விழுது

This entry is part 27 of 32 in the series 3 பிப்ரவரி 2013

ஆலமரத்தின் வேர்ப்பகுதி
நீர்நிலையில்
மூழ்கி இருந்தன
அதன் விழுதுகள் கூட
அதனை கைவிட்டுவிட்டன
விருட்சம்
தனக்குக் கீழே எதையும்
வளரவிடாது
புளிய மரத்துப் பேயைப் பற்றி
நிறைய இக்கட்டி
கதை சொல்வாள்
பொரிஉருண்டை அஞ்சம்மாள்
குச்சியை நட்டு வைத்தால் கூட
வேர் பிடித்து விடும்
முருங்கை
ஐந்து வருடம்
காத்திருந்தாள் போதும்
அன்னையைப் போல்
காவந்து பண்ணும்
தென்னை
பனங்கல்லு குடிச்சவனுக்கு
ஏது சாமி
கேட்காமலேயே
நுங்கு கொடுக்கும்
கிராமத்து பூமி.

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -9 என்னைப் பற்றிய பாடல் -2 (Song of Myself)அக்னிப்பிரவேசம்-21
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *