தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?

This entry is part 20 of 44 in the series 22 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் காதல் எதற்கு ? உன் இதயத்தை அவளுக் களித்து அவளது இதயத்தை நீ பறிக்கப் போவது எத்தகை அறிவீனம் ? ரத்தத்தில் வேகும் இச்சை உன் பித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர பாலைவனத்தைச் சுற்றி நானும் வட்டமிட்டு வருவதா ? ஏனிந்த வீணான காதல் சுயமதிப்பைத் தன் வயப் படுத்தி வைத்துள்ள வனுக்கு ? […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்

This entry is part 18 of 44 in the series 22 ஏப்ரல் 2012

+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் […]

பிறந்தாள் ஒரு பெண்

This entry is part 17 of 44 in the series 22 ஏப்ரல் 2012

வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி திரும்பி வரக் கண்டு கூட்டத்தில் நிசப்தம். அடுத்து அழுகுரல். பின் ஓர் ஓலம் மீண்டும் பிறந்தது ஒரு பெண் குழந்தை பெண்ணுரிமை பெண் சமத்துவம் பேசலாம் வீரமாய் பிறந்ததும் திறக்கின்றன அடைத்து மூட முடியாத கவலையின் கதவுகள் கறந்து காட்டியது காராம்பசு […]

சின்ன மகள் கேள்விகள்

This entry is part 13 of 44 in the series 22 ஏப்ரல் 2012

இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம் போகணும் தூங்கு’ என்பேன் ’ குருவிகள் பள்ளிக்கூடம் போவதில்லையே’ என்பாள். ‘நீ குருவியில்லையே பாப்பா’ என்பேன் ’பள்ளிக்கூடம் போன குருவிகள் தாம் பாப்பாக்களாச்சா?’ என்று இன்னும் கேட்பாள் சின்னமகள். (2) சின்ன மகளுக்குக் கதை சொல்லி ’அம்மா கத சொல்லு’- சின்ன […]

கையோடு களிமண்..!

This entry is part 7 of 44 in the series 22 ஏப்ரல் 2012

பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்….! ————————————– களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு….! ————————————— தோண்டத் தோண்ட தீரவேயில்லை…. களிமண்..! —————————————- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்…! —————————————— களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான் .. பிரம்மன்..! ——————————————– சுட்டதில் எந்தப் பானை.. நல்லப் பானை..! ———————————————- மண் ஒன்றுதான்.. வடிவங்கள் மட்டும்.. வேறு வேறு..! ———————————————- குயவன் செய்த பானைகள்…. அனைத்தும் காலி தான்..! ————————————————– குயவனின் பொன்னாடை… களிமண்ணாடை..! —————————————————— நினைத்ததைச் முடிப்பவன்… குயவன்..! […]

கவிதை

This entry is part 39 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ஆயிரம் அர்த்தம் தனிமையை அருந்தும் போது மனம் மனிதர்களைத் தேடுகிறது வாடிய பூக்களைக் கண்டு மொட்டுக்கள் சிரித்தன பழுத்த இலை மரத்தினிடையேயான பிணைப்பை முறித்துக் கொண்டது கடல் மானுட இனத்திற்கு முடிவுரை எழுதப் பார்க்கின்றது ஓர் மழை நாளில் தான் என் முதல் முத்தம் பரிமாறப்பட்டது வெறுமையை நிவர்த்தி செய்யும் குழந்தையின் மழலை முகில் காற்றுக்கு எதிராக பயணிக்க பிரயத்தனப்பட்டது பிரியும் தருணங்களில் அழுகையை விட மெளனமே சிறந்தது. ———- மச்சம் ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு […]

சருகாய் இரு

This entry is part 38 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உதிர்ந்துப்போன பிறகும் !! தன்னுடன் வைத்திருக்கும் சத்தமெனும் சலசலப்பை சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்!! தன் கண பரிணாமத்தை இலேசாக மாற்றி இருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! கிடக்கவும் ,பறக்கவும் காற்றுடன் சேர்ந்து சுழலவும் கற்றுக்கொண்டிருக்கும் சருகுகள், உதிர்ந்துப்போன பிறகும்! உக்கிரமாய் பற்றிக்கொள்ளும் தீயையும்,ஈரத்தையும் இயல்பை பெற்றுவிடும் சருகுகள், பச்சையாய் இருந்தபோது இல்லாத அத்தனை செளகரியங்களும் சருகானதும் உதிர்ந்த பிறகு தனித்தோ தாடி , வளர்த்தோ திரிவதில்லை சருகுகள், முழுதும் மாறிப்போகிறது சருகிடம், மனிதன் உதிர்வதில்லை? உதிர்ந்த ஒன்றாய் […]

என் சுற்றுப்பயணங்கள்

This entry is part 37 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மரத்தின் இலைகள் மஞ்சளும் சிவப்புமாய் நிறம்மாறிக் காத்திருக்கின்றன இலையுதிர்க்காலத்திற்காய் என்னைப் போலவே. வெள்ளை மனிதர்களுக்கு நடுவில் கருங்காக்கைகள் கத்துவதும் கூட காதுகளுக்கு சங்கீதமாய். எவரும் துணையில்லாத பயணத்தில் செக்குமாடுகளாய் பூமியைச் சுற்றியே வலம் வருகின்றன என் பால்வீதிகள். எப்போதாவது என் வட்டத்தைத் தாண்டி எட்டிப்பார்க்கும் கண்களை எரித்துவிடுகின்றன எரிநட்சத்திரங்கள். கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றின் நீள அகலத்தைஒட்டியே தீர்மானிக்கப்படுகின்றன எனக்கான என் சுற்றுப்பயணங்கள்.

புதுமனை

This entry is part 35 of 44 in the series 15 ஏப்ரல் 2012

நாய்களிரண்டு கூடி குலாவியிருந்ததன் சாட்சியாய் புதிதாய் பிரசவித்த குட்டி நான்கின் ஊழைக் கதறல் நிழலுக்கும் வாசத்திற்கும் ஒதுங்கும் ஊர்க்குருவிகள் அவ்வப்போது மலம் கழிக்க வந்து போகும் கருத்த பூனையொன்று. போவோர் வருவோரென அத்தனை பேரின் மூத்திரத் துளிகளை உள்வாங்கி செரிக்கும் தளமும் சுவரும் . சிறார்கள் ஆடியும் ஓடியும் ஒளிந்தும் சேர்த்து வைத்த சந்தோசச் சப்தங்கள் உலாவரும் நடுநிசிப் பேய்களின் கூட்ட அரங்கம். துரத்தப்பட்ட அத்தனை அகதிகளின் விலாசத்தை விழுங்கி உயரே நிற்கிறது புதுக்கட்டிடமொன்று- நாளை நான்கு […]

தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்

This entry is part 32 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நேரம் போகுது கண்மணி ! நீ சிரித்து விளையாடு கிறாய் நீடித்த இன்பம் அளிக்குமா அது ? நீடிக்க இச்சைதான் காதலிக்க வேட்கை உளது ஏன் அவை விழித்து ஆத்மாவில் எழுவ தில்லை ? எப்போது வரும் வாழ்விலே கண்ணும் கண்ணும் கலந்து கவிழ்ந்திடும் ஐக்கியம் ? இனிய தீப்பொறியில் இனிக்கும் உடல் அக்கினியில் புதியதாய் நம் பிறப்பு ! கண்களின் குழி நிரம்பி […]