author

அன்பெனும் தோணி

This entry is part 36 of 44 in the series 15 ஏப்ரல் 2012

“2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? ” என்று வினிதா என்கிற வினு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. “இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது…? “ “இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்” ”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா…” வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி […]

மொழியின் எல்லையே நம் சிந்தனையின் எல்லை!

This entry is part 25 of 41 in the series 8 ஏப்ரல் 2012

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் – அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்! கவிஞர் கண்ணதாசனின் இனிய கவிமொழியில், டி.எம்.சௌந்தரராசன் அவர்களின் தேனினும் இனிய குரலில், பாசமலர் எனும் திரைப்படத்தின் பிரபலமான பாடல் இது. இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் கேட்ட ஒரு கேள்வி என்னை சிந்திக்க வைத்தது. ”ஒரு தங்கை உறங்குகிறாள், ஆனால் கவிஞர் மலரைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்லாமல் ஏன் மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் என்று சொல்ல வேண்டும்” […]

சோபனம்

This entry is part 16 of 41 in the series 8 ஏப்ரல் 2012

எங்கெல்லாம் தேடுவீர் நீவிர் கவினை, அம்மங்கையே உம் பாதையாகவும் உம் வழிகாட்டியாகவும் இல்லாதபோழ்து எங்கனம் அவளை கண்டுகொள்ளப் போகிறீர்? உம் பேச்சுக்களின் நெசவாளியாக அவளே இருந்தாலொழிய, எங்கனம் அவளைப்பற்றி பேச இயலும்? “கவின் என்பது அன்பும், சாந்தமுமானது” என்பான், நொந்தவனும், காயப்பட்டவனும். “தம் சாதனை குறித்த பெருமையுடன் மெல்லிய நாணங்கொண்டு நம்மிடையே நடமாடும் இளம் தாயைப் போல” உணர்வுவயப்பட்டவனோ, “அழகென்பது வல்லமையானதும், அபாயமானதுமான ஓர் பொருள்” என்பான். ”கொந்தளிப்பைப்போன்று அவள் பூமியையே நமக்குக் கீழும், வானமதை நமக்கு […]

நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)

This entry is part 32 of 40 in the series 1 ஏப்ரல் 2012

உம் தேவைகளுக்கான கற்பகவிருட்சமாய் உம் நண்பன் நேசமெனும் நல்வித்தை விதைத்து பாசமெனும் அறுவடையைக் கண்டவன். உம்முடைய தீக்கரும்பும் அவன்தான் உம் தீக்காய்தலுக்கான தளமும் அவ்னேதான் அமைதியின் நாட்டம் கொண்டு அதன் வேட்கையுடன் அவனை நாடுகிறீர் நீவிர் மனம் திறக்கும் உம் தோழமையின் குணம் அறிந்து அச்சம் கொள்ளாதே எதிர்வினையோ, உடன்படுதலோ போன்ற எண்ணத் தோற்றம் ஏதும் இல்லாதிருக்கட்டும் அவனுடைய மௌனத்தினூடே உம் இதயத்தின் கவனம் உட்புகாதிருக்கட்டும் வார்த்தைகளற்ற மௌனமான நேசம் அனைத்து எணணங்கள், விருப்புகள், எதிர்பார்ப்புகளின் பிறப்பிடமாகவும் […]

குளவி கொட்டிய புழு

This entry is part 17 of 42 in the series 25 மார்ச் 2012

வசந்த காலத்தை வரவேற்று, சரம், சரமாக மங்கலமான மஞ்சள் வண்ணத்தில் , மெல்லிய நறுமணமும் பரப்பிக் கொண்டு, குடையாய் விரிந்த கொன்றை மரம். விடியற்காலை வேளை. ஆதவன் தன் வெப்ப கிரணங்களை அள்ளி வீசும் முன் குளிர்ந்த தென்றல் வீசும் இதமான காலம். மயில் போல தோகையும் செம்போத்து பறவை போன்ற தோற்றமும் கொண்ட பறவை ஒன்று விர்ரென்று பறந்து வந்து கிளை ஒன்றில் அமர்ந்து தம் சிறு தோகையை விரித்து அழகு காட்டிக் கொண்டே, குகுக்….. […]

அரிநெல் – பிச்சினிக்காடு இளங்கோ

This entry is part 15 of 36 in the series 18 மார்ச் 2012

ஐயன் வள்ளுவனின் இரட்டை வரிக் குறள்கள் சொல்லும் ஆயிரம் கருத்துகள் போல, ஔவைப்பிராட்டி திருவாய் மலர்ந்தருளிய ஒற்றைவரி ஆத்திச்சூடி சொல்லும் ஆயிரம் தத்துவங்கள் போல, சுருங்கச் சொல்லி விளங்கச் செய்யும் உத்தி மிக எளிதாக மக்கள் மனதில் பதியச் செய்யும் சிறந்ததொரு கலை. அந்த வகையில் நவீன கவிதைகள் அதுவும் ந்றுக்கென்று ஒரு சில வார்த்தைகளில் ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லி சுருக்கென்று உரைக்கச் செய்யும் கவிதைகள் இன்றைய நவீன அவசர உலகத்தின் வாசகர்களுக்கு சிறந்த விருந்துதான்! கவிஞர் […]

வழிமேல் விழிவைத்து…….!

This entry is part 24 of 45 in the series 4 மார்ச் 2012

பவள சங்கரி. உடலோடும் உணர்வோடும் விளையாடுவதே வாடிக்கையாகப் போய்விட்டது. சூடுபட்ட பூனையானாலும் சொரணை கெட்டுத்தான் போய்விடுகிறது. மடிமீதும் மார்மீதும் கையணைப்பினுள்ளும் தஞ்சம் புகுவதே வாடிக்கை.ஆகிவிடுகிறது. வெட்கமுமின்றி துக்கமுமின்றி தேடித்திரிதலே அன்றாடப் பிழைப்பாய் இருக்கிறது. எவர் கொடுத்தாலும் மறுக்க இயலாத ஏழ்மையாகிவிடுகிறது. உண்ணும்போதும் உறங்கும் போதும் கூட பிரிய மனம் மறுக்கிறது. நம்மையே நையப்புடைத்தாலும் விட்டு அகல முடியாமல் தவிக்கிறது உள்ளம். ஓங்கி ஒலித்தாலும் இதமாக வருடினாலும் தாங்கிப் பிடிக்கிறது தன்னையே. வண்ணங்களும் எண்ணங்களும் வேறுவேறாய் ஆனாலும் அகல […]