ஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்

This entry is part 11 of 22 in the series 28 டிசம்பர் 2014
  விடுதலைக்கு பிந்தைய நாட்டில் பல அரசியல் /சமூக மாற்றங்களுக்கு காரணமான முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக கருதப்படும் நிகழ்வு ஷா பானு  வழக்கும் அதற்கு தரப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதை மாற்ற போராடிய மத அடிப்படைவாதிகளும்,பணிந்த மத்திய அரசும் .
    ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்.இஸ்லாமிய சட்டத்தின் கீழ் ஜீவனாம்சம், மணவிலக்கு செய்யப்பட்ட பெண்களுக்கு ஆயுள் முழுவதும் வழங்கப்பட மாட்டாது.இஸ்லாமிய முறைப்படி இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்  கீழ் நடந்த திருமணம் என்பதால் ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கணவர் கான் உச்சநீதிமன்றத்தில்  வழக்காடினார். பல இஸ்லாமிய அமைப்புகளும் அவருக்கு ஆதரவாக களம் இறங்கின.ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற பெஞ்ச் ஷா பானு அவர்களுக்கு ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று தீர்ப்பு  வழங்கியது.
  இதை இஸ்லாமியரின் தனி சட்டத்தில்/மத நம்பிக்கைகளில்  தலையிடும் செயல் என்று இஸ்லாமிய இயக்கங்கள் எதிர்த்து போராட்டத்தில் இறங்கின. ராஜீவ் தலைமையிலான காங்கிரெஸ்  அரசும் அவர்களுக்கு பணிந்து தீர்ப்பை மாற்றும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து பெண்ணிய இயக்கங்களும் ஹிந்துத்வா இயக்கங்களும் களத்தில் இறங்கின.
  ஹிந்து இயக்கங்களை வசியபடுத்த ராஜீவ் அரசு பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவிலுக்கு ஷீலான்யாஸ் நடத்த அனுமதி அளித்தது. தவறான செயல்களின் மூலம் இரு சமூகங்களையும் தன பக்கம் இழுக்கலாம் என்ற காங்கிரெஸ் அரசின்  செயல் அவர்களுக்கு எதிராக தான் திரும்பியது.400க்கு மேல் எம் பி க்கள் கொண்ட நிலையில் இருந்து தேய்ந்து கொண்டே வர ஷா பானு வழக்கு தீர்ப்பை மாற்றிய சட்டமும் ,அதற்கு ஈடுகொடுக்க பாப்ரி மஸ்ஜித் இடத்தில ராமர் கோவில் கட்ட பூஜை செய்ய தந்த அனுமதியும் தான் முக்கிய காரணங்கள்.
  ஷா பனூ வழக்கிற்கும் இன்று பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென் அவர்கள் கேட்டிருக்கும் RTI கேள்விகளுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
   ஷா பானு அவர்களோடு ஒப்பிட்டால் ஜசோதா  பென் அவர்கள் அனுபவித்த வாழ்க்கை பல மடங்கு கொடியது.ஷா பானு அவர்களுக்கு எதிராக இஸ்லாமிய சட்டம் இருந்தது. கணவர் தெளிவாக மணவிலக்கு செய்து விட்டார்.இங்கு அப்படி எதுவும் கிடையாது
   ஒரு நாளைக்கு 30000 ரூபாய்க்கு குறையாத உயர்ந்த உடைகளை  உடுத்தும்  மனிதர்  ,பல ஆண்டு காலம் மாநிலத்தின் முதல்வர்/இன்று பிரதமர் பதவி வகிக்கிறவர் தான்  கணவர்.ஆனால் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் 1968 ஆம் ஆண்டு தொட்டு தாலி கட்டிய  கணவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,முறையாக மணவிலக்கு செய்யவும் முயற்சிகள் எடுக்கவில்லை,  எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை,
  உலகில் பெண்களை  ஒடுக்குவதில்,அடிமைகளாக நடத்துவதில் ,பொருட்டாக மதிக்காமல் ஆண்கள் வாழ்வதை பெருமையாக கருதிவதில் இந்து மதம் மற்ற அனைத்து மதங்களையும் விட பல படிகள் மேலே என்பதை விளக்க ஹிந்டுத்வத்தின் தலைமகன் மோடி அவர்களின் வாழ்க்கையே எடுத்துக்காட்டு.
  தங்கள உரிமைக்காக போராடிய/போராடும் இரு பெண்களில் திரு ஷா பானு அவர்கள் சந்திக்காத  ஜசோதா பென்  அவர்கள் சந்திக்கும் இன்னொரு மிக பெரிய துயரம் அவர் மீது விழும் பழிகளும்,எதிர்கட்சியினரின் சதிவலையின் காரணமாக ஒரு புனிதர் மீது சேற்றை வாரி இறைக்கிறார் என்று வந்து விழும்   குற்றசாட்டுகளும்.
   1968 இல் 17 வயதில் திருமணமாகி (1976 சட்ட திருத்தம் வருமுன் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் ஆணின்  திருமண வயது 18,பெண்ணின் திருமண வயது 15)மூன்று ஆண்டுகள் தன கனவோடு வசிதததாக ஜசோதா பென் அவர்கள் பேட்டி கொடுத்திருக்கிறார். மூன்று ஆண்டுகளில் மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்திருந்தால் அதிகம் என்றும் அந்த பெட்டியில் சொல்லி இருக்கிறார்.
  அம்பேத்காரின் கடும் முயற்சியினால் நேருவின் ஆதரவினால் காங்கிரெஸ் உள்  இருந்த ,வெளியில் இருந்த ஹிந்டுத்வவாதிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசியல் சட்டத்தில் ஹிந்து மத திருமண  சட்டங்களில் ஓரளவிற்கு பெண்களுக்கு சாதகமான (ஆனால் மதத்திற்கு எதிரான )சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.இதை இன்றும் மற்ற மதத்தில் கை வைக்க முடிந்ததா என்று குத்திக்காட்டி ஹிந்டுத்வவாதிகள் வாதிடுவது அன்றாட நிகழ்வு.
  இஸ்லாமிய பெண்களின் நலனுக்காக பொது சிவில் சட்டம் என்று குதிக்கும் கூட்டம் ஷா பானு அவர்களை விட பல மடங்கு கொடுமைகளை அனுபவித்த/அனுபவிக்கும் ஜசோதா பென் அவர்களுக்கு எந்த சட்டமும் துணை புரியாத நிலையை கண்டும் காணாமல் போனால் கூட பரவாயில்லை. மனைவி எனும் உரிமைக்காக காலம் கடந்தாவது போராடும் பெண்மணியின் மீது களங்கங்களை அள்ளி வீசுவது ஞாயமா என்று சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
Series Navigationநூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்பாலச்சந்தர் ஒரு சகாப்தம் – Adayar Kalai Ilakkiya Sangam
author

பூவண்ணன்

Similar Posts

6 Comments

  1. Avatar
    paandiyan says:

    ஷா பானு எனும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்மணியின் கணவர் அவரை இஸ்லாமிய முறைப்படி மணவிலக்கு செய்து விட்டார்
    Ok. correct
    then;
    தாலி கட்டிய கணவர் மனைவியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை,முறையாக மணவிலக்கு செய்யவும் முயற்சிகள் எடுக்கவில்லை, எந்த வித ஜீவனாம்சமும் தரவில்லை,

    WHAT? WHAT? WHAT ? what you are tying to convey the message?

    finally — to thinnai editor:
    you should correct the word; ஹிந்டுத்வவாதிகள் as this repeat so many times in the article or you should not publish. this is so hurt me.

  2. Avatar
    paandiyan says:

    who ever marry and go to gulf for work, read this article and then go, thanks to writer also for the valuable article pls..

  3. Avatar
    பூவண்ணன் says:

    பாண்டியன் ஐயா

    தயை கூர்ந்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன். கூகுளே transliterate மூலம் தமிழில் எழுதுவதால் வந்த பிழை அது.ஹிந்து பெண்களின் நிலையை விட ஹிந்துத்வவாதி எனபது எப்படி எழுதப்படுகிறது எனபது அதிக கோவத்தை தருவது வருத்தம் தரும் நிகழ்வு.

  4. Avatar
    IIM Ganapathi Raman says:

    ஆர் எஸ் எஸ், பஜரங் பலி, பாடியாவின் இந்துக்கல்வி சீர்திருத்த இயக்கம் (வென்டி டோனியரின் நூலை இந்தியாவில் தடுத்தவர்கள்), தமிழகத்தில் இந்து முன்ன்ணி, அர்ஜீன் சம்பத்தின் இந்து மக்கள் இயக்கம், இந்தியா ஃப்வுண்டேஷன் என்னும் திங்க் டான்க், பி ஜே பி, இன்ன பிற‌ -இவர்கள் அனைவருக்கும் கொள்கைகளின் அடிப்படை வேறுபாடுகள் இல. செயல்களின் மட்டும் வேறுபாடுகள் இருக்கலாம். இவர்கள் தனித்தனியாக ஒரு செயலை எதிர்த்தால், அவர்களின் தனிப்பட்ட பெயரைக்குறிப்பிடலாம். சேர்ந்து செய்யும்போதும், அல்லது ஒருவர் செய்வதை – இன்று பி கே திரைப்படம் ஓடிய தியேட்டர்களை உடைததது பஜ்ரங்க் பலி – மற்றவர்கள் ஆமோதிப்பதற்காக மவுனம் சாதிக்கும் போது – அவர்கள் அனைவரையும் ஹிந்துத்வாவினர் என்ற பொதுப்பெயரை வைத்து ஆங்கில ஊடகங்கள் எழுதுகின்றன. திண்ணையில் மட்டுமேன் பிரச்சினை? இந்துத்வ கொள்கைகளை ஆதரித்து எழுதுவதும், அதை எதிர்ப்போரையும் நக்கலடித்து ஓரிருவரிகள் எழுதும் வழக்கத்தையும் கொண்ட பாண்டியன் என்ற பெயரில் எழுதுபவருக்கு ஹிந்துத்வாடிகள் (ஹிந்தியில்) என்றால் ஏன் வருத்தம்? புரியவில்லையே!

    1. Avatar
      paandiyan says:

      what do you mean? article says; ஹிந்டுத்வவாதிகள்
      and you say; ஹிந்துத்வாடிகள்
      or should I have any eye sight problem?
      BUT good that writer has explained what was happened

  5. Avatar
    பூவண்ணன் says:

    திரு ஜசொதா பென் அவர்களின் போராட்டத்தின் அடுத்த கட்டம்

    http://linkis.com/indianexpress.com/ar/Loi6q

    “I am the wife of Prime Minister of India…. I have asked for the order’s copy (regarding the protection given to her), which are not related with LIB (local intelligence bureau). So I demand to get the copy of those orders in this appeal,” Jashodaben Modi said in the appeal to Mehsana district Superintendent of Police (SP) on December 30.
    “There is no specific reason given to me in the reply (by Mehsana DySP) for denying the information. I am Prime Minister’s wife, therefore the information under RTI was not given to me with someone’s intervention,” Jashodaben said in the appeal.
    – See more at: http://indianexpress.com/…/scared-of-security…/…

Leave a Reply to paandiyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *