மு.ரமேஷ் பறவை ஒன்றை கைவிட்ட துயரத்தில் புகையின் காதை திரிகி இழுத்து கொண்டு வானிலேறும் காற்று ஊரை எரித்தவனின் முகத்துக்கு முன்னால் தனது மயிற் கற்றையிலிருந்து ஒன்றை உதிற்த்துவிட்டு கீழிரங்கும் சிறகு எனது நிழலும் நீக்கப்பட்ட வண்ணமும் வனப்பும் இழந்த பழுப்பேறிய கவிதையை ப் பரிசலித்தது நீ என்பதை யாரிடம் சொல்ல எல்லாம் நீங்களாக இருக்கிறபோது ஆமாம் இப்போதும் பார்த்துகொண்டேயிருக்கிறேன் அந்தத் தொலைகாட்சி விளம்பரத்தை அடர்நிறம் கொண்ட அது குறித்து வெளுத்துக்கட்டுகிறாய் என் உயிரினும் […]
“ ஸ்ரீ: “ மழைக்கால நாளொன்றின் இரவு நேரம் – கண்ணாடி ஜன்னலின் வெளியே அவ்வப்போது தீக்குச்சி கிழிக்கும் மின்னல் வெட்டு ; பணி முடித்துச் செல்லும் வேலையாட்களின் சன்னமான பேச்சொலியாய் இடியோசை ஒன்றிரண்டு ; நின்றுவிட்ட பெருமழையின் நினைவேந்தல் நிகழ்ச்சியென சன்னமாய்த் தொடரும் தூறல் ; வெண்டிலேட்டர் இடைவெளியில் சில்வண்டுகள் ஒலிபரப்பும் புல்லாங்குழல் ; வயதான வித்வானின் குரலைப் பிரதியெடுக்கும் தவளைகளின் இசை ஒத்திகை ; வந்துபோகும் மின்சாரம் வழக்கம் போலவே ; […]
ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஜெயந்தி சங்கர் சிறுகதைகள்’ என்கிற முழுத் தொகுப்பு நூலுக்கு சிறந்த சிறுகதை நூலுக்கான ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது 2013’ வழங்கப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’ ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து ‘ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்’ வழங்கி வருகிறது. 2013ஆம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவல், திரு ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவல், […]
எஸ். ஜெயஸ்ரீ இனிமையான இசையை வெளிப்படுத்தும் தந்திக் கருவியில், ஒவ்வொரு கம்பியும் ஒவ்வொரு சுரத்தை வெளிப்படுத்துகிறது. அதன் கலவையின் வெளிப்பாடு அருமையான, இனிமையான இசையாகும். அதுபோல சிறுகதை, நாவல், கட்டுரை, பக்தி இலக்கியம், நவீனகவிதை, மரபுக்கவிதை, சொற்பொழிவு என ஏழுதந்திகளால் இழுத்துக்கட்டப்பட்ட இலக்கிய இசைக்கருவியைத் தன்னகத்தே கொண்டுள்ளவர் வளவ. துரையன். தன்னுடைய பதினெட்டு வயதிலிருந்து இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டுள்ள இவர், தன்னுடைய நாற்பத்தேழாம் வயதிலிருந்து புத்தகங்கள் எழுதி வெளியிடத் தொடங்கி உள்ளார். தற்போது அறுபத்தைந்து வயது […]
சென்னை மயிலாப்பூர் பாரதியா வித்யாபவன் 21.07.2014 மாலை 6.30 மணி சென்னை கம்பன் கழகம் தமிழ் நிதி விருது
பிரகாஷ் பிறப்பால் நான் ஒரு இந்து. இந்து மதத்தில் பல்வேறு குறைகள் இருப்பினும், அவை என்னை பாதித்த்தில்லை. அதனால் அவை பற்றி நான் அதிகம் சிந்தித்த்தும் இல்லை. ஆனால் என்னை அதிகம் பாதித்தது இந்துக்களிடமிருக்கும் திருமணத்திற்கு ஜோதிடம் பார்க்கும் வழக்கம். ஜோதிட சாஸ்திரம் முதலில் தட்பவெட்ப சூழ்நிலையை முன்கூட்டி அறிய உருவாகிய சாஸ்திரமாகும். தட்பவெட்ப சூழ்நிலைகள் பூமி சூரியனைச் சுற்றி வரும் பாதையில் எந்த இடத்தில் இருக்கின்றது என்பதை ஒட்டி அமைகின்றது. பூமி சுரியனைச் சுற்றி வருகிறதன்றறியும் […]
V.R.மோகன் “பிள்ளைய சேக்க வந்திருக்கீங்களா சார்?” என்று கேட்ட ஓட்டுனரிடம், “இல்லீங்க, நான் தான் சேர வந்திருக்கேன்” என்று சொன்னேன். இதற்குப் பிறகு எட்டிமடை ரயில்வே கேட்டை தாண்டி விருந்தினர் விடுதியில் என்னை விடும் வரை ஓட்டுனர் என் பக்கம் திரும்பவே இல்லை, திரும்பிய நேரத்தில் குழம்பிப் போயிருந்த முகம் தெரிந்தது. நானும் விளக்கவோ மேலும் விவரிக்கவோ இல்லை. நுழைவு வாயிலில் செக்யூரிட்டிகள் புதிராகப் பார்த்து உள்ளேயிருந்து வந்த லிஸ்டில் பெயர் இருக்கிறதா என்று சோதித்து அனுமதித்துகொண்டிருந்தனர். […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) (Among the Multitude) (O You Whom I often & Silently Come) ஆயிரம் பேரில் ஒருத்தி அடிக்கடி வருவது உன்னிடம் மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆயிரம் பேரில் ஒருத்தி ஆடவர், பெண்டிர் என்ற பேரளவு எண்ணிக் கைக்குள் யாரோ ஒருத்தி என்னைத் தேர்வு செய்ததைக் கூர்ந்து நான் […]
எந்த விஷயத்துக்கும் மறுபக்கம் உண்டு. பிரெஞ்சு புரட்சி 19ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்களால் ரொமான்டிசைஸ் செய்யபட்டாலும் வரலாற்றில் அதன் தாக்கம் கேள்விக்குரியதே. பதினாறாம் லூயி மன்னனாக பதவி ஏற்கையில் பிரெஞ்சு அரசாங்கம் நிதிநிலையில் தள்ளாடி கொண்டிருந்தது. இங்கிலாந்துடனான இடைவிடாத போர்கள் அதை பலவீனபடுத்தி இருந்தன. அந்த சூழலில் லூயி மன்னர் சில சீர்திருத்தங்களை செய்ய முனைந்தார். அரசின் செலவுகளை குறைக்க முனைந்தார். பணகாரர்களும் நில உடமையாளர்களும் ஏழைகளை விட குறைவாக வரி செலுத்தும் நிலை இருந்தது. அதை மாற்றி […]
புகாரி எங்கே செல்கிறது கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பொன்னான இயல்விருது? வானுயர்ந்து தாய்த்தமிழ் வாசம் சுமந்து புலம்பெயர்ந்தும் தமிழ்த்தேன் வேர் பெயரா கர்வத்தோடு உயர்ந்து உயர்ந்து பறக்கப் பிடிக்கப்பட்ட பட்டம் ஓரிரு வாசல்களின் முன் மட்டும் மண்டியிட்டுத் தாழ்ந்து பின்னெலும்பு மடிந்து அந்நிய மோகத் தனலில் தானே வலிந்து விழுந்து கருகிக் கருகி சிதையும் சிறகுகளோடு கீழ்நோக்கிப் பறக்கும் அவலம் ஏன்? நெஞ்சு பொறுக்குதில்லையே! * 28 ஜூன் 2014ல் நிகழ்ந்த 2013ன் இயல்விருது விழாவிற்கு […]