நீதிக்குத் தப்பும் காவல்துறை அநீதங்கள்

This entry is part 1 of 23 in the series 16 ஜூன் 2013

    அநீதங்களிலிருந்து நாட்டுமக்களைக் காக்கவும், அவர்களுக்கு சேவை செய்யவெனவும் உருவாக்கப்பட்டவையே பொலிஸ் எனப்படும் காவல்துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ, பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்கு சமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும், இன்னலுக்குக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும் கூட காவல்துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்து காவல்துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். […]

நீங்காத நினைவுகள் – 7

This entry is part 4 of 23 in the series 16 ஜூன் 2013

      “ஆசாரம்”  என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதியில், அதற்குரிய பல்வேறு பொருள்களிடையே, “சுத்தம்” என்னும் பொருளும் தரப்பட்டுள்ளது. இந்தியாவில் சில சாதியினர் – முக்கியமாய்ப் பார்ப்பனர்கள் – மிகவும் ஆசாரம் பார்ப்பவர்கள்.  ஆசாரம் என்கிற பெயரில் அவர்கள் அடித்து வந்துள்ள கூத்து நகைப்புக்கு மட்டுமல்லாது, அருவருப்புக்கும், கண்டனத்துக்கும் உரியதாகும். இப்போது அது பெருமளவு போய்விட்டாலும், பெருங்காயச் செப்பு காலியான பிறகும் வாசனை அடிப்பது போல் 80-90 வயதுகளில் உள்ளவர்கள் ஓரளவு அந்தப் பழக்கங்களை இன்னமும் பிடித்து […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 11

This entry is part 13 of 23 in the series 16 ஜூன் 2013

( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 11. சிந்த​னையால் உலக மக்க​ளை எழுச்சி​கொள்ளச் ​செய்த ஏ​ழை “என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் எங்கள் அடி​மையின் ​மோகம்” அட​டே என்னங்க பாட்​டெல்லாம் பிரமாதமா இருக்கு. ​ரொம்​ரொம்ப மகிழ்ச்சியா இருக்கீங்க ​போலருக்கு. என்ன ஏதாவது சிறப்புச் ​செய்தி இருக்கா? இல்​லையா? அப்பறம்….ஓ…ஓ…ஓ….யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா? […]

யதார்த்தாவின் ‘யமுனா சூத்ரா’ நாட்டிய விழா

This entry is part 15 of 23 in the series 16 ஜூன் 2013

தலைநகரில் பல நாடகங்களையும் இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்த யதார்த்தா தற்போது ஒரு அறக்கட்டளையாகப் பதிவு பெற்றுள்ளது.  புதிதாக நிறுவப்பட்ட யதார்த்தா அறக்கட்டளையின் சார்பில் ‘யமுனா சூத்ரா’ என்ற நாட்டிய விழா, இந்தியா ஹாபிடாட் சென்டரின் ஆதரவுடன் கடந்த ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் இந்தியா ஹாபிடாட் சென்டரின் ‘ஸ்டெயின் கலையரங்கில் நடைபெற்றது. 4 ஜூன் 2013 அன்று சுப்ரியா நாயக் ‘யமுனா’ என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார். வாய்ப்பாட்டு- பிரசாந்த் பெஹரா, மர்தலா- […]

விஸ்வரூபம் – விமர்சகர்களின் மூளைச் சலவையா?

This entry is part 24 of 24 in the series 9 ஜூன் 2013

உயிர்மையில் வெளிவந்திருக்கும் அ முத்துகிருஷ்ணனின் கட்டுரை “விஸ்வரூபம் 300 பொய்களும் 3000 உண்மைகளும்” என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. திருப்பி எந்த விவாதமும் தேவையில்லை. இதை எதிர்த்துச் சொல்வதெல்லாம் பொய். நான் சொல்வதல்லாம் உண்மை என்ற ஒரு முழுமுதல் கருத்தை முன்வைத்துத் தொடங்கும் கட்டுரைக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கட்டுரை முதல் வரிகள் ஆங்கிலத்தில். முதல் உலகப் போரை ஆரம்பித்தது யார்? என்று தொடங்கி அமெரிக்கா மற்றும் மேற்குலகின் கொலைக் குற்றங்களைப் பட்டியலிட்டு, இதெல்லாம் முஸ்லிம்கள் செய்தது […]

அன்பர்கள் எல்லோரிடமும் ஒரு வேண்டுகோள்

This entry is part 14 of 24 in the series 9 ஜூன் 2013

எப்படி ஆரம்பிப்பதென்று தெரியவில்லை.  தமிழகம் அறிந்த ஒரு தமிழ் எழுத்தாளர், தி.ஜ.ர என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் 1900 லிருந்து 1974 வரை  74 ஆண்டுகள் வாழ்ந்தவர்.  நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் முத்தவர். சிறு கதை, மொழிபெயர்ப்பு, அறிவியல் கட்டுரைகள் என் பல துறைகளிலும் தன் ஆளுமையின் பதிவுகளை விட்டுச் சென்றுள்ளவர்.  தான் செயலாற்றியது எத்துறையானாலும் அத்துறைக்கு வளம் ஊட்டி சிறப்பித்தவர்.  தேசீய போராட்டத்திலும் பங்கு கொண்டு சிறை சென்றவர்.  எவ்வளவு சிறப்பான ஆளுமையான போதிலும் தன்னை […]

நீங்காத நினைவுகள் – 6

This entry is part 10 of 24 in the series 9 ஜூன் 2013

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன. 1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 10

This entry is part 22 of 24 in the series 9 ஜூன் 2013

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், தமிழாய்வுத்துறை, மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com    ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) 10.​அ​மெரிக்கா ​போற்றிய ஏ​​ழை அட​டே வாங்க… என்னங்க……. …எப்படி இருக்குறீங்க…நல்லா இருக்கிறீங்களா?…என்னங்க ​பேசமாட்​டேங்குறீங்க…என்னது முதல்ல அவரு யாருன்னு ​சொல்லணுமா?…அட..இதுக்குத்தானா இந்தமாதிரி ​பேசாம உம்னு… இருக்குறீங்க… அப்படி​யெல்லாம் இருக்காதீங்க..எப்பவும் இயல்பா இருங்க…எதுலயும் நிதானம் ​வேணுங்க….​கொஞ்சம் ​பொறு​மையா இருங்க…என்னங்க ஏந்திருச்சுட்டீங்க..​போகாதீங்க..இருங்க..ஒங்க ​​பொறு​மையச் ​சோதிக்கலங்க.. ​வெற்றி கி​டைக்கணும்னா ​பொறு​மையா […]

வெற்றி மனப்பான்மை

This entry is part 11 of 24 in the series 9 ஜூன் 2013

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் […]

“இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” – திரு கர்ணன்

This entry is part 2 of 24 in the series 9 ஜூன் 2013

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]