வாழ்வியலின் கவன சிதறல்

This entry is part 25 of 39 in the series 4 டிசம்பர் 2011

விதைத்து விட்டிருக்கும் 

வாழ்வியலின் 

கவன சிதறல் 

ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது .

 

மூன்றாம் வயதின் 

நினைவின் மீது 

இக்கணம் அமர்ந்திருக்கிறேன் .

 

அப்பா

மளிகை கடை 

கொண்டிருந்த காலம் 

தினமும் முத்தங்களும் 

ஐந்து காசும் ,பத்து காசும் 

கிடைத்திருந்தது

உணர்த்தி செல்லும்  

நினைவுகளும் 

அறிவதற்கில்லை 

நாங்கள் பெற்றிருந்த 

அகமகிழ்வை.

 

பின் காலத்தின் 

பயணம் தொடங்கியது 

அனைத்தும் நின்றது .

வேறு வகையின் பயணம் 

இனிதே தொடங்கியது .

 

குத்தகை நிலமொன்று 

இருந்த காலம் 

அப்பாவின் வண்டியும் தான் . 

மூவரையும் அதிகாலையில் 

அழைத்து செல்வதில் 

இன்பகாற்றை இன்னும் 

உயிர்ப்புடன் சேகரித்து 

வைத்திருக்கிறேன் .

 

காலம் தன் பயணத்தை  

மீண்டும் புதிய விதமாக 

இயக்கியது .

 

குத்தகை நிலம் 

கை விட்டு போனது 

உழைப்பின் நிழல் 

மெல்ல படருகிறது 

எங்கள் மூவரின் மீதும் 

ஒரே புகலிடம் 

இரவி மேட்ச் ஒர்க்ஸ் .

 

கனவுகள் வேகமாக 

வளருகிறது 

காலத்தின் தொன்மையும் 

கூட விட்டு வைக்கவில்லை 

தொலைவுகள் .

அப்பாவின் ஆற்காடு 

கேஷியர் வேலை 

அம்மாவின் முதல் 

கண்ணீரை பார்த்த 

தருணம் என 

அனைத்தும் 

மெருகேற்றி கொண்டிருந்தது 

எங்கள் குடும்பத்தை .

 

பின்னும் நீண்டிருந்தது 

காலத்தின் கடமை .

 

பெங்களூரில் 

ஆட்டோ ஓட்டுனர் 

அதன் 

மன காயங்களை 

எங்களிடம் 

மறைத்து கொண்டிருந்தது 

அப்பாவின் மாதத்தின் 

வருகை .

 

கூற்றின் விதை 

மெல்ல மெல்ல 

துளிர்க்க காலம் 

வேடிக்கை பார்க்கிறது 

 

இனிதே வளத்தூரில்

ஓட்டல் ஆரம்பமானது 

எங்களையும் ,படிப்பையும் 

குடும்பத்தையும் ,உழைப்பையும் 

அரவணைத்தது 

பாலாஜி டீ ஸ்டால் .

 

இதற்குள்ளாக 

முடிந்து விடுவதில்லை 

காலத்தின் நினைவுகள் 

மீண்டும் வருகை புரியும் .

                   வளத்தூர் .தி.ராஜேஷ் .

Series Navigationகுரங்கை விழுங்கிய கோழி மனத்தை மயக்கும் சிசுநாள ஷரீஃப் பாடல்கள்நனைந்த பூனைக்குட்டி
author

வளத்தூர் தி .ராஜேஷ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *