வால்ட் விட்மன் வசனக் கவிதை – 93

This entry is part 19 of 27 in the series 21 செப்டம்பர் 2014

 

(1819-1892)

 

ஆதாமின் பிள்ளைகள் – 3

(Song of the Open Road)

(திறந்தவெளிப் பாட்டு -3)

 

ஞானத்தின் விளக்கம்

 

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன்கனடா

 

  

பூரண மனிதர் ஆயிரம் பேர்

இப்போது

என்முன் தோன்றினும்

வியப்படையச் செய்யா தென்னை !

ஆயிரம் பேரெழில் வடிவு மாதர்

இப்போது

என்முன் தோன்றினும்

விந்தையுறச் செய்யா தென்னை !

வாழ்வோரை

உன்னத மானிடராய்

ஆக்கும் ரகசியத்தை

நோக்குவேன் நானிப் போது !

வையத்தில் உண்டு உறங்கி

வளர வேண்டும் அந்த ரகசியம்

திறந்த வெளியில் !

 

 

தனிப்பட் டோரின் உன்னத

வினையே

இங்கு இடம்பெற முடியும்.

அத்தகைய வினைகள்

அனைத்து மனித இனத்தின்

இதயத்தைப் பற்றி

இழுத்துக் கொள்ளும் !

அதன் வலிய உறுதித் தெளிப்பு

சட்டத்தை மீறி

ஆளுமை ஆதிக்கத் தையும்

அனைத்து வாதத் தையும்,

நகைப்புக் குள்ளாக்கும் !

 

 

இங்குள்ளது ஞானத்துக்கு

தேர்வு வினா !

கல்விக் கூடங்களில்

இல்லை

ஞானத்தைச் சோதிக்கும்

முடிவான தேர்வு !

ஊர்ந்திடம் பெயராது ஞானம்

உள்ளவனிட மிருந்து

இல்லா தவனுக்கு !

ஆத்வா வுக்குச் சொந்தம்

ஞானம் என்பது !

தொய்விலாச் சான்றுள்ளது ;

ஞானம்

தானே தனக்குச் சான்று !

எல்லா அரங்கு களுக்கும்

உயிரினங் களுக்கும்,

குணப்பாடு களுக்கும்,

இசைந்து கொண்டு அது

திருப்தி அடையும்.

மெய்ப்பாடுக்கு உறுதி,

மானி டத்தின் நிலைப்பாடு அது;

ஞானம் என்பது

பொருளியலின் பாலாடை !

ஆத்மாவி லிருந்து

உசுப்பி விடும்

ஏதோ கனவுக் காட்சி !

 

+++++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

 

  1. Jayabarathan [jayabarathans@gmail.com] September 18, 2014
Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *