வார்த்தைகள்

This entry is part 29 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சில நேரங்களில்
மௌனங்களில்
அடைப்பட்டு விடுகிறது

சில நேரங்களில்
உச்சரிக்கப்பட்டு
உதாசீனப்படுத்தப்படுகிறது

சொல்ல வேண்டிய
தருணங்களை கடந்து
வெறுமையை நிறைத்து
கொள்கின்றன சில நேரங்களில்..

ஒருசொல்
போதுமானதாயில்லை
எப்பொழுதும்
வார்த்தையில்
தொங்கிகொண்டிருப்பதிலேயே
கழிந்து விடுகிறது வாழ்க்கை.

Series Navigation“சூ ழ ல்”ஓ… (TIN Oo) ………….!
author

கவிப்ரியா பானு

Similar Posts

2 Comments

  1. Avatar
    சோமா says:

    கடைசி பாராவை நன்றாகவே அமைத்திருக்கிறீர்கள்..ஒற்றை வார்த்தைதான் நிறையவே மாற்றம் கொள்ளச் செய்கிறது நம் வாழ்க்கையில்…

  2. Avatar
    kavibhanu says:

    நன்றி தோழர்.. வார்த்தைகள் பெரும்பாலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.

Leave a Reply to சோமா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *