(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
நல்லதோர் காலமும்,
நலமிக்க சூழ் வெளியும்
உள்ளது எனக்கென்று நான்
அறிவேன்;
என்னை யாரும்
எடை போட வில்லை !
என்னை என்றும்
எடை போடவும் இயலாது !
எல்லோரும் வந்து கேளீர் !
நில்லாத பயணத்தில்
மிதிநடை வைத்து விட்டேன் !
என் அடையாளச் சின்னங்கள் :
மழைநீர் ஒட்டா அங்கி,
சிறந்த கால் செருப்பு,
காட்டு மரத்தில் வெட்டிய
கைத்தடி !
நண்பன் எவனும் சுகம் காணான்
என் நாற்காலியில் !
நாற்காலியும் இல்லை இப்போது !
கிறித்துவ ஆலயம் ஒன்று
எனக்கில்லை !
தத்துவச் சிந்தனை எதுவும்
எனக்கில்லை !
உணவறை மேஜைக்கோ,
நூலகத் துக்கோ,
பணப் பரிமாற்ற வங்கிக்கோ நான்
பாதை காட்டுவ தில்லை
எவருக்கும் !
ஆலய மணி அடித்தால்
ஆடவர், பெண்டிரை
நான் வழி
அனுப்பி வைப்பேன்.
இடது கரம் செல்லும் பெண்ணின்
இடுப்பைச் சுற்றி !
வலது கரம் கண்டச் சரிவுகள் உள்ள
உலகைச் சுட்டிக் காட்டும்
பொது வீதி உட்பட !
நானும், வேறு எவரும் அந்த
வீதியில் உனக்காக
நடைப் பயணி யாக முடியாது !
நீயே உனக்காகப்
பயணம் புரிய வேண்டும் !
வெகு தூரத்தில் இல்லை வீதி,
இயலும்
தூரத்துக் குள்ளே தான்
இருக்கிறது அதுவும் !
ஒருவேளை
பிறந்தது முதல்
நீ அதன் மேலே
இருந்திருக் கலாம்
தெரியா மலே !
எல்லா இடத்திலும் இருக்கலாம்
வீதி என்பது,
நீரிலும், நிலத்திலும்
ஒருவேளை
++++++++++++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (August 7, 2013)
http://jayabarathan.wordpress.
- லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை
- ஒற்றைத் தலைவலி
- இப்படியாய்க் கழியும் கோடைகள்
- தீர்ப்பு
- புகழ் பெற்ற ஏழைகள் 19
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்
- மங்கோலியன் – I
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -36 என்னைப் பற்றிய பாடல் – 29 (Song of Myself) என் அடையாளச் சின்னங்கள் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………30 வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’
- அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14
- தாகூரின் கீதப் பாமாலை – 77 உன் ஆத்மாவைத் திறந்து வை .. !
- தீவு
- சரித்திர நாவல் போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 32
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 22
- கவிதைகள்
- இரகசியமாய்
- தனக்கு மிஞ்சியதே தானம்
- நீங்காத நினைவுகள் 14
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -14 [ இறுதிக் காட்சி ]
- வேர் மறந்த தளிர்கள் – 26-27-28
- டௌரி தராத கௌரி கல்யாணம் …! – 14
- ஸூ ஸூ .
- இரு துருவங்களை இணைக்கும் கவித்வம் – ஒரு துருவம் மனுஷி, இன்னொரு முனையில் நாஞ்சில் நாடன்
- நோவா’வின் படகு (Ship of Theseus)
- சாகச நாயகன் 2. நாயக அந்தஸ்து
- முடிவை நோக்கி ! [விஞ்ஞானச் சிறுகதை]
- பால்காரி .. !
- தாயுமானாள்!
- பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…
- 2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !