author

ஒரு ரத்தக்கண்ணீர்

This entry is part 8 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா அதோ அங்கே ஒரு “கிரஹப்ரவேசம்” மாவிலை தோரணங்கள். மங்கலப்புகை மூட்டம். கொம்புகளை ஆட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் “கோ மாதா” மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனும் இதைத்தான் குறிப்பிட்டான். ஆ வை அன்னையாக‌க்க‌ருதுவ‌தில் பிழையில்லை. ஆனால் த‌மிழ் அன்னையை ம‌ட்டும் தெருவோர‌ம் எச்சில் இலைக‌ள் எப்போது குவியும் என்ற‌ இட‌த்தில் இருத்திவிட்டு “ஹோம‌ங்க‌ள்” கொடி க‌ட்டுகின்றனவே! ல‌க்ஷ்மி ஹோம‌ம் க‌ண‌ப‌தி ஹோம‌ம் …….. ம‌ந்திர‌ங்க‌ள் திகு திகு வென்று எரிகின்ற‌ன‌. ஸ்லோக‌ங்க‌ள் எனும் ஆக்கிர‌மிப்பு செய்த‌ ஓசைக்கூச்ச‌ல்களின் […]

“ஆம் ஆத்மி”

This entry is part 7 of 42 in the series 25 நவம்பர் 2012

ருத்ரா ஆம். இது இனிமேல் குப்பன் சுப்பன்களின் பார்ட்டி. தாத்தா அப்பா பேரன் பூட்டன் என்று எத்தனை நாளைக்கு “நூல்”பிடித்துக்கொண்டிருப்பது? ரத யாத்திரை போகும் அந்த ரதத்தில் ராமனை இறக்கிவிட்டு (ஊழல் பழி சொன்ன) சலவைத்தொழிலாளிக்குத் தான் இனி தூப தீபமா? எப்படியிருப்பினும் பொது ஜனம் என்றாலும் சரி மகா ஜனம் என்றாலும் சரி சாமான்யன் என்றாலும் சரி பொத்தான் அமுக்கும் போது..இந்த‌ “பொது உடைமையை” ம‌ன‌தில் வைத்துக்கொண்டால் ச‌ரி. வெள்ளைக்குல்லாய்க‌ளின் கும்ப‌மேளா போல் தெரிந்தாலும் ஊழ‌ல் […]

ஒரு க‌ண்ணீர் அஞ்ச‌லி!

This entry is part 23 of 29 in the series 18 நவம்பர் 2012

“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…” பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. “காண்டேகரின்”எழுத்துக்களின் மின்னல் பீலிகளாய் அந்த “கிரவுஞ்ச வதம்” அவ‌ன் கண்ணுக்குள் நிழல் காட்டியது. அந்த‌ காவிய‌க்க‌சிவோடு “சேரத்து தந்தம்”தன்னை பண்டமாற்றம் செய்ய‌ தேடினான் தேடினான் ஒரு மராட்டியனை. அன்று அங்கே எல்லோரும் தேடித்தேடி தேம்பினார்கள் ஒரு மராட்டியனை. ஆனால் அந்த பேனா பிடித்த‌ மராட்டியனுக்குப் பதில் அவ‌ன் பார்த்ததெல்லாம் வாள் பிடித்த மராட்டியன்கள் தான். வாள் […]

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்

This entry is part 27 of 33 in the series 11 நவம்பர் 2012

  ஆயிரம் பக்க எழுத்துக்களின் \”போன்சாய்\” மரம் காதல் தீயை பற்ற வைக்கும் சிக்கி-முக்கிக்கல். சங்கத்தமிழ் அடைந்து கிடக்கும் முத்துச்சிப்பிகள் ஒரு சோறில் ஒன்பதாயிரம் பசி. எதிர்வீட்டு ஜன்னலில் உட்கார்ந்து இருப்பவர்கள் காளிதாசன் கம்பன்கள். மொழியே  இல்லாத ஹைக்கூ குயிலின் குக்கூ. பேனாவின் ஒற்றைப்புள்ளியில் காதலின் ஏழுகடல்கள். இரு எழுத்து போதும் காதலின் பிரபஞ்சம் தெரிய.. \”கண்\” கழி நெடிலடி எண்சீர் விருத்தமும் கழுத்து சுளுக்கிக்கொண்டது ..அவள் \”களுக்\” சிரிப்பில். கவிதைக்கடல் இங்கே கர்ப்பம் தரித்த சொல் […]

ஒரு வைர‌ விழா !

This entry is part 30 of 31 in the series 4 நவம்பர் 2012

சட்டசபைக்கு வைரவிழா ஜனநாயகம் சுடரேந்தி இருள் அகற்றி இன்றோடு அறுப‌து ஆண்டுக‌ள்! ஆனாலும் சுடரேந்திய‌ கையில் “மெழுகுவ‌ர்த்தியே” மிச்ச‌ம். மின்சார‌ம் தின்ற‌வ‌ர்க‌ள் அசைபோடுகின்றார்க‌ள் கும்மிருட்டை தின‌ந்தோறும். ச‌ட்ட‌ச‌பைக்கு நினைவுத்தூண் பிர‌ம்மாண்ட‌ம். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் தான் காண‌வில்லை. அவ‌ர் தொட்டுக்க‌ட்டிய‌தால் தீட்டு ஆகிப்போன‌து என்று தீண்டாமை பேசுகின்றார். ச‌ட்ட‌ச‌பை க‌ட்டிட‌ம் காலொடிய‌ விட்டு விட்டு தூண்க‌ள் நிறுத்துகின்றார். இந்த பொய்க்கால் குதிரைக்கும் கொண்டாடுவோம் வைர‌விழா. இது இவ‌ர்க‌ளின் அர‌சிய‌ல் காழ்ப்பு உண‌ர்ச்சிக்கு வைர‌விழா. ல‌ஞ்ச‌த்தால் அர‌சிய‌ல் க‌ற்ப‌ழிந்து போன‌த‌ற்கும் […]

“சொள்ள‌ மாடா! மாத்தி யோசி!”

This entry is part 34 of 36 in the series 30 செப்டம்பர் 2012

  தாமிரபரணி பாய் விரித்ததில் நான் படுத்துக்கிடந்தேன். பளிங்கு நீருள் முக்குளி போடுவதில் ஒரு சுகம். கணுக்கால் அள்வே ஓடினாலும் அது என் அன்றாடக்கவிதை. அதிலும் இந்த‌ மாலைக்குளிய‌லில் “உம‌ர்க‌ய‌மும்”கூட‌ குளிப்ப‌து போல் ஒரு பாவ‌னை. வெயிலுக்கேற்ற‌ நிழ‌ல் இங்கு நீருக்குள் நெருப்பையே க‌ரைத்து குளிர்பூங்குழம்பாக்கி கிண்ண‌ங்க‌ளில் ஊற்றித்த‌ரும். கல்லிடைக்குறிச்சியின் இத‌யத்தை வ‌ருடிக்கொண்டே ஓடினாலும் உருண்டு வ‌ரும் கூழாங்க‌ல் ஒவ்வொன்றும் இம‌ய‌ம் தான். “ஜன்னி” கண்ட இம‌ய‌த்துக்கே ம‌ருத்துவ‌ம் பார்த்த‌ அக‌த்திய‌னின் க‌ண்ணாடிப்பிழ‌ம்பு அல்ல‌வா தாமிர‌ப‌ர‌ணி. தின‌மும் […]

ஒவ்வொரு கல்லாய்….

This entry is part 1 of 31 in the series 16 செப்டம்பர் 2012

“கூடங்குளம்” பெயரில் தான் குளம். குடிக்க அதில் சொட்டுத்தண்ணிர் இல்லை. அலைந்து திரிந்த காகம் அணு ஜாடியை கண்டது. கொஞ்சம் தண்ணீர் தான் அடியில். ஒவ்வொரு கல்லாய்ப் போட்டால் “ஆபத்து”இல்லாமல் தண்ணீர்குடிக்கலாம். ஆனால் இலங்கைக்காக்கைகள் தமிழ்நாட்டுக்காக்கைகள் டெல்லி சாணக்கிய காக்கைகள் சாணி உரத்துப் பச்சைக்காக்கைகள் உலகத்து “தாராள மய”க்காக்கைகள் உள்ளூர் வெள்ளைக்காக்கைகள் அதிசயமாய் அசலூர் காவிக்காக்கைகள் இவையெல்லாம் படையெடுத்துச் சிறகடித்தால் “ஜாடி”உடையும். பூதமும் கிளம்பும் அலாவுதீன் பூதம் அல்ல. அகிலத்தையே தின்னும் பூதம். இந்த காக்கைகளின் கும்பல் […]

கணினித்தமிழ் வேந்தர் மா.ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு ஒரு அஞ்சலி

This entry is part 24 of 37 in the series 22 ஜூலை 2012

  ஆறுமுக‌னேரியின் அருந்த‌மிழ‌ச் செல்வ‌! அறிவியல் தமிழின் “கணினியன் பூங்குன்றன்” நீ எளிதாய் இனிதாய் நுட்ப‌ங்க‌ள் ஆயிர‌ம் விள‌க்கிய‌ அற்புதம் ம‌ற‌க்க‌ இய‌லுமோ? அக‌த்திய‌ன் தமிழோ புராணமாய் போன‌து. அக‌ப்பட்ட‌ த‌மிழோ த‌ட‌ம் ம‌றைந்து போன‌து அறு வகை ம‌த‌மும் நால் வகைக் கூச்ச‌லும் ஆழ‌ப் புதைத்த‌பின் த‌மிழ் என்ன‌ மிச்ச‌ம்? க‌ணினித் த‌மிழ் இங்கு க‌ண் திற‌ந்த‌ பின்னே எட்டாத‌ அறிவும் இங்கு எட்டுத்தொகை ஆன‌து. எத்தனை எத்தனை நூல்க‌ள் எழுதி எழுதி குவித்தாய்! இணைய‌த்த‌மிழ் […]

“கால‌ம் தீண்டாத‌ க‌விஞ‌ன்…….க‌ண்ண‌தாச‌ன்”

This entry is part 31 of 43 in the series 24 ஜூன் 2012

  மழை கூட ஒரு நாளில் தேனாகலாம் மணல் கூட ஒரு நாளில் பொன்னாகலாம் ஆனாலும் அவை யாவும் நீ ஆகுமா?என்று குழந்தைப்பூவுக்கு பூச்செண்டு கொடுத்த புனிதனே!ஜனாதிபதி உன் கவிதைக்குழந்தைக்கு விருது என்று கொடுத்தார் ஒரு கிலு கிலுப்பையை! அத்தனயும் எத்தனை வரிகள் உன் வரிகள். அத்தனையும் உன் எழுத்துக்குள் இனித்த வலிகள். கவிதை எனும் உலகக்கோளத்தின் பூமத்திய ரேகை சிறுகூடல் பட்டியின் வழியாக‌ அல்லவா ஓடுகிறது. “உலகம் பிறந்தது எனக்காக” என்றாயே நீ எதைச்சொன்னாய்? தமிழ் […]

ருத்ராவின் க‌விதைக‌ள்

This entry is part 12 of 43 in the series 17 ஜூன் 2012

  பட். இதன் கதை முடிந்து விட்டது. இனிமேல் தான் கதை எழுதப்போகிறார் ஆசிரியர்.”கொசு” ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________ எழுதிச்செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும். எங்கே முடியும் விதி? “பத்திரிகை அலுவலகத்தின் குப்பைக்கூடை” _______________________________________________ பேனாவுக்கு மட்டுமே புரிந்தது. காகித‌ம் ம‌ட்டுமே ர‌சித்த‌து. “க‌விதை” _________________________________________________ எழுதி முடிக்க‌வில்லை. பேனாவில் எல்லாம் எறும்புக‌ள். “த‌மிழுக்கும் அமுதென்று பேர்” ___________________________________________________ என்னைத் தூக்கி கொடுக்கிறார்க‌ள் என்னைக்கேட்டா கொடுக்கிறார்க‌ள். இது யார் எழுதிய‌ க‌விதை? “ஞான‌பீட‌மே எழுதிய‌து” ____________________________________________________ ல‌ட்ச‌க்க‌ண‌க்கான […]