புதிய கட்டளைகளின் பட்டியல்..

This entry is part 36 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு வரையறை வைத்துக் கொள்ளமுடியவில்லை உனது எல்லை எதுவென்ற வரைபடத்தை எனது அறைச் சுவரில் ஒட்டி வைக்கிறாய் நினைவுப் படுத்திக் கொள்ளவோ அல்லது ஞாபகத்தில் இருத்திக் கொள்ளவோ புதிய கட்டளைகளின் பட்டியலொன்றை வாசலில் நின்றபடி சத்தமிட்டு வாசித்துச் செல்கிறாய் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நானும் பின்னிக் கொண்டிருந்த வலையை நிறுத்திவிட்டு சிலந்தியும் வாய் மூடிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் ******* –இளங்கோ

பிரேதம்

This entry is part 34 of 41 in the series 10 ஜூன் 2012

  புத்தகம் மூடியே கிடந்தது மேஜையில் காபி ஆறிப்போயிருந்தது ஆஸ்ட்ரேவில் சாம்பல் இல்லை இன்னும் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது அவளுக்கு உற்ற துணையாய் இருப்பேன் என்றேன் ஆனால் இதற்கு துணை வர முடியவில்லை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள மருத்துவரை அழைக்கலாமா என்று யோசனை எழுந்தது நான் இன்னும் உயிருடன் இருப்பது குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியது எனது ஆன்மா பாதாள அறையில் சிறைபட்டுவிட்டது மீண்டும் அறை கதவை திறந்து உள்ளே சென்றேன் இத்தனை நாட்களாக வியாதி […]

கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்

This entry is part 33 of 41 in the series 10 ஜூன் 2012

குருசு.சாக்ரடீஸ் பிரார்த்தனைகூடத்தின் பாடல் அலையில் போன்சாய்களாய் உருமாறும் கன்னியாஸ்திரிகள் ரோமபுரியின் கனவில் வார்த்தெடுக்கப்பட்ட போன்சாய்களின் பாடல் திணறும் சுவாசத்தில் உயிர்க்கின்றன பறவைகள் போன்சாய்கள் முணுமுணுக்கும் வெதுவெதுப்பான காலையை வரவேற்க காத்திருக்கின்றன போக்கிடமற்ற பறவைகள் பிரார்த்தனைக்கான பாடல்கள் கை தவறிய நாணயத்தைப் போல கூடத்தில் உருள்கின்றன வெளியேறும் வழியற்ற உலகத்தின் அறைக்குள் தண்ணீர் சிற்பங்களை செதுக்கும் போன்சாய்கள் திராட்சை ரசத்தில் கரைக்கின்றன ஹிருதயங்களை பெருமூச்சில் கருத்தரிக்கின்றன பூக்கின்றன வண்ணத்துபூச்சிகள் அமர இலை விரிக்கின்றன கனவுகளை குவளையில் பருக தருகின்றன […]

தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

This entry is part 29 of 41 in the series 10 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேற்றுக் கடந்த இரவை நான் மீட்டு வருவ தெப்படி ? வீணாய் விழிகள் ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ? இந்த அங்கியை அணிவாய் என் நண்பனே ! இந்தப் பூமாலை பாரமாய்த் தெரியும் ! ஏகாந்தியாய்க் காத்திருக்கேன் படுக்கையில், இம்மாதிரி இரவு கடந்து செல்லட்டும் ! நான் வந்திப்பது யமுனா நதிக் கரைக்கு நண்பனை தேடி ! இன்னும் வந்திலன் அவன் ! […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)

This entry is part 26 of 41 in the series 10 ஜூன் 2012

++++++++++++++++++++++ காதலின் முணுமுணுப்பு ++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

அன்பின் தீக்கொடி

This entry is part 24 of 41 in the series 10 ஜூன் 2012

மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்-நீயோ மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை  சிபாரிசு செய்கிறாய் இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில்  நசுங்கி வழிகிறது இரவு புயல் தின்ற  முதிர்ந்த நெற்கதிரென உன்  வயலெங்கும் உதிரும் எனது இருப்பு … செ.சுஜாதா, பெங்களூர்.

ஜுமானா ஜுனைட் கவிதைகள்

This entry is part 23 of 41 in the series 10 ஜூன் 2012

1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…?  யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ இல்லை கேட்டிடும் இதயமெல்லாம் சென்று குடியிருந்திடுமோ… ஆறு குளம் மலைகளைத் தான் அடைந்திடுமா அண்டவெளி தாண்டி வார்த்தை சென்றிடுமா… இந்த வளி மண்டலத்தை நிரப்பிடுமா… இதுகாறும் காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..? […]

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 18 of 41 in the series 10 ஜூன் 2012

((1) அட‌!வான‌த்தின் அரைஞாண் க‌யிறு அறுந்து விழுந்தாலும் அழ‌கு தான். “மின்ன‌ல்” (2) ஒலி தீண்டிய‌தில் சுருண்டு விழுந்தேன். க‌ண்ணாடி விரிய‌ன்களா அவை? “க‌ண்ணாடி வ‌ளைய‌ல்க‌ள்” (3) விஞ்ஞானிக‌ள் கோமாளிகள். நீ குலுங்கிய‌தில் என் இத‌ய‌ம் அதிர்ந்த‌தை பூக‌ம்ப‌ம் என்கிறார்க‌ள். “கொலுசுக‌ள்” (4) காதலின் வெற்றி என்றாலே காதலின் தோல்வியும் அது தான். “ரோஜாவின் முள்” (5) காதலில் தோல்வியுற்ற தண்ணீர்த்துளி கீழே விழுந்து சிதறி.. ஏழுவர்ண ரத்தம். “குற்றாலம்

ருத்ராவின் குறும்பாக்கள்

This entry is part 17 of 41 in the series 10 ஜூன் 2012

ஏழுக‌ண்க‌ளையும் பொத்தி பொத்தி இனிய ஓசைகளின் க‌ண்ணாமூச்சி. நாத‌ஸ்வ‌ர‌ம். எழுப‌து தாண்டி ந‌ரைத்து விட்டது. என்ன அர்த்தம் அது? “மாங்க‌ல்ய‌ம் த‌ந்து நானே” அர்ச்ச‌னை கேட்டு அலுத்து சிவ‌னும் த‌ட்டு ஏந்தி வ‌ரிசையில் நின்றான். குருக்கள் கேட்டார்”என்ன‌ கோத்ர‌ம்?” கால் வைத்து நடக்க‌ ம‌ன‌மில்லை. ந‌சுங்கிப்போய்விடாதா இத‌ய‌ம்? அவ‌ள் போட‌ கோல‌ம். ப‌வுர்ண‌மி மூன்றாம் பிறைக‌ளை ருசி பார்த்த‌து. அவ‌ள் ந‌க‌ம் க‌டித்தாள். ============================== ============ருத்ரா

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

This entry is part 8 of 41 in the series 10 ஜூன் 2012

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில் அச்சமுற்றிருந்தேன் நான் மின்சாரம் தடைப்பட்டெங்கும் அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன் உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு உன் மீதான எனது சினங்களும் ஆற்றாமைகளும் வெறுப்பும் விலகியோடிப் […]