தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்

This entry is part 2 of 44 in the series 22 ஏப்ரல் 2012

1990இல் தங்கத்தின் விலை என்ன தெரியுமா? 2560 ரூபாய். 2012 இல் அதன் விலை என்ன தெரியுமா? 21500 ரூபாய் வரை வந்தது. சென்ற வருடத்தைய விலை ஏற்றத்தை நீங்களே கண்கூடாகக் காணலாம். ஒரு வாரத்திலேயே ஏற்ற இறக்கங்கள் அதிகம் இருக்கும். இப்போது வெள்ளைத் தங்கம் என்று சொல்லப்பட்ட மிக அதிக விலை கொண்ட பிளாடினத்தின் விலையை விடவும் தங்க விலை அதிகம். தற்போது பல்வேறு வங்கிகளும் தங்கக் கணக்கில் சேமிக்குமாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லி வருகிறார்கள். […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன

This entry is part 43 of 44 in the series 15 ஏப்ரல் 2012

  (கட்டுரை: 72 ) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குதிரை ஆழியைச் சுற்றுவது பரிதி. பரிதி வடுக்கள் தோன்றி ஊழித் தீயின் ஓவிய நாக்குகள் நீளும்  ! தீ நாக்குகள் அண்டங்களைத் திண்டாட வைக்கும் ! பரிதியில் பூகம்பம் ஏற்படும் ! ஓயாத சூரியனும் ஒருநாள் ஒளிவற்றி முடங்கும் ! பூமியின் உட்கருவில் பூகம்பத் தொடரியக்கம் தூண்டும் பரிதியின் தீப்புயல்கள்  ! சூரிய காந்தம், கதிர்வீச்சு காமாக் கதிர்கள் சூழ்வெளி வெப்பம் […]

கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10

This entry is part 41 of 44 in the series 15 ஏப்ரல் 2012

இந்த தொடர் நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன். இதுவரை நாம் பார்த்த சிலரது வாழ்க்கை வரலாறும், அவர்களது பிரமைகளும் அந்த பிரமைகள் மீது கட்டப்பட்ட அவர்களது நம்பிக்கைகளும் நமக்கு ஒரு சித்திரத்தை அளிக்கின்றன. இதிலிருந்து நாம் அடையக்கூடிய ஒரு முடிவு, இறை உணர்வு என்பது ஒருவருக்கு மட்டுமே கிடைக்கக்கூடியதல்ல என்பதுதான். இவரிடம் மட்டுமே இறைவன் பேசினார் மற்றது எல்லாம் போலி என்பதோ அவரவர் பார்வை மட்டுமே. இந்த இறை அனுபவம் அல்லது ஆன்மீக உணர்வு என்பது god […]

சருகாய் இரு

This entry is part 38 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உதிர்ந்துப்போன பிறகும் !! தன்னுடன் வைத்திருக்கும் சத்தமெனும் சலசலப்பை சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்!! தன் கண பரிணாமத்தை இலேசாக மாற்றி இருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! கிடக்கவும் ,பறக்கவும் காற்றுடன் சேர்ந்து சுழலவும் கற்றுக்கொண்டிருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! உக்கிரமாய் பற்றிக்கொள்ளும் தீயையும்,ஈரத்தையும் இயல்பை பெற்றுவிடும் சருகுகள், பச்சையாய் இருந்தபோது இல்லாத அத்தனை செளகரியங்களும் சருகானதும் உதிர்ந்த பிறகு தனித்தோ தாடி , வளர்த்தோ திரிவதில்லை சருகுகள், முழுதும் மாறிப்போகிறது சருகிடம், மனிதன் உதிர்வதில்லை? உதிர்ந்த ஒன்றாய் […]

பின்னூட்டம் – ஒரு பார்வை

This entry is part 23 of 44 in the series 15 ஏப்ரல் 2012

திண்ணை இணைய இதழை நான் சமீபமாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். சில இதழ்களில் எழுதியும் இருக்கிறேன். சமீபத்திய இதழ்களில் வெளிவரும் பின்னூட்டங்களை பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் அவஸ்தையாகவும் இருக்கிறது. முன் பின் தெரியாத, ஒரே ஒரு கருத்தின் மூலமாக அறிமுகமான ஒருவரின் மீது இவ்வளவு பகையுணர்ச்சி பாராட்ட முடியும் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது (சிலரின் உண்மையான பெயர்கள் கூட தெரியவில்லை, சிலர் பல பெயர்களில் பின்னூட்டம் இடுகிறார்கள்.) அந்த முகம் தெரியாத மாற்றுக்கருத்தை கொண்ட மனிதர் மனித நேயம் மிக்க […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8

This entry is part 16 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் மேடு பள்ளங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை. நம்மில் எத்தனை பேர்கள் அனுபவங்களிலிருந்து சரியான படிப்பினையைப் புரிந்து கொள்கின்றோம். நமக்குள் குறைகள் இருக்கின்றன என்பதைக் கூட மனம் நினைத்துப் பார்ப்பதில்லை. இந்த குறைதான் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்குக் காரணம். அமைதியைவிட அல்ப சந்தோஷங்களை விழைகின்றோம். வாழ்வியலின் வழுக்கல்களுக்கு நாமே காரணமாகின்றோம். மைனரிடம் துடுக்குத் தனமாகப் பேசி வந்த பின்னர் நான் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று நினைத்தேன் […]

தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

This entry is part 13 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா? இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது. உலகிலேயே தங்கத்தை அதிகம் உற்பத்திச் செய்வோர் யார் தெரியுமா? சீனர்கள். 2010இல் 340.88 டன்கள் உற்பத்தி. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்காவும் இருந்தன. 2010இன் மொத்த உற்பத்தி 4108 டன்கள். உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகள் தாம் தங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்றால் மிகையாகாது. அதனால் தங்கத்தில் விவரங்களைப் […]

அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு

This entry is part 3 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ் அது இது எது என்ற பிரபலமான நிகழ்ச்சி ஒன்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தொலைக்காட்சி இரசிகர்களுக்குத் தெரியும். அந்நிகழ்ச்சியை இலங்கையில் நடத்துவோமாக இருந்தால் அது, இது, உது –எது? என நடத்த வேண்டும். ஏனெனில் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள உகரச்சுட்டு இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியிலும் வவுனியா திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தவர் பரந்து வாழும் பிரதேசங்களிலும் இன்றும் வழக்கிலுள்ளது. அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு என்பது தொல்காப்பியம் பின் வந்த நன்னூலும் […]

நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்

This entry is part 2 of 44 in the series 15 ஏப்ரல் 2012

பாராளுமன்றம், அரசாங்கம், நீதித்துறை மற்றும் நான்காம் தூணாக ஊடகம் (அல்லது பத்திரிக்கை) இவையே ஜனநாயகத்தின் நான்கு தூண்கள். ஜனநாயகம் என்பது வசதிப் படும் போது மையப் படுத்தப்படும் மலினமான தத்துவம் அல்ல. மற்றவர் உரிமையை மதிக்கும் மாண்பு தனிமனிதனிடத்தும், சமூகம், மற்றும் அமைப்புகளிடத்தும் குறிப்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப் படுவதே அதன் சாராம்சம். நான்காவது தூண் எவ்வளவு சந்தர்ப்பவாதமும் மிகுந்தது என்பது கூடங்குளத்தில் அவர்கள் எடுத்த நிலைப்பாட்டைப் பார்த்தாலே புரியும். கூடங்குளம் போராட்டத் தரப்பு அனைத்துமே சரி என்று […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – – 7

This entry is part 40 of 41 in the series 8 ஏப்ரல் 2012

கொக்கொக்கக் கூம்பும் பருவத்து மற்றதன குத்தக்க சீர்த்த இடத்து. நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால் பெண்ணின் நிலை சோதனைக் களத்தில் வெந்து கொண்டிருந்தது. பெண் கற்கச் செல்வது கூடப் பிரச்சனை. அவள் பேச்சு, நடை உடை பாவனை எல்லாம் மற்றவர் பரிசோதனைப் பார்வையில் இருந்தன. பணிகளில் இருவிதங்கள்.. ஓரிடத்தில் இருந்து பணி யாற்றுவது ( sedantary ) இன்னொன்று பல இடங்களுக்குச் சென்று பணியாற்றுவது. அதாவது களப்பணி. அதிலும் ஆடவர்களுடன் சேர்ந்து செய்யும் பணி. முதலில் வம்புக் […]