ஹிலா திருமணம் என்ற சாபம்

author
43
0 minutes, 30 seconds Read
This entry is part 23 of 23 in the series 7 அக்டோபர் 2012

ஏ. ஹெச். ஜாபர் உல்லா

The curse of Hila marriage By A. H. Jaffor Ullah

ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், அதன் உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கையை நுணுகிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களது சமூக பழக்க வழக்கங்களை பார்க்க வேண்டும் என்று யாரோ ஒரு ஞானி சொன்னார். சமீப காலங்களில், கிராமப்புற பங்களாதேஷின் கிராமப்புறங்களில் நடக்கின்றவற்றை பார்த்தபின்னால், நமது சமூகத்தில் இருக்கும் தீய சமூகப்பழக்க வழக்கங்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாதே என்று வெட்கப்படுகிறேன். வெட்கத்தால் என் முகத்தை மூடிகொள்ளத்தான் வேண்டும். என்னுடைய ஒரு நண்பன், ஹிலா திருமணம் என்றால் என்ன என்று கேட்டதும் எனக்கு வேர்த்தேவிட்டது.

நமது கிராமப்புறங்களில் இருக்கும் சமூக பழக்க வழக்கங்களில் அதிகம் பின்பற்றப்படாதது இந்த ஹிலா திருமணம். இதனை மொழிபெயர்த்தால், தற்காலிக திருமணம், அல்லது இரண்டு திருமணங்களுக்கு இடையேயான திருமணம் என்று சொல்லலாம். குழப்பமாக இருக்கிறதா? ஆமாம் குழப்பமானதுதான்.

ஹிலா திருமணம் என்ற இந்த வினோதமான, பிற்போக்கான பழக்கம் புதியதல்ல. இது சுமார் ஐந்து அல்லது ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னால், நமது விவசாய சமூகத்தில் “அமைதிமார்க்கமான” இஸ்லாமின் நுழைவுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஒரு விஷயம் நன்றாக தெரியும். இந்த ஹிலா திருமணத்தில் எந்த வித அமைதியும் இல்லை.

இஸ்லாமில், அரபிய வார்த்தையான “தலாக்” என்ற வார்த்தையை மூன்று முறை ஒரு கணவன் உச்சரித்தால், அவன் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடுகிறான். அந்த கணவன் தனது உச்சரிப்பை வாபஸ் வாங்கிகொண்டு தன் மனைவியுடன் திரும்ப வாழ விரும்பினால், எங்கிருந்தோ இந்த ஹிலா திருமணம் தோன்றிவிடுகிறது.  இஸ்லாமின்படி, தலாக் நாமா கணவனால் சொல்லப்பட்டபின்னால், அந்த மனைவி அந்த கணவனுடன் (முன்னாள் கணவனுடன்) சட்டப்படியான கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாது. ஷரியாவின் படி(இஸ்லாமிய சட்டத்தின்படி) இது அனுமதிக்கப்பட்டதல்ல. அவர்கள் தங்களது பிரச்னைகளை தீர்த்துகொண்டு முன்னைப்போல சேர்ந்து சந்தோஷத்துடன் வாழ விரும்பினால், இந்த செய்தி அந்த பகுதி முல்லாவின் காதுகளுக்கு எட்டினால், இந்த சந்தோஷ தம்பதியினரின் சந்தோஷம் காலி.

 

இந்த தம்பதியினர் பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று முல்லா ஒரு பத்வா கொடுப்பார். உடனே அந்த தம்பதியின் சந்தோச வாழ்க்கை முடிவுக்கு வரும். அவர்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள். எப்படி? கூட்டம் சேர்ந்து அந்த தம்பதிகளை பிரித்து வைக்கும். அங்கேயும் இந்த பிரச்னை முடிவுக்கு வராது. அங்கேதான் அந்த பெண்ணின் தீக்கனவே ஆரம்பிக்கும். அந்த பெண் ஹிலா திருமணம் செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவார். அந்த பெண் அழகாகவும் இருந்தால் பிரச்னை இன்னும் மோசமாகும். அந்த பெண்ணை ஹிலா திருமணம் செய்யவிரும்பும் ஆண்கள் கூட்டமே கூடிவிடுவார்கள். ஏன்? ஏனென்றால், ஹிலா திருமணத்தின் மூலம் அந்த பெண்ணோடு சட்டப்பூர்வமாக உடலுறவு கொள்ளலாம். இந்த பெண்ணோடு ஹிலா திருமணம் செய்யும் ஆண் முஸ்லீம் சமுதாயத்தில் வெகுகாலமாக இருக்கும் இந்த பழக்கம் மூலமாக அந்த பெண்ணை அனுபவிக்கலாம். இது குமட்டவில்லையா? மதத்தின் பெயரால், ஊர் பேர் தெரியாத ஒரு ஆணோடு உடலுறவு கொள்வதற்கு அந்த பெண் வெறுக்கலாம்.  ஆணுக்கோ இது ஒரு பாலுறவு வேட்கை. ஒரு கட்டுப்பாடும், கட்டாயமும், பணமும் செலவு இல்லாத சுகம். ஒரு ராத்திரி நிகழ்வு. பலியாடான அந்த பெண்ணோ இந்த அவமானத்தை வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டும். காரணம் அவளது கணவன் தலாக் என்ற அரபிய வார்த்தையை மூன்று முறை சொன்னான். அவ்வளவுதான். அந்த குடும்பத்துக்கு இந்த ஹிலா திருமணத்தின் மூலம் வரக்கூடிய அவமானத்தை யாராவது சிந்தித்து பார்த்தார்களா? அந்த பெண்ணுக்கு வயதுக்கு வந்த ஆண்பிள்ளைகளோ பெண் பிள்ளைகளோ இருந்தால், தனது தாய்க்கு மதத்தின் காரணமாக நிகழ்ந்த அவமானத்தை நிச்சயம் அறிவார்கள்.

ஆழ்ந்த மத நம்பிக்கையுள்ள ஆண்மகன் ஹிலா திருமணத்தில் ஒரு தவறும் இல்லை என்று சொல்வார். இது குரானில் எழுதப்பட்டுள்ளது. ஆணானாலும் பெண்ணானாலும் நாம் குரானில் எழுதப்பட்டுள்ளதை பின்பற்றியே ஆகவேண்டும் என்று சொல்வார். இந்த வசனத்தை கேள்வி கேட்கக்கூடாது என்று சொல்வார். இதற்கு ஒரு ஆழமான காரணம் இருக்க வேண்டும் என்று சொல்வார். இல்லையென்றால், ஏன் நமது புனிதப்புத்தகத்தில் இது இருக்கவேண்டும் என்று கேட்பார். பொறுப்பு ஏற்றுகொள்வது எளிதானதல்ல. சும்மா, புனிதப்புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லிவிடுவோம்.

ஆனால், நிஜ வாழ்க்கை இதனை விட மனத்தை கலக்கமடிக்கக்கூடியது. பங்களாதேஷின் மேற்கு மாவட்டத்து கிராமத்தில் ஒரு பெண் ஊர்விலக்கம் செய்யப்பட்டார். அவரது கணவன் தலாக் என்ற வார்த்தையை மும்முறை கூறினார். அதனால், அந்த திருமணம் அப்போதே முறிக்கப்பட்டுவிட்டது. அந்த கிராம முல்லாவின் அறிவுரையின்படி ஹிலா திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏனெனில், அந்த கணவன் தன் மனைவியை மீண்டும் ஏற்றுகொள்ளவேண்டுமென்றால், அந்த பெண் ஹிலா திருமணம் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். அதுமட்டுமல்ல. அந்த திருமணம் முழுமையடையவேண்டும். அதாவது இந்த தற்காலிக தம்பதியினர் உடலுறவு கொள்ளவேண்டும். இப்போது பிரச்னை என்னவென்றால், அந்த கணவன் தனது முன்னாள் மனைவியை மீண்டும் தன் மனைவியாக ஆக்கிகொள்ள மறுக்கிறான். ஏனெனில், அவனை பொறுத்தமட்டில், அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்டுவிட்டாள்.  பாலுறவு தூய்மை என்பது இந்த பகுதியில் மிகவும் பெரிய விஷயம். மேற்குலகில் வேண்டுமென்றால், இப்படிப்பட்ட உறவுகள் முக்கியத்துவமில்லாமல் இருக்கலாம். ஆனால், பங்களாதேஷில் இவை மிகப்பெரிய விஷயங்கள். இதிலேயே மிகவும் மனத்தை கலங்கடிக்கக்கூடியது அந்த பெண்ணின் நிலைதான். தனது விவாகரத்தில் அந்த பெண்ணுக்கு எந்த பங்கும் இல்லை. கணவன் கோபத்தில் மும்முறை சொன்ன ஒரு தவறான வார்த்தையால் அவளது திருமணம் முறிக்கப்பட்டது. அதனால், இந்த பெண் இன்னொரு ஆணை திருமணம் செய்யவேண்டும். இந்த முழு நிகழ்வுமே அபத்தத்தின் உச்சம். நாம் ராக்கெட் யுகத்தில்தானே இருக்கிறோம்?

பங்களாதேஷிகளில் இணைய விவாதகளத்தில் ஹிலா திருமணத்தை ஆளாளுக்கு திட்டிகொண்டிருந்தார்கள். டோக்கியோவிலிருந்து ஒரு தீவிர நம்பிக்கையாளர் ஒருவர் இவை அனைத்தும் நமது புனித புத்தகத்தில் உள்ளன என்று கடுமையாக எதிர்த்து வாதாடிகொண்டிருந்தார். நுணுகி பார்க்கச்சொல்லி எங்களிடம் காட்டிய ஒரு வசனம் இது.

“And if he hath divorced her (the third time), then she is not lawful unto him thereafter until she hath wedded another husband. Then if he (the other husband) divorces her it is no sin for both of them that they come together again if they consider that they are able to observe the limits of Allah. These are the limits of Allah. He manifesteth them for people who have knowledge.” (2:230)

2:230. மீட்ட முடியாதபடி – (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது; ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து – அவனும் அவளை தலாக் சொன்னால், அதன் பின் (முதற்) கணவன் – மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (1)

(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக) அவளை அவன் விவாக ரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம் செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவளை விவாக ரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.

எங்களது நண்பர் கல்லாகிவிட்ட உறைந்துவிட்ட மனங்கள் இருக்கும் உலகத்தில்தான் வாழ்கிறார் என்று நினைக்கிறேன். அதில் சந்தேகமில்லை. அவரது பார்வையிலிருந்து மாறமுடியாத மதக்கட்டளை மட்டுமே இருக்கிறது. அந்த வசனம் எந்த அளவுக்கு ஒரு பங்களாதேஷிக்கு பொருந்தும் என்பது அவரது மனத்தில் கேள்விக்குட்பட்டதாகவே இல்லை. மேலும், 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய இந்த வசனம் காலத்துக்கொவ்வாததாக இருப்பதும் அவருக்கு தோன்றவில்லை. அவரது பார்வையிலிருந்து “நமது மாபெரும் மதம் இந்த பிரச்னையை இப்படி அணுகசொல்லியிருக்கிறது. கேள்வி கேட்காமல் அதனை பின்பற்றுவதுதான் இஸ்லாமின் பாதையில் நாம் செல்லவிரும்பினால் செய்யவேண்டியது.” இஸ்லாமில் எதாவது டோக்கியாவுக்கு போகச்சொல்லியிருக்கிறதா? அங்கு வேலை தேடச்சொல்லி சொல்லியிருக்கிறதா? ஒரு பிரச்னைக்கு விளக்கம் குரானில் இல்லை என்றால் ஒரு முஸ்லிம் என்ன செய்யவேண்டும்? டோக்கியோவுக்கு போகாமலிருப்பதா? என்னுடைய சிந்தனை வித்தியாசனமாதாக இருக்கலாம். நான் சொல்ல வருவது இதுதான். நாம் புனித புத்தகத்தை வார்த்தைக்கு வார்த்தை பின்பற்ற வேண்டுமா? பாரிஸுக்கோ, லண்டனுக்கோ, ஆம்ஸ்டர்டாமுக்கோ நியூயார்க்குக்கோ போவதை பற்றி புனித புத்தகத்தில் எதுவும் சொல்லவில்லை என்றால், அந்த நகரங்களுக்கு நாம் போகலாமா? இதுதான் நான் கேட்பது.

நமது சமூகத்தில் இருக்கும் மூளைக்கொவ்வாத பழக்க வழக்கங்களை எல்லாம் இறக்குமதி செய்யப்பட்ட நமது மாபெரும் மதத்தின் பெயரால் நாம் சப்பைக்கட்டு கட்டுவதை வெகுகாலம் செய்துவருகிறோம். எனக்கு தெரிந்து எந்த விளக்கமும் தெரியவில்லை. தனது பிரியத்துக்குரிய கணவனோடு ஒரு பெண் சேர்ந்து வாழ விரும்பினால், அதற்காக அந்த பெண்ணின் வாழ்க்கையை இப்படி அழிக்க வேண்டுமா? தலாக் கூறும்படி அந்த பெண் கூக்குரலிடவில்லை. இல்லையா? அவளது கணவனின் படுமுட்டாள்தனத்துக்கு அவள் ஏன் விலையாக வேண்டும்? இந்த ஹிலா திருமணத்தை எப்படியும் சப்பைக்கட்டு கட்டமுடியாது.

பங்களாதேஷ் நீதிமன்றங்களும் உப்புக்கு சப்பாணி அல்ல. ஹிலா திருமணம் பற்றி ஏராளமான கதைகளை காது புளிக்க கேட்டுவிட்டார்கள். பங்காள பெண் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்பதை பலமுறை கேட்டுவிட்டார்கள். ஹஜ்ரத் உஸ்மானின் கிலாபத்(அரசு)ஆல் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் பெயரால் நடக்கும் அநீதிகள் அவர்களது மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அதனால்தான், அந்த பத்வா சட்டத்துக்கு புறம்பானது என்று ஜனவரி 1, 2001இல் பங்களாதேஷ் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. ஹிலா திருமணங்களே பங்களாதேஷில் தடை செய்யப்பட வேண்டும் என்று கோருவதுதான் மனிதநேய பார்வையில் சரியானது என்று மற்றவர்களும் இப்போது கூறுவதை கேட்க இனிமையாகவே உள்ளது. என்னிடம் திரும்பவும், புனித புத்தகத்தில் இருக்கிறது என்று கூறவேண்டாம். அது இந்த காலத்தில் பிரயோசனப்படாது.

http://cyber_bangla0.tripod.com/article/article27.html

(1) http://tamililquran.com/qurandisp.php?start=2

Series Navigationகுருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
author

Similar Posts

43 Comments

  1. Avatar
    suvanappiriyan says:

    //பங்களாதேஷ் நீதிமன்றங்களும் உப்புக்கு சப்பாணி அல்ல. ஹிலா திருமணம் பற்றி ஏராளமான கதைகளை காது புளிக்க கேட்டுவிட்டார்கள். பங்காள பெண் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்பதை பலமுறை கேட்டுவிட்டார்கள். ஹஜ்ரத் உஸ்மானின் கிலாபத்(அரசு)ஆல் பிரசுரிக்கப்பட்ட புத்தகத்தின் பெயரால் நடக்கும் அநீதிகள் அவர்களது மனத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இல்லை. அதனால்தான், அந்த பத்வா சட்டத்துக்கு புறம்பானது என்று ஜனவரி 1, 2001இல் பங்களாதேஷ் சுப்ரீம் கோர்ட் அறிவித்தது.//

    இஸ்லாத்தையும் குர்ஆனையும் விளங்காத ஒரு அரை வேக்காட்டின் பதிவு இஸ்லாமியரிடத்தில் எடுபடாது. இருந்தாலும் மற்றவர்கள் தவறாக விளங்கி விடக் கூடாது என்பதற்காக இந்த விளக்கம்.

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=6J3uE-JyA_U#!

    சில முஸ்லிம்கள் அறியாமை காரணமாக ஓரே சமயத்தில் மூன்று தலாக் என்று கூறி மனைவியை விவகாரத்து செய்கின்றனர். ஓரே சமயத்தில் மூன்று தலாக் கூற இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்படி கூறினால் அதனை ஒரு தலாக் என்றே கருதப்படும்.நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மூன்று தலாக் என்பது ஒரு தலாக் என்று மொத்தமாகவே கருதப்பட்டது.

    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்
    தலாக்(விவாகரத்து) பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம்:

    விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இல்லாவிட்டால் அந்த உரிமையை பெறுவதற்காக நீதிமன்றத்தை நாடுகிறான். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து விவாகரத்து தீர்ப்பைப் பெறுகிறான். இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க விரும்புகின்ற கணவன் உடனே மனைவியைவிட்டுப் பிரிவதற்குக் கொடூரமான வழியை கையாள்கிறான். அவளை உயிரோடு கொளுத்திவிட்டு ஸ்டவ் வெடித்து செத்ததாக உலகை நம்ப வைக்கிறான். விவாகரத்து செய்யும் உரிமை கணவனுக்கு இருந்தால் பெண்கள் உயிருடன் கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள். இன்னும் சில கணவன்மார்கள் மனைவியை கொல்லும் அளவிற்கு கொடியவர்களாக இல்லாவிட்டாலும் வேறொரு கொடுமையை பெண்களுக்கு இழைக்கிறார்கள். கற்பொழுக்கம் உள்ள மனைவியை ஒழுக்கம் கெட்டவள் எனக் கூறுகின்றனர். இப்படிக் கூறினால் தான் நீதிமன்றத்தில் விவாகரத்துகப் பெற முடியும் என்று நினைத்து இவ்வாறு செய்கின்றனர்.
    இதன் பின்னர் ஒழுக்கம் உள்ள அப்பெண்மணி களங்கத்தைச் சுமந்துக் கொண்டு காலமெல்லாம் கண்ணீர்விடும் நிலைமை ஏற்படுகிறது. இவளை வேறொருவன் மணந்து கொள்வதும் இந்தப் பழிச் சொல்லால் தடைபடுகிறது எளிதாக விவாகரத்து செய்யும் வழியிருந்தால் இந்த அவல நிலை பெண்களுக்கு ஏற்படாது. வேறு சில கயவர்கள் விவாகரத்து பெறுவதற்காக ஏன் நீதிமன்றத்தை அணுகி தேவையில்லாத சிரமங்களை சுமக்க வேண்டும்? என்று நினைத்து மனைவியாக வைத்துக் கொண்டு சின்னவீடு வைத்துக் கொள்கின்றனர். மனைவியை அடித்து உதைத்து சித்திரவதையும் படுத்துகின்றனர்.
    இஸ்லாம் கூறும் விவாகரத்து முறையால் இந்த கொடுமைகள் அனைத்திலிருந்தும் பெண்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை உள்ளது போல பெண்களுக்கு இவ்வுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் பெண்களுக்க கணவனை பிடிக்காவிட்டால் கணவனிடமிருந்து விவாகரத்து பெறுவது சிரமமாக இருந்தால் அவள் கட்டாயக் கணவனைக் கொள்கிறாள். உணவில் விஷம் கலந்தோ அல்லது கள்ளக் காதலனுடன் சேர்ந்தோ கணவனை தீர்த்துக் கட்டுகிறாள்.
    அல்லது கணவனுக்கு ஆண்மையில்லை என்று பழி சுமத்தி கணவனுக்கு மறு வாழ்க்கை கிடைக்காமல் செய்துவிடுகிறாள். அல்லது கணவனையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு விரும்பியவனுடன் ஓடுகிறாள். எனவே ஆண்களுக்கு விவாகரத்து செய்யும் உரிமை வழங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் சரியான வாதமே அந்த உரிமையை இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு வழங்கியுள்ளது.
    நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் ஸாபித் பின் கைஸ் (ரலி) என்ற நபித் தோழரின் மனைவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின் நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூறமாட்டேன். ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே (இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன் என்றார் (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத் தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா? என்று கேட்டார்கள் அதற்கு அப்பெண்மணி சரி என்றார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஓரேயடியாக விட்டு விடு என்றார்கள்.
    அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூற்கள்: புகாரி, நஸயீ

    எனவே மூன்று முறை சேர்ந்து ஒரே நேரத்தில் சொல்லும் தலாக் மார்க்க ரீதியாக ஒரு தலாக்காகவே கருதப்படும்.

  2. Avatar
    டோண்டு ராகவன் says:

    சுவனப்பிரியன் கூறுவது குலா என்னும் பெயருடையது என நினைக்கிறேன்.

    எனது கேள்விகள் எளிமையானவையே.

    1.குலாவும் தலாக்கும் ஒஎரே முறையில்தான் கூறப்படுகின்றனவா? மூன்று முறை தலாக் கூறி ஆண் திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதைப் போல, பெண் மூன்று முறை தலாக்கோ குலாவோ கூறி பந்தத்தை முறித்துக் கொள்ள இயலுமா?

    2. எனக்கு தெரிந்து பென்ணூக்கு இதில் ஆணுக்கு இல்லாத பல கட்டுப்பாடுகள் உள்ளன.

    3. இந்த தலாக், முத்தலாக் விஷயத்தில் நான் இட்ட பதிவு: http://dondu.blogspot.in/2006/05/blog-post_31.html

    4. நிக்காஹ் என்னும் ஹிந்திப்படத்தில் இப்பிரச்சினை அழகாக கையாளப்பட்டுள்ளது.

    5. சம்பந்தப்பட்ட பெண் தலாக் செய்தவன், ஹிலா திருமணம் செய்தவன் ஆகிய இருவரையுமே சாடுகிறாள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  3. Avatar
    punaipeyaril says:

    கண்மூடித்தனமாக ஆதரிப்பதை விட எழுத்தாளர் இங்கு செய்துள்ள பணி மகத்தானது. பிறந்து விட்டோம் என்றோ மாறி விட்டோம் என்றோ அனைத்தும் சரியே எனும் வாதம் எந்த வகையில் சேர்த்தி…

  4. Avatar
    பொன்.முத்துக்குமார் says:

    / எனவே மூன்று முறை சேர்ந்து ஒரே நேரத்தில் சொல்லும் தலாக் மார்க்க ரீதியாக ஒரு தலாக்காகவே கருதப்படும். /

    அப்படியானால் வேறு வேறு நேரத்தில் மூன்று முறை சொன்னால் அப்போது அது இஸ்லாமிய சட்டபூர்வமாகிவிடுமா ? (இது குறித்து இன்னொரு கேள்வி உண்டு. உங்கள் பதில் கண்டபின் அது.)

    கட்டுரையாளர் விமர்சனம் வைக்கும் ஹிலா திருமணம் குறித்து உங்கள் பார்வை என்ன ?

  5. Avatar
    Indian says:

    This article and SP’s response shows that a chunky part of Koran is all about mundane matters and nothing spiritual. I believe it prescribes to the followers how one should be cleaning their private parts ( stones!) and rituals that go with ablution.
    Three( Thalak) strikes and you are out! God must be a fan of baseball!
    By the way, why this three thlaks cannot be used by women to divorce men?

  6. Avatar
    பூவண்ணன் says:

    மத சீர்திருத்தம் எனபது oxymoron
    ஏதோ ஒரே ஒரு குறை இருப்பது போலவும் அது களையப்பட வேண்டும் எனவும் எண்ணுவதே தவறு
    எனக்கு வேண்டாம் மதம் என்று மதத்தை தாண்டி வந்து திருமணம் செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்
    இந்தியாவில் ஸ்பெஷல் marriages act இருப்பது போல.
    அதுவும் ஆண் பெண் இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் தான் அதன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று உள்ளது.அதை மாற்றி யார் வேண்டுமானாலும் அதன் கீழ் பதிவு செய்து கொள்ளலாம் என்று வைத்தால் இந்த ஆணுக்கு அதிக உரிமைகள்,ஜீவனாம்சம்,மறுமணம் குழப்பங்கள் வருவது பெருமளவில் குறையும் வாய்ப்பு உண்டு
    அனைத்து நாடுகளிலும் மதமற்ற ,மதங்களை தாண்டிய திருமண சட்டங்கள் வர வேண்டும்.விருப்பபடுபவர்கள் அதன் கீழ் பதிவு செய்யும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும்

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      மிக சரியான பார்வை. ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இப்படி மதங்களை தாண்டி வருபவர்கள் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கும் என்று எண்ணுகிறேன்.

      அதேபோல அப்படி மதம் தாண்டி வந்தவர்களுக்கு மணவிலக்கு சட்டங்களும் மதக்கட்டுப்பாடு இல்லாததாகவே இருக்கவேண்டும். (அப்படித்தான் உள்ளதா திரு பூவண்ணன் அவர்களே ?)

  7. Avatar
    suvanappiriyan says:

    திரு டோண்டு ராகவன்!

    //சுவனப்பிரியன் கூறுவது குலா என்னும் பெயருடையது என நினைக்கிறேன்.
    எனது கேள்விகள் எளிமையானவையே.
    1.குலாவும் தலாக்கும் ஒஎரே முறையில்தான் கூறப்படுகின்றனவா? மூன்று முறை தலாக் கூறி ஆண் திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதைப் போல, பெண் மூன்று முறை தலாக்கோ குலாவோ கூறி பந்தத்தை முறித்துக் கொள்ள இயலுமா?//

    • ஒரு பெண்ணிற்குத் தன் கணவனைப் பிடிக்கவில்லையானால் அவள் அந்தப் பகுதியின் தலைவரிடம் முறையிட வேண்டும்.

    • அவள் திருமணத்தின் போது கணவனிடமிருந்து மஹராக எதை வாங்கினாளோ அதைக்கணவனிடமே திருப்பி ஒப்படைக்குமாறு தலைவர் அவளுக்குக் கட்டளையிட வேண்டும்.

    • அந்த மஹரைப் பெற்றுக் கொண்டு உடனே அவளை விட்டுப் பிரிந்துவிடுமாறு அந்தக்கணவருக்கு தலைவர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன்கட்டுப்படாவிட்டாலும் கூட தலைவர் அந்தத் திருமண உறவை இரத்துச் செய்ய வேண்டும்.

    • கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைத் தெளிவாகக் கூற வேண்டியதில்லை.

    • கணவன் தலாக் கூறும் போது மூன்று மாதவிடாய் காலத்திற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருப்பது போல் மனைவி குலாஃ செய்து பிரியும் போது அழைத்துக் கொள்ள முடியாது.

    • தலாக் விடப்படும் போது மூன்று மாதவிடாய்க் காலம் வரை அவள் மறுமணம் செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால் குலஃ அடிப்படையில் பிரியும் போது ஒரே ஒரு மாதவிடாய்க் காலம் வரை மறுமணம் செய்யக் கூடாது.

    அதன் பிறகு தான் நாடுபவரை அவள் திருமணம் செய்து கொள்ளலாம். தான் குலா செய்தது தவறு என்று தெரிந்து குலா செய்த கணவனுடன் சேர்ந்து வாழ விரும்பினால் அந்தக் கணவனும் சம்மதித்தால் இருவரும் முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம்.

    பெண்கள் தாமாகவே விவாக ஒப்பந்தத்தை முறித்துவிடாமல் தலைவர் முன்னிலையில்முறையிடுவது அவசியமாகின்றது. ஏனெனில் பெண்கள் கணவனிடமிருந்து ஊரறிய மஹர்தொகை பெற்றிருப்பதாலும் அதைத் திரும்பவும் கணவனிடம் ஒப்படைக்க வேண்டும்என்பதாலும் இந்த நிபந்தனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விவாகரத்துப் பெற்றதற்குப் பின்னால் பெண்களே அதிக சிரமத்திற்கு ஆளாக நேர்வதால் இத்தகைய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தலைவர் அவளுக்கு நற்போதனை செய்ய வழி ஏற்படுகின்றது. எனவே சமுதாயத் தலைவரிடம் தெரிவித்து விட்டு அவர் மூலமாகப் பிரிந்து கொள்வதே அவளுக்குச் சிறந்ததாகும்.

    நான் என் கணவரிடமிருந்து விவாகரத்தைப் பெற்றுக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் வந்தேன். எவ்வளவு நாள் நான் இத்தா இருக்க வேண்டும் என்று அவர்களிடத்தில் கேட்டேன். அதற்கு அவர்கள் நீ ஒரு மாதவிடாய்க் காலத்தை அடையும் வரை பொறுத்திரு. இவ்விஷயத்தில் மகாலிய்யா குலத்தைச் சார்ந்த மர்யம் என்வருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்பையே கடைபிடிக்கிறேன். அப்பெண் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் என்பவருக்கு மனைவியாக இருந்தார். பின்பு அவரிடமிருந்து மணவிலக்குப் பெற்றுக் கொண்டார் என்று கூறினார்கள்.

    அறிவிப்பவர் : ருபைஃ பின்த் முஅவ்வித் (ரலி)
    நூல் : நஸயீ (3441)

  8. Avatar
    suvanappiriyan says:

    திரு பொன் முத்து குமார்!

    //கட்டுரையாளர் விமர்சனம் வைக்கும் ஹிலா திருமணம் குறித்து உங்கள் பார்வை என்ன ?//

    மீட்ட முடியாதபடி (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் மனைவி சேர்ந்து வாழ நாடினால் – அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்டி இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (2:230)

    கோபத்தில் இரண்டு தலாக் வேறு வேறு சந்தர்ப்பங்களில் ஒரு மாதத்துக்கு மேல் இடைவெளி விட்டு சொன்னால் அந்த கணவன் மனைவி திரும்பவும் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் மூன்றாவது முறையும் அவன் தலாக் சொல்லி விட்டால் அதன் பிறகு நிரந்தரமாக பிரிய வேண்டியதுதான். தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தான் பழைய கணவன் திரும்பவும் அந்த மனைவியையே திருமணம் முடிக்க நினைத்தால் அந்த பெண் வேறொருவனை மணந்து அவனும் தலாக் சொன்ன பின்பே முதல் கணவனுக்கு மனைவியாக முடியும். தலாக் சொல்வதன் பின்னணியில் இவ்வளவு கடுமையான சட்டம் இருப்பதால்தான் முஸ்லிம்களிடம் விவாகரத்து விகிதாச்சாரம் குறைவாக உள்ளது. இதற்கு தமிழகத்தையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

    ஹிலா என்ற ஏற்பாடு இவர்களாக உருவாக்கிக் கொண்டது. ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி பிரிந்த தம்பதியை தற்காலிக திருமணம் வேறொருவனுக்கு முடித்து அவன் விவாகரத்து செய்த பிறகு பழைய கணவன் மீட்டிக் கொள்கிறான். இது இஸ்லாமிய நடைமுறையே அல்ல. குர்ஆனும் அப்படி சொல்லவில்லை.

    //அப்படியானால் வேறு வேறு நேரத்தில் மூன்று முறை சொன்னால் அப்போது அது இஸ்லாமிய சட்டபூர்வமாகிவிடுமா ? (இது குறித்து இன்னொரு கேள்வி உண்டு. உங்கள் பதில் கண்டபின் அது.)//

    தங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். (2:226)

    தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்(2:228)

    ஒவ்வொரு தலாக்குக்கும் மூன்று மாதவிடாய் காலங்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த கால தாமதத்தில் கணவன் மனைவிக்கிடையே கோபம் தனிந்து அன்பு அதிகரித்தால் அவர்கள் முன்பு போல் சேர்ந்தே வாழலாம்.

    ஹிலா திருமணம் என்பது குர்ஆனை சரியாக விளங்காத மூடர்களின் பழக்கம். அவர்களுக்கு குர்ஆனின் சட்டத்தை தெளிவாக விளக்க வேண்டும்..

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      // ஒவ்வொரு தலாக்குக்கும் மூன்று மாதவிடாய் காலங்கள் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இந்த கால தாமதத்தில் கணவன் மனைவிக்கிடையே கோபம் தனிந்து அன்பு அதிகரித்தால் அவர்கள் முன்பு போல் சேர்ந்தே வாழலாம் //

      இப்படி மூன்று மாதவிடாய் காலங்கள் இடைவெளி விட்ட பின்பும் தலாக் சொல்லிய ஒரு கணவன் அதற்குப்பின்னான சூழ்நிலை மாற்றத்தால் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பினால் (இங்கே மனைவி அவனோடு சேர்ந்து வாழ விரும்புகிறாள் என்றே வைத்துக்கொள்வோம்) ஏன் அந்த மனைவி அவளது விருப்பத்துக்கு மாறாக இன்னொருவனோடு படுத்தெழுந்து வர நிபந்தனை விதிக்கப்படவேண்டும் ? அவ்வாறில்லாமல் கணவன் தான் சொல்லிய தலாக்-கை நிராகரித்துவிட்டு முன்போல் கணவன் மனைவியாக வாழ ஏன் மதம் குறுக்கே நிற்கவேண்டும் ?

  9. Avatar
    தங்கமணி says:

    அன்புள்ள சுவனப்பிரியன்,

    இந்த எழுத்தாளர் எழுதியுள்ள ஆதாரமான கேள்வியை தெரிந்தோ தெரியாமலோ கண்டுகொள்ளாமல் போயிருக்கிறீர்கள்.

    அவர் சொல்லுவது முத்தலாக் சரியா இல்லையா என்பதல்ல.

    அவர் சொல்லுவது மூன்று தலாக் மூன்று முறை இடைவெளி விட்டு கூறவேண்டுமா அல்லவா என்பது அல்ல.

    தலாக் சொல்லுபவன் ஆண். உங்கள் வார்த்தையில் ”தவறாக” தலாக் சொல்லுபவன் கணவன்.

    மூன்றுமுறை சொல்லுகிறானோ முன்னூறு முறை சொல்லுகிறானோ.. சொல்லுவது ஆண்.

    அந்த பெண் விவாகரத்து செய்யப்படுகிறாள்.

    சரி.

    சரி அந்த கணவன் மீண்டும் அந்த மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறான்.

    இதில் கணவனைத்தானே தண்டிக்க வேண்டும்?

    ஏன் மனைவி தண்டிக்கப்படுகிறாள்?

    அந்த பெண் ஏன் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்ளவேண்டும்?

    அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வதால் பாதிக்கப்படுவது அந்த பெண் தானே? அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் ஏன் அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்ட பின்னால் இந்த ஆணை திருமணம் செய்யவேண்டும்?

    ஏன் அந்த பெண்ணின் விருப்பமோ அல்லது கருத்தோ இங்கே உதாசீனம் செய்யப்படுகிறது?

  10. Avatar
    suvanappiriyan says:

    திரு தங்கமணி!

    //அந்த கணவன் மீண்டும் அந்த மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்புகிறான்.
    இதில் கணவனைத்தானே தண்டிக்க வேண்டும்?
    ஏன் மனைவி தண்டிக்கப்படுகிறாள்?
    அந்த பெண் ஏன் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்ளவேண்டும்?//

    தனது மனைவி இன்னொருத்தனுக்கு திருமணம் முடிக்கப்பட்டு ஒரு இரவை அவனோடு கழித்த பிறகு அவன் தலாக் விட்ட பிறகு தான் பழைய கணவன் தனது மனைவியை அடைகிறான். இதில் பழைய கணவனுக்கு எந்த அளவு மனது வேதனைப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இதுவே ஒரு தண்டனைதானே!

    அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள். பிறகு முதல் கணவனுக்கான திருமணத்துக்கான மஹரையும் இரண்டு முறை பெற்றுக் கொள்கிறாள். இதனால் அந்த பெண் பொருளாதார ரீதியாக சிறந்த இடத்தை அடைய முடியும். அவனை திரும்பவும் திருமணம் செய்து கொள்ள அந்த பெண் விரும்பினாலேயே பழைய கணவனை மறுமணம் செய்து கொள்ள முடியும். இங்கும் பெண்ணின் விருப்பத்தைப் பொருத்தே இது சாத்தியப்படும்.

    //அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொள்வதால் பாதிக்கப்படுவது அந்த பெண் தானே? அவளுக்கு விருப்பம் இல்லையென்றாலும் ஏன் அந்த பெண் இன்னொரு ஆணுடன் உடலுறவு கொண்ட பின்னால் இந்த ஆணை திருமணம் செய்யவேண்டும்?
    ஏன் அந்த பெண்ணின் விருப்பமோ அல்லது கருத்தோ இங்கே உதாசீனம் செய்யப்படுகிறது?//

    தலாக் விட்ட முதல் கணவன் திரும்ப அழைத்துக் கொண்டாலும் அதற்கு பெண்ணின் அனுமதியும் தேவை. தலாக் விட்ட அந்த கணவன் எனக்கு தேவையில்லை என்று அந்த பெண் சொன்னால் அந்த பெண்ணை யாரும் வற்புறுத்த முடியாது. எனக்கு மறுமணம் வேண்டாம் என்று சொல்ல பெண்ணுக்கு முழு உரிமையை இஸ்லாம் கொடுக்கிறது.

    தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகிக்கக் கூடாது என்பதற்காகவும் இந்த சட்டம் இறைவனால் தரப்பட்டுள்ளது.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      / அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள். பிறகு முதல் கணவனுக்கான திருமணத்துக்கான மஹரையும் இரண்டு முறை பெற்றுக் கொள்கிறாள். இதனால் அந்த பெண் பொருளாதார ரீதியாக சிறந்த இடத்தை அடைய முடியும் /

      ஒவ்வொரு முறை விவாகரத்தாகும்போது பெண் தான் வாங்கிய மஹர்-ஐ திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுவதாக சொல்கிறீர்கள். அதன்படி முதல் கணவனின் மஹர்-ஐ திருப்பிக்கொடுத்தபின்-தான் இரண்டாம் மணம் புரிய முடியும். பின் முதல் கணவனோடு சேர நினைத்தால் இரண்டாம் மணத்தின்போது வாங்கிய மஹர்-ஐ திருப்பிக்கொடுத்துவிடவேண்டும். அப்புறம் எப்படி பொருளாதார ரீதியாக சிறப்பான இடத்தை அடைய முடியும் ?

  11. Avatar
    தங்கமணி says:

    சுவனப்பிரியன்,
    //இதில் பழைய கணவனுக்கு எந்த அளவு மனது வேதனைப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இதுவே ஒரு தண்டனைதானே!//
    இல்லை. இந்த கட்டுரையில் நடந்த நிகழ்ச்சியில், அவ்வாறு திருமணம் செய்து உடலுறவு கொண்ட பின்னால், வேறொருத்தருடன் படுத்ததற்காக முன்னாள் கணவன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ம்றுத்துவிட்டான்.
    இப்போது அந்த பெண்ணின் கதி என்ன?

    //அடுத்து பெண்ணுக்கு இதில் என்ன நஷ்டம்? வேறொரு ஆணை மணக்கும் பெண் மஹராக 1 லட்சம் இரண்டு லட்சம் பெற்றுக் கொள்கிறாள். //

    எந்த ஏழை ஒரு லட்சம் இரண்டு லட்சம் மஹர் கொடுத்து திருமணம் செய்துகொள்கிறான்? இரண்டு மூன்று பேரீச்சை பழங்கள் போதுமல்லவா?

    //அவனோடு ஒரு இரவு இல்லற சுகத்தையும் சட்ட பூர்வமாக அனுபவிக்கிறாள்.//
    என்ன எழவுடா இது!

  12. Avatar
    suvanappiriyan says:

    //இப்படி மூன்று மாதவிடாய் காலங்கள் இடைவெளி விட்ட பின்பும் தலாக் சொல்லிய ஒரு கணவன் அதற்குப்பின்னான சூழ்நிலை மாற்றத்தால் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பினால் (இங்கே மனைவி அவனோடு சேர்ந்து வாழ விரும்புகிறாள் என்றே வைத்துக்கொள்வோம்) ஏன் அந்த மனைவி அவளது விருப்பத்துக்கு மாறாக இன்னொருவனோடு படுத்தெழுந்து வர நிபந்தனை விதிக்கப்படவேண்டும் ?//

    அதற்கு தான் இரண்டு வாய்ப்புகளை குர்ஆன் கொடுக்கிறதே! இரண்டு தலாக் சொல்லி இருவரும் இணைய விரும்பினால் தாராளமாக கணவன் மனைவியாக இருந்து கொள்ளலாம். அதற்குப் பிறகும் இவர்களுக்குள் ஒத்து வரவில்லை என்று முன்றாவது முறையும் தலாக் சொல்லப்பட்டால் அவர்கள் பிரிந்து விட வேண்டும் என்கிறது இஸ்லாம். அப்படியும் பிரிக்காமல் சட்டத்தின் மூலம் நீங்கள் தடுத்தீர்கள் என்றால் ‘ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு’ என்று பத்திரிக்கையில் செய்தி வரும். முஸ்லிம் குடும்பங்களில் மட்டும் ஏன் ஸ்டவ் வெடித்து பெண்கள் சாவதில்லை என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். விவாகரத்தை இலகுவாக்கியதுதான் காரணம்..

    //அவ்வாறில்லாமல் கணவன் தான் சொல்லிய தலாக்-கை நிராகரித்துவிட்டு முன்போல் கணவன் மனைவியாக வாழ ஏன் மதம் குறுக்கே நிற்கவேண்டும் ?//.

    இந்த தலாக்கை விளையாட்டாக யாரும் உபயோகப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் திரும்ப வாழ விரும்பினால் மற்றொரு நபருக்கு திருமணம் ஆகி அவன் தலாக் சொன்ன பிறகுதான் திருமணம் முடிக்க முடியும் என்ற சட்டத்தை கொடுததது குர்ஆன். மறுமணம் செய்து கொள்ள பெண்ணின் அனுமதியும் கண்டிப்பாக தேவை.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      / அதற்கு தான் இரண்டு வாய்ப்புகளை குர்ஆன் கொடுக்கிறதே! இரண்டு தலாக் சொல்லி இருவரும் இணைய விரும்பினால் தாராளமாக கணவன் மனைவியாக இருந்து கொள்ளலாம் /

      அன்புள்ள சுவனப்பிரியன்,

      நான் கேட்டது மூன்று முறையும் தலாக் சொன்ன பிறகு, “அதற்குப்பின்னான சூழ்நிலை மாற்றத்தால் மனைவியோடு சேர்ந்து வாழ விரும்பினால்” ?

      அந்த சூழல் மாற்றம் இரண்டு முறை சொன்ன பிறகு ஏற்படாமல் மூன்று முறை சொன்ன பிற்பாடு ஏற்பட்டால் ? உதாரணமாக அந்த மனைவியின் பெற்றோர் (அல்லது அவருக்கு ஆதரவளிக்ககூடியவர்கள்) திடீரென இறந்துபோய், அவர் தனிமரமாகிப்போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மனமிரங்கிய கணவன் மேலும் தன் மனைவிக்கு வேதனையை கொடுக்க விரும்பாமல் ‘சரி, போனால் போகட்டும், தலாக் வேண்டாம்’ என்று தனது தலாக்-கை நிராகரிக்க இயலுமா ? (இது ஒரு உதாரணம் மட்டுமே)

      நான் இங்கே தலாக்-கை விளையாட்டாக உபயோகப்படுத்துவதை சொல்லவே இல்லை.

  13. Avatar
    suvanappiriyan says:

    //உதாரணமாக அந்த மனைவியின் பெற்றோர் (அல்லது அவருக்கு ஆதரவளிக்ககூடியவர்கள்) திடீரென இறந்துபோய், அவர் தனிமரமாகிப்போகும் நிலை ஏற்பட்டு, அதனால் மனமிரங்கிய கணவன் மேலும் தன் மனைவிக்கு வேதனையை கொடுக்க விரும்பாமல் ‘சரி, போனால் போகட்டும், தலாக் வேண்டாம்’ என்று தனது தலாக்-கை நிராகரிக்க இயலுமா ? (இது ஒரு உதாரணம் மட்டுமே)//

    ஆயிரத்தில் லட்சத்தில் ஒரு நிகழ்வு நடப்பதற்கும் பெரும்பான்மையான குடும்பங்களில் நடக்கும் தலாக்குக்கும் வித்தியாசம் உள்ளதே! நீங்கள் ஒரு குடும்பத்தை உதாரணத்துக்கு எடுத்து சாதக பாதகங்களை அலசக் கூடாது. எந்த ஒரு சட்டமும் பெரும்பான்மையான சம்பவங்களின் அடிப்படையிலேயே அணுக வேண்டும். சட்டத்தினால் எப்போதாவது ஒரு சில நிரபராதிகள் தண்டிக்கப் பட்டு விடுவதும் உண்டு. இதனால் தண்டனையே கூடாது என்று சொல்வோமா?

  14. Avatar
    Indian says:

    Sp, you have not answered this question. Why cannot women say thalak 3 times and divorce their husbands as men do? Why should they have go through all the hazels when men do not have to? Straight forward answers please. No monologue on protecting women, etc.
    Anyway, why should religion ( Islam here) should poke it’s nose in affairs that are essentially a private ” business”( for want of better word, don’t go harping on this) between two mature adults?

  15. Avatar
    லெட்சுமணன் says:

    *//இந்தியாவில் ஸ்பெஷல் marriages act இருப்பது போல.
    அதுவும் ஆண் பெண் இருவரும் வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் தான் அதன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று உள்ளது.அதை மாற்றி யார் வேண்டுமானாலும் அதன் கீழ் பதிவு செய்து கொள்ளலாம் என்று வைத்தால் இந்த ஆணுக்கு அதிக உரிமைகள்,ஜீவனாம்சம்,மறுமணம் குழப்பங்கள் வருவது பெருமளவில் குறையும் வாய்ப்பு உண்டு//**

    எம்மதத்தினரும் இச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளலாம்.

    இந்திய தனித்திருமணச் சட்டம் 1954 என்பது இந்திய தனித்திருமணச் சட்டம் 1872 – ஐ முழுமையாக நிராகரித்து உருவாக்கப்பட்டது.

    ==========================
    Special Marriage Act, 1954
    From Wikipedia, the free encyclopedia

    The main reason behind passing the Special Marriage Act, 1954 was to provide a special form of marriage for the people of India and all Indian nationals in foreign countries, irrespective of the religion or faith followed by either party.[1] The Act originated from a piece of legislation proposed during the late 19th century

    Applicability of the Special Marriage Act, 1954
    ===============================================
    1)Any person, irrespective of religion.[4]
    2)Hindus, Buddhists, Jains, Sikhs can also perform marriage under the Special Marriage Act, 1954.[4]
    3)The Muslim, Christian, Parsi, or Jewish religions can also perform marriage under the Special Marriage Act, 1954.[4]
    4)Inter-caste marriages are performed under this Act.[4]
    5)This Act is applicable to the entire territory of India (excluding the states of Jammu and Kashmir) and extends to intending spouses who are both Indian nationals living abroad.[4]

    http://en.wikipedia.org/wiki/Special_Marriage_Act,_1954

    முழுவதுமாக சட்டத்தை படிக்க
    ==========================
    http://www.gujhealth.gov.in/images/pdf/legis/special-marriage-act-1954.pdf

  16. Avatar
    பூவண்ணன் says:

    @முத்துகுமார்
    ஸ்பெஷல் marriages act சட்டத்தின் கீழ் விவாகரத்து உரிமைகளும் இருவருக்கும் ஒன்று தான். எந்த மதத்தின் விவாகரத்து சுலபங்களும்,கடினங்களும் அதில் வராது
    என் அண்ணன் கிருத்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டவர்.அவர் திருமணம் ஸ்பெஷல் marriages act கீழ் பதிவு செய்யப்பட்டது.என் மனைவியின் தாய் இஸ்லாமியர்,தந்தை ஹிந்து
    அவர்கள் திருமணம் ஸ்பெஷல் MARRIAGES ACT கீழ் பதிவு செய்யப்பட்டது
    என் மனைவியின் மதம் ஹிந்து என்று தந்தையின் மதத்தை வைத்து எழுதி விட்டதால் என் திருமணத்தை ஸ்பெஷல் MARRIAGES ACT கீழ் பதிவு செய்ய மறுத்து
    என் மதம் புத்தம் என்று கொடுத்தாலும் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்வோம் என்று பதிவு அலுவலகத்தில் கூறி விட்டனர்
    சுயமரியாதை திருமணத்தையும் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் தான் ஒரு பிரிவாக பதிவு செய்வோம் என்று தான் சட்டம் உள்ளது

    எந்த ஹிந்து சடங்குகளின் கீழும் நடக்கவில்லை.ஹிந்து மத நம்பிக்கைகளை திட்டுபவர்களையும் ஏன் அதன் கீழ் பதிவு செய்ய கட்டாயபடுதுகிரீர்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை
    என்றாவது ஒரு நாள் என் திருமணத்தை ஸ்பெஷல் MARRIAGES ACT கீழ் பதிவு செய்யும் நிலை வரும் என்று நம்புகிறேன்.
    யாரவது போராடினால் ஆதரிக்க தயார்
    விருப்பபடுபவர்கள்,சுயமரியாதை திருமணம் செய்பவர்கள்,பெண்ணியவாதிகள் special marriages act கீழ் பதிவு செய்ய அனுமதிக்கபட்டால் அதிக சதவீதம் பேர் அதன் கீழ் பதிவு செய்யும் நிலை வரும் என்று நம்புகிறேன்.

    http://articles.timesofindia.indiatimes.com/2012-02-14/chennai/31058567_1_inter-caste-marriages-caste-identity-registration

    According to the registration department, about 77,000 marriages were registered across the state under the Hindu Marriage Act 1955 during 2010-11. A total of 7,601 marriages were registered under the Special Marriage Act, indicating that 10% of the registered marriages were inter-religious.

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      தகவலுக்கு நன்றி பூவண்ணன்.

  17. Avatar
    பூவண்ணன் says:

    மாத விடாய் என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது
    period நின்ற பெண்களை தலாக் செய்வது எப்படி.
    period எனபது மாதத்தில் முதல் தேதி சம்பளம் போல எல்லாருக்கும் 30 நாட்களுக்கு ஒரு முறை வரும் என்று கிடையாது
    பலருக்கு 25 நாட்களுக்கு ஒரு முறை சிலருக்கு நாப்பது நாட்களுக்கு ஒரு முறை சிலருக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்.
    அதற்கும் விவாகரத்திற்கும் ,மூன்று முறை கூறுவதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை
    இன்று மருத்துவ முன்னேற்றத்தால் கர்ப்ப பை புற்றுநோய்,கட்டி,அதிக உதிரபோக்கு,குழந்தைபேரின் போது பாதிப்புக்கான கர்ப்பப்பை போன்ற குறைபாடுள்ள பெண்களுக்கு 25 ,30 வயதிலேயே கர்ப்பப்பை அகற்றபடுவது சாதரணமாக நிகழ்கிறது.
    thyroid சுரப்பி குறைபாடு ,பாலூட்டும் தாய்மார்கள் ,மிகுந்த ரத்த சோகை உள்ள பெண்களுக்கு பல மாதங்களுக்கு period வராது
    வேறு சில வாதிகள் இருந்தால் பத்து நாளைக்கு ஒரு முறை கூட periods வரும்
    அப்போது எதை வைத்து மூன்று முறை சொல்வதற்கு காலத்தை கொரான் சொல்லி இருக்கிறது

    பெண்களுக்கு அதிக உரிமை என்று எந்த மதம் சொன்னாலும் அதை விட சிறந்த நகைச்சுவையை படிப்பது அரிது

    polygamy (பல தார மணம் )சிறந்தது
    polyandry (பல கணவர் மணம்)மிகவும் கெட்டது என்று ஆண்களுக்கு ஆதரவாக கருத்தாக்கங்கள் உருவாக்கபடும் முயற்சியில் வந்தது தான் எல்லா மதங்களும்
    அம்பேத்கர் புண்ணியத்தில் ஹிந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு சட்ட ரீதியாகவாவது அது ஒழிந்தது
    ஒழியாமல் இருக்கும் மதங்களில் இருப்பவர்கள் பெண்ணுரிமை என்று கொஞ்சம் கூட குற்ற உணர்வு இல்லாமல் பேசுவது வேதனையான நிகழ்வு

    1. Avatar
      பொன்.முத்துக்குமார் says:

      இதுக்கும் இப்படி சொல்லிடப்போறாரு சுவனப்பிரியன் :) :

      “ஆயிரத்தில் லட்சத்தில் ஒரு நிகழ்வு நடப்பதற்கும் பெரும்பான்மையான குடும்பங்களில் நடக்கும் தலாக்குக்கும் வித்தியாசம் உள்ளதே!”

  18. Avatar
    பூவண்ணன் says:

    http://www.hindu.com/2004/08/11/stories/2004081106680500.htm

    Many Muslim women stand alienated in society because of suppression, dowry, polygamy and early marriage, D. Sharifa Khanam, who has formed the committee, told newspersons here today.

    She pointed out that marital disputes, which were referred to the male-dominated local Jamaat, were `resolved’ without the woman being heard.

    முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாக உள்ளது.
    சுவனபிரியன்

    ஏங்க நீங்க ஒன்னு சொல்றீங்க
    ஆனா இஸ்லாமிய பெண்கள் வேற சொல்றாங்களே
    பாதிக்கப்பட்டவங்க பேச்சை நம்புவதா இல்லை ஆண் என்று அளவில்லா சலுகைகளை மதத்தின் பெயரால் அனுபவிப்பவர்களை நம்புவதா

  19. Avatar
    பூவண்ணன் says:

    Changing Marriage Patterns in Asia – Asia Research Institute, ARI
    http://www.ari.nus.edu.sg/docs/wps/wps10_131.pdf

    But in the less wealthy countries of Asia, divorce rates have varied tremendously in the past,
    from very low rates in South Asian countries to very high rates in the Malay-Muslim
    populations of Southeast Asia. One generalization about trends in divorce that has at least
    some theoretical basis is that in stable high-divorce systems, “industrialization” can be
    expected to lead to declines in divorce rates (Goode, 1963, Chapter 8). I have argued that,
    with regard to the Malay-Muslim populations,

    கொரான் எல்லா இடத்திலும் ஒன்று தானே
    பின் ஏன் ஒவ்வொரு நாடு,அவர்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மண விலக்கு சதவீதம் கூடுகிறது,குறைகிறது
    இதன் படி பார்த்தால் மதத்தை விட அந்த நாடுகளின் நிலை,பெண்களின் கல்வி அறிவு,சொத்து தானே மண விலக்கு சதவீதங்களை தீர்மானிக்கிறது

    http://wikiislam.net/wiki/Muslim_Statistics_%28Women%29

    Malaysia

    Divorce rates among Muslims is five-times higher than among non-Muslims
    New Straits Times story (Sept 30) that revealed the disproportionately high divorce rate among Muslims (15,000) compared with Chinese and Indians (3,000). A Muslim man’s unilateral right to divorce his wife at will is one of the causes of the higher rate of divorce among Muslims.[2]
    November, 2006

    Saudi Arabia

    Saudi Arabia has the second-highest divorce-rate in the world
    இது எல்லாம் உண்மையா
    நீங்க சொல்றதுக்கும் இந்த கணக்குகளுக்கும் சம்பந்தமே இல்லையே
    மூணு தலாக்,குலா திருமணம் எல்லாம் மண விலக்கை விளையாட்டா எடுத்து கொள்ள கூடாது என்பதற்காக என்று சொல்லுவதற்கும்
    இஸ்லாமியர்கள் இடையே மிக அதிக அளவில் மண விலக்குகள் நடைபெருவத்ர்க்கும் தொடர்பே இல்லையே

  20. Avatar
    suvanappiriyan says:

    திரு பூவண்ணன்!

    //மாத விடாய் என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது
    period நின்ற பெண்களை தலாக் செய்வது எப்படி.//

    ஒரு மாதவிடாய் காலம் என்பது சுமாராக ஒரு மாதம் அல்லது சற்று அதிகமாகவும் வரும். இதனை வைத்து மாத விடாய் நின்றவர்கள் தங்களின் கணக்கை சரி பார்த்துக் கொள்வார்கள்.

    //அதற்கும் விவாகரத்திற்கும் ,மூன்று முறை கூறுவதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை//

    மூன்று தவணைகள் என்று வைத்தது அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்து வாழ்ந்து விடட்டும் என்பதாலேயே!

    அடுத்து பெண் மறு மணம் செய்ய ஒரு மாத விடாய் காலம் பொருத்திருக்கும் படி சொன்னதற்கான காரணம் முதல் கணவன் மூலமாக ஏதும் குழந்கைகள் வயிற்றில் இருந்தால் அதை தெரிந்து கொள்ளும் பொருட்டே

    //முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாக உள்ளது.//

    நான அதனை இந்தியாவை வைத்தே சொன்னேன். மற்ற மதங்களை விட நமது நாட்டில் முஸ்லிம்களிடம் விவாகரத்து குறைவாகவே உள்ளது. சவுதியில் விவாகரத்துகள் அதிகமானாலும் அதே அளவு மறுமணங்களும் நடந்து அதனை சரி செய்து விடுகிறது. கணவன் மனைவி சம்பந்தமான கொலைகள் சவுதியில் நடக்காததற்கு காரணமும் இந்த விவாகரத்து இலேசாக்கப்பட்டதுதான்..

  21. Avatar
    suvanappiriyan says:

    திரு இந்தியன்!

    //Sp, you have not answered this question. Why cannot women say thalak 3 times and divorce their husbands as men do? Why should they have go through all the hazels when men do not have to? Straight forward answers please. No monologue on protecting women, etc.
    Anyway, why should religion ( Islam here) should poke it’s nose in affairs that are essentially a private ” business”( for want of better word, don’t go harping on this) between two mature adults?//

    இதற்கான பதில் இந்த பதிவில் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.

    http://suvanappiriyan.blogspot.com/2012/09/blog-post_10.html

  22. Avatar
    முன்னாள் முஸ்லிம் says:

    சுவனப்பிரியன்,

    //நீங்கள் ஒரு குடும்பத்தை உதாரணத்துக்கு எடுத்து சாதக பாதகங்களை அலசக் கூடாது. எந்த ஒரு சட்டமும் பெரும்பான்மையான சம்பவங்களின் அடிப்படையிலேயே அணுக வேண்டும். சட்டத்தினால் எப்போதாவது ஒரு சில நிரபராதிகள் தண்டிக்கப் பட்டு விடுவதும் உண்டு. இதனால் தண்டனையே கூடாது என்று சொல்வோமா?
    //

    நீங்கள் சொல்வது மனிதர்கள் இயற்றும் சட்டங்களுக்கு பொருந்தும்.

    இந்த அகிலத்தை படைத்த ஆண்டவன் கொடுத்ததாக சொல்லப்படும் சட்டத்துக்கு பொருந்துமா?

    ஆண்டவன் கொடுத்ததாக சொல்லப்படும் சட்டத்தில் ஒரு அணுவுக்கும் அநீதி நடக்குமா?

    அப்படி ஒருவருக்கு அநீதி நடந்தால், அது ஆண்டவன் கொடுத்ததாக இருக்குமா?

  23. Avatar
    suvanappiriyan says:

    முன்னாள் முஸ்லிம்

    இந்து பெயரிலேயே வரலாமே! :-)

    //ஆண்டவன் கொடுத்ததாக சொல்லப்படும் சட்டத்தில் ஒரு அணுவுக்கும் அநீதி நடக்குமா?
    அப்படி ஒருவருக்கு அநீதி நடந்தால், அது ஆண்டவன் கொடுத்ததாக இருக்குமா?//

    இந்த உலக வாழ்க்கை நிரந்தரம் அல்ல என்று இஸ்லாம் சொல்கிறது. இறப்புக்கு பிறகு உள்ள மறுமை வாழ்க்கையே ஒரு மனிதனுக்கு நிரந்தரம் என்கிறது குர்ஆன்.

    ‘ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!’
    -குர்ஆன் 2:155

    நல்லவர்களுக்கே அதிகம் சோதனைகள் வரும். அதனை சகித்துக் கொண்டு இறை நம்பிக்கையில் எந்த சலனமும் ஏற்படாமல் அவனிடத்திலேயே நமது கஷ்டங்களை சொல்லி பரிகாரம் தேட வேண்டும். இவ்வளவு சிரமத்திலும் இந்த அடியான் என் மீது நம்பிக்கை வைத்துள்ளானா என்று இறைவன் சோதிக்கிறான். இந்த இறை நம்பிக்கையானது ஒரு மனிதனை பக்குவப்படுத்தி தற்கொலைகளிலிருந்தும் அவனை காக்கிறது. முஸ்லிம்களிடம் அதீத இறை நம்பிக்கை இருப்பதால்தான் உலக அளவில் தற்கொலைகள் அவர்களிடம் குறைவாக உள்ளது. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஐந்து வேளை தொழுகையில் இறைவனிடம் தனது பாரத்தை ஒரு முஸ்லிம் இறக்கி வைத்து தனது மனதை லேசாக்கிக் கொள்கிறான். பிரார்த்தனையால் கிடைத்த பல நன்மைகளில் இதுவும் ஒன்று.

  24. Avatar
    Indian says:

    SP,I cannot be BOTHERED reading your diatribe in your blog. In simple language, in few sentences only, can you enlighten me why the discrepancy in divorce procedure for males and females in Islam? Why the leniency for the males? Why cannot woman say thalk 3 times and divorce her husband? Also, what is so special about this three time Thalak? Why not four time? Or five times? Is Allah a fan of Baseball?
    By the way, A LOT OF WOMEN get periods a number of times in a month ( called polymenorrhoea)Some ( normal)women also get spotting few times during their monthly cycle.It is not unusual. What is the Koran’s ruling on this in relation to thalaks? What about women who have had hysterectomies?
    Must be a busy God ( and a good(!!!) Gynecologist)setting out rules for divorce based on woman’s periods!

  25. Avatar
    சுந்தரி says:

    மதகுரு சுவனப்பிரியன் ஐயாவே.

    பெண்களின் உரிமைகளில், முக்கியமாக அவர்களின் அந்தரங்கமான உடலுறவு என்ற விஷயத்தில் மூக்கை நுழைக்கும் மதங்களும் மனித்தர்களும் உலகுக்குத் தேவையா ? வேறொருத்தனுடன் படுத்து எழுந்தால் அந்தப் பெண்ணின் மனநிலை என்னாவது ? அவள் என்ன விபச்சாரியா எத்தனை பேருடனும் “சட்டப் படி ” படுத்து எழுந்து வர ? ஏதோ மூடன் வேறு பெண்ணின் மேல் காம இச்சைக் கொண்டு தலாக் கொடுத்துவிட்டால் அதில் இந்தப் பெண் ஏன் வேறு ஒரு இடியட்டுடன் படுத்து எழுந்து வந்து மீண்டும் இவனிடம் படுக்க வேண்டும்? காதலைக் கொச்சைப் படுத்த இதை விட வேறு எந்த சட்டமும் தேவை இல்லை.

    அப்புறம் கடந்த ஒரு 2 வருஷத்துல நடந்த விவாகரத்து கொலைகளை இங்கே பட்டியலிடவும். கட்டுரையின் முக்கியமான சாராம்சத்தை விட்டுட்டு கண்டபடி சப்பைக் கட்டு கட்டிட்டு ஓடிவர்ரீங்க.

  26. Avatar
    smitha says:

    Islam is the only religion where husbands can divorce their wives over the phone & also thro’ net.

    Worse, these acts have been ratified by the clergy.

    We recently saw such cases reported in the papers.

    Now, SP will say that islam does not allow this, Koran does not jsutify this etc.,

    The best (or the worst) part is that even the muslim terrorist quotes from the Koran to justify is actions.

    Unless there is a change in the mindset(highly improbable) of the muslims, others will continue to suffer.

  27. Avatar
    லெட்சுமணன் says:

    *//சுயமரியாதை திருமணத்தையும் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் தான் ஒரு பிரிவாக பதிவு செய்வோம் என்று தான் சட்டம் உள்ளது*//

    Under Hindu Marriage Act 1955 – Sec(7) என்பது வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தையும் Sec 7(A) என்பது சீர்திருத்த திருமணத்தை பற்றியும் சொல்கிறது.

    *//எந்த ஹிந்து சடங்குகளின் கீழும் நடக்கவில்லை.ஹிந்து மத நம்பிக்கைகளை திட்டுபவர்களையும் ஏன் அதன் கீழ் பதிவு செய்ய கட்டாயபடுதுகிரீர்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை/**

    சட்டத்தை நடைமுறை படுத்துபவர்களிடம் சென்று சட்டத்தை கேள்வி கேட்பது முறையல்ல.

    *//என் மனைவியின் மதம் ஹிந்து என்று தந்தையின் மதத்தை வைத்து எழுதி விட்டதால் என் திருமணத்தை ஸ்பெஷல் MARRIAGES ACT கீழ் பதிவு செய்ய மறுத்து
    என் மதம் புத்தம் என்று கொடுத்தாலும் ஹிந்து திருமண சட்டத்தின் கீழ் தான் பதிவு செய்வோம் என்று பதிவு அலுவலகத்தில் கூறி விட்டனர்//*

    உங்கள் திருமணத்தை நீங்கள் Special Marriages Act -ன் கீழ் பதிவு செய்யலாம். சட்டம் தெளிவாக உள்ளது. நடைமுறை சிக்கல் தான் உள்ளது.

    *//என்றாவது ஒரு நாள் என் திருமணத்தை ஸ்பெஷல் MARRIAGES ACT கீழ் பதிவு செய்யும் நிலை வரும் என்று நம்புகிறேன்.
    யாரவது போராடினால் ஆதரிக்க தயார்
    விருப்பபடுபவர்கள்,சுயமரியாதை திருமணம் செய்பவர்கள்,பெண்ணியவாதிகள் special marriages act கீழ் பதிவு செய்ய அனுமதிக்கபட்டால் அதிக சதவீதம் பேர் அதன் கீழ் பதிவு செய்யும் நிலை வரும் என்று நம்புகிறேன்.//*

    இப்பொழுதே உங்கள் திருமணத்தை நீங்கள் Special Marriages Act -ன் கீழ் பதிவு செய்யலாம். போராட்டம் எல்லாம் தேவையே இல்லை. சட்டம் தெளிவாக உள்ளது.

    பொதுவாக வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் தான் Special Marriages Act -ன் கீழ் பதிவு செய்கிறார்கள். ஆனால், சட்டப்படி எந்த மதத்தை சேர்ந்தவரும் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏனைய திருமணச் சட்டங்களில் முன்பே நடைபெற்ற திருமணங்கள் பதிவு அலுவலகங்களில் முறைப்படுத்தப்படுகின்றன(Solemnization). ஆனால், Special Marriage Act -ல் நடைபெறும் திருமணங்கள் சார்பதிவாளரால் உறுதி மொழி படிக்கப்பட்டு நடத்தி வைக்கப்படுகின்றன. அது மட்டும் தான் வித்தியாசம்.

    *//According to the registration department, about 77,000 marriages were registered across the state under the Hindu Marriage Act 1955 during 2010-11. A total of 7,601 marriages were registered under the Special Marriage Act, indicating that 10% of the registered marriages were inter-religious//*

    இது நடைமுறையில் உள்ளது. ஆனால், சட்டம் அப்படி சொல்லவில்லை. இந்த 10% கூட சரி என்று சொல்லிவிட முடியாது. யாரேனும் ஒரே மதத்தை சேர்ந்தவர்கள் கூட Special Marriage Act-ல் திருமணம் செய்து இருக்கலாம்.

  28. Avatar
    பூவண்ணன் says:

    லெட்சுமணன் சார்
    நீங்க சொன்ன பிறகு ஸ்பெஷல் marriage act படித்தேன்.
    அதி யார் வேண்டுமானாலும் ஒரே மதத்தை சேர்ந்தவர்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் இருக்கிறது .நன்றி
    ஆனால் பதிவு அலுவலகத்தினர் ஏன் அதனை வெறும் இரு மதத்தை சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணதிற்கு என்று மட்டும் கட்டம் கட்டுகிறார்கள் என்று புரியவில்லை
    முப்பது நாள் நோட்டீஸ் போன்ற வேலைகள் வரும் என்பதாலா
    யாராவது வக்கீல்கள் தெளிவாக்கினால் உதவியாக இருக்கும்
    ஹிந்து மத திருமண சட்டத்தின் கீழ் அதற்கு அவசியம் இல்லை

    இந்த முறை விடுமுறையில் செல்லும் போது பதிவு அலுவலகம் சென்று ஸ்பெஷல் marriages act கீழ் பதிவு செய்ய முடியுமா என்று முயற்சி செய்கிறேன்

  29. Avatar
    Bala says:

    சுவனப்பிரியன்,
    தயவு செய்து உங்கள் மதக் கண்ணாடியைக் கழற்றிவிட்டு உலகத்தைப் பாருங்கள். உள்ளம் விரிவடையும். இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான பதில்களை எழுதவேண்டிய தேவை அகலும்.

  30. Avatar
    suvanappiriyan says:

    சுந்தரி!

    //அப்புறம் கடந்த ஒரு 2 வருஷத்துல நடந்த விவாகரத்து கொலைகளை இங்கே பட்டியலிடவும். கட்டுரையின் முக்கியமான சாராம்சத்தை விட்டுட்டு கண்டபடி சப்பைக் கட்டு கட்டிட்டு ஓடிவர்ரீங்க.//

    MUMBAI: Over the last five years, Mumbai police have registered at least one dowry-related case every day that led to nearly 146 deaths, classified under murder, suicide and other homicide like wife-burning. From 2008 to 2012 (till September 30), 243 cases of abetment to suicide and 1,544 mental or physical harassment cases were also recorded.

    Shockingly, the violence in dowry cases is rising in the city, with the number of murders in such cases touching 10 with three months still to go in the year. In 2011, records showed nine murders. Besides suicide and murder, other dowry-related deaths have reached a count of six already this year. Last year, it was 10.

    Greed seems to be at the root of many cases because as many as 338 cases of misappropriation of streedhan have been filed from 2008 till September 2012. These cases too seem set for a jump with 60 already filed this year, compared to 68 in 2011.

    The hand maiden of dowry-related cases is domestic violence. An act of cruelty against a woman by her husband or in-laws is recorded every nine minutes in India, says the National Crime Records Bureau. The volume of dowry cases in Mumbai shows even educated, independent women living in a city may not be shielded from domestic abuse.

    High court advocate Rajendra Bade, 33, arrested for abetting his wife’s suicide, has been remanded in police custody till Wednesday. His father, a retired civic official, was also remanded. Bade’s wife, Rupali, 22, committed suicide last week allegedly after being abused for giving birth to a girl and unable to pay dowry.
    Some disagree. “Misuse of the dowry and cruelty law is becoming common as women often see this as an option to speed up the lengthy divorce process. The police machinery is used to recover the property left behind while leaving the house,” said a senior officer attached with an eastern suburb police station.

    //lengthy divorce process//

    விவாகரத்து செய்வதை சிரமமாக்கி பல வருடங்கள் இழுப்பதுதான் இதுபோன்ற பிரச்னைகளுக்கு மூல காரணம் என்பதை இந்த அறிக்கை தெளிவாக்குகிறது.

    http://timesofindia.indiatimes.com/city/mumbai/Dowry-related-violence-on-rise/articleshow/16745824.cms

    http://suvanappiriyan.blogspot.com/2012/10/10.html

  31. Avatar
    தங்கமணி says:

    புள்ளிவிவரம்தானே கேட்டீர்கள்?
    இதோ..

    According to a study by the Foreign Nepali Workers Rescue Center (FNWRC), about 90 per cent of all Nepali migrant women are victims of sexual violence and exploitation. The worst cases are in Arab countries where female migrant workers are routinely raped, beaten and not paid. For this reason, the Nepali government limited emigration to the Middle East between 1998 and 2010.

    Still, every year, 83,000 Nepal migrant women leave the country in search for work. Most go to the Middle East, especially Saudi Arabia and Kuwait, where job opportunities are better.
    Arab states are destination of most illegal workers. Out of 67,000 in the Middle East in 2006, only 3,000 had the right papers and a valid contract.[18]
    September, 2011

    Afghan women’s groups say self immolation is a sad part of life in Afghanistan. Young women often set fire to themselves using household fuel or cooking oil, in response to domestic violence or family disputes. Launching the awareness campaign, Afghanistan’s acting health minister Dr Suray Dalil said that in the last year 22,000 burns cases were recorded in the country’s hospitals. Of those, 2000 required in-patient treatment. Fabrizio Foschini is a political analyst with the Afghanistan Analyst Network, based in Kabul. He says the problem seems to be increasing.
    . . .

    Nearly 90 percent of Afghan women suffer from domestic abuse, according to the United Nations Development Fund for Women. Despite that, there are less than a dozen shelters like this one in Afghanistan, usually run by non-governmental organizations. Abusers are rarely prosecuted or convicted, and most women are afraid to say anything. “Their mothers are beaten by their fathers. They’re beaten by their fathers, by their brothers. It’s a way of life,” said Manizha Naderi, director of WAW.[20]

    The reason is they are having such a life that they cannot tolerate anymore all this kind of violence. So I believe that the main reason is this that we have a strong culture of impunity that gives woman no hope and no choice to go and ask for justice.[21]

    பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்களை திருமணத்துக்கு வெளியே உறவு கொண்டதாக கைது செய்து சிறைதண்டனை விதிப்பது வழக்கம்
    In Pakistan, it is reported that three out of four women in prison under its Hudud laws [these are the laws of what it forbidden and permitted by Allah himself], are rape victims. Because rape is equated with zina [unlawful sexual intercourse] under Hudud law, rape victims are required to produce four pious male witnesses. It is of course nearly impossible for the rape victims to produce the four male witnesses required to prove their allegation. Therefore their police report of rape was taken as a confession of illicit sex on their part and they were duly found guilty.[39]

  32. Avatar
    சுந்தரி says:

    மதகுரு சுவனப் பிரியன் ஐயாவே,

    //From 2008 to 2012 //

    உண்மை தான். மேற்கூறிய *இரண்டு* வருடங்களில் நிறையவே பிரச்சினை நடந்திருக்கிறது. அப்புறம் அந்த மையக் கருத்துக்கு பதிலே சொல்ல மாட்றிக?
    பெண்களுக்கு நீதியா? அப்படின்னா எவ்வளவு கிலோன்னு கேளுங்கய்யா

    கற்பழிக்கப் பட்ட பெண் கம்ப்ளைண்டு பன்ணா ” கல்யாணத்துக்கு வெளியே ” தகாத பழக்கம் கொண்டுள்ளதா தண்டிக்கவும், ஏதோ விவகாரத்துல கணவன் விவாகரத்து செஞ்சுட்டா, அதே கணவன் மனம் திருந்தி வந்தா “சட்டப்படி விபச்சாரம்” செஞ்சுட்டு மீண்டும் அந்தக் கணவனையே அடைவதற்குமான உன்னதச் சட்டங்கள் மற்றைய நாடுகளும் இயற்ற வேண்டும்னு உங்களோட சேர்ந்து நானும் போராடறேன். ஏன்னா எல்லா நாட்லையும் எங்க பெண் இனமே நல்லவர்கள் சொல்றத விட்டுட்டு Perverted Male Chauvinist டுகள் குடுக்கிற தீர்ப்பால தான இருந்திட்டு இருக்கு.

    //It’s her womb, but it’s his decision // இதெல்லாம் படிச்சா பிபி வருதுங்க. நான் இனி கொஞ்ச நாளு இதெல்லாம் படிக்காம இருக்கனும்.

  33. Avatar
    பெரியார் பிரியன் says:

    படிக்கவே குமட்டுகிறது. இன்னும் குமட்டல் சுவனப்பிரியன் எழுதியுள்ளவற்றை படிக்கும்போது ஏற்படுகிறது. இந்த அளவுக்கு இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்களே என்று நினைக்கும்போது மனம் கனக்கிறது. இதனால் தான் உலகில் இன்று தீவிரவாதம் இந்த அளவுக்கு தலை தூக்கியிருக்கிறது.

    கடவுள் இப்படி ஒரு பெண்ணை கேவலப்படுத்துமாறு சொன்னான் என்று சொன்னால் கேட்கும்/நம்பும் இவர்களது மூளையை என்ன சொல்லி திட்டுவது?

  34. Avatar
    Shabeer says:

    அடிப்படையே புரியாமலும், அல்லது புரிந்தும் புரியாதது மாதிரி நடித்தும் கட்டுரையும்….மறுமொழிகளும்.

    ஷரியா சட்டப்படி, மூன்று வெவ்வேறு தவணைகளில் தலாக் சொல்லப்பட்ட பெண்ணை ஒரு கணவன் மீண்டும் (மணம் புரிய ) நாடுவது என்றால் அதற்கு வாய்ப்பு குறைவே என்றுதான் சொல்லவேண்டும்.
    என்ன காரணம் என்றால், விவாகரத்து செய்த பெண்ணை மணமுடிக்க விரும்பினால், அவள் வேறு மணம் முடித்து… அந்த இரண்டாவது கணவன் “தானாகவே முன்வந்து” (நியாயமான காரணங்களின் அடிப்படையில் அப்பெண்ணை விலக்குச் செய்திருக்க வேண்டும். “தானாகவே முன்வந்து; நியாயமான காரணங்களின் அடிப்படையில்” என்பது நன்றாக ஊன்றி கவனிக்கப்படவேண்டியது.

    முதல் கணவனுடன் ‘சேர்த்து’வைப்பதற்காகவே செய்யப்படும் தற்காலிகத் திருமணங்களுக்கோ; மணவிலக்குக்கோ ஷரியாவில் அனுமதி இல்லை என்பது புரியாமல் அல்லது வேண்டுமென்றே கட்டுரையும் பின்மொழிகளும் எழுதப்பட்டிருக்கின்றன.

    சுவனப் பிரியன் போன்ற முல்லாக்களுக்கு ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது:

    இதற்கெல்லாம் / இவர்களுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக்காதீர்கள். 1). இவர்கள் அறியாமையால் கேட்பது போன்ற தொனியில் இல்லை. ஆனால், கட்டுரைகளும், பின்மொழிகளும் ‘அறிதல்’ உடையதாக அமைவதில்லை. 2). ‘கொளுத்திப் போட்டு வேடிக்கைப் பார்க்கும் ‘ மனநிலையே தெரிகிறது 3). உங்களைப் போன்ற ‘மொல்லா’க்கள் பதிலளிக்கும் போது உங்களைப் போன்றவர்களின் அரைகுறை வாசிப்பும், அறியாமையும் தான் அதிகம் வெளிப்படுகிறது.

  35. Avatar
    பூவண்ணன் says:

    ஷபீர் சார்
    அப்ப நியாயமான காரணங்கள் இல்லாமல் மூன்று முறை தலாக் சொன்னால் செல்லாதா
    புது கருத்தாக இருக்கிறதே
    மூன்று முறை தலாகிர்க்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தம்
    நியாயமோ எந்த காரணமோ இல்லாமல் மூன்று முறை இடைவெளி விட்டோ விடமாலோ தலாக் சொன்னால் செல்லுமா செல்லாதா
    ஞாயம்,ஞாயம் இல்லை என்பதை யார் முடிவு செய்வது
    அது என்ன இரண்டாவது கணவன் மட்டும் நியாயமான காரணங்களுக்காக தலாக் செய்ய வேண்டும்

  36. Avatar
    smitha says:

    Widespread condemnation of Haji Ali dargah’s ban on women

    Mumbai: “People from all parts of the world without restrictions of caste, creed and religion visit the Dargah to offer their prayers and for the fulfillment of their wishes by the blessings of the Saint Pir Haji Ali Shah Bukhari.”
    – Official website, Haji Ali Dargah

    It would perhaps be fair to add a restriction: women.

    Popularly known as the Haji Ali Dargah, for decades the iconic and religious landmark has been a much visited site of pilgrimage for thousands of tourists and believers. Erected on a bed of rocks, 500 yards into the Arabian Sea and off the coast of Worli in south central Mumbai, the dargah has been immortalised by Bollywood in several movies.

    Now, in a controversial move that has shocked Mumbai, the Haji Ali Dargah Trust has barred women from entering the sanctum sanctorum that houses the tomb of the 15th century Sufi saint Pir Haji Ali Shah Bukhari.

    “If Islamic scholars have issued a fatwa, in accordance with the Islamic law of Sharia, and have demanded that women not be allowed in dargahs, we have only made a correction,” explains Rizwan Merchant, trustee of the Haji Ali Dargah Trust and also a noted criminal lawyer. “Women will not be allowed inside the sanctum sanctorum.”

    Practically this means that women will be allowed only within the dargah’s large and open premises. “There are no restrictions. They can read their prayers, do namaz and offer shawls and flowers. All that we are requesting to our sisters is not to enter inside the dargah,” says Mr Merchant.

    According to some Muslim clerics, the Sharia prohibits women from visiting graves and since the tomb is in essence the grave of the Pir, women consequently stand debarred. The decision has now been implemented by seven other dargahs across Mumbai, which have welcomed the new diktat.

    “According to the Sharia, this is a sin. It is un-Islamic. We cannot allow it,” insists Mohammed Sharif Kadri, the maulana at the dargah in Cotton Green, central Mumbai.

    Though the trust claims that nobody till date has opposed this, many are livid and believe the decision is highly discriminatory and grossly regressive, especially as the dargah is a representative extension of the great Sufi tenet of inclusivity.

    The ban was imposed over 6 months ago, but it came to light only when a women’s advocacy group, Bharatiya Muslim Mahila Andolan (BMMA), objected.

    “Since childhood we have all been going to the Haji Ali dargah to offer prayers. We were always allowed inside and we could even touch the tomb. I went there a year ago and there were no issues,” says Noorjehan Safia Niaz, a member of BMMA.

    “When it comes to spiritual and social issues, men and women are both given the same rights. I am a Muslim. I believe in Allah. If God sees men and women as equals, then who are these trustees? This is an attempt to subdue women. It is this misuse and abuse of Islam which is un-Islamic,” insists Ms Niaz.

    Ms Niaz questions “their interpretation of the Sharia vis a vis the teachings of the Koran” and says they are in contradiction.

    Maulana Gulam Javed Sheikh of the Sewri Dargah in central Mumbai too agrees: “Times have changed. It is not possible to enforce this.”

    Rubina, another BMMA member, explains that when they went to meet the trustees to raise the issue, the clerics also pointed out an incident where a devotee was dressed “inappropriately”.

    “It is possible some woman didn’t cover herself as per custom. But does that mean they ban entry for all women?”

    Despite the opposing voices, the trustees say their decision is irrevocable and it should be accepted by one and all. “This is a small issue. Let’s not hype it up,” says Mr Merchant.

    The suvanapiriyans, shabeers & our periyarist kavya – pls respond.

Leave a Reply to பொன்.முத்துக்குமார் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *