க்ருஷ்ணகுமார் உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. வள்ளல் அருணகிரிப் பெருமான் – கந்தர் அனுபூதி – பாடல் – 51 சீக்கியர்களின் மதநூலான குருக்ரந்த் சாஹேப்பில் மூல்மந்தர் (மூல மந்திரம்) என்றழைக்கப்படும் முதற்பாடல் சரியான உச்சரிப்பைச் சுட்ட தேவ நாகர லிபியிலும் ஆங்க்ல லிபியிலும் தட்டச்சப்பட்டுள்ளது இக் ஓம்கார் इक ओम्कार ik OmkAr பரம்பொருள் ஒன்றே ஸத்நாம் […]
புனைப்பெயரில் ”அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” வள்ளுவம் சொல்லும் வாழ்வு முறை. “ஆதிபகவன்” என்ற வார்த்தை தமிழர்களின் உணர்வோடும் வாழ்வோடும் கலந்த வார்த்தை. கடவுள் மறுப்புச் சொல்பவர் கூட தாய்க்கு சிலை வைத்து பூஜை செய்யும் கலாச்சாரம் பிண்ணிப் பிணைந்த இனத்தின் மொழியில் “ஆதிபகவன்” என்ற சொல்லிற்கு உயிர்ப்பான அர்த்தம் உண்டு. உலகின் ஆதியான கடவுளையும் மொழியால் சொல்லப்படும் அர்த்தங்களையும் இணைப்பாக கொண்ட குறளால், பூஜிக்கப்படும் ஒரு இனத்தின் வரிகளின் வார்த்தை “ஆதிபகவன்” ஆதிபகவன் -> […]
இலங்கை மூதூரைச் சேர்ந்த இருபத்து மூன்றே வயதான முஸ்லிம் பெண்ணுக்கு சவுதிஅரேபிய அரசு மரணதண்டனை வழங்கி கொலை செய்துள்ளது.சவுதிஅரேபிய குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்த சிறிது நாட்களிலேயே சவுதி எஜமானியின் நான்குமாத குழந்தைக்கு பாட்டிலில் பாலூட்டியபோது வாய்வழியாகவும்,மூக்குவழியாகவும் புரையேறி அக்குழந்தை தற்செயலாக இறந்துள்ளது.. அப்போது .ரிஸானாவுக்கு பதினேழுவயது. 2005 இல் கைது செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ரிஸானா சவுதி அரசால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு 2013 ஜனவரி 9 அன்று மரணதண்டனை வழங்கப்பட்டு கொல்லப்பட்டாள். சவுதி அரசு […]
தஸ்லிமா நஸ்ரின் பங்களாதேஷில், டாக்காவில் நாத்திக வலைப்பதிவர்களுக்கு மரண தண்டனை கோரி போலீஸுடன் இஸ்லாமிஸ்டுகள் மோதியதில் நான்கு பேர்கள் இறந்திருக்கிறார்கள். இருநூறு பேர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். இஸ்லாமிஸ்டுகள் நாத்திகர்களை வெறுக்கிறார்கள். இவர்களது பதாகை, “அல்லா முகம்மது குரானை விமர்சனம் செய்யும் நாத்திக பதிவர்களுக்கு மரண தண்டனை கொடு என்று கோருகிறோம்” என்று கூறுகிறது. இந்த பதாகையில் நாத்திக பதிவர்களின் முகங்கள் இருக்கின்றன. ஆஸிப் முஹதீன் இதில் ஒருவர். ஆஸிப் முகதீன் ஒரு மாதத்துக்கு முன்னால் இஸ்லாமிஸ்டுகளால் கத்தியால் குத்தப்பட்டார். […]
43-வயதான முகம்மது அப்ஜல் குரு(Mohammad Afzal Guru) தூக்கிலிடப்பட்டுள்ளான். 2001-ல் பாராளுமன்றத்தின் மேல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் சதிப் பின்ணணியில் முக்கிய பங்கு வகித்த குற்றத்திற்காக உச்ச நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட பின் அப்ஜல் குருவின் தூக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. முகம்மது அஜ்மல் அமீர் கசாப் (Mohammad Ajmal Amir Kasab) தூக்கிலிடப்பட்டு மூன்று மாதங்களுக்குள் இன்னொரு தூக்கும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரணதண்டனைக்கெதிரான வலுவான வாதங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தான். திண்ணையில் வெளியிடப்பட்ட […]
குரான் அடிப்படையிலான இறைச் சட்டம் மாறாத் தன்மை கொண்டது. குரான்,ஹதீஸ் இவற்றோடு இஜ்மா,இஜ்திஹாத் இணந்த ஷரீஅ மாறும்தன்மை கொண்டது.ஷரீஅ என்ற சொல்லுக்கு பாதை என்று பொருள். ஏனெனில் இதன் உருவாகத்திலும் வடிவமைப்பதிலும் அந்தந்த நாடுகளின் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு உள்ளது. அதுபோல் குரானையும் ஷரீஆவையும் வாசித்து பொருள்கொள்வதில் வெவ்வேறு அர்த்த நிலைபாடுகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்ளமுடியும். இது தொடர்பான குறிப்பாக ஒன்றிரண்டை மட்டும் மாதிரிக்காக சொல்லலாம். 1) குரானிய சட்டத்தில் பாலியல்குற்றத்திற்கு கல்லெறிந்து கொள்ளும் தண்டனை […]
முஷர்ரப்( முஷாபி ) இலங்கை அண்மையில் அதிக கவனம் பெற்ற விஸ்வரூபம் திரைப்படத்தை சென்னை ‘வூட்லன்ட’; திரையரங்கில் முதல் நாளன்றே பார்க்க முடிந்தது. பெரும் விமர்சனத்திற்கள்ளான இத் திரைப்படத்திற்கான டிக்கட்டுக்களை பெறுவது குதிரைக் கொம்பாகவே இருந்தது. தமிழ் நாடு முழுவதும் ரஜினிகாந்த் படத்திற்கு இருக்கும் வரவேற்பை கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் வழங்கியிருந்தமைக்கு இத்திரைப்படம் தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளும், அரசியல் ஊடுறுவல்களுமே காரணம் எனலாம். இதற்காக முஸ்லிம் அமைப்புகளுக்கும், ஜெயலலிதாவிற்கும் கமல் ரசிகர்கள் நன்றி சொல்லக் […]
வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -45 சீதாலட்சுமி மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. வாழ்வியல் வரலாற்றின் சில பக்கங்களை ஓர் குறிக்கோளுடன் புரட்டிக் கொண்டிருந்தேன். குறியீட்டைஅணுகியவுடன் கடமையை முடித்துவிட்டோம் என்று நின்றிருக்க வேண்டும். ஆசை யாரைவிட்டது? ஒர் நெட்டைக்கனவில் மேலும் நகர்ந்தேன். காலம் என்னைப் பார்த்து சிரித்தது. என் வாழ்க்கையே ஓர் தடகளப் போட்டி.. திடீரென்றுஓர் முட்டுக்கட்டை என்னைத் தடுக்கி விழ வைத்தது. சமாளித்து எழுந்து ஓடலாம் என்று நினைத்தேன். இன்னொருதிக்கிலிருந்து வேறொரு […]
ஒரு முறை செல்லப்பா என்னை பி.எஸ் ராமையாவிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அந்தக் காலத்தில் நான் ராமையாவின் எழுத்து அதிகம் படித்ததில்லை. அவருடைய சிறுகதைத் தொகுப்பு ஒன்று, மலரும் மணமும் என்ற தலைப்பு என்று நினைவு, அதைப் படித்திருக்கிறேன். அதில் நிறையப் பேர்களால் பாராட்டப் பெற்ற நக்ஷத்திரக் குழந்தைகள் என்ற கதையில் குழந்தையின் கேள்வியும் அதன் துக்கமும் மிகவும் செயற்கையாகத் தோன்றியது. எந்தக் குழந்தை, ”நக்ஷத்திரம் விழுந்துடுத்து, யாரோ பொய் சொல்லீட்டா அதனாலே தான்”, என்று அழும்? ஆனால் […]
ஜோதிர்லதா கிரிஜா எழுத்துலகத்து விடிவெள்ளி யொன்று அஸ்தமித்ததை அறிவித்து 9.2.2013 விடிந்தது. மலர்மன்னன் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லர். அவர் மிகப் பெரிய மனிதாபிமானியுங்கூட. தெளிந்த சிந்தனையுள்ளவர் என்பதும் மெத்தப்படித்தவர் என்பதும் அவருடைய திண்ணைக் கட்டுரைகளி லிருந்து.புலனாகும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் ஒரு சமுதாய.அமைப்போடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். ஒரு முறை அவர் எனக்கு எழுதினார் – ’அந்நோய் உல்கம் முழுவதும் பரவி இருப்பதற்கு ஆண்மக்களே காரணம்’ என்று. .’அந்நோயினால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை […]