வாசிக்கும் கவிதை

author
0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

அம்பல் முருகன் சுப்பராயன்

===============

நேற்று முளைத்த

வார்த்தைகளால்

சமைத்த கவிதை..

என்

மனைவிக்கு உவர்ப்பானது..

மகளுக்கு ரீங்கார இசையானது..

அண்ணனுக்கு கசப்பானது..

அண்ணிக்கு காரமானது..

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

தாயிக்கு மணம் தந்தது..

நண்பனுக்கு இனித்தது..

தோழியின் கண்கள் கசிந்தது..

மண்ணுக்கு உரமானது..

 

Series Navigation
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *