சுறாக்கள்

This entry is part 35 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  எதுவோ கொடுத்த தைரியத்தில் தொடங்கி விட்டேன்.   யோசித்த பிறகே புரிந்தது தொடங்க வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமே போதுமானதாக இருந்தது தொடங்குவதற்கு.   எல்லோரும் சுற்றி வளைத்தனர் என்ன செய்யப் போகிறேன் என்பதைப் பார்க்க   அவர்களின் கேள்விப் பார்வைகள் மெள்ள மெள்ள மீன் குஞ்சுகளாய் நெளியத் தொடங்க எல்லாவற்றையும் விழுங்கியபடி முன்னேறின எனது எத்தனிப்பு சுறாக்கள். –    நிஷாந்தன்

அவர்கள்……

This entry is part 32 of 41 in the series 23 செப்டம்பர் 2012

– மா.சித்திவினாயகம் – இன்னமும் மணற் கிடங்குகளிலும், சுடு சாம்பலுள்ளும், காலைக்குத்தும் கற்பார்மீதும் என் வாழ்வு சந்தோசமாயிருக்கிறது.   வந்துவிழுந்த செல் துண்டுகளால் என்னைவிட்டு என் உயிர் போகாத மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாடுகிறது.   நான் நடந்த பாதை யெங்கும் என் இரத்தத்தைச் சந்தோசமாகப் பீச்சியடிக்கிறேன்.   வரும் சந்ததி, என் நிறமூர்த்த அலகுகளை இந்த இரத்தத் திவலைகளிலிருந்து பின்னிக்கொள்ளட்டும்.   நந்தவனமுள்ள பூஞ்சோலையில் சுதந்திர மலர் பூத்திருக்கும் என்று பூப்பறிக்க முற்பட்டவரின் சதைகள் பிய்த்துப் பிய்த்து நந்திக்கடலெங்கும் வீசிக்கிடக்கிறது.   எடுத்து மாலை தொடுங்கள் உலகக் கனவான்களே!   சாட்சியைத் தேடியும்… காட்சியைத் தேடியும்…. ஓடுவதாகச் சொல்பவர்கள் விருந்து சாப்பிடுகிறார்கள். தங்களின் விறைத்த குறிகளை எம்முள் புதைக்கத் துடிக்கிற வீராப்பில்……     நான் இன்னமும்… மணிக்கூட்டுமுள்ளைப் போல் இதே பாழும் மணல் வெளியைச் சுற்றி ஓடிக் கொண்டிருக்கிறேன்.   என்ன மாறுதலுக்கு  காத்திருக்கிறேன்- என்றோ நான் இல்லாவிட்டால் இங்கு என்ன மாறுதல் நடந்து விடப்போகிறதென்றோ எதுவும் புரியவில்லை.   இந்த எலும்புக்கூடுகளால் இனி இங்கு எதை எழுதுதல் முடியுமெனக் காலம்காலமாய் நானிருந்த மண்ணில் மறுபடி என்னைக் குடியேற்றுகின்றார்கள்.   இதுவே யதார்த்தம் போல் எங்கும் மௌனம். […]

விசரி

This entry is part 27 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஆதி பார்த்தீபன்  நாளாக்கிய நாளொன்றில் அவள் வந்திருந்தாள் நாளான புண்ணிடமும்-நசுக்கப்பட்ட சீழிடமும் கதை பேசிக்கொண்டிருந்தாள் சிக்கிய முடிவழி-திக்கிய பேனினத்தை சிக்கெடுத்து ஓடவிட்டாள் அவள் காதலில் தோற்று பைத்தியமானவளோ..!! விரல்களை நளினம் செய்து காற்றுடன் காதல் பேசினாள் அவள் தன் உரப்புகளை மீட்கத் தொடங்கியிருந்தாள் ஆண்கள் பற்றிய வசைகளுடனும் ஒன்றிரண்டு காமக் கூச்சலுடனும் ..!! மேலாடை களைவதற்காய் மிகைப்பட்ட முயற்சியொன்றை எடுத்துக்கொண்டாள் களைந்த ஆடைகட்கிடையில் கறைபடிந்த அந்த செய்தியை புரட்டிக்கொண்டிருந்தாள் கவர்ச்சி விழுங்கும் உலகத்திடம்…!! thitthu13@gmail.com

கவிதை

This entry is part 26 of 41 in the series 23 செப்டம்பர் 2012

மு.கோபி சரபோஜி வெட்கமின்றி நீரையெல்லாம் அம்மணத்தால் அலசி கழுவும் சாண் பிள்ளைகள்……..   அம்மாவின் சேலைதுணியை வலையாய் சுமந்து கெரண்டைக்கால் நீரில் தாவித்திரியும் கருவாச்சி தேவதைகள்…..   காற்று கூட விதேசியாய் வேண்டாமென கரையில் வந்துறங்கும் தலைமுறை கண்டவர்கள்….   இரை வரத்துக்காக ஒரு காலூன்றி மறுகால் மடக்கி தவம் கிடக்கும் வள்ளுவ கொக்குகள்…..   புறம் சென்று பொழுது சாய அகம் திரும்புகையில் தன்னழகு காண கரை இறங்கும் வாயில்லா ஜீவன்கள்…   கரை மீது […]

தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் !

This entry is part 21 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தாகூரின் கீதப் பாமாலை – 32 என் வாழ்வின் கழுத்தாரம் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஒவ்வோர் நாளும் கிடைக்கும் ஏராள மான வெகுமதிகளில் சிறிதளவு பெறுவேன் சில நாட்களில்,  சில வேளைகளில். வசந்தத் தென்றலை உசுப்பிடும் அச்சிறு துண்டும் ! நாட்கள் நகர்ந்தன ஒன்றுக்குப் பின் ஒன்றாய்,  மாந்தர் வாசலுக்கு வெளியே வருவதும் போவதும் போல ! வழிப் பாதைப் போக்கில் அவர்கள் வந்து மிதப்பது போல் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என் கலைக் குரு

This entry is part 20 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 38) என்  கலைக் குரு மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. […]

பாவலர்கள் (கதையே கவிதையாய்)

This entry is part 13 of 41 in the series 23 செப்டம்பர் 2012

    நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்” என்றார். இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை […]

சினேகிதனொருவன்

This entry is part 12 of 41 in the series 23 செப்டம்பர் 2012

  சிநேகிதனொருவன் இருக்கிறான் எனக்கு ஒரு பயனுமற்ற பொறுக்கியென அனேகர் கூறும்படியான   அவ்வப்போது நள்ளிரவுகளில் பயங்கரமான கனவொன்றைப் போல உறக்கத்தைச் சிதைத்தபடி வருவான் அவன் எனதறைக்கு   வடையொன்றை, கடலைச் சுருளொன்றை எனது கையில் திணிக்குமவன் வரண்ட உதடுகளை விரித்து குழந்தைப் புன்னகையை எழுப்புவான்   உரையாடல்களை உடைக்கும் சொற்களோடு சிவந்த விழிகளைச் சிறிதாக்கி புரியாதவற்றை வினவுவான் எனது தோள்களைப் பிடித்து பதிலொன்றைக் கேட்டு இரு விழிகளையும் ஊடுருவுவான்   அத்தோடு எனது தோள்மீது அவனது […]

இரட்டுற மொழிதல்

This entry is part 9 of 41 in the series 23 செப்டம்பர் 2012

       — ரமணி     கோபமோ தாபமோ காமமோ காதலோ எதையும் வாய்ச் சொல்லாய்ச் சொல்லாது கவிதைக்குள் பதுக்கிவிடலாம்.   படித்துப் பார்த்தபின் கோபமும் தாபமும் காமமும் காதலும் இரட்டிப்பானது தனக்கென்று புலம்புவாள் மனைவி   — ரமணி

விடுதலையை வரைதல்

This entry is part 4 of 41 in the series 23 செப்டம்பர் 2012

க. சோதிதாசன் அவள் ஓவியம் வரைபவள் கண்ணீர்க் கோடுகளை நன்றாக கீறுவாள் தனிமையை தீட்டி இருக்கிறாள் அடக்கு முறையை சித்தரிக்க முடிந்திருக்கிறதுதுன்பத்தையும் சோர்வையும் சொல்பவை பல ஓவியங்கள் பலவீனத்தை படமாக்கி இருக்கிறாள் வீடும் பணிச்செயல்களும் உயிர்ப்பானவையாக இருக்கும் இருளை இணைக்க முடிந்திருக்கிறது ஆனால் விடுதலையையும் ஒளியையும் இறுதி வரை அவளால் வரைய முடிந்திருக்கவில்லை.. க. சோதிதாசன் யாழ்ப்பாணம் இலங்கை. drsothithas@gmail.com