வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)

This entry is part 26 of 30 in the series 20 ஜனவரி 2013

  (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் அநேக கோலாகலப் பாட்டுகளைக் கேட்கிறேன். எந்திரத் துறைஞன் ஒவ்வொரு வனும் தனது தொழில் பற்றிப் பாடுகிறான், களிப்பும், கைப்பலம் அளிப்பதால். தச்சன் தன் தொழிலைப் பாடுவான் உத்தரமோ  மரப்பலகையோ ஒன்றை அளந்து, கொத்தன் தன் தொழிலைப் பாடுவான் துவங்கும் போதும் பணியை முடித்து விட்டுப் போகும் போதும் ! படகில் உள்ள தனக்குரிய பொருள் பற்றிப் படகோட்டி பாடுவான் நீராவிப் படகின் தளத்தி லிருந்து […]

அம்மாவின் அங்கி!

This entry is part 24 of 32 in the series 13 ஜனவரி 2013

திங்கள் முதல் வெள்ளிவரை நெடுந்தொடர்களின் நாயகிகளின் குடும்பப் பிரச்சினைகளில் ஒன்றிப்போன மனைவி வார விடுமுறையின் துவக்கத்தில் காரணமின்றி கோபித்துக்கொண்டு மகளின் அறையில் படுத்துக்கொள்ள என்னுடன் படுத்துக்கொண்ட சின்னவன் நெடுநேரமாகியும் தூக்கமில்லாமல் என் தோளிலேயே தவித்திருந்தான் டைனோஸர் கதை கேசம் துழாவிய வருடல் என எந்த முயற்சியும் அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க சட்டென எழுந்து மேசையின் இழுவரையில் மடித்திருந்த மனைவியின் இரவு அங்கி ஒன்றை எடுத்துவந்து அதன் முன்கழுத்து வளைவில் தொங்கிய நாடாக்களின் குஞ்சத்தினை நெருடிக்கொண்டிருந்தவன் சடுதியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்

This entry is part 23 of 32 in the series 13 ஜனவரி 2013

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பின்னிருந்து அது என்னை அழைக்கிறது திரும்பி வரும்படி நான் பிரிந்து செல்லும் தருணத்தில் ! மேகத்தின் இடை வெளி களின் ஊடே தெரியும் உதய வேளை ஒளிக் கற்றைகள் ! காலை மழைப் பொழிவைச் சகிக்காமல் ஓலமிட்டுக் கீச்சிடும் பறவை மீளும்படி என்னை அழைக்கும் மரக்கிளை மறைவி லிருந்து. ஆற்று வெள்ளம் பொங்கி நிழல்களுக் கடியிலே யாரைத் தேடிக் கொண்டு வேகமாய்ப் பாய்ந்து ஓடுகிறது […]

மணலும், (வாலிகையும்) நுரையும் – 7

This entry is part 22 of 32 in the series 13 ஜனவரி 2013

  பெருநீரைத் தேடாத நதியையும் வசந்தமாய் மாறாத கூதாளிக்கால மனநிறைவையும் நாம் மொழிவது யாதென்று இயற்கையன்னையவள் சிரத்தைகொளல் வேண்டுமோ. கட்டு முகனையைப் பற்றி நாம் கூறுமனைத்தையும் கவனம் கொள்ள வேண்டுமோ, நம்மில் எவரெவர் இவ்வளியை சுவாசிக்கப் போகிறோம்?   நீவிர் ஆதவனுக்குப் பின்நோக்கிச் சென்றால் உமது நிழலையேக் காண்பீர் பகற்பொழுதின் கதிரொளியில் சுதந்திரமாக இருக்கிறீர் நீவிர், மற்றும் இராப் பொழுதின் நட்சத்திரங்களின் முன்னாலும் சுதந்திரமாகவே இருக்கிறீர் நீவிர்; மேலும் சூரிய,சந்திரரும் நட்சத்திரமும் இல்லாத போழ்தும் சுதந்திரமாகவே இருக்கிறீர் […]

வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)

This entry is part 19 of 32 in the series 13 ஜனவரி 2013

    (1819-1892) (புல்லின்இலைகள் -1) மூலம் : வால்ட்  விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட்விட்மன்வாழ்க்கைவரலாறு:   அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு […]

பொல்லாதவளாகவே

This entry is part 18 of 32 in the series 13 ஜனவரி 2013

கோமதி நடராஜன் அநியாயங்களைச் ,சகித்துக் கொண்டே போனேன் . நல்லவளானேன் . சகிப்பு தொலைந்து , நிமிர்ந்து பார்த்தேன் கெட்டவளாய் ஆனேன் நக்கல்களை ,நல்லவிதமாய், எடுத்துக் கொண்டே நகர்ந்தேன் நம்மவள் ஆனேன். ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தேன். யாரோ என்றானேன் . பொய்யென்று தெரிந்தும், பொறுத்துப் போனேன் ஏற்றவளானேன் நம்பாத முகம் காட்டினேன் தகாதவளானேன் நல்லவளாய் ஏற்றவளாய் இனியவளாய் என்றுமிருக்க நல்லவை அல்லாதவைகளைப், பொறுத்துப் போனால்தான் சாத்தியமென்றால் , பாதகமில்லை ! நான் ,பொல்லாதவளாகவே இருந்துவிட்டுப் போகிறேன். ————————–

மெய்ப்பொருள்

This entry is part 5 of 32 in the series 13 ஜனவரி 2013

சத்ய தாரையில் ஒரு துளியாய் தெய்வம் கண்ட தருணம். ஆத்ம அரவத்தின் ஒய்யாரத்தில் கவிதையின் சயனம். கிடந்த பெரிய வீணையிலிருந்து எழுந்த புலப்படாத ராகத்தின் உயரத்தில் லயித்துப் பறக்கிறது மனப்பட்சி! கூப்பிய கைவிரல்களுக்கு இடையில் ஏந்திய மௌனம் துளசியின் ஈரம்பட்டு விழித்துக் கொள்கிறது ! சேவிக்கும் தாமரைக்குள்ளேதான் வாழ்வின் மகரந்தம். சொல்லிக் கொடுத்தவன் அருகில். பிரித்துக்கொடுத்தவன் எதிரில். இருந்தும் புரியாது கல்லாய் நிற்கிறேன் ! கல்லே நாம் ! கல்லே நம் ஆசான் ! கல்லே தெய்வம் […]

மணலும், (வாலிகையும்) நுரையும்! (6)

This entry is part 31 of 34 in the series 6 ஜனவரி 2013

Sand And Foam – Khalil Gibran பவள சங்கரி மேதையென்பவன், ராபினின் மிதமானதொரு வசந்தகால துவக்கத்தின் கீதமானவன். மோசமான இறகு படைத்ததோர் ஆன்மாவாயினும், அதுவும்கூட உடற்தேவையினின்று தப்பிக்க இயலாது. பித்தன் என்பதாலேயே அவன் உம்மையும், எம்மையும் விடக் குறைந்த தகுதியுடனான இசைக்கலைஞன் அல்லன்; ஒருகால் அவன் வாசிக்கிற அந்த இசைக்கருவி மட்டும் சிறிது ராகம் தப்பியதாக இருக்கலாம். இருதயத்தின் அமைதியினூடே உறைந்திருக்கும், தம் குழவியின் இதழ்களின்மீது இசைக்கும், ஒரு தாயின் பாடல் அது. நிறைவேறாத ஆசைகளென்பதே […]

பெண்ணே !

This entry is part 28 of 34 in the series 6 ஜனவரி 2013

சீராளன் ஜெயந்தன் நான் ஆணாய் பிறந்தது வெட்கம் கோரப்பற்களும் கொடூர நகங்களும் குருதி சொட்டும் நாவும் குத்திக் கிழிக்கும் கொடுங்கோளும் கொண்டு சதை தேடி சதை தேடி பசியாறா பிணந்தின்னி சாகும் வரை சதை வேண்டும். காமக் கண்களும் கற்பழிக்கும் காமிரா கண்களும் எரியூட்டும் சேலைக்குள் ஊடுருவும் கண்கள் துகிலுரியத் துடிக்கும் மனசு அது எவளாயினும் எனக்கு வேண்டும். உடன் பிறந்தவள் தவிர்த்து யாரும் இல்லை சகோதரி என்று இறுமாப்பு பேச்சிலும் காமம் களியூரும். பணமும் புகழும் […]

அம்முவின் தூக்கம்

This entry is part 23 of 34 in the series 6 ஜனவரி 2013

ஷான் பறித்துப் போன பாவி மனங்களை கடை மூடிக் கணக்கிடும் குறும்பாடும் கண்கள் மறுநாள் புன்னகைகள் பதியனிட்டுக் கொண்டு சிரிப்பாடும் சிறு குமிழ் இதழ்கள் தொடுகை முடிந்து மூடிக் கிடக்கும் நகம் பூத்த விரல் தாமரைகள் தாவிக் குதித்து ஓடிக் களித்து ஓரிடம் நின்ற களைப்பில்லாக் கால்கள் ஏறி இறங்கும் சுவாச அசைவில் உலகம் தாலாட்டும் இலை வயிறு இதழின் ஓர் கோடியில் எப்போதாவது பூக்கும் இளக்காரப் புன்னகை புரியாத புதிராய் அம்மு தூங்கவில்லை அவள் புரிவது […]