This entry is part 3 of 7 in the series 1 மார்ச் 2026


மழை அவனை கேள்வி கேட்டது

காலை ஐந்து நாற்பது
ஈரம் தடவிய காற்று
பேருந்துக்குள் எத்தனை நுட்பமாக பேசுகிறது
ஓரிரண்டு மழைத்துளி வட்டங்கள்
முகத்தில் மோதின
அவை மனிதனைக் கேட்டன
“புவியின் பிரம்மாண்டமான சாட்சியமான  இக்காற்று
அனுபவிக்கும் நீ
காற்றுக்கு பிரதியுபகாரமாய்
என்ன தந்திருக்கிறாய்-
உன் மூக்கின் இரு துளைகள் தவிர?”

***

Series Navigationதுணை…கே.பாரதி எழுதிய ‘ரங்கநாயகி’ நாவல்