ஸிந்துஜா சாந்தி எல்லாச் சத்தங்களையும் கேட்டுக் கொண்டு படுத்திருந்தாள். முன்பு படுக்கும் போது போட்டுக் கொள்வதற்கு என்றிருந்த பாயும் கிழிந்து விட்டதால் வெறும் தரையில் படுத்துக் கொண்டிருந்தாள். மண் தரையில் ஊர்ந்து சென்ற எறும்பு ஒன்று அவள் காலைப் பதம் பார்த்து விட்டு நழுவியது. அந்த ஊசிச் சுருக்கின் வலியில் அவள் காலை இழுத்துக் கொண்டு சேலையால் பாதம் வரை தெரியாமல் மூடிக் கொண்டாள். வெளியில் படுத்திருந்த கறுப்பன் உள்ளே வந்து சுற்றிப் பார்த்து விட்டு அவள் […]
உஷாதீபன் அரியணையில் வீற்றிருந்தார் பஞ்சலிங்க மகாராஜா. என்ன ஒரு கம்பீரம்? மனிதனின் உண்மையான இருப்பும், அர்ப்பணிப்பும், நேர்மையும் அவனை உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது எத்தனை சத்தியமான உண்மை. வாழ்விலேயே முதன் முறையாக ஒரிஜினலாக இப்போதுதான் தான் சரியான இடத்தை அடைந்திருப்பதாகத் தோன்றியது. இடது கையை மடக்கி இடது தொடையில் நிறுத்திக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். வலது கையில் செங்கோல். காலம் என் கையில் கொடுத்த நீதி. நீதான் ஆளத்தகுந்தவன். நிமிர்ந்து சபையை நோக்கினார். இந்த மக்கள் […]
மனோகர் மைசூரு நான் இன்னும் அரை மணியில் என் அப்பாவின் நண்பர் டாக்டர் மதிவாணன் வீட்டில் இருக்கவேண்டும். எதற்காக என்று கேட்கிறீர்களா?. முதலில் அவரிடம் என் பிரச்சனையை பகிர்ந்து விட்டு உங்களிடம் வருகிறேன். ஒன்பதரைக்கு அவர் வீட்டில் உள்ள மதி மனநல கிளினிக்கில் வந்து விட்டேன். அவர் தன் தனிப்பட்ட அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். “என்னப்பா மதன், எதுக்கு திடிரென்று என்னைப் பாக்கணும்னு அப்பா கிட்ட சொன்னயாமே?. அட்வைஸ் ஏதாவது? இல்ல எனி ப்ராபளம் ?. […]
நாவல் தினை அத்தியாயம் பதினான்கு CE 300 பொது யுகம் 300 வழி மறந்த கடைசிப் பறவை வீடு திரும்பும் பின் அந்திப் பொழுதில் இந்தப் பெண்கள் திரும்பினார்கள். இலுப்பெண்ணெய் தாராளமாக ஊற்றிப் பெரிய பருத்திப் பஞ்சுத் திரிகள் எண்ணெய் நனைத்துக் கொளுத்திய சுடர்கள் தெருவெங்கும் வீட்டு மாடப்புரைகளில் இருந்து ஒளி வீச இன்னும் சிறிது நேரத்தில் இரவு நிலம் போர்த்தும். குயிலிக்கு வியப்பாக இருந்தது. […]
ஸிந்துஜா எதிராஜ் பரீட்சை முடிந்து ஒரு வார லீவில் ஊருக்கு வந்திருந்தான். வந்தது முதல் வீட்டில் கால் தரிக்கவில்லை என்று கனகவல்லி கணவனிடம் புகார் செய்தாள். முதல் நாள் ‘பிரென்ட்சோட ஓட்டல்ல சாப்பிட்டு விட்டு வந்தேன்’ என்று அவனது அம்மாவின் வயிற்றெ ரிச்சலைக் கொட்டிக் கொண்டான். அதனால் அவன் ஊருக்குத் திரும்பிப் போகும் வரை எல்லா வேளையும் வீட்டில்தான் சாப்பிட வேண்டும் என்று அவனது அப்பா சிவகுரு உத்திரவு போட்டு விட்டார். காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு […]
அவளைத் தேடி வந்த சுகந்தி “ஏன் என்னமோ போல இருக்கீங்க?” என்று வசந்தாவிடம் கேட்டாள். “இல்லியே. ஐம் கொயட் ஆல்ரைட்” என்று சிரித்தாள். உண்மையை மறைக்க வல்ல சிரிப்பைத் தான் சிந்தவில்லை என்று அவளுக்குத் தோன்றியதை மறைக்கும் வண்ணம் “கலியாணம்னு கேள்விப் பட்டேன். கங்கிராட்ஸ்” என்றாள். சுகந்தி “அதுக்குத்தான் வந்தேன்” என்றபடி கைப்பையைத் திறந்து மஞ்சள் குங்குமம் தடவிய ஒரு கவரை எடுத்து “மேரேஜுக்கு அவசியம் நீங்க வரணும்” என்று சொல்லிக் கொடுத்தாள். “நிச்சயமா” என்று அவளுடன் கைகுலுக்கி விட்டு “என்னிக்கு?” என்றபடி பத்திரிக்கையைப் பிரித்தாள் “அடுத்த மாசம் ஆறாந் தேதி. […]
விழித்தெழுந்த பொழுதில் நகர வேண்டியவை பறக்கத் தொடங்கின. எங்கணும் பறவைக் கூச்சல். மருத்துவர் நீலனின் குடிலில் பரபரப்பான இயக்கம் நிகழ்ந்து கொண்டிருந்தது. குடில் என்று ஒரு பழக்கத்தால் தான் குறிப்பிடுவது என்று அந்தக் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தாலே புரியும். இரண்டு தளங்கள் செங்கல் கூரை மூடியும் வானம் பார்த்த மச்சுமாக வீட்டுடமையாளரின் செழிப்பைச் சொல்வதாக அந்த இல்லம் திகழ்ந்தது. கீழ்த்தளத்தில் சஞ்சீவி மலையைச் சுமந்து கம்பீரமாகப் பறக்கும் அனுமனின் வண்ணப்படம் சுவரை நிறைத்திருந்தது. அந்த […]
அவர்கள் வீட்டு வாசலில் நின்று நோக்க வாசல்படிகள் ஏழு இருக்க பிரம்மாண்டமான சிவப்புக் கல்லாலமைந்த கட்டிடமாக வனப்பு மிகக்கொண்டிருந்த இல்ல முகப்பில் நாக.சோனை என்று கொத்தி வைத்தது கண்டார்கள் குயிலியும் வானம்பாடியும். குயிலி வாசலில் ஒரு வினாடி நிற்க, வானம்பாடி போகலாம் வா என அவசரப்படுத்தினாள். அந்த நிமிடம் வாசல் கதவு திறந்து வெளியே வந்தவள் கையசைத்தாள் – வாருங்கள் பெண்களே, உங்களுக்கு மேகலையின் வரவேற்பு. தேறல் மாந்திப் போங்கள் என்னோடிருந்து. உடல் நலம் பேணுதல் முக்கியம். […]
வில்லன் புருனோ, மோனிகா & ஒத்தல்லோ ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி – பாகம் : 5 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ அங்கம் -2 காட்சி -1 பாகம் : 5 ++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] புருனோ: [ஷைலக்கை நோக்கி] மக்கள் சொல்வார். காதல் நோயில் வெந்து போனவன் பிறகு செம்மை அடைவான் […]
அது ஒரு மழை மாதம். பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் முதியவர் மரணம்’. அரசு சும்மா இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி அழகு காண்பித்த மரங்களின் கிளைகள் கழிக்கப்பட்டன. நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் பட்டுச்சேலை உடுத்திய பெண்கள்போல் நின்ற மரங்கள் நீச்சல் உடையில் காட்சியளித்தன. நான் தங்கியிருக்கும் பஃபலோ சாலையில் சிறுவர்கள் பூங்காவுக்கு நிழல் தந்தபடி குடை விரித்திருந்த […]