சங்கீதா……சங்கீதா…..ஏய்..சங்கீதா….இன்னும் அங்க என்ன பண்றே……? வா….சீக்கிரம்…..நீட்டி முழக்கினாலும் அந்தக் குரலில் வழக்கம் போல ஒரு கண்டிப்பு இருந்ததை சங்கீதாவால் உணர முடிந்தது. மாமி…நான் அப்பறமா வரேன்…..அம்மாக் கூப்பிட ஆரம்பிச்சாச்சு …..முதல்லயே சொல்லித் தான் அனுப்பினா கொடியில் காய்ந்த துணிகளை எடுத்தோமா … கட கடன்னு இறங்கி வந்தோமான்னு வா…வீடு… வீடா.. நின்னு கதை பேசாதேன்னு…….அவசர அவசரமாக போற போக்கில் என்னிடம் சொல்லிவிட்டு.. படிகளைத் தாவித் தாவி சிட்டாக இறங்கினாள் சங்கீதா. அவளது அம்மா என்ன சொன்னாலும் சரி…காலையில் […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்கங்கள் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1 நாடக ஆசிரியர் பெர்னாட் ஷாவைப் பற்றி : ஜார்ஜ் பெர்னாட் ஷா அயர்லாந்தின் தலைநகர் டப்ளினில் 1856 ஆம் ஆண்டில் ஜார்ஜ் கார் ஷா & லுஸிண்டா எலிஸபெத் ஷா இருவருக்கும் பிறந்தவர். அவரது அன்னை ஆப்ரா (Opera) இசையரங்குப் பாடகி, வாய்க்குரல் பயிற்சியாளி. தந்தையார் தோல்வியுற்ற வணிகத்துறையாளர். வறுமையி […]
(சிறுகதை தொடர் கதை ஆகுது … ! ) பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி அம்மாவின் தலையீட்டின் பிறகு ஆயிஸா ஒரு வாரம் நேரம் தவறாமல் வேலைக்கு வந்தாள். பிரச்சனை அத்தோடு சுமுகமாக தீர்ந்தது என்று நிம்மதியில் இருந்தேன். ..எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு…இப்போ என்னாச்சு…? பெரிசா ஒண்ணும் ஆகலை…..அத்தனை எதிர்ப்பையும் சமாளித்து வேலைக்கு வந்து கொண்டிருந்த ஆயிஷா…..சொல்லாமல் கொள்ளாமல் வருவதை மறுபடியும் நிறுத்தி விட்டிருந்தாள்…. பாவம் இப்போது என்ன பிரச்சனையோ..? யார் என்ன சொன்னார்களோ..? .என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பதை […]
சுரும்பார்குழலி திருஞானசம்பந்தம் என்ற பெயரை 101வது முறையாக உச்சரிக்கவும், ஸ்பெல் பண்ணவும் சொல்லி, க்ளையண்ட் நச்சரிக்க, சலிப்பின் உச்சத்தில் இருந்த குழலி, வழக்கம் போல தனக்குப் பெயர் சூட்டிய பெரியவர்களை திட்டிக் கொண்டிருந்தாள். அமெரிக்க க்ளையண்ட்டான ஜேம்ஸ் வேறு என்ன செய்ய முடியும். இது போன்ற பெயரை முன்பின் கேட்டதும் இல்லை, உச்சரிப்பதும் எளிதும் அல்ல. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எழுத்தாகச் சொல்லி, எஸ் ஃபார் சேம்ஸ் (s for sams, u for umbrella, r […]
ஒரு காலத்தில் ஒரு மரத்தில் நானே இருந்துவந்தேன். அதே மரத்தடியில் இன்னொரு பறவை, ஒரு தித்திரிப்பறவை, இருந்து வந்தது. அண்டை வீட்டுக்காரர்களாக இருந்ததால் எங்களிடையே பிரிக்க முடியாத அன்பு ஏற்பட்டது. சாப்பாடும், விளையாட்டும் முடிந்த பிறகு ஒவ்வொரு நாளும் நாங்கள் இருவரும் ஒன்று கூடுவோம். பிற்பகல் வேளையில் பல நீதி வாக்கியங்களைச் சொல்லிக் கொள்வோம். புராணம் முதலிய கதைகளைச் சொல்வோம். விடுகதை புதிர் போட்டுக் கொள்வோம். ஒருவர்க்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டு விநோதமாகக் காலம் கழித்து வந்தோம். […]
“ராஜேந்திரன் ஸார்..நான் யாருன்னு யூகிக்க முடியுதா?” “………..” “இது உங்க மொபைல் ஃபோன். இந்த நம்பரை ரெகக்னைஸ் பண்ண முடியுமா?” “……….” “இது உங்க ஒயிஃப் மஞ்சுளா அவங்க நம்பர் …இல்லீங்களா?” டாக்டர் ஒரு புகைப்படத்தை எடுத்து மேஜை மீது வைத்தார். “இந்த போட்டோல இருக்கறவங்களை ஐடென்டிஃபை பண்ணுங்க ஸார்”. பதிலில்லை. பொன்னம்மாள் படத்தின் மீது விரலை வைத்து “இது உங்க மதர் இல்லீங்களா?” “…………..” “அவங்க காலமாயிட்டாங்க….. உங்களுக்குத் தெரியுமா?” ராஜேந்திரனின் கண்களைக் கூர்ந்து நோக்கினார் […]
(1) “சார், கங்கிராஜுலேஷன்ஸ், நீங்க ரிட்டைர்டு ஆயிட்டதா சொன்னாங்க” பாலுசாமி அரசு மருத்துவ மனையில் என்னைப் பார்த்ததும் புன்னகை மலர இப்படி ஆரம்பித்தார் பேச்சை என்னிடம். நான் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றதை உள் வாங்கிக் கொள்வதை இன்னும் ஒத்திப் போடுவதாய் “ போன மாதம் சார், ரிட்டைர்டு ஆனேன்” என்பேன். போன மாதமானாலென்ன’; போன தினமாலென்ன; மனம் அவ்வளவு வேகமாகவா மாறுதலுக்கு தயாராகிறது. பாலுசாமி நான் பணி செய்த துறையிலேயே எஞ்சினியராய்ப் பணி செய்து பத்து […]
பனசை நடராஜன், சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் கால் வைத்ததும் ஏதோ ஒரு புது கிரகத்தில் இறங்கியது போலிருந்தது மூன்று பேருக்கும். சிவா, குமரேசன், சேதுராமன். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வசித்தாலும் படித்தது ஒரே தொழிற்கல்வி நிலையத்தில் (ஐடிஐ)., வெவ்வேறு காரணத்துக்காக இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களோடு வந்த மற்ற இருவரும் சிங்கப்பூரில் முன்பே வேலை பார்த்த அனுபவசாலிகள். அதனாலேயே கொஞ்சம் அதிகமாகவே எல்லாவற்றையும் விளக்கி சொல்லிக் கொண்டு வந்தார்கள். காலால்தான் நடக்கணும் வாயால்தான் சாப்பிடணும்னு மட்டும்தான் சொல்லலை. […]
மேமாதம் முதல் வாரமோ இரண்டாம் வாரமோ பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பிற்கு விடுமுறை விடுவார்கள். ” மெஷினெல்லாம் ஓவர் ஆயிலிங்க் பண்ணனுமில்ல, அதுக்காகத்தான் இந்த ஒருவார லீவு ” என்றான் என் நண்பன் ராஜு. எனக்கு அவன் சொன்னது புரியவில்லை. அப்பாவிடம் ‘ ஒவர் ஆயிலிங்க் ‘ என்றால் என்ன என்று கேட்டபோது என்ன கோபத்தில் இருந்தாரோ தெரியவில்லை. ” ம்! உன் தலை ” என்றார். பக்கத்து வீட்டு கிருஷ்ணமூர்த்திக்குக் காலையில் நான் தின்றுகொண்டிருந்த கடலையைக் […]
இந்தி : மகாஸ்வேதா தேவி தமிழில் : முனைவர் தி.இரா.மீனா [ ஆங்கில மூலம்] குந்தியும் அந்த மலைவாழ் பெண்ணும் ஆசிரமத்தில் திருதராட்டினனையும் , காந்தாரியையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு குந்திக்கு இருந்தது. இந்தக் கடமையை குந்தி விரும்பியே செய்தாள்.வனத்தின் மத்தியிலான ஆசிரமம் இது. அன்றாட வழிபாட்டிற்காக தினமும் காட்டுக்குச் சென்று சுள்ளிகளை எடுத்து வருவது அவள் பணி. மதியம் தான் அவளுக்கு பிடித்த பொழுது. சுள்ளிகளைப் பொறுக்கி விட்டு சிறிது நேரம் அங்கேயே சுற்றி […]