நழுவும் உலகின் பிம்பம்

This entry is part 4 of 30 in the series 22 ஜனவரி 2012

இளங்கோ * வெகு நேரமாய் தலையசைத்துக் கொண்டிருந்த பூவில் எறும்பொன்று நடுங்குகிறது வீசும் காற்று புரியாமல் கைவிரித்துத் தாங்கிப் படர்ந்த பச்சைக் காம்பில் சிலிர்ப்போடுகிறது உச்சி நிழல் பிறகு தூறலோடு தொடங்கிய சிறு மழை உருட்டுகிறது துளிகளை அதில் நழுவும் உலகின் பிம்பம் எறும்பின் உடலை வளைத்து கீழிறக்குகிறது மணலில் நெளியும் புழுவைக் கடந்து வெயில் காயும் மேட்டின் துளைக்குள் நுழைய.. பேச்சற்று சொற்ப வெளிச்சக் கீற்றோடு மௌனமாய் அசைகிறது வனம் ******

அறியான்

This entry is part 2 of 30 in the series 22 ஜனவரி 2012

எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான் எதற்கும் எதிலும் தானேதான் என்றான் அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான் தானே தானே என்றவனை தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல் தேதி அறிந்தான் நேரம் அறிந்தான் இட எல்லை குறித்தான் என்றாலும் தடுக்க இயலாமல் னான் இப்போது அடங்கிக் கிடப்பான் இவன் மின்சாரமும் வீடும் நிவாரணமும் உப்பும் சோறும் உறவும் மீண்டும் கிட்டியதும் மீண்டும் “தானே” என்பான் தன்னை மீறிய இயற்கை அறியான்!

பொங்கல் வருகுது

This entry is part 27 of 30 in the series 15 ஜனவரி 2012

சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வருகுது ! புத்தரிசி பொங்க வருகுது ! மகிழ்ச்சி பொங்கி வருகுது ! எங்களை எல்லாம் இன்பத்தில் முங்க வருகுது !  நாவில் தங்க வருகுது !  கும்பி குளிர வருகுது ! கும்மி அடிக்க வருகுது !  அன்பில் அணைக்க வருகுது ! விழாவில் இணைக்க வருகுது ! புத்தாடை மங்கையர் உட்கார்ந்து முற்றத்தில் வண்ணக் கோல மிட்டுப் பால் பொங்கல் இனிதாய்ப் பொங்கப் போகுது ! வெண் பொங்கல் […]

அன்று கண்ட பொங்கல்

This entry is part 22 of 30 in the series 15 ஜனவரி 2012

ஆரங்கள் கொஞ்சம் குறைந்து போன சாரநாத் சக்கரங்களைக் கட்டை வண்டியில் பூட்டி சந்திக்கத் துடிக்கும் கொம்புகளில் காவி-வெள்ளை -பச்சை பூசி தேசியமயமாக்கி… உமிப்போர்வையில் உறக்கம்போட்ட விதை நெல்லை எழுப்பி வந்து ஆடியில் காயம்பட்ட மண்ணில் எறிந்து… பாஞ்சலி பூமிக்குத் தலையெண்ணை தடவி… பஞ்சாங்கம் புரட்டி மேட்டுர் அணையை வானொலியில், செய்தித் தாளில் எதிர்பார்த்து… சேற்றில் கால்புதைத்து பாட்டுப் பாடி பொய்களைப் புடுங்கி உண்மைகளை நட்டு வைத்து… டெமக்ரானில் தாளடிப் பூச்சியை சந்தித்து என்ட்ரோ சல்ஃபானில் தத்துப் பூச்சியைக் […]

ரம்யம்/உன்மத்தம்

This entry is part 21 of 30 in the series 15 ஜனவரி 2012

ரம்யம் வசந்தகாலத்தின் முதல் பழங்களை அணில் ருசிக்கும் பறவைகளின் சப்தம் சன்னமான இசை மேகங்களற்ற வானம் மலை உச்சியிலிருந்து கீழே விழுந்தான் பாறையில் மோதிய கணத்தில் சிறகு முளைத்தது அந்தி வானத்தில் கூடு திரும்பும் பறவைக் கூட்டம் பருந்தின் நிழல் கண்டு அஞ்சும் புறாக்கள் லேசான தூறல் ரம்யமான மாலை கிழக்கு வானத்தில் வானவில் அலைகள் சொன்ன கதைகளை கரை யாரிடம் சொல்லும் குளம் எப்படி நிலாவை சிறை பிடித்தது தோட்டத்து மலர்களில் அவள் கூந்தலை அலங்கரிக்கப் […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழு வரிப்பாக்கள் (Shakespeare’s Sonnets : 2) எழில் இனப் பெருக்கம்

This entry is part 18 of 30 in the series 15 ஜனவரி 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதியிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை வாலிபக் […]

நான் குருடனான கதை

This entry is part 14 of 30 in the series 15 ஜனவரி 2012

தேவ வனங்களின் வண்ணங்களில் தோய்த்து மொழிகளையொன்றாக்கி வரைந்திட்ட ஓவியத்துக்குக் கண்களற்றுப் போயிற்று காலம் நகரும் கணங்களின் ஓசையைக் கேட்கக் காதுகளற்றுப் போயிற்று காணச் சகித்திடா அவலட்சணத்தை தன்னுள் கொண்டது நவீனத்துக்குள் புதைந்தது புதிதாக மின்னக் கூடுமென்ற நம்பிக்கையோடு யாரும் காணாச் சித்திரத்தின் உதடுகளில் வண்ணங்கள் முணுமுணுத்துக் கண்களைத் தேடிற்று எங்கும் தன் விம்பங்களைப் பொருத்தியபடி திசைகள் தோறும் ஓடியது உயிரற்ற ஓவியம் எனது விழிகளை உருவிக்கொண்டு – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

ஓர் இறக்கை காகம்

This entry is part 4 of 30 in the series 15 ஜனவரி 2012

முட்டை விரிந்து வெளிவரும் போதே ஒற்றை இறக்கை இல்லாமல் இருந்தது அக்காகக் குஞ்சுக்கு … சக முட்டைகள் விரிந்து அத்தனைக் குஞ்சுகளும் இரட்டை சிறகடிக்க இக்குஞ்சு மட்டும் ஒற்றை சிறகடித்து எதுவும் புரியாமல் மறுபக்கம் பார்த்தது .. சிறகு இருக்கும் இடத்தில் வெறுமொரு சிறு முளை மட்டுமே அதற்கு.. பறக்கத் துவங்கிய குஞ்சுகள் கண்டு ஒற்றை சிறகினை ஓங்கி வீசி எம்பிப் பார்த்தது .. முடியாது போக கூட்டுக்குள்ளே முடங்கிப் போனது.. தாய்க் காகம் அதற்கு கொண்டு […]

வெறுமன்

This entry is part 2 of 30 in the series 15 ஜனவரி 2012

பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன் நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில் அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான் அதீத ஞானம்பெற்றவன் போல் போதியின் நிழலில் நின்று எதேதோ பிதற்றுகிறான் இலையுதிர்த்த விருட்சத்தின் கடைசி இலையை கையிலெடுப்பவன் இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான் போலப் பொழிதலும் ஆகச் சிறப்பதுமாய் பயணத் தொடர்கையில் மௌனமாய் பொருளுணர கிரகிக்கிறான் கவலையால் நிரம்பியவனின் ஓலம் கவிதையாயின் அவன் கவிஞன் பேத்தலெனின் புத்தி சுவாதீனமற்றவன் தத்துவமெனில் ஞானியாகிறான் ஏதுமற்று போனால்… வெற்றுவெளியில் உலவும் ’வெறுமனா’ய் போவான் அவன்!? […]

பூபாளம்

This entry is part 34 of 40 in the series 8 ஜனவரி 2012

செங்காளி பொழுது புலரும் நேரத்தில் ஒரு சிற்றூரில் எழும் ஓசைகளெல்லாம் ஒன்றாய்ச்  சேர்ந்து எப்படி பூபாளம் என்னும் பண்ணில்  பாடுவதைப்போல் இருக்கின்றது  என்பதைச் சொல்லும் பாடல்கள் —————————————————————————————————–   பொழுதும் புள்ளினமும் கொக்கரக் கோவெனக் கோழிகள் கூவிட காக்கைகள் ஒருசில காவெனக் கரைந்திட குருவிகள் கூட்டம் கீச்செனக் கத்திட இருள்தான்  மெதுவாய் இளகிடும் நேரம் வெள்ளி முளைக்குமிவ்  விடியற் காலையில் மெல்லென  கிராமம் முழித்திடும் வேளையில் பண்ணை வீட்டில் பட்டியில் தொட்டியில் என்னதான்  நடக்குதென எட்டிப் பார்ப்போம் அவளும் குடும்பமும் கிழவன் எழுமுன் கிழத்தி எழுந்து நழுவின சேலையை நன்றாய்க் கட்டி அவிழ்ந்த கூந்தலை அள்ளி   முடிந்து தொழுதபின்  கண்களில் தாலியை ஒற்றி […]