author

குற்றமே தண்டனை – விமர்சனம்

This entry is part 4 of 19 in the series 2 அக்டோபர் 2016

  “இப்ப கூட நான் உன்னை தப்பா நினைக்கலை ஸ்வேதா” என்கிற விதார்த்திடம், “தப்பாதான் நினைச்சுகோயேன்…” என்கிறார் ஸ்வேதா. இன்றைய காலகட்டம் என்பது இதுதான். பொறுமை சகிப்புத்தன்மை நியாயம் நேர்மை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு அனேகம் பேரை பகைத்துக்கொண்டு வாழ்தலை சிரமத்துக்குள்ளாக்குவதைவிட ராவணனாய் நினைத்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போய்விடுவது உத்தமம் என்கிற மனப்போக்கு இன்றைய காலகட்டத்தின் மனப்போக்காகிவிட்டது. காட்சிகள் மூலமாக கதை சொல்வது நேர்த்தியாக இருக்கிறது. பத்து ரூபாய்த்தாளை தேடி எடுத்து ஒட்டும் விதார்த் வாயில் சிகரெட். செயின் […]

விலாசம்

This entry is part 10 of 19 in the series 2 அக்டோபர் 2016

அவன் அந்த விலாசத்தை தேடினான். 11, முத்துக்கிருஷ்ணன் தெரு அசோக் நகர். அங்கு வந்து நின்றான். ஒன்றிரண்டு பேர் தவிர தெருவில் யாரும் இல்லை. தேடினான். கொஞ்சம் தடுமாற வேண்டியிருந்தது. ஆனால், இறுதியாக மாட்டிக்கொண்டது. தனி வீடே தான். வீட்டு வாசலை வந்தடைந்தான். கதவு லேசாக திறந்திருந்தது. வேறொரு சமயமானால், கதவைத்தட்டி, அனுமதி கேட்டு, கிடைக்கும்வரை வாசலில் காத்திருந்திருப்பான். ஆனால், அன்று…. திறந்திருந்த கதவினுள் நுழைந்து, உள்பக்கம் தாழிட்டான். வீட்டில் எங்கும் இருள். கண்ணாடி ஜன்னலிலிருந்து வெளிச்சம் […]

தாரை தப்பட்டை – விமர்சனம்

This entry is part 8 of 16 in the series 17 ஜனவரி 2016

விளிம்பு நிலை மனிதர்கள் படும் இன்னல்களை சொல்லும் படம் என்று சொல்லி ஒரு……………………………. முதலாளித்துவமும், ஆதிக்க வர்க்கமும் தங்கள் சுய நலத்திற்கு பயன்படுத்திக்கொள்வதால் ஒரு சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்களின் இன்னல்களை எதிர்பார்த்து படத்திற்கு போனால், பெருத்த ஏமாற்றம். ஏமாற்றம் என்னவெனில், சமூகத்தின் ஏணிப்படிகளில் கட்டகடைசியாக தேங்க நேர்ந்தவர்கள் தங்கள் சுய நலங்களுக்காக தங்களையே வருத்திக்கொள்வதும் , புறமுதுகில் குத்திக்கொள்வதும் தான் படமாக்கப்பட்டிருக்கிறது. சன்னாசி மேல் சூறாவளிக்கு காதல். சூப்பரான காதல். வரலட்சுமியில் வசனங்களை கேட்டால் […]

அனேகன் – திரைப்பட விமர்சனம்

This entry is part 4 of 23 in the series 15 பெப்ருவரி 2015

கொலைகாரன் ஏதேனும் ஒரு க்ளூவையாவது விட்டுவைப்பான் என்று துப்பறியும் அகராதிகள் சொல்வதுதான். கொலையானவனுக்கு மட்டுமே கொலை செய்தவனைத் தெரியும் என்கிற நிலையில் வேறெதுவும் க்ளூவே கிடைக்கவில்லை எனும்போது, கொலையை யாரும் பார்க்கவேயில்லை எனும்போது, கொலையை துப்பறியும் நிபுணரும் சுஜாதா, ராஜேஷ்குமார், சாம்பு, டி.சி.பி. ராகவன் அளவிற்கு இல்லாமல் போகும்போது, கதையை எப்படித்தான் நகர்த்துவது? கொலையானவரே எழுந்து வந்து ‘இன்னார் தான் கொலையாளி’ என்று சொன்னால்தான் உண்டு. செத்தவன் எப்படி எழுந்து வந்து சொல்ல முடியும்? பேயாக வந்து […]

என்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்

This entry is part 8 of 23 in the series 15 பெப்ருவரி 2015

படத்தின் துவக்க காட்சியே, தூள்! இன்டிகோ விமானத்தில் ஒரு வட இந்திய பெண்ணிடம் சில்மிஷம் செய்து மாட்டிய வயதான தொழிலதிபர் பற்றி நீங்கள் யூட்யூபில் தேடினால் கிடைக்கலாம். படத்தை குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த குடும்பங்களிலெல்லாம் ஏகப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள். பெண்ணியவாதிகள் எல்லாம் எங்கே? சரிக்கும் தவறுக்கும் இடையே நூல் இடைவெளி தான் என்கிறார் கவுதம். சரிக்கும் தவறுக்கும் இடையே வசீகரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் போல. தேன்மொழியை பெண் பார்க்க வரும் காட்சி தீவிரமாக […]

விடாது சிகப்பு

This entry is part 15 of 24 in the series 8 பெப்ருவரி 2015

மண்டையைப் பிளக்கும் உச்சி வெய்யிலில் தள்ளாடிக்கொண்டிருந்தது சென்னையின் கடலோரச் சாலை. ஈஸ்ட் கோஸ்ட் ரோடென்று அழைக்கப்படும் இது சென்னையையும் பாண்டிச்சேரியையும் இணைக்கிறது. திருவிடந்தையை அடுத்து சற்றேரக்குறைய 500 மீட்டர் தூரத்தில் சாலையை விட்டுப்பிரியும், கவனிப்பாரின்றி நாதியற்றுக் கிடக்கும் ஒரு மண் சாலை, இப்போது அனேகம் போலீஸ் தலைகளும், சாலையோரம் ஆங்காங்கே தேங்கி நின்று கும்பல் கும்பலாய் வேடிக்கை பார்க்கும் அக்கம்பக்கத்து பொதுஜனமும், இவையெல்லாக் கலேபரத்தையும் சாலையிலிருந்தபடியே சுற்றுலாவில் கிடைத்த உபரி சுவாரஸ்யமாய் கார் பஸ்களிலிருந்தபடியே பார்த்துச்செல்லும் பட்டாளங்களுமாய் […]

கயல் – திரைப்பட விமர்சனம்

This entry is part 16 of 17 in the series 1 பெப்ருவரி 2015

இயற்கை எல்லா விலங்கினங்களுக்கும் தேவையான உணவு, உறைவிடத்தை தன்னுள்ளே உணவுச் சங்கிலியாக வைத்திருக்கிறது. அப்போது, நிகழும் பொழுதும், பசித்தால் உண்ண‌ உணவும் மட்டுமே மனித இனத்தின் பிரதான தேடலாக இருந்தது எனலாம். இப்போது அப்படி இல்லை. மனிதனால் மனிதனுக்காக உருவாக்கப்பட்ட ஏணிப்படி (ladder) என்ற ஒன்று இருக்கிறது. இந்த ஏணிப்படியின் ஏதாவதொரு நிலையில் தன்னை பொருத்திக்கொள்ளவே மனிதன் படாதபாடு பட வேண்டி இருக்கிறது. பெரும்பாலான அவனது உழைப்பு, இதற்கே போய்விடுகிறது. அதாவது, ஆதி காலத்தில் நீங்கள் பிறந்திருந்தால், […]

கிளி

This entry is part 12 of 19 in the series 25 ஜனவரி 2015

இன்ஸ்பெக்டர் ரஞ்சன், குற்றம் நடந்த, இடத்திற்கு வந்தபோது புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ளடக்கமாக அமைந்த ஒரு தனி வில்லா வீடு. வாசலில் ஒரு மிகப்பெரிய கேட்.  கேட்டிலிருந்து வீட்டிற்கு இடையே இருபது அடிக்கு சிமென்ட் கற்களால் வேயப்பட்ட தரை. ஒரு பெரிய ஹோண்டா சிஆர்வி நிற்க ஒரு போர்டிகோ. அதன் தலையில் இரண்டடுக்கு வீடு. இவையெல்லாம் அடைத்த இடம் போக எஞ்சிய இடத்தில் அலங்காரத் தென்னை, ஒரு மாமரம், நிறைய பூச்செடிகள், க்ரோடான்ஸ் […]

ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்

This entry is part 16 of 23 in the series 18 ஜனவரி 2015

புற அழகின் உச்சம் பெண்ணின் உடல். அப்படி ஒரு அழகான‌ பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். ஜிம் வைத்து நடத்தி வரும் லிங்கேஸ்வரன். மிஸ்டர் இந்தியா ஆவது லிங்கேஸ்வரனுக்கு கனவு. பேரழகுப்பெண் தியா. மிஸ்டர் இந்தியா ஆகத்துடிக்கும் படிப்பறிவு மிக இல்லாத நாயகன். ஒரு சந்தர்ப்பத்தில், உடன் நடிக்க வேண்டிய ஆண் மாடல் ஜான் ஒத்துழைக்க மறுக்க, வேறு மாடல் தேவைப்படுகையில், லிங்கேஸ்வரன் பயன்படுகிறான். பழகபழக லிங்கேஸ்வரன் மீது காதல் வருகிறது. லிங்கேஸ்வரன் வளர வளர, எதிரிகள் […]

பீகே – திரைப்பட விமர்சனம்

This entry is part 22 of 33 in the series 4 ஜனவரி 2015

ராம்ப்ரசாத் படம், விண்ணிலிருந்து ஒரு விண்வெளிக்களம் வழியாக அமீர்கான் பூமியில் ராஜஸ்தானில் ஒரு ரயில் பாதைக்கருகில் இறங்குவதில் துவங்குகிறது. பிறந்த மேனியாக இறங்கும் அமீர்கானின் கழுத்தில் அந்த விண்கலத்தை இயக்கும் ரிமோட் தொங்குகிறது. அமீர் இறங்குவதை பங்கஜ் உதாஸ் பாடலை கேட்டுக்கொண்டே நடை போடும் ஒரு ராஜஸ்தானி பார்க்கிறான். (பங்கஜ் உதாஸ் எத்தனையோ பாடல்களை தந்திருந்தாலும் ‘தும் தோ டஹரு பர்தேசி’ பாடலையே ஏன் அவருக்கு அடையாளமாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ஷாரூக்கானின் குச்குச் ஹோத்தா ஹை, பீகே […]