– எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது வறண்ட பொட்டல்வெளிதான் நாளைகளில் மாற்றங்கொள்ளுமென்றதும் வணங்கிவிட்டு திரும்பினீர்கள் குறைச்சலான காலத்திற்குப் பின் மீண்டும் பொய்களோடு வருவோம் நீங்களும் ஆசைகளோடு பின்தொடர்வீர்கள்…
எப்பொழுதும் எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை மண்அடுக்குகளின் கீழ் புதைத்து விட்டு வெறுமையோடு வீடுதிரும்புகிறோம் மயானத்திலிருந்து. தோள்களில் இன்னும் ஊர்கிறது எறும்பைப்போல குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று. ரவிஉதயன் raviuthayan@gmail.com
மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும் எச்சில் நேர்மை வேண்டாம் வேண்டாம். நேர்மை பற்றி அறியும் சுவர்களும் யன்னல் சீலைகளின் தையல் நுனிகளும்கூட இங்கு. கட்டிய வேட்டிக்குள் சீழ்பிடித்த மனிதரும் நுழைவார் இங்கே. கைகாட்டும்வரை என்னை… அகற்றாதிருக்கட்டும் மூட்டைப்பூச்சிகளோடு சாட்சியாய் இங்கு […]
நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை….டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் … மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று – அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம் இயற்கையின் கை விட்டு கத்திக்கும், காசுக்கும் கைமாறி காலங்கள் ஆகிப் போச்சு.. என் குழந்தை பிறந்த நாள் இதென்று சொல்லாமல் பிறப்பித்த நாள் இதுவென்று சொல்லவேண்டும்.. டாக்டர்கள் இனிமேல் பஞ்சாங்கமும் பயில வேண்டும்… சோதிடமும் […]
தாலாட்டு நானும் பட தனிப்பாட்டு தேவையில்லை பாராட்டும் கடலை பார்த்து படகோட்டும் பகலவனாலே ஒளிபார்த்து உள்ளம் மகிழ ஒலிக்காதோ உயிரின் ஓசை ? கேட்காத காதும் இல்லை கிடைக்காத கவிதை சொல்ல பார்க்காத கனவில் ஒன்றை பசிக்காக நீ அழுதிருந்தாலும் பாலூட்ட நிலவு வருமே பகுத்தறிவால் புசித்திருப்பாயோ ? இதயத்தில் மலரினை பூக்க இறையிடம்தான் அடத்தினால் கேட்க கைகாலை நீ உதைத்து அழுதால் காரணம்தான் நான் கேட்க மாட்டேன் எனக்காக நீதான் அழுது இதற்காக அழுவேன் சொன்னால் […]
-வே.பிச்சுமணி உன்னை மாற்றிகொள் எனும் சொல் உனது தான் விழிக்க செய்துவிட்டது நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு உன் மனதில் வெறுப்பு மண்டியது விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள் சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள் வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய் எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய் சூரியனின் அண்மையினால் நிலவே புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய் இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம் […]
ஹெச்.ஜி.ரசூல் ஒரு புல்லின் நுனி கரும்பாறையை சுமந்திருந்த்து சொட்டுச் சொட்டாய் உள்ளிறங்க வழியற்று அதில் விழுந்த மழைத் துளிகள் பெருநதியாகப் பாய்ந்தோடுகிறது ஆயுள் பூராவும் சேமித்த சூட்டின் தகிப்பு தன்னுணர்ச்சியை இழக்க விரும்பவில்லை. பகலுறக்கம் தீய்ந்து இரவுதோறும் கரும்பாறை வளர்வதை கண்ணாப்பா சொல்லியிருக்கிறார் கருகிவிடாது ஒற்றைப்புல் வேர்பிடித்திருக்க குறு குறுவென ஊதிப் பெருகிய கரும்பாறையைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. சாயங்காலமொன்றில் மகுடியெடுத்து பாம்புப் பிடாரன் ஊதிய இசை பட்டு தடுமாறத்துவங்கியது கரும் பாறை எத்தனை நாள் உள்ளிருப்பது […]
– வ.ந.கிரிதரன் – விண்ணில் புள்! மண்ணில் புள்! வனத்தில் புள்! மனத்தில் புள்! புள்ளினம் பறந்து செல்லும். உள்ளமோ சிறகடிக்கும். அவற்றை அவதானிப்பதில் அளப்பரிய இன்பம். புல்லரிப்பில் களிக்குமென் உள்ளம். இறகசைப்பின் விரிவு கண்டு ஒரே பிரமிப்பு! அழுத்த வேறுபாடுகளை அவை கையாளும் இலாவகம்! எத்துணை அறிவு! புள்ளினம் தந்திரம் மிக்கவை. சிறகசைத்தலற்று விண்ணோக்கி அல்லது மண் நோக்கி விரைதலில் அவை பாவிக்கும் அறிவின் ஆழம்.. பிரயோகிக்கும் அறிவியலின் புரிதல்… இவை கண்டு வியக்காமல் ஒருவரால் […]
கசக்கி எறிந்த காகித வார்த்தைகள் உறைந்து மடிகின்றன … காத்திருக்கின்றது இன்னும் எச்சமாகி நிற்கும் விகுதிகள் எதிலும் பூரணத்துவம் பெற்றிருந்த அவ்வார்த்தைகள் ஒரு சில நேரங்களில் முரண்படுகின்றன அவ்வேளைகளில் வீரியம் அதிகமாக … வெளிவரும் ஒவ்வொன்றிலும் தொக்கி நிற்கும் ஒரு துளி விஷம் …. விடுதலற்ற கணக்காகி எங்கிலும் எச்சமென தொடரும் அவை .. என்றும் முடியாத் தொலைவு வரை …. ஷம்மி முத்துவேல்
அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா, அதே குளம், அதே அன்னம், அதே பூங்காவனம், அதே செயற்கை வசந்தம் அதுவாகவே அனைத்தும் எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை நெகிழ்ச்சி மிக்கதொரு நேசத் தீண்டலை அவள் எதிர்பார்த்திருந்தாள் அலையடிக்கும் சமுத்திரத்தில் பாதங்கள் நனைத்தபடி வழியும் இருளைக் காணும் விடுதலையை ஆவலுற்றிருந்தாள் காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா மாய உடலையொன்றையும் […]