கல்வியில் அரசியல்- பகுதி 3 (நிறைவுப் பகுதி)

This entry is part 18 of 35 in the series 29 ஜூலை 2012

விழலுக்கு நீர் இறைக்கும் அரசு இயந்திரம் அரசியல் நடவடிக்கைகள், அறிவிப்புகள் இவையே அரசியல்வாதிகளின் தினசரிப் பணி . ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இவை ஒன்றும் மாறி விடப் போவதில்லை. ஆட்சியில் இருக்கும் போது அரசின் முடிவுகள், பட்ஜெட் அறிவிப்பு போன்ற முக்கிய நடவடிக்கைகளில் சமூக நலனில் தமது அக்கறையை வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு ஆட்சியாளர்களுக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் நிதியை ஒதுக்கும் போது அரசியல் நடவடிக்கையாக மக்களின் நன் மதிப்பைப் பெறும் மிகப் பெரிய […]

மடிப்பாக்கம் மனை தேடி, மாட்டு வண்டியில்

This entry is part 6 of 35 in the series 29 ஜூலை 2012

1968 என்று நினைவு. 1969- ஆகவும் இருக்கலாம். இவ்வளவு வருடங்கள் தள்ளிப் பேசும்போது இதில் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது? மாமியார் இறந்து ஒரு வருடம் ஆயிற்று. வருஷாப்தீகத்துக்காக மனைவியுடன் தில்லியிலிருந்து திருமுல்லைவாயிலுக்கு வந்திருந்தேன். திரும்பி தில்லி போக வேண்டும். சென்னையில் மனைவியின் அக்கா பெண் வீட்டில் சில நாட்கள். எனக்கு ஏதோ தூரத்து உறவினர் என்பதை விட சினேகிதம் தரும் நெருக்கம் அதிகம் அவர்களுடன். கொஞ்ச நாட்களாக தனக்கு ஒரு வீட்டு மனை இருப்பதாகவும் […]

நினைவுகளின் சுவட்டில் (95)

This entry is part 5 of 35 in the series 29 ஜூலை 2012

ஹிராகுட் போனதுமே எனக்கு உதவியாக இருந்தவர் செல்லஸ்வாமி என்று சொல்லியிருக்கிறேன். எங்கோ தமிழ் நாட்டு மூலையில் இருக்கும்  கிராமத்திலிருந்து இங்கு வேலை பார்க்க வந்திருக்கும் 16 வயதுச் சிறுவனுக்கு வயதில் konjam மூத்த நண்பனாக சொல்லாமலேயே வழிகாட்டியாக இருந்தவர்களில் செல்லஸ்வாமி முக்கியமானவர். வயதில் நாற்பதைத் தாண்டிய எஸ். என். ராஜாவுக்கு அடுத்த படியாக என்று சொல்ல வேண்டும். அவர் இருந்த வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளியிருக்கும் ஜனார்த்தனன் என்பவரின் வீட்டில் இருந்த அவருடைய விதவைத் தாய்க்கும் சின்ன […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 23

This entry is part 4 of 35 in the series 29 ஜூலை 2012

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு இருட்டுக் குடிலிலிருந்து உயிர் வெளியே வந்தது. வெளி வந்த உயிரிடமிருந்து எழுந்த முதல் ஓசை அழுகை அதன் பயணத்தை உணரும் சக்தி அப்பொழுதே அந்த உயிருக்கு இருந்ததோ?! சுற்றி நின்றவர் சிரித்தனர். மகிழ்ச்சியாலா அல்லது அவர்கள் போராட்டத்திற்கு ஓர் கூட்டாளி வந்துவிட்டான் என்பதாலா?! நாம் இலக்கியம் படைக்கும் பொழுதே வாழ்வியலை அகம் என்றும் புறம் என்றும் பிரித்திருக்கின்றோம். மனிதனின் வளர்ச்சியையும் அப்படியே பிரித்துப் பார்ப்பதே சிறந்தது. குழந்தையின் […]

ஒரு புதையலைத் தேடி

This entry is part 3 of 35 in the series 29 ஜூலை 2012

    பிரபஞ்சனின் முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்” என்னும் தலைப்பில் வெளிவந்தது. அதன் முக்கியமான கதைகளில் ஒன்று “அழகி”. தனது இளம்பருவத்தில் அப்பா அழகான ஒரு பெண்ணுடன் நெருக்கமாகப் பழகிய செய்தியை அறிந்துகொள்கிறான் மகனான இளைஞன். யாரும் தடுத்துக் கட்டுப்படுத்தமுடியாத இளம்வயதுத் துடிப்பில் இருப்பவன் அவன். தன் அப்பாவைக் கட்டிப் போட்ட அழகு எப்படிப்பட்டது என்று பார்ப்பதற்காக ஒருநாள் புறப்பட்டுச் செல்கிறான். அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறான். கதவைத் தட்டிவிட்டுக் […]

பூசாரி ஆகலாம்,! அர்ச்சகராக முடியாது?.

This entry is part 9 of 37 in the series 22 ஜூலை 2012

இந்தியா ஜனநாயகநாடு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி எல்லோருக்கும் சம உரிமை. இந்திய அரசியலமைப்பில் நால்வருணப் பாகுபாடு இருக்கிறதா? இல்லை. தமிழ்நாட்டில் எல்லோரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கிறதே, தெரியுமா? தெரியும். சட்டத்தை நடைமுறை படுத்த முடியுமா? முடியாது! !பிறகு என்னய்யா வெங்காயம்!! நீங்களும் உங்கள் சட்டங்களும். **** எல்லோரும் தமிழ்நாட்டில் அர்சகராகலாம் என்று சட்டமியற்றப்பட்டதை தங்களின் மகா ம்கா சாதனையாக எழுதியும் பேசியும் என்னவோ பெரிய புரட்சி நடத்திவிட்டதாக அரசியல் கட்சி சொல்லிக்கொண்டிருக்கும்போதே விட்டேனா பார் என்று […]

கல்வியில் அரசியல் பகுதி – 2

This entry is part 6 of 37 in the series 22 ஜூலை 2012

  யார் மேய்ப்பர்? தென் தழிழ் நாட்டில் ஒரு சொலவடை உண்டு “எரிகிற கொள்ளியிலே எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?” . கல்வித் துறை மட்டுமல்ல, பொதுவாக நிர்வாகம், நெறிமுறை கடைப்பிடித்தல் இவை மத்திய அரசுத் துறைகளிலும் நிறுவங்களிலும் ஒரு அளவுக்காவது தென்படும். மாநில நிர்வாகம் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் மோசம் அல்லது சுமார் என்ற அளவே இருக்கும். உயர்கல்வி நிறுவனங்கள் தொட்ங்குவதற்கான ஒப்புதல் மற்றும் அந்தக் கல்வி நிறுவங்களைக் கண்காணிப்பது, தரவரிசைப் படுத்துவது இவை எல்லாமே […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 22

This entry is part 3 of 37 in the series 22 ஜூலை 2012

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை வாய்மையால் காணப் படும்.   மனிதனின் வாழ்க்கையில் பல பருவங்கள் அவன் உருவாகும் காலத்தில் பிள்ளைப் பருவம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. உடல் மற்றும் மனம் வலிமை பெறுவது இக்காலத்தில்தான். மனித வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கும் இப்பருவத்தினைப் பற்றி நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சுவதற்கும் விளையாடு வதற்கும் மட்டுமல்ல.  மனிதன் பொறுப்புடனும் அக்கறையுடனும் பாதுகாக்கப்பபட வேண்டியது , குழந்தைப் பருவம், சிறுவர்களாக இருக்கும் காலம்.  இவைகளில் கவனம் செலுத்தும்  […]

சென்னையில் கழிந்த முதல் ஒரு பகல்

This entry is part 2 of 37 in the series 22 ஜூலை 2012

அன்று 1949 = வருடத்திய ஆகஸ்ட் மாதத்தின் நான்காவது வாரத்தின் ஒரு நாள் முற்பகல். தேதி 27 அல்லது 28 ஆக இருக்கவேண்டும். எது என்று நிச்சயமாக நினைவில் இல்லை. ஜெம்ஷெட்பூருக்குப் போகவேண்டும். வழியில் சென்னையில் கழித்த முதல் முற்பகல் அது. ஜெம்ஷெட்பூரில் இருக்கும் மாமா எழுதியபடி சாயந்திரம் செண்டிரலில் இருந்து புறப்படும் கல்கத்தா மெயில் ஏறவேண்டும். காரக்பூர் வரை. ஒரு நாள் விட்டு மறு நால் காலை கார்க்பூர் போகும். பின் அங்கிருந்து பம்பாய் மெயிலில் […]

நினைவுகளின் சுவட்டில் – 94

This entry is part 1 of 37 in the series 22 ஜூலை 2012

அந்தக் காலத்தில் ஹிராகுட்/புர்லா முகாம்களில் என்ன தமிழ் தினசரி பத்திரிகை வந்தது, எது எனக்குப் படிக்கக் கிடைத்தது என்று நினைவில்லை. அங்கு யாரும், என்னையும் சேர்த்து, தமிழ் தினசரி பத்திரிகை எதுவும் வாங்கியதாக நினைவில்லை. ஆயினும் நான் ஒரு தமிழ் தினசரி பத்திரிகையின் மதிப்புரை பக்கத்தில் தான் இரண்டு புத்தகங்களின் மதிப்புரைகளைப் படித்துப் பார்த்த பின் தான்  அவற்றை வரவழைத்தேன்.என்ற நினைவு என்னவோ மறையவில்லை. இரண்டு சிறுகதைத் தொகுப்புகள். ஒன்று ரகுநாதன் கதைகள். மற்றது, கு. அழகிரிசாமி […]