மலஜலம் கழிக்க வயல் வெளிப்பக்கமும் ஊர் ஒதுக்குப் புறமும் ஜனங்கள் போகும் ஊர். கங்குலில் தெருவோரம் உட்கார்ந்து எழும் அடையாளம் தெரியாத உருவங்கள். என் பால்ய காலத்தில் பழகிய வழி ஊரில் பள்ளிக்கூடம் போய் வரும் வழி. போய் வரும் வழியோரமெல்லாம் மலங்கள் நிறைந்து கிடக்கும். தினம் தினம் பள்ளி செல்லும் போது மலத்துப்புரவு செய்யும் ஒரு பெருந் துயரப் பெண்ணைக் கண்டு போவதுண்டு. என் அம்மா மோர் விற்கிறாள் இவள் மலம் அள்ளுகிறாள்- இப்படித்தான் சின்னப்பயலான […]
துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் சொன்னார் ‘செடியைக் குழந்தையாய் வளர்க்கிறாய் சிறந்த தந்தையாவாய் நீ’ பத்தாம்வகுப்பில் வாத்தியார் கேட்டார் ‘பார்த்ததில் ரசித்தது எது?’ ‘பூவோடும் பிஞ்சோடும் கொஞ்சும் கத்தரிச் செடி ‘ என்றேன் ‘நீ ஒரு கவிஞனாய் வருவாய்’ என்றார் அப்பாவுக்கு அரசாங்க வேலை புதுப்புது ஊர்கள் புதுப்புது வீடுகள் எல்லாம் அடுக்கு மாடி தொட்டியில் வைத்தேன் கத்தரி காலை […]
ஆறுமுகனேரியின் அருந்தமிழச் செல்வ! அறிவியல் தமிழின் “கணினியன் பூங்குன்றன்” நீ எளிதாய் இனிதாய் நுட்பங்கள் ஆயிரம் விளக்கிய அற்புதம் மறக்க இயலுமோ? அகத்தியன் தமிழோ புராணமாய் போனது. அகப்பட்ட தமிழோ தடம் மறைந்து போனது அறு வகை மதமும் நால் வகைக் கூச்சலும் ஆழப் புதைத்தபின் தமிழ் என்ன மிச்சம்? கணினித் தமிழ் இங்கு கண் திறந்த பின்னே எட்டாத அறிவும் இங்கு எட்டுத்தொகை ஆனது. எத்தனை எத்தனை நூல்கள் எழுதி எழுதி குவித்தாய்! இணையத்தமிழ் […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பிரிவுக் கவலை இனிப்பாய் மாறலாம் தேனான இந்த மாலையில் ! கானம் ஆழ்மனதில் எழலாம் சோக மோடு நெடிய வேதனைக்குள் உன்னைக் காணாத இழப்பு உண்டாக்கும் துன்பத் தவிப்பு ! முழுமதி பூத்த இரவு நேரத்தில் எழுந்திடும் மோகம் ! கனிவான கானல் நீர் கண்களில் மாய வித்தை செய்யும். தூரத்தி லிருந்து காற்று நறுமணப் படர்வைத் தூக்கி வரும். என் இதயம் பாதை […]
ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பிடிப்பது போல மெல்லப் பின்பக்கம் போய் அடிக்கமுடியவில்லை. ஈயைப் பிடிக்கும் உள்ளங்கைக் குழித்த சாகசமும் பலன் தரவில்லை. சாட்டையடித்து மெய்வருத்திக்கொள்ளும் கழைக்கூத்தாடி போல கைகளால்மாறி மாறி அடித்துக்கொண்டாலும் தப்பித்து விடுகின்றன கொசுக்கள். சரி, கடித்துவிட்டுப்போகட்டும் என இயலாமையில் சோர்ந்து கண்ணயர்ந்த பின், ரத்தம் குடித்த போதையில் நகர முடியாது நான் புரண்டு படுத்ததில் நசுங்கி நேர்ந்த அவற்றின் மரணம் பெயர் தெரியாத குட்டிச்சிகப்புப் பூக்களாய்ச் சிதறிக்கிடக்கும் மறு நாள் காலையில் என் படுக்கை விரிப்பில். […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மீண்டும் யாரென் கதவைத் தட்டுவது ? நேரம் கடந்த வேளையில் யார் வந்து நிற்பது ? யாரைத் தேடி வந்திருப்பது ? நெடு நாட்களுக்கு முன்பு ஒருநாள் வசந்த காலத்தில் வாலிப மங்கை ஒருத்தி வந்தாள் என்னருகில். வருத்திய வாழ்வைப் பொங்க வைத்தாள் வரை யில்லாக் களிப்புகளில் ! இன்றிரவு மழை பெய்கிறது இருள் அடர்ந்த இந்தப் பகுதியில் இரைச்ச லான மழை ! […]
மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]
பொருள் வழிப்பிரிந்ததினால் சேர்ந்து களிக்காமல் மகன் கணக்கில் இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம் ஈடு செய்து கொண்டிருக்கிறார் முதுமையில், பேரனுடன் விளையாடும் தாத்தா. மேலும் கடனாய் முத்தங்களை வாங்கியபடி. லேசான மனங்களைப்போல் உயரே பறக்கிறது காற்றாடி வாலை வீசி… வீசி.
காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் – எம்.ரிஷான் ஷெரீப் mrishanshareef@gmail.com
-வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் […]