ருத்ரா அதோ அங்கே ஒரு “கிரஹப்ரவேசம்” மாவிலை தோரணங்கள். மங்கலப்புகை மூட்டம். கொம்புகளை ஆட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தாள் “கோ மாதா” மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனும் இதைத்தான் குறிப்பிட்டான். ஆ வை அன்னையாகக்கருதுவதில் பிழையில்லை. ஆனால் தமிழ் அன்னையை மட்டும் தெருவோரம் எச்சில் இலைகள் எப்போது குவியும் என்ற இடத்தில் இருத்திவிட்டு “ஹோமங்கள்” கொடி கட்டுகின்றனவே! லக்ஷ்மி ஹோமம் கணபதி ஹோமம் …….. மந்திரங்கள் திகு திகு வென்று எரிகின்றன. ஸ்லோகங்கள் எனும் ஆக்கிரமிப்பு செய்த ஓசைக்கூச்சல்களின் […]
ருத்ரா ஆம். இது இனிமேல் குப்பன் சுப்பன்களின் பார்ட்டி. தாத்தா அப்பா பேரன் பூட்டன் என்று எத்தனை நாளைக்கு “நூல்”பிடித்துக்கொண்டிருப்பது? ரத யாத்திரை போகும் அந்த ரதத்தில் ராமனை இறக்கிவிட்டு (ஊழல் பழி சொன்ன) சலவைத்தொழிலாளிக்குத் தான் இனி தூப தீபமா? எப்படியிருப்பினும் பொது ஜனம் என்றாலும் சரி மகா ஜனம் என்றாலும் சரி சாமான்யன் என்றாலும் சரி பொத்தான் அமுக்கும் போது..இந்த “பொது உடைமையை” மனதில் வைத்துக்கொண்டால் சரி. வெள்ளைக்குல்லாய்களின் கும்பமேளா போல் தெரிந்தாலும் ஊழல் […]
தி.ந.இளங்கோவன் கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள், கிளி கொத்திப்போட்ட பழங்களை பொறுக்கி காயவைத்தவள் அவள். சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள். மரம் மரமாய்ப் பொறுக்கி, தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து அலசி காயவைத்து சேகரித்தவள் அவள். பில்லறுத்துப் போட அவளின்றி காய்ந்த வைக்கோலை அரை மனதுடன் அரைத்து நிற்கிறது பசுங்கன்று. அந்திமல்லி பறிக்க அவளின்றி அங்கேயே உதிர்க்கிறது பூக்களை. அரைத்துவந்த அரிசியும் தவிடும் எட்டு போட்ட சித்திரமாய் பிரியாமல் மூட்டையிலே கிடக்குதங்கே அவளில்லாக் காரணத்தால். கல் கட்ட அவளில்லை, மரவட்டையாய் […]
குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் – உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்….. கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் – யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று….. நீ எனக்கெழுதுவது மாதமொருமுறை எனினும் தபாலில் உனது கடிதம் வரும்போது நீயே வந்ததாய் நினைத்துக்கொள்வேன்….. குடும்பத்தை விசாரித்து குழந்தை பற்றியும் விசாரித்திருப்பாய் – கூடவே நீ மாதம் அனுப்பும் பணத்தின் கணக்கையும் கேட்டிருப்பாய்….. கடிதத்தின் […]
மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட மரத்தின் ஆதிக் கிளைகள் காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன விருட்சங்களை வெட்டிச் செல்லும் விஷமேறிய பார்வைகளை சிற்பி காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில் வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம் எவ்வளவு ப்ரியத்துக்குரியது நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில் அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில் வன்மங்கள் கூராகின இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது புராதனச் சடங்குகளின் பிரிந்த […]
“சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு…” பாரதி மும்பை நகர் வீதிகளில் தேடினான். கவிதை என்றால் இலக்கியம் நினவுக்கு வந்தது. “காண்டேகரின்”எழுத்துக்களின் மின்னல் பீலிகளாய் அந்த “கிரவுஞ்ச வதம்” அவன் கண்ணுக்குள் நிழல் காட்டியது. அந்த காவியக்கசிவோடு “சேரத்து தந்தம்”தன்னை பண்டமாற்றம் செய்ய தேடினான் தேடினான் ஒரு மராட்டியனை. அன்று அங்கே எல்லோரும் தேடித்தேடி தேம்பினார்கள் ஒரு மராட்டியனை. ஆனால் அந்த பேனா பிடித்த மராட்டியனுக்குப் பதில் அவன் பார்த்ததெல்லாம் வாள் பிடித்த மராட்டியன்கள் தான். வாள் […]
SAND AND FOAM (Khalil Gibran) (4) பவள சங்கரி செவியொன்றைத் தாரும் எமக்கு, குரலொன்றைத் தருவேன் யான் உமக்கு. நம் மனம் என்பதோர் நுரைப்பஞ்சு; நம் இருதயமோ ஓர் சிற்றாறு. நம்மில் பெரும்பாலானோர் ஓடுவதைக் காட்டிலும் உறிஞ்சுவதைத் தேர்ந்தெடுப்பது ஆச்சரியமன்றோ? நீவிர், பெயர் இடாததோர் வாழ்த்துரைக்காகக்கூட ஏங்கிக் கிடந்த தருணம் மற்றும் காரணம் அறியாமலேயே வருத்தம் கொள்ளும் போதும், உண்மையில், பின்னரும், வளரக்கூடிய அனைத்துப் பொருட்களுடன் நீவிரும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறீர் மற்றும் உன்னதமான […]
பலி மாக்கல் நந்தி வளருகிறதாம் பிள்ளையார் பால் குடிக்கிறதாம் மண்ணடி இயேசு மறுபடி வருவாராம் புத்த பிக்குகள் அஹிம்சையை தொலைத்துவிட்டார்கள் பாம்பு சீண்டினால் தான் சீறும் கங்கையில் தொலைப்பதற்காகத்தான் பாபங்களை சுமக்கின்றீர்களா பணமுதலைகளா வாருங்கள் உங்களுக்கு தங்கத்திலான சிலுவை தயாராக இருக்கிறது பரலோகத்திலும் பாகுபாடு காட்டினால் இகலோத்தில் வாழ்வு இம்சையாக ஏன் இருக்காது ஒருமனதாகச் சொல்லுவோம் எல்லாவற்றுக்கும் காரணம் மதம் தான் என்று போருக்கு பலி கொடுக்க அரவானைத் தேடும் உலகமிது. ————————————– கொலை தெய்வம் சும்மா […]
கனவிலாவது பெருங்கனவானாக இருக்கக் கூடாதா சுற்றம் இவனிடம் பவிசாக நடந்து கொள்ளக் கூடாதா நடப்பவை தெரியவந்தால் அசுவாரஸ்யம் ஏற்படாதா மாரிக்காலத்தில் ஒளிந்து கொள்ளத் தெரியாதவன் பகலவனா தேவதாசிகளின் அழகு அத்தனையும் முருகனுக்கா காடு,மலை,கடல் நவகிரகங்கள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொள்வதில்லையா அன்னாபிஷேகத்துக்கு பசியோடு வரலாமா வரம் கொடுப்பவன் சிவனென்றால் வதம் செய்வது விஷ்ணுவா பாழடைந்த கோவிலில் இருப்பது அம்பாளுக்கு விருப்பமென்றால் நான் என்ன செய்வது தேர் நிலையை அடைய வடம் பிடித்தால் மட்டும் போதுமா மூலவர் பேச ஆரம்பித்ததால் […]
விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார் விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான் பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன் எமக்கென இருக்கிறது நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை