காத்திருப்பு

This entry is part 19 of 28 in the series 3 ஜூன் 2012

குறிக்கப்பட்ட ஒரு நாளை நோக்கிய பயணத்தில் காலத்தின் சுமையில் கனம் கூடிப் போவதும் இருப்பது போலவும் கிடைக்காமல் போகாதெனவும் இல்லாமல் இருக்காதெனவும் கைக்கெட்டிவிட்டதாகவு மென கணிப்பில் காலத்தின் இருப்பில் கவனம் கூடிப் போவதுவும் இதுவும் கடந்து போகுமென இதயம் கிடந்து துடித்தாலும் காலத்தின் கடப்பில் பிடி நழுவிப் போவதுவும் இதோ இந்த நொடியில் தீர்ந்துவிடப் போகிறது அடுத்தது நாம்தான் என்கிற அனுமானங்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் சுமையேற்றி வதைப்பதுவும் என நிகழ்காலம் நிழல்போலத் தெளிவின்றிப் போனதால் சுவாசிக்கக்கூட பிரயாசைப் […]

நச்சுச் சொல்

This entry is part 13 of 28 in the series 3 ஜூன் 2012

தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை நல்ல பேச்சில் ஒரு நச்சுச் சொல் சுற்றமே இல்லை வெள்ளத்தில் ஓடம் நல்ல சொல் ஓடத்துக்குள் வெள்ளம் நச்சுச் சொல் அமீதாம்மாள்

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 22)

This entry is part 10 of 28 in the series 3 ஜூன் 2012

++++++++++++++++++++++++++++++++ காதல் சமப்படுத்தும் இதயங்களை ++++++++++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் […]

தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்

This entry is part 9 of 28 in the series 3 ஜூன் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தீவிர வலிபோல் தாக்கியது என் ஆத்மாவை உன் கீதத்தின் இசை ! என் இதயம் எப்படித் துடித்தது என்று அறியும் இதயம் மட்டுமே ! பற்றிக் கொண்டு உன்னை பகல் இரவாய்க் காத்து வருகிறேன் உற்று உன் முகம் நோக்கி முற்றுகை செய்யும் என் விழிகள் ! உனக்காகத் தான் செய்கிறேன் உந்தும் தாகம் அதிகம் வழிபட்டுச் செய்யும் அவசியம் பெரு மகிழ்ச்சியில் […]

தடயம்

This entry is part 4 of 28 in the series 3 ஜூன் 2012

    மழை ஈரத்தில் பூமி பதிந்துகொண்ட பாத அடையாளங்கள் போல எல்லா நினைவுகளும் காலத்தில் தேங்கி நிற்கவில்லை.   ஜெட் உமிழ்ந்துவிட்டுச் சென்ற உறைந்த வெள்ளைப் புகை உருவாக்கின ஒற்றையடிப்பாதையை சூரியன் உருகிக் கரைத்துவிடுவதுபோல   என் வாழ்க்கை வனாந்தரத்தின் ப்ரத்யேக ஸ்வரங்களைத் தொடுத்து விடுமுன்னர் கலைத்துவிடுகிறது காலம்.   கர்ப்ப வாசம் தேடி இப்போது அலையும் மனமும் விட்டுச் செல்லவில்லை எந்தச் சுவட்டையும்.     —  ரமணி

யாதுமாகி …

This entry is part 19 of 33 in the series 27 மே 2012

நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் […]

இரு கவிதைகள்

This entry is part 18 of 33 in the series 27 மே 2012

(1) கதவு சாமரமாய் வீசும் ஒருக்களித்திருந்த கதவு மெல்ல மெல்லத் திறக்கும். யாரும் உள்ளே அடியெடுத்து வைக்கவில்லை. காற்று திறந்திருக்குமோ? காற்றாடை உடுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாது யாராவது திறக்க முடியுமோ? எழுந்து சென்று பார்த்து விடலாமா? மலர்ந்து கொண்டிருக்கும் வேளையில் மலரைப் பறிப்பதா? மனம் மறுதலிக்கும். கதவுக்கு முன் எந்தக் கதிரவன் உதயமாகி விட முடியும்? கண்கள் பரவசமாகிக் காத்திருக்கும். கதவு முன் முன்பின் தெரியாத ஒரு சின்னக் குழந்தை. தன் ”குஞ்சு மணியைப்” பிஞ்சுக் […]

ஞான ஒளி (கலீல் கிப்ரான்)

This entry is part 16 of 33 in the series 27 மே 2012

இதமான அமைதியின் ஊடே உம் இதயம் உணரும் இரகசியமாய் பகல், இரவுகளின் நீட்சி. ஆயினும் உம் செவிப்பறையின் ஏக்கமாய் உம் இதயஞான, கீதத்தின் ஓசைகள். சதாசர்வமும் உம் சிந்தையை நிறைத்திருக்கும் எண்ண அலைகள் இனிய சொற்களாய் வடிவுறும் கலையும் அறியக்கூடுமே நீவிர் உம் கனவுகளின் நிர்வாணமதை உம்முடைய விரல்கள் தீண்டும் இன்பம் பெறட்டும். எஞ்ஞான்றும் நன்றே செய்மினே. நீவிர் உம்மின் ஆன்மாவினூடே புதைந்து கிடக்கும் நன்மைகள் எழுச்சியாய் விரையட்டும் முணங்குதலாய்; சாகரம் நோக்கி. கண்காணா ஆழத்தில் புதையுண்டு […]

என் ம‌ண‌ல் குவிய‌ல்…

This entry is part 14 of 33 in the series 27 மே 2012

நான் மணல் குவித்து வைத்திருந்தேன். நேற்று அந்த மெரீனா பீச்சில். பூநுரைகள் அடிக்கடி நக்கிக்கொண்டு போகட்டும் என்று. அதைதேடி என்கால்கள் என்னை அங்கே இழுத்துச்சென்றன. அது அங்கேயே இருக்குமா? இல்லை கரைந்திருக்குமா? வெகு நேரம் வரை தேடினேன். அக்கினிக்குஞ்சு ஒன்றை ஆங்கொரு பொந்திடை வைத்து தேடியது போல் தேடினேன். கடல் என்ன பஞ்சுக்காடா பற்றிக்கொள்வதற்கு. மணல் குவித்து வைத்தது மட்டும் மூளும் என் மனத்தீ தான். குமிழிகள் மோதி மோதி தின்றிருக்கலாம். உடைந்த கிளஞ்சல்கள். கடல் பாசிகள். […]

உட்சுவரின் மௌன நிழல்…

This entry is part 13 of 33 in the series 27 மே 2012

* இரவின் துளி ஈரம் பரவும் இவ்வறையெங்கும் கணுக்கால் தொட்டு நீளும் யாமத்தின் முதல் கீற்றை ஒற்றியெடுக்கும் உதடுகள் உச்சரிக்க மறுக்கின்றன முந்தையப் பகலை அதன் கானலை நினைவில் மிதக்கும் முகங்களின் நெளியுணர்ச்சிகள் குமிழ் விட்டு வெடிக்கிறது மொழியற்ற மொழியொன்றின் ஆழத்தில் கூரையின் உட்சுவர் சுமக்கிறது கரிய நிழலின் மௌனத்தை ******* — இளங்கோ