீர் அல்ல

சரி.. கயல் படம் போல் ” சிரபுஞ்சி சாலையிலே” என்று ஒரு தமிழ்ப்பாடல் உள்ள படத்தின் பெயர் தெரியுமா ..

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]பாலினப் போர் 
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *