கவிதை

This entry is part 13 of 23 in the series 14 அக்டோபர் 2012

துர் சொப்பனம் நிஜத்தில் நிகழாதிருக்க கிணற்றுக்குள் கல்லைப்போடு.   புதிதாய் முளைக்க விழுந்த பல்லை கூரையில் விட்டெறி.   திடுக்கிட்ட நெஞ்சு திடமாய் மாற மூன்று முறை எச்சில் உமிழு.   கண்ணேறு மறைய காலனா சூடத்தை முற்றத்தில் கொழுத்து.   பாதை இருட்டு கடக்க மூச்சு விடாமல் இறை நாமம் சொல்லு.   தலைமுறை தோறும் உயிர்த்திருந்த உபதேசங்கள்…….   உதிர்ந்து சருகானது அடுக்குமாடி குடியிருப்புகள் வந்தபின்!   மு.கோபி சரபோஜி சிங்கப்பூர்.

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 41) நளினக் குறும்புகள்

This entry is part 12 of 23 in the series 14 அக்டோபர் 2012

  மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் […]

பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம

This entry is part 4 of 23 in the series 14 அக்டோபர் 2012

    சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம   எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் முடியாமல் போய் திடீரெனச் செத்துப் போனாள் பத்மினி   – தக்ஷிலா ஸ்வர்ணமாலி தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

கதையே கவிதையாய்! (9)

This entry is part 22 of 23 in the series 14 அக்டோபர் 2012

The Madman – when my sorrow was born – Khalil gibran   பவள சங்கரி   எம் துக்கம் செனித்த தருணமதில்…..-   (சோகத்தின் சுகம்)    எம் துக்கம் செனித்தபோது யான் அதைக் கவனமாக, பேணிப் பாதுகாத்தேன். மேலும்  பாசத்தோடு பராமரித்தேனதை.  மேலும் எம் துக்கம் மற்ற உயிரினங்களைப் போன்றே, செம்மலும், சோபிதமும், மற்றும் வியத்தகு பூரிப்புடனுமே வளர்ந்தது  நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்தோம். யானும் எம் துக்கமும், எங்களுக்கான […]

நடுங்கும் ஒற்றைப்பூமி

This entry is part 12 of 23 in the series 7 அக்டோபர் 2012

மணி.கணேசன் விளிம்பில் தொங்கிக் கொண்டிருந்த அபசுரங்களையெல்லாம் ஒருசேர்த்து உரத்தக் குரலில் உயிரைக் கீறும் யாரும் கேட்டிடாத முரட்டு மலைப்பாட்டாக முழங்கிக் கொண்டிருக்கும் கன்னங்கரியக் குயிற்குஞ்சைக் கூரிய தம் கொடும் அலகுகளால் கொத்திக் கொத்தித் தின்றுகொண்டிருந்தன ஆவேசப்பட்ட அண்டங்காக்கைகள் கூட்டமாக. அப்பாடலின் சுருதி முன்பைவிட பலமாக ஓங்காரித்ததில் அதுவரை நிச்சலனமாக நின்றிருந்த கொள்ளைப்போகும் கிரானைட் மலைகளின் அடையாளம் மழிக்கப்பட்டப் பசுங்காடுகள் புதிதாய்த் துளிர்த்த தளிர்களுடன் கந்தக மண்ணில் தம் இன்னுயிரை அடகுவைத்து வெடிமருந்துகளுக்குச் சாம்பலான பட்டாசுமனிதர்களின் கருத்தக் காற்றைப் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 40) காதலியைக் கவர்ந்த கள்ளன் !

This entry is part 10 of 23 in the series 7 அக்டோபர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]

ஏதோவொன்று

This entry is part 9 of 23 in the series 7 அக்டோபர் 2012

    வருவதையும் போவதையும் கூற முடியாத குளிரொன்றைப் போன்ற அது தென்படாதெனினும் உணரலாம் எம்மைச் சுற்றி இருப்பதை   அது எம்மைத் தூண்டும் கண்டதையும் காணாதது போல வாய் பொத்தி, விழிகள் மூடி ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்க   பசியின் போதும் குருதி பீறிடும் போதும் அடுத்தவன் செத்துக் கொண்டிருக்கும் போதும் அமைதியாக சடலங்களின் மேலால் பாய்ந்து நாம் வேலைக்குச் செல்லும் வரை   அது என்னது? எங்கிருந்து வந்தது?   – இஸுரு சாமர […]

கதையே கவிதையாய் (8)

This entry is part 8 of 23 in the series 7 அக்டோபர் 2012

The forerunner – Love – Khalil Gibran கலீல் ஜிப்ரானின் காதல் சிம்மம் நீரருந்த வருகிற அதே ஓடையிலிருந்தே அந்தக் குள்ளநரியும் மூஞ்சூறும் நீரருந்துகிறது என்கிறார்கள் அவர்கள். இறந்து கிடக்குமோர் உடலினுள்ளே கழுகும், ராஜாளியும் தத்தம் அலகினால் தோண்டும்போது, அச்சவத்தின் முன்னிலையில் இரண்டும் ஒன்றுக்கொன்று சமாதானமாகவே உள்ளதென்கிறார்கள் அவர்கள். ஓ காதல் என்ற இதன் செருக்குடைய கரம் எம் இச்சைகளுக்குக் கடிவாளமிட்டதன் மூலம் எம் பசியையும் நீர்வேட்கையையும் எழுப்பிவிட்டது, கண்ணியம் மற்றும் தற்பெருமைக்காக எம்முள் இருக்கும் […]

தேவதை

This entry is part 5 of 23 in the series 7 அக்டோபர் 2012

அமாவாசைக்கு அடுத்த நாள் காலை செடிகள் எதிலும் ஒரு மொட்டும் மிஞ்சவில்லை தெருவெங்கும் மொட்டுக்கள் இறைந்து கிடந்தன முற்றத்தில் திண்ணையில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சேலைகளும் தாவணிகளும் வெவ்வேறு வீட்டுக்கு இடம் மாறி இருந்தன உயரமான மரத்தில் சிறுவன் ஏறி எடுக்க பயந்து விட்டுவைத்த பட்டம் குளக்கரையில் கிடந்தது ஒரு வெள்ளை மேகம் வானவில்லின் ஒரு துண்டை மறைத்தும் காட்டியும் மகிழ்ந்து கொண்டிருந்தது அம்மன் கழுத்தில் நகைகள் இருக்க பூ மாலைகளை மட்டும் காணவில்லை கோயிலின் பிற […]

தாகூரின் கீதப் பாமாலை – 34 விடைபெறும் நேரத்தில் !

This entry is part 2 of 23 in the series 7 அக்டோபர் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இல்லா விடில் அஞ்சு வேன் நான், இன்னிசை மறக்க வேண்டு மென்று ! இல்லா விடில் அஞ்சு வேன் நான், அறுந்த நாண்கள் சிறக்கு மென்று ! இல்லா விடில் விழா கொண்டாடும்  தருணம் உறங்கி விழும் ! வினை விளை யாட்டிலும், புறக்கணிப்பிலும், புனித வேளை வீணாகி விடும்  ! இல்லா விட்டால் ஒரு கானமும் இல்லாமல் இருவர் கூடிய இன்பப் பொழுது […]