மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா களிப்புப் பூங்காவில் உலாவி வழி தவறிப் போன ஒரு குழம்பிய பயணி நீ ! அங்கே போகிறாய் ! அந்தோ எங்குதான் போகி றாயோ ? உன்னை நீயே சுருட்டித் தூக்கிச் செல்கிறாய் பித்துடன் கண் மூடிய வண்ணம் ஆவேசம் மிகுந்து ! அந்தோ அப்படி நீ வேண்டி விரும்பும் அந்த வேற்று மனிதன் யார் ? எங்கே உன்னிதயம் அலைந்து திரிவது ? […]
எண்ணங்களின் கனத்தில் உடைந்து விழுந்துவிட்டேனா என்று தெரியவில்லை. இல்லை மௌனம்தான் பெருஞ்சுமையாய் அழுத்திற்றோ என்னவோ! ரயில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல என் எண்ணங்களும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்டு காயப்பட்டுக் கிடக்கிறது. எனினும் தூரத்துச் சந்திரனோடு பயணித்து என் விடியலைக் கண்டுவிடலாம் என்ற என் பால்வீதிக் கனவைக் கவிதையாக்கிக் கொடுத்தேன். நம்பிக்கைகள் அடர்ந்த காட்டில் கடவுளை முன்னிறுத்தி நான் உலகத்திற்கான கனவு விடியலை என் வாழ்க்கையின் பாடலாகக் காட்டிவிட்டதாகப் பெருமை பேசுகிறார்கள்! […]
நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும் அவரையும் சொகுசாய்ப் படர்ந்தன முளைவிடும்போதே நீ விரித்த பந்தலில் கத்தரிப் பூச்சிகள் காணாமல் போயின நீ தூவிய சாம்பலில் வாடிக்கைக் காகங்கள் கன்றோடு பசு குஞ்சுகளோடு கோழிகள் இவைகளோடு நானும் பசியாறாமல் நீ பசி உணர்ந்த தில்லை அன்று அடைமழை நம் […]
-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி… ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது… அச்சம்,எரிச்சல், ஆவல்…. ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்…முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ, அதிகாரியோ, திணறடித்துக் கொண்டிருக்கலாம்… மரணச் சடங்கோ, விபத்தோ,கூட்டமோ, தவிர்க்கவியலா தவிர்ப்பாயிருக்கலாம்! தவறவிட்ட உறக்கம் நேரங்காலமின்றி வாய்த்திருக்கலாம்.-
அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க……. பதமாய் பகட்டாய் பரிதவிப்பாய் காத்திருந்த கருகூலம் கண்டேன் மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும் கண்டறியாதனக் கண்டேன் என கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய் கன்னியவளை கருத்தாய்க் கவரவே காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள் ஆசுவாசமாய் சூல் கொண்டது சூல் […]
நீலவானம் இலக்கு இருக்கிறதா செல்லும் மேகத்திற்கு பழுத்த இலை உதிர்கிறது இனி அவை எங்கெங்கு பயணப்பட வேண்டியிருக்குமோ அலை மெல்ல கிசுகிசுத்தது கரையோ மறுதலித்தது காற்று வேகமெடுத்தது பூக்கள் ராஜபாட்டை விரித்தது பறவைகள் கூட்டம் மேற்கு நோக்கி பறந்தது வானம் சூரியனுக்கு விடை கொடுத்தது விருட்சத்தின் நிழலில் விழுந்த விதை முளைவிடுமா மணி காட்டும் கடிகாரத்தில் நொடி முள்ளுக்கு ஓய்வு இல்லை மனிதன் மனிதனாக இருந்தால் கடவுளின் இருப்பு கேள்விக்குறியாகாதா மரணப் புதிருக்கு விடை சொல்லுபவர்கள் யார்?
வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க நிறத்தில் மின்னும் ஒரு மிடறு நீர் உள்ளே சென்றவுடன் உடல் ஆசுவாசம் கொள்ளும் மழையின் ரூபம் விழும் இடத்தைப் பொறுத்து மாறும் ருசி கண்ட பூனை நடுநிசியில் பாத்திரத்தை உருட்டும்.
ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் தான் வாடகைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிடக்கிறது பாலிஷ் போட வேண்டும் என்றான். கடிதம் எழுதினால் ஆபாசம் என்பார்களே. அதனால் கவிதை தொகுதி வெளியிட்டேன். இப்போது எல்லோரும் உன்னைத்தான் வாசித்து வாசித்து மேய்கிறார்கள். இன்டர்னெட் பரிணாமத்தில் இப்போது செவியில் தான் இதயம். செல் விட்டு செல் தாவும் வண்டுகளுக்கும் பஞ்சமில்லை. உன் “ஐ லவு யூ […]
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும். நாணம் கலைத்த கடலெனும் கன்னி முத்தம் கொடுத்து மூடிக்கொள்ள அந்தி படர்ந்து பந்தி விரிக்கும்…இது புருசுச்சுவடுகளின் புதுக்கவிதைகள் உன்மத்தம் மோனம் ஆகி உயிரைக்குழைத்தது அக்ரிலிக் வண்ணம். அடிமன உடலை வருடிக்கொடுக்கும் அன்னச்சிறகு விரிந்து பரந்து காட்சிகள் விரிக்கும். அதன் இடுக்குகளின் கண்கள் […]
உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள் கரைசேர்க்கும் மணற்குவியலதையும் சேர்த்தே சிதைக்கும் உம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல். உண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது. ஆயினும், கடலென பரந்து விரிந்த வாழ்க்கையற்றவருக்கு மாந்தர் உருவாக்கிய அச்சட்டம் மட்டும் மணற்கோட்டையாய் இல்லாமல் போனாலும்தான் என்ன, ஆயினும், உறுதிமிக்க பாறையாக இருக்கக்கூடிய வாழ்க்கையின்மீது […]