இன்னொரு நண்பரைப் பர்றிச் சொல்லவேண்டும் என்று இருந்தேன். அவர் பெயர் நினைவுக்கு வருவதாயில்லை. இப்போது தான் என்ன மாயமோ திடீரென்று மின்னல் அடிப்பது போல் நினைவில் பளிச்சிட்டது. அவர் பெயர் சிவ கோபால கிருஷ்ணன். “வாரும். உங்களுக்கு வீடு கிடைக்கிற வரையில் நம்மோடு தங்கலாம்,” என்று அழைத்து வரப்பட்டவர். இங்கே எங்கோ வேலை செய்யறது கிடக்கட்டும். உங்களுக்கு எதிலே இண்டெரெஸ்ட் என்று எங்களில் ஒருவர் கேட்க “பாட்டு” என்றார். அவர். “அடி சக்கை, எங்களுக்கு யாருக்குமே பாடத் […]
நான் 1950 களின் ஆரம்ப வருடங்களின் நிகழ்வுகளைப் பற்றி எழுதுகிறேன். மார்ச் 19-ம் தேதி ஹிராகுட் அணைக்கட்டின் நிர்வாக அலுவலகத்தில் ஆரம்பித்தது என் வெளி உலகத் தொடர்பு. ஒரிஸ்ஸாவின் சம்பல்பூர் ஜில்லாவின் ஹிராகுட்டில். அது ஒரு கிராமமாக இருந்திருக்க வேண்டும். மகாநதி என்னும் மிக பிரம்மாண்ட அகலமும் பனைமரங்களையே முழ்கடித்து விடும் ஆழமும் கொண்ட நதி அது. உண்மையிலேயே மகா நதி தான். அதன் குறுக்கே தான் அணை கட்டும் திட்டம். முதல் சில மாதங்களுக்குப் பிறகு […]
சத்யானந்தன் பகுதி ஒன்று – இணையான அதிகார மையங்கள் அரசியல் என்றதும் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் ‘கல்வியில் அரசியல்’ என்றதும் கல்வியிலுமா? என்றெலாம் பரிணமிக்கக் கூடாது. அரசியல் குடும்பம் முதல் ஐநா சபை வரை கூட்டாக மனிதன் வாழும் அல்லது சேரும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. இருக்கும். எதற்காக ஒரு அரசியல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது, யாரால் எடுக்கப் படுகிறது என்பது முக்கியம். எதுவானாலும் ஒரு விஷ்யம் அரசியல் ஆக்கப் பட்டதுமே அது பற்றிய சீர்தூக்கிய அணுகுமுறைக்கோ […]
சீதாலட்சுமி அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல னாகப் பெறின் இசையில் ஏழு ஸ்வரங்கள் ஆனால் அது காட்டும் பரிமாணங்கள் எத்தனை எத்தனை ! இசை கற்றவரெல்லாம் சுயமாக ஸ்வரங்கள் அமைத்து ராகம் பாடிவிட முடிவ தில்லை. அது ஒரு சிலரால் மட்டுமே முடிகின்றது. இது சங்கீதத்தில் மட்டுமல்ல. சமூக நலப் பணிசெய்ய வந்தவரெல்லாம் பெரிதும் ஈடுபட்டு தொண்டு செய்ய முடிவதில்லை .அதனால் பலரின் விமர்சனங்களுக்கு இந்த பணி ஆளாக நேரிடுகின்றது. எனக்கு நான் […]
கு.அழகர்சாமி ஒரு நகரின் நிலை நன்றா இல்லையா என்பதை எப்படித் தேர்வது? அந்த நகரின் நடை பாதைகள் நிலையைப் பாருங்கள். இப்படி ஒரு கருத்தை சென்னைக்கு வருகை தந்த ஒரு வெளி நாட்டு மேயர் ஒருவர் சொன்னதாய் இந்து நாளிதழில் எப்போதோ படித்த நினைவு. சொன்ன கருத்தில் ஒரு மேலை நாட்டுப் பின்னணியும் கண்ணோட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலை நாட்டு நகர் ஜனத் தொகையையும் , நம் நகரங்களின் ஜன நெரிசலையும் ஒப்பிட முடியாது […]
சில முகங்கள் வாடும் போது மனதை பிழிகிறது… பத்தாவது படிக்கும் போதே பெருவாரியான பள்ளிகளில் ஒரு ஃபார்ம் கொடுக்கப்பட்டு ஜாதி என்ன என்று கேட்கும் போது, பழைய உண்மை புதிதாய் புலப்படுகிறது… அன்றோரு நாள் சில ஜாதிகள் எல்லா நிலைகளிலும் பரவ, சமத்துவ உலகம் காண ஒரு அரிய கண்டுபிடிப்பு செய்தார்கள்…. அது தான் 99 = 42 என்று… என்ன செய்திருக்க வேண்டும், எல்லா கோவில் பிரகாரங்களில் இரவு பகல் பார்க்காமல், படிப்பு சம்பந்தமான கோச்சிங்குகளை […]
பிபிஸி ஐக்கிய நாடுகள் சபையும் மற்ற பார்வையாளர்களும் மார்ச் 2011இலிருந்து இதுவரை 9000 பேர்கள் சிரியா போராட்டத்தில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்கள். போராட்டம் எப்படி ஆரம்பித்தது? சிரியா நாட்டின் தெற்கில் இருக்கும் நகரமான டேரா (Deraa)வில் 14 பள்ளிச்சிறுவர்கள் துனிசியாவிலும் எகிப்திலும் மக்களது கோஷமாக இருந்த ஒரு கோஷத்தை சுவரில் எழுதினார்கள். அரபி மொழியில்.”மக்கள் இந்த அரசு வீழவேண்டும் என்று விரும்புகிறார்கள்” என்ற பொருள். இதற்காக போலீஸ் இந்த சிறுவர்களை கைது செய்து அழைத்து சென்று சித்ரவதை செய்தது. […]
எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் (பாகிஸ்தான் தினசரி) தலையங்கம். ஜூலை 3, 2012 இன்றைக்கு பாகிஸ்தானில் தலையாய விவாத தலைப்பு என்னவாக இருக்குமென்றால், அது நிச்சயமாக தீவிரவாதமாகத்தான் இருக்கும். இது மதரஸாக்களை நடத்தும் உலேமாக்களாக இருந்தாலும் சரி, தாராளவாத குடிமக்களாக இருந்தாலும் சரி, இதுதான் முக்கிய பேச்சாக இருக்கிறது. இதே முஸ்லீம் தீவிரவாதம்தான் உலகத்தின் மற்ற பகுதிகளிலும் தலையாய விவாதமாக இருக்கிறது. ஐரோப்பாவுக்கு செல்லும் முஸ்லீம்களும் அமெரிக்கா வாழ் முஸ்லீம்களும்சந்தேகத்தின் காரணமாக கைது செய்யப்படுகிறார்கள். ஆசியாவிலும் முஸ்லீம் பெரும்பான்மையும் […]
இஸ்லாமிய மார்க்கப்பிரச்சாரம் செய்வதற்காக இந்தியமண்ணிலும், தமிழகத்தின் பலபகுதிகளிக்கு வருகைதந்த அரேபிய மார்க்க பிரச்சாரகர்களும், இந்தியாவிலும், தமிழகத்திலும் தோன்றி இஸ்லாத்தை ஆழமாக அடித்தளமக்கள் மத்தியில் கொண்டு சென்ற சூபிகள் என்னும் மெய்ஞானிகளும் முக்கிய பங்குவகிக்கின்றனர். இஸ்லாம் ஆட்சிரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் இந்திய மண்ணில் காலூன்றுவதற்கு முன்பாகவே அரேபிய மண்ணின் மார்க்க பிரச்சாரச் குழுக்கள் கடல்வழிப் பயணமாக இங்கு வந்துள்ளனர் என்பதற்கான சான்றுகள் தெரியவருகின்றன. கி.பி. 632 ல் கேரளத்தை ஆண்டுகொண்டிருந்த மன்னன் சேரமான் பெருமாள் இஸ்லாமிய சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். அப்போது […]
மகேஷ் பூபதி மற்றும் ரோஹன் போபண்ணா இருவருமே லியான்டர் பேஸ்ஸுடன் ‘ஒலிம்பிக்ஸ்’ 2012ல் விளையாட ஒப்பாமற் போனதில் ஒரு சர்ச்சை துவங்கியது. பின்னர் இவர்கள் இருவருக்கும் பதில் விஷ்ணு வர்த்தன் என்பவரை லியான்டருக்கு ஜோடியாக அனுப்ப AITA முடிவு செய்த போது அதை அவர் ஏற்க மறுத்தார். இடையே சம்பந்தப் பட்ட மத்திய மந்திரி புகுந்து இரண்டு குழுக்களை அனுப்ப வழி இருக்கும் போது ஏன் இந்த சர்ச்சை என ஒரு போடு போட்டார். உடனே AITA […]