ஏனென்று கேள் !

This entry is part 8 of 10 in the series 13 ஆகஸ்ட் 2017

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

நேசிப்பது நான் உன்னை !

நீ மொழிய மாட்டாயா நான் விழைவதை !

எனக்குத் தெரியும்,

உண்மை, அது காட்டப் போகுது

ஒரு போதும் நான் கவலை யுறக் கூடாது.

இப்போது நீ என்னவள் !

அந்த மகிழ்ச்சி என் கண்ணை நிரப்புது !

கால நேரத்தில் உனக்கதன்

காரணம் புரியும் !

கவலையா என்னை அழ வைக்கும் ?

இல்லை ! இல்லை !

என்னை அழ வைப்பது,

எனக்கி ருப்பது நீ ஒருத்தி என்பது !

நம்ப வில்லை நான், எனக்கு

நட்பு நேர்ந்து விட்டது.

நானினித் துயரடையேன் !

ஏனென்று கேள் !

நானு ரைப்பேன் உன்னை நேசிப்பதாய்,

எப்போதும் உன்னையே நினைத்து !

+++++++++++++++++++++++

Series Navigationநெய்தல்—தாய்க்கு உரைத்த பத்துவெறி
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *